Jump to content

#சுமந்திரன் - சுயசரிதைச் சுருக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#சுமந்திரன்
"""""""""""""""""""""""
எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. அதற்காக எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. ஆனால் பௌதீகவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பின்னர் சட்டத்தில் ஆர்வம் திரும்பி, சட்டத்தரணியாகி விட்டேன். தமிழர்களின் அரசியல் உரிமைப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள். எனது சட்டத்துறை அறிவை கணிசமாக பங்களித்திருக்கிறேன். இதுவே, இன்று அரசியலில் இந்த இடத்திற்கு அழைத்தும் வந்துள்ளது.

நான் அரசியலிற்கு வந்த சமயத்தில், ‘சுமந்திரன் நியமன எம்.பி. மக்களால் தேர்வு செய்யப்படவில்லை’ என்று சிலர் பேசினார்கள். எனினும், கடந்த தேர்தலில் இதற்கான பதில் கிடைத்து விட்டது.

படிக்கும் காலத்தில் விஞ்ஞானமே படித்தேன். பௌதீகவியலில்தான் அதிக ஆர்வம் இருந்தது. பொறியியலாளனாக வர வேண்டுமென்பதே வீட்டில் எல்லோரது விருப்பமாகவும் இருந்தது. எனது விருப்பமும் அதுதான். எங்கள் குடும்பத்தில் எந்தப்பக்கத்திலும் சட்டத்தரணி ஒருவர்கூட கிடையாது. ஆகையால் சட்டத்தரணியாகுவது பற்றி யாருமே சிந்தித்தும் பார்க்கவில்லை.

 
1982 இல் கா.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து, பெரதெனியா பல்கலைகழகத்தில் பௌதீகவியல் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொறியியல் படிப்பதே எல்லோரது நோக்கமாகவும் இருந்தது. அதனால் பெரதெனியா வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இந்த சமயத்தில் 1983 இனக்கலவரம் வந்தது. நான் இந்தியா சென்றுவிட்டேன். இந்தியாவில் பொறியியல் படிக்கலாமென முயற்சித்து, பொறியியல் கல்லூரிகளை தேடிப்பிடித்து பரீட்சைகள் எழுதினேன். ஓன்றும் சரிவரவில்லை.

ஆனால் நான் சோர்ந்தவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீண்டும் பௌதீகவியல் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சரி. பௌதீகவியலை படித்துக்கொண்டு, பொறியில் படிக்க கல்லூரியை தேடலாம் என முடிவெடுத்தேன். இரண்டு வருடமாக பௌதீகவியல் படித்துக்கொண்டு, பொறியியல் படிக்க இடம் தேடினேன். இறுதிவரை பொறியியல் படிக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் சட்டத்தை பற்றிய ஆர்வம் ஏற்பட்டது.

பௌதீகவியல் கல்வியை நிறுத்திவிட்டு, சட்டத்தை படிக்கலாமென முடிவு செய்தேன். ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் யாருமே சட்டத்துறையில் இருக்கவில்லை. ‘இது பொய் சொல்லும் தொழில். அதனால் செய்ய வேண்டாம்’ என தடுத்தனர். சட்டம் வேண்டாம், கணக்கியல் படிக்கலாம் என்றார்கள். கணக்கியல் எனக்கு பிடிக்கவில்லை. பெற்றோருடன் பேசி, ஒருமாதிரி சட்டம் படிக்க சம்மதிக்க வைத்தேன்.

 
சட்டக்கல்லூரி பரீட்சை எழுதி சட்டக்கல்லூரிக்கு சேர்ந்து, சட்டத்தரணி ஆகினேன். ஆரம்பத்தில் வர்த்தக, வாணிப வழக்குகளையே அதிகமாக செய்து வந்தேன். முதலாவது பத்து வருடங்கள் இப்படித்தான் சென்றது. இந்த சமயத்தில் உலக வங்கியின் புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருடம் படித்து விட்டு திரும்பி வந்தேன்.

இதன் பின்னான காலத்தில் கொள்கைகள், தமிழ் மக்களின் உரிமைகள் சம்மந்தமான வழக்குகளில் ஆர்வம் காட்டினேன். அதற்கமைய மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள் நிறையச் செய்திருந்தேன்.

சம்பந்தன் ஐயாவை எனக்கு முதலில் இருந்தே தெரியும். அவரது மூத்த மகனும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தோம். நான் கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், என்னைப்பற்றி கேள்விப்பட்டு, சட்டம் சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். இப்படியான தொடர்பு இருந்து கொண்டிருந்தது.

2003இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக ஆனந்தசங்கரி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை பொறுப்பெடுத்து செய்யுமாறு சம்பந்தன் ஐயா என்னிடம் வந்து கேட்டார். சம்பந்தன், ஜோசெப் பரராஜசிங்கம் ஆகியோருக்காக வழக்கை நடத்தினேன்.

அதே காலகட்டத்தில் வலிகாமம் வடக்கு காணி தொடர்பான வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு மாவை சேனாதிராசா அண்ணன் வந்து கேட்க, நிலவிடுவிப்பு தொடர்பான வழக்கை தாக்கல் செய்தேன். அந்த வழக்கு இன்றைக்கும் இருக்கிறது. இந்த வழக்கின் மூலமாகத்தான் ஆரம்பத்தில் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இப்படியான வழக்குகள் செய்து கொண்டிருந்தபோது, 2007 இல் கொழும்பிலிருந்த தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இரவோடிரவாக பஸ்களில் ஏற்றி அனுப்பப்படவிருந்தனர். உடனடியாக அன்றே ஒரு வழக்கை தாக்கல் செய்து அதனையும் தடுத்து நிறுத்தினேன். இதன்மூலம்தான் எனது பெயரும் அதிகளவில் வெளியில் தெரிய வந்தது.

 
இந்தக்காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனம் இரண்டுமுறை காலியானது. ஜோசெப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டபோதும், ஈழவேந்தன் மூன்றுமாதம் பாராளுமன்றம் செல்லாதபோதும் காலியானது. இரண்டு தடவையும் அதனை நிரப்புமாறு என்னை கேட்டிருந்தார்கள். ஆனால் நான் இதற்கு இணங்கவில்லை. அப்போது மாவை அண்ணனுக்கு சொன்னேன்- ‘நான் அரசியல்வாதியாக வந்தால் நீங்கள் ஒரு சட்டத்தரணியை இழந்துவிடுவீர்கள்’ என. அப்போது கட்சி சம்பந்தமான எல்லா வழக்குகளையும் செய்பவராக மாறியிருந்தென். அரசியல்வாதியான பின்னர் நீதிமன்றம் சென்றால், நீதிபதிகள் என்னை ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்ப்பார்கள். சட்டத்தரணியாக பார்க்க மாட்டார்கள் என்பதால் மறுத்து விட்டேன்.

2009 இல் யுத்தம் முடிந்தபின்னர், அரசியலமைப்பு சட்டமாற்றத்தின் மூலமாகத்தான் எங்கள் பிரச்சனையை தீர்க்கலாமென கொழும்பிலுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகளுடன் இணைந்து புதிய பிரேரணை தயாரிக்கும் பணியில் சம்பந்தன் ஐயா ஈடுபட்டார். இதில் நானும் இணைந்திருந்தேன். 2009 நவம்பரில் அது பூர்த்தியானது. இந்த அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பொதுவேட்பளரான போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதில் நானும் கலந்து கொண்டேன்.

2010இல் பொதுத்தேர்தல் வருமென தெரிந்ததும், தேர்தலில் போட்டியிடுங்கள் என மீண்டும் கேட்டனர். நான் மறுத்து விட்டேன். பின்னர் சம்பந்தன் ஐயா தனியாக என்னை அழைத்து, அரசியலிற்கு வந்து நிறையச் செய்யலாம். தேசியப்பட்டியல் மூலமாவது வாருங்கள் என கேட்டார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஆனால் பின்னர் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்ததில், அரசியலுக்கு வரலாமென்ற முடிவிற்கு வந்தேன். இரண்டு நாளில் சம்பந்தன் ஐயாவை தொலைபேசியில் அழைத்து முடிவை சொன்னேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக போடப்பட்டது. இப்படியாக, கட்டாயமாக இழுத்து வரப்பட்டே அரசியலுக்குள் வந்தேன். ஆனால் அரசியலிற்குள் வந்தபின் முழுமையாக செயற்பட்டேன். வழக்குகளும் நிறையச் செய்ய வேண்டியிருந்தது. அதையும் செய்தேன்.

2015 இல் பல சர்வதேச நாடுகளின் தூதரகங்கள், ஐக்கிய தேசியக் கட்சி, வேறு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற வேண்டுமென செயற்பட்டபோது, அவர்களுடன் இணைந்து நெருங்கிய பங்களிப்பை செய்தேன். நான் கொழும்பில் இருந்ததால் இந்த தொடர்புகளிற்கு வசதியாக இருந்தது.
யார் வேட்பாளர் என்ற கேள்வியெழுந்தபோது, சந்திரிகாவையே திரும்ப ஜனாதிபதியாக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஆனால் சந்திரிகா அம்மையார் வேறுவிதமாக சிந்தித்திருந்தார். அந்த சமயத்தில் ஜயம்பதி விக்கிரமரட்ண இங்கிலாந்து சென்று சந்திரிகாவை சந்தித்துவிட்டு திரும்பிவந்து என்னை சந்தித்தார். மைத்திரிபாலதான் சரியான வேட்பாளர் என சந்திரிகா அபிப்பிராயப்படுவதாக சொன்னார். ஆனால் மைத்திரியுடன் இதுபற்றி பேச முன்னர், தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியுடன் பேசி அவர்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டுமென்பதை ஜயம்பதியிடம் சந்திரிகா சொல்லியிருந்தார்.

 
அப்போது சம்பந்தன் ஐயா நாட்டில் இல்லை. தொலைபேசியில் எல்லாம் இதை விவாதிக்க முடியாது. ஆனால் மைத்திரி பற்றிய சம்பந்தன் ஐயாவின் எண்ணம் எனக்கு தெரியும். அதனால், ‘மைத்திரி என்றால் நாங்கள் இணங்குவோம்’ என உடனேயே சொன்னேன். நாங்கள் ஆதரிக்கிறோம் என்றதும், ஜேவிபியுடன் பேசாமலேயே மைத்திரியுடன் பேச சென்றுவிட்டார் ஜயம்பதி. ஆரம்பத்தில் மைத்திரி மறுத்துவிட்டார். அவருக்கு நிறைய பயமிருந்தது. பின்னர் சந்திரிகா வந்து நேரடியாக பேசிய பின்னரே மைத்திரி இணங்கினார்.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையில் தீர்வு என முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழர்களிற்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டுமென நினைத்தோம். அப்போது சிகிச்சைக்காக சம்பந்தன் ஐயா இந்தியாவில் இருந்தார். மைத்திரியுடன் நேரடியாக பேச நானே சென்றேன். அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட சம்பந்தன் ஐயா, ‘வெட்டொன்று துண்டு இரண்டாக கதைச்சு அவரை வெருட்டிப் போடாதையுங்கோ. ஆனால் விசயத்தை தெளிவாக சொல்லிவிட்டு வாருங்கள்’ என்றார்.

‘ஒற்றையாட்சி என்ற சொல்லை மாற்றாமல் விட்டால் நாங்கள் உங்களை ஆதரிக்கமாட்டோம்’ என்று சொல்லப்போகிறேன் என்றேன். ‘இல்லையில்லை… அப்படி சொல்லாதீர்கள். நாங்கள் உங்களிற்கு ஆதரவு தருவதாக இருந்தால் அந்த சொல்லை மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்’ என்றார். அதுதான் இராஜதந்திர உரையாடல். அவரிடமிருந்துதான் இதை கற்று கொள்கிறோம். மைத்திரியை சந்தித்து விடயத்தை சொன்னதும், ஒற்றையாட்சியை விஞ்ஞாபனத்திலிருந்து அகற்றினார்.

நாங்கள் ஒப்பந்தம் எதுவும் செய்யாமல் மைத்திரியை ஆதரித்து விட்டோம் என குற்றம்சாட்டுபவர்களும் உள்ளனர். அதுபற்றிய சம்பவம் ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.

சந்திரிகா அம்மையாரின் வீட்டில் ஒரு சந்திப்பு நடந்தது. சந்திரிகா, மைத்திரி, ரணில் ஆகியோருடன் நானும், சம்பந்தன் ஐயாவும் கலந்து கொண்டோம். ‘அரசியல் தீர்வு தொடர்பாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடுவோம். மைத்திரியும் அதற்கு தயாராக இருக்கிறார்’ என்றார் சந்திரிகா. ஆனால் சம்பந்தன் ஐயா மறுத்துவிட்டார். ‘அப்படி ஒரு ஒப்பந்தமும் வேண்டாம். ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சம்பந்தன்-சிறிசேனா இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டனர் என மகிந்த பிரசாரம் செய்வார். அந்த சமயத்தில் நானோ, மைத்திரியோ பொய்யா சொல்வது? அதனால் ஒப்பந்தம் வேண்டாம்’ என சம்பந்தன் ஐயா சொன்னார்.

அப்போது சந்திரிகா ‘சாம்… 60 வருடங்களாக சிங்கள தலைவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் இன்னுமா எங்களை நம்புகிறீர்கள்?’ என்றார். அதற்கு சம்பந்தன் ஐயா ‘உங்கள் அப்பாதான் முதலாவதாக ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். அதில் கையெழுத்து போட்டதால் எங்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. காகிதத்தில் மையை கொட்டுவதால் எதுவும் நடக்காது. இனப்பிரச்சனை தீர வேண்டுமாக இருந்தால், நீங்கள் எங்களை நம்ப வேண்டும். நாங்கள் உங்களை நம்ப வேண்டும். இது எல்லாவற்றிற்கும் முதல் மைத்திரிபால வெல்ல வேண்டும். அவர் வெல்வதென்றால் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படக்கூடாது’ என்றார்.
மாவை அண்ணன் சில கூட்டங்களில், ‘இதயத்தால் எங்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது’ என சொன்னார்.

2015 தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்ததற்கு ஒரு காரணமுள்ளது. அதுவரை நான் ஒரு விடயத்தை சொன்னால், ‘இவர் நியமன எம்.பி. மக்கள் சார்பாக பேச முடியாது’ என ஒரு சாரர் சொல்லிவந்தனர். இதனை ஒரு சவாலாக ஏற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என சொன்ன ஒரேயொரு வேட்பாளரும் நான்தான்.

மிதவாத கொள்கையை வெளிப்படையாகவே சொன்னேன். எனக்கு ஆயுதத்தில், வன்முறையில் நம்பிக்கையில்லை. இது, அதில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அவ்வளவே.

மிதவாத போக்கின் மூலம் மக்களின் விடிவை காணலாம் என்ற நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதனை மக்களிடம் சொன்னேன். மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்தால் மாத்திரமே மக்கள் பிரதிநிதியாக செயற்படுவேன் என சொல்லியே தேர்தலில் போட்டியிட்டேன். எனது கொள்கைகளை தெரிந்து கொண்டு மக்கள் வாக்களித்தனர்.

ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் கரவெட்டியில் நடந்தது. ஒரு பெரியவர் சொன்னார் ‘சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களிற்கு வாக்களிக்கமாட்டோம்’ என்றார்.

சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கான காரணத்தை அவருக்கு புரியவைத்தேன். ‘அங்கு போனது சரியென்றுதான் இப்போதும் நினைக்கிறேன். சரியென நான் நினைப்பதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் நான் சென்றது பிழையென கருத உங்களிற்கு பூரண உரிமையுள்ளது. நான் போனது பிழையென நினைத்தால் தயவுசெய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். நான் போனது சரியென நினைத்தால் மாத்திரமே வாக்களியுங்கள்’ என்றேன். பின்னர் அந்தக் கூட்டம் முடிந்து நான் சென்ற பின்னர் அந்தப் பெரியவர் எனக்கு மட்டும்தான் வாக்களிப்பதாக சொன்னதாக கேள்விப்பட்டிருந்தேன்.

வெளிப்படையாக என்னுடைய கருத்துக்களை கூறியிருந்தேன். மக்களும் தெரிவு செய்திருக்கின்றனர். ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டி இருக்கின்றது. அதேநேரத்தில் அரசாங்கமும் காலத்தை இழுத்தடிக்கிறது. உரிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமலும் இருக்கிறது. இதனால் மக்களின் அவநம்பிக்கை அதிகரிக்கலாம். அது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. மகிந்த காலத்தில் நேரடியாகவே எதிர்த்தோம். அது இலவானது. இப்போதைய சூழ்நிலை மிக கஸ்ரமானது. அரசாங்கத்தை கவிழவும் விடக் கூடாது. அதேநேரத்தில் அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையில் இந்த இரட்டைகுதிரையில் சவாரி செய்கிறோம்.

யாரோ

நன்றி FB

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் வந்த நண்பரின் கருத்து..

 

இந்த கட்டுரை தமிழ் வாக்காளர் மத்தியில் ஒரு ஆதரவு  அலையை ஏற்படுத்தி விடும் நோக்கோடு மிகத் திட்டமிட்டு வரையப்பட்டுளது.

சுமந்திரன் கடந்த முறை தேர்தலில் நின்ற போது தொழில் முறை  தேர்தல்  பரப்புரையாளர்களை கூலிக்கு வைத்திருந்தார் (இதற்குரிய பணத்தை யார் கொடுத்தது) தேர்தலை மாத்திரம் அல்ல, தொடர்ச்சியாக சுமந்திரனையும் சம்மந்தனையும் தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைக்கும் பிரச்சார உத்தி, தொழில் முறை பரப்புரையாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. 

எனது ஊரில் மைக்கேல் விளையாட்டுக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது அவர்களின் FB யில்  நாள் தவறாமல் சுமந்திரன் மற்றும் அவர்களின் சகபாடிகளான ஆனோல்ட் , சுகிர்தனின் புகழ்பாடி செய்திகள் வரும்.......

பாத்து கொள்ளுங்கள் இவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான அனைத்துக் கட்டமைப்புகளிலும் எவ்வாறு தமது ஆதரவு தளங்களை உருவாக்கி விட்டுள்ளார்கள் என்று.

1958  மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை 1983 ஐ விட அதன் தாக்கம் மிக அதிகம் ( 1983 யே பலர் பாரிய இன அழிப்பு எனக் கூறுவர் அது தவறு)
கிட்டத்தட்ட 20 வருடங்கள் எமது தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் தமிழரை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றார்கள் அந்த நேர்மையாவது அவர்களிடம் இருந்தது. (இறுதியில் ஆயுதப்போரும் வந்தது அழிவும் வந்தது). 

2009 மிகப்பெரிய அவலம் .... 10 வருடங்கள் கடந்து விட்டது. இன்னுமொரு 10 வருடங்களில் தமிழரை யாரும் காப்பாற்ற முடியாது என்கின்ற நிலை வரலாம் அப்போதாவது அதனை நேர்மையாக ஒத்துக் கொள்ளும் பக்குவம் சுமந்திரனிடம் இருக்குமா தெரியாது.

அவ்வாறான நிலமை வரும் போது ..... மீளவும் ஒரு சந்ததி ஆயுதப் போருக்குச் செல்லலாம் அப்போது நானோ எனது பிள்ளைகளோ அங்கு செல்லப்போவதில்லை. ஊரில் யார் யாரோ பலரின் பிள்ளைகள் ...... 

விடுதலைப்போராட்டத்தை அஞ்சலோட்டத்தோடு ஒப்பிடுவார்கள் ஆற்றல் உள்ளவன் ஓடுவான் முதலா கடசியா என்பது இங்கு பிரச்சினை இல்லை. இலக்கை ஓடி முடிப்பவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான்.

ஆனால் நம்ம நா***** ஒவ்வொருதரா அஞ்சல் தடியை வாங்கிக் கொண்டு பின்பக்கமாக ஓடினாலும் பரவாயில்லை கிரண்டை விட்டே ஓடிட்டு எண்ட ஓட்டத்தை பார் எண்டு வீராப்பு பேசுறாங்களே! இது தான் தமிழர்களின்
நிலை ..... என்ன செய்வது?


வேட்டை நாய்களை வளர்த்தோம் வேட்டையாடின...
வேட்டை நாய்களை வாங்கினோம் - அவை நம்
வேட்டியை உருவின...

Link to comment
Share on other sites

ஆஹா அருமை , செய்வது பொறுக்கி வேலை , படிப்பது சிவபுராணம் ...
கரவெட்டியில் இவர் வந்தால் .... பாதுகாப்பு இல்லாமல் வர சொல்லவும் ...அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள் ....

அடுத்த தேர்தலுக்கு இவரின் எடுபிடிகள் செய்த பிரசங்கித்தனமே இது ..... வெட்கம் இல்லை இதனை எழுத்துவதட்கு ...துரோகிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.