Jump to content

#சுமந்திரன் - சுயசரிதைச் சுருக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#சுமந்திரன்
"""""""""""""""""""""""
எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. அதற்காக எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. ஆனால் பௌதீகவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பின்னர் சட்டத்தில் ஆர்வம் திரும்பி, சட்டத்தரணியாகி விட்டேன். தமிழர்களின் அரசியல் உரிமைப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள். எனது சட்டத்துறை அறிவை கணிசமாக பங்களித்திருக்கிறேன். இதுவே, இன்று அரசியலில் இந்த இடத்திற்கு அழைத்தும் வந்துள்ளது.

நான் அரசியலிற்கு வந்த சமயத்தில், ‘சுமந்திரன் நியமன எம்.பி. மக்களால் தேர்வு செய்யப்படவில்லை’ என்று சிலர் பேசினார்கள். எனினும், கடந்த தேர்தலில் இதற்கான பதில் கிடைத்து விட்டது.

படிக்கும் காலத்தில் விஞ்ஞானமே படித்தேன். பௌதீகவியலில்தான் அதிக ஆர்வம் இருந்தது. பொறியியலாளனாக வர வேண்டுமென்பதே வீட்டில் எல்லோரது விருப்பமாகவும் இருந்தது. எனது விருப்பமும் அதுதான். எங்கள் குடும்பத்தில் எந்தப்பக்கத்திலும் சட்டத்தரணி ஒருவர்கூட கிடையாது. ஆகையால் சட்டத்தரணியாகுவது பற்றி யாருமே சிந்தித்தும் பார்க்கவில்லை.

 
1982 இல் கா.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து, பெரதெனியா பல்கலைகழகத்தில் பௌதீகவியல் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொறியியல் படிப்பதே எல்லோரது நோக்கமாகவும் இருந்தது. அதனால் பெரதெனியா வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இந்த சமயத்தில் 1983 இனக்கலவரம் வந்தது. நான் இந்தியா சென்றுவிட்டேன். இந்தியாவில் பொறியியல் படிக்கலாமென முயற்சித்து, பொறியியல் கல்லூரிகளை தேடிப்பிடித்து பரீட்சைகள் எழுதினேன். ஓன்றும் சரிவரவில்லை.

ஆனால் நான் சோர்ந்தவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீண்டும் பௌதீகவியல் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சரி. பௌதீகவியலை படித்துக்கொண்டு, பொறியில் படிக்க கல்லூரியை தேடலாம் என முடிவெடுத்தேன். இரண்டு வருடமாக பௌதீகவியல் படித்துக்கொண்டு, பொறியியல் படிக்க இடம் தேடினேன். இறுதிவரை பொறியியல் படிக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் சட்டத்தை பற்றிய ஆர்வம் ஏற்பட்டது.

பௌதீகவியல் கல்வியை நிறுத்திவிட்டு, சட்டத்தை படிக்கலாமென முடிவு செய்தேன். ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் யாருமே சட்டத்துறையில் இருக்கவில்லை. ‘இது பொய் சொல்லும் தொழில். அதனால் செய்ய வேண்டாம்’ என தடுத்தனர். சட்டம் வேண்டாம், கணக்கியல் படிக்கலாம் என்றார்கள். கணக்கியல் எனக்கு பிடிக்கவில்லை. பெற்றோருடன் பேசி, ஒருமாதிரி சட்டம் படிக்க சம்மதிக்க வைத்தேன்.

 
சட்டக்கல்லூரி பரீட்சை எழுதி சட்டக்கல்லூரிக்கு சேர்ந்து, சட்டத்தரணி ஆகினேன். ஆரம்பத்தில் வர்த்தக, வாணிப வழக்குகளையே அதிகமாக செய்து வந்தேன். முதலாவது பத்து வருடங்கள் இப்படித்தான் சென்றது. இந்த சமயத்தில் உலக வங்கியின் புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருடம் படித்து விட்டு திரும்பி வந்தேன்.

இதன் பின்னான காலத்தில் கொள்கைகள், தமிழ் மக்களின் உரிமைகள் சம்மந்தமான வழக்குகளில் ஆர்வம் காட்டினேன். அதற்கமைய மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள் நிறையச் செய்திருந்தேன்.

சம்பந்தன் ஐயாவை எனக்கு முதலில் இருந்தே தெரியும். அவரது மூத்த மகனும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தோம். நான் கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், என்னைப்பற்றி கேள்விப்பட்டு, சட்டம் சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். இப்படியான தொடர்பு இருந்து கொண்டிருந்தது.

2003இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக ஆனந்தசங்கரி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை பொறுப்பெடுத்து செய்யுமாறு சம்பந்தன் ஐயா என்னிடம் வந்து கேட்டார். சம்பந்தன், ஜோசெப் பரராஜசிங்கம் ஆகியோருக்காக வழக்கை நடத்தினேன்.

அதே காலகட்டத்தில் வலிகாமம் வடக்கு காணி தொடர்பான வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு மாவை சேனாதிராசா அண்ணன் வந்து கேட்க, நிலவிடுவிப்பு தொடர்பான வழக்கை தாக்கல் செய்தேன். அந்த வழக்கு இன்றைக்கும் இருக்கிறது. இந்த வழக்கின் மூலமாகத்தான் ஆரம்பத்தில் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இப்படியான வழக்குகள் செய்து கொண்டிருந்தபோது, 2007 இல் கொழும்பிலிருந்த தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இரவோடிரவாக பஸ்களில் ஏற்றி அனுப்பப்படவிருந்தனர். உடனடியாக அன்றே ஒரு வழக்கை தாக்கல் செய்து அதனையும் தடுத்து நிறுத்தினேன். இதன்மூலம்தான் எனது பெயரும் அதிகளவில் வெளியில் தெரிய வந்தது.

 
இந்தக்காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனம் இரண்டுமுறை காலியானது. ஜோசெப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டபோதும், ஈழவேந்தன் மூன்றுமாதம் பாராளுமன்றம் செல்லாதபோதும் காலியானது. இரண்டு தடவையும் அதனை நிரப்புமாறு என்னை கேட்டிருந்தார்கள். ஆனால் நான் இதற்கு இணங்கவில்லை. அப்போது மாவை அண்ணனுக்கு சொன்னேன்- ‘நான் அரசியல்வாதியாக வந்தால் நீங்கள் ஒரு சட்டத்தரணியை இழந்துவிடுவீர்கள்’ என. அப்போது கட்சி சம்பந்தமான எல்லா வழக்குகளையும் செய்பவராக மாறியிருந்தென். அரசியல்வாதியான பின்னர் நீதிமன்றம் சென்றால், நீதிபதிகள் என்னை ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்ப்பார்கள். சட்டத்தரணியாக பார்க்க மாட்டார்கள் என்பதால் மறுத்து விட்டேன்.

2009 இல் யுத்தம் முடிந்தபின்னர், அரசியலமைப்பு சட்டமாற்றத்தின் மூலமாகத்தான் எங்கள் பிரச்சனையை தீர்க்கலாமென கொழும்பிலுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகளுடன் இணைந்து புதிய பிரேரணை தயாரிக்கும் பணியில் சம்பந்தன் ஐயா ஈடுபட்டார். இதில் நானும் இணைந்திருந்தேன். 2009 நவம்பரில் அது பூர்த்தியானது. இந்த அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பொதுவேட்பளரான போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதில் நானும் கலந்து கொண்டேன்.

2010இல் பொதுத்தேர்தல் வருமென தெரிந்ததும், தேர்தலில் போட்டியிடுங்கள் என மீண்டும் கேட்டனர். நான் மறுத்து விட்டேன். பின்னர் சம்பந்தன் ஐயா தனியாக என்னை அழைத்து, அரசியலிற்கு வந்து நிறையச் செய்யலாம். தேசியப்பட்டியல் மூலமாவது வாருங்கள் என கேட்டார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஆனால் பின்னர் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்ததில், அரசியலுக்கு வரலாமென்ற முடிவிற்கு வந்தேன். இரண்டு நாளில் சம்பந்தன் ஐயாவை தொலைபேசியில் அழைத்து முடிவை சொன்னேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக போடப்பட்டது. இப்படியாக, கட்டாயமாக இழுத்து வரப்பட்டே அரசியலுக்குள் வந்தேன். ஆனால் அரசியலிற்குள் வந்தபின் முழுமையாக செயற்பட்டேன். வழக்குகளும் நிறையச் செய்ய வேண்டியிருந்தது. அதையும் செய்தேன்.

2015 இல் பல சர்வதேச நாடுகளின் தூதரகங்கள், ஐக்கிய தேசியக் கட்சி, வேறு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற வேண்டுமென செயற்பட்டபோது, அவர்களுடன் இணைந்து நெருங்கிய பங்களிப்பை செய்தேன். நான் கொழும்பில் இருந்ததால் இந்த தொடர்புகளிற்கு வசதியாக இருந்தது.
யார் வேட்பாளர் என்ற கேள்வியெழுந்தபோது, சந்திரிகாவையே திரும்ப ஜனாதிபதியாக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஆனால் சந்திரிகா அம்மையார் வேறுவிதமாக சிந்தித்திருந்தார். அந்த சமயத்தில் ஜயம்பதி விக்கிரமரட்ண இங்கிலாந்து சென்று சந்திரிகாவை சந்தித்துவிட்டு திரும்பிவந்து என்னை சந்தித்தார். மைத்திரிபாலதான் சரியான வேட்பாளர் என சந்திரிகா அபிப்பிராயப்படுவதாக சொன்னார். ஆனால் மைத்திரியுடன் இதுபற்றி பேச முன்னர், தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியுடன் பேசி அவர்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டுமென்பதை ஜயம்பதியிடம் சந்திரிகா சொல்லியிருந்தார்.

 
அப்போது சம்பந்தன் ஐயா நாட்டில் இல்லை. தொலைபேசியில் எல்லாம் இதை விவாதிக்க முடியாது. ஆனால் மைத்திரி பற்றிய சம்பந்தன் ஐயாவின் எண்ணம் எனக்கு தெரியும். அதனால், ‘மைத்திரி என்றால் நாங்கள் இணங்குவோம்’ என உடனேயே சொன்னேன். நாங்கள் ஆதரிக்கிறோம் என்றதும், ஜேவிபியுடன் பேசாமலேயே மைத்திரியுடன் பேச சென்றுவிட்டார் ஜயம்பதி. ஆரம்பத்தில் மைத்திரி மறுத்துவிட்டார். அவருக்கு நிறைய பயமிருந்தது. பின்னர் சந்திரிகா வந்து நேரடியாக பேசிய பின்னரே மைத்திரி இணங்கினார்.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையில் தீர்வு என முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழர்களிற்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டுமென நினைத்தோம். அப்போது சிகிச்சைக்காக சம்பந்தன் ஐயா இந்தியாவில் இருந்தார். மைத்திரியுடன் நேரடியாக பேச நானே சென்றேன். அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட சம்பந்தன் ஐயா, ‘வெட்டொன்று துண்டு இரண்டாக கதைச்சு அவரை வெருட்டிப் போடாதையுங்கோ. ஆனால் விசயத்தை தெளிவாக சொல்லிவிட்டு வாருங்கள்’ என்றார்.

‘ஒற்றையாட்சி என்ற சொல்லை மாற்றாமல் விட்டால் நாங்கள் உங்களை ஆதரிக்கமாட்டோம்’ என்று சொல்லப்போகிறேன் என்றேன். ‘இல்லையில்லை… அப்படி சொல்லாதீர்கள். நாங்கள் உங்களிற்கு ஆதரவு தருவதாக இருந்தால் அந்த சொல்லை மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்’ என்றார். அதுதான் இராஜதந்திர உரையாடல். அவரிடமிருந்துதான் இதை கற்று கொள்கிறோம். மைத்திரியை சந்தித்து விடயத்தை சொன்னதும், ஒற்றையாட்சியை விஞ்ஞாபனத்திலிருந்து அகற்றினார்.

நாங்கள் ஒப்பந்தம் எதுவும் செய்யாமல் மைத்திரியை ஆதரித்து விட்டோம் என குற்றம்சாட்டுபவர்களும் உள்ளனர். அதுபற்றிய சம்பவம் ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.

சந்திரிகா அம்மையாரின் வீட்டில் ஒரு சந்திப்பு நடந்தது. சந்திரிகா, மைத்திரி, ரணில் ஆகியோருடன் நானும், சம்பந்தன் ஐயாவும் கலந்து கொண்டோம். ‘அரசியல் தீர்வு தொடர்பாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடுவோம். மைத்திரியும் அதற்கு தயாராக இருக்கிறார்’ என்றார் சந்திரிகா. ஆனால் சம்பந்தன் ஐயா மறுத்துவிட்டார். ‘அப்படி ஒரு ஒப்பந்தமும் வேண்டாம். ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சம்பந்தன்-சிறிசேனா இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டனர் என மகிந்த பிரசாரம் செய்வார். அந்த சமயத்தில் நானோ, மைத்திரியோ பொய்யா சொல்வது? அதனால் ஒப்பந்தம் வேண்டாம்’ என சம்பந்தன் ஐயா சொன்னார்.

அப்போது சந்திரிகா ‘சாம்… 60 வருடங்களாக சிங்கள தலைவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் இன்னுமா எங்களை நம்புகிறீர்கள்?’ என்றார். அதற்கு சம்பந்தன் ஐயா ‘உங்கள் அப்பாதான் முதலாவதாக ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். அதில் கையெழுத்து போட்டதால் எங்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. காகிதத்தில் மையை கொட்டுவதால் எதுவும் நடக்காது. இனப்பிரச்சனை தீர வேண்டுமாக இருந்தால், நீங்கள் எங்களை நம்ப வேண்டும். நாங்கள் உங்களை நம்ப வேண்டும். இது எல்லாவற்றிற்கும் முதல் மைத்திரிபால வெல்ல வேண்டும். அவர் வெல்வதென்றால் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படக்கூடாது’ என்றார்.
மாவை அண்ணன் சில கூட்டங்களில், ‘இதயத்தால் எங்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது’ என சொன்னார்.

2015 தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்ததற்கு ஒரு காரணமுள்ளது. அதுவரை நான் ஒரு விடயத்தை சொன்னால், ‘இவர் நியமன எம்.பி. மக்கள் சார்பாக பேச முடியாது’ என ஒரு சாரர் சொல்லிவந்தனர். இதனை ஒரு சவாலாக ஏற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என சொன்ன ஒரேயொரு வேட்பாளரும் நான்தான்.

மிதவாத கொள்கையை வெளிப்படையாகவே சொன்னேன். எனக்கு ஆயுதத்தில், வன்முறையில் நம்பிக்கையில்லை. இது, அதில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அவ்வளவே.

மிதவாத போக்கின் மூலம் மக்களின் விடிவை காணலாம் என்ற நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதனை மக்களிடம் சொன்னேன். மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்தால் மாத்திரமே மக்கள் பிரதிநிதியாக செயற்படுவேன் என சொல்லியே தேர்தலில் போட்டியிட்டேன். எனது கொள்கைகளை தெரிந்து கொண்டு மக்கள் வாக்களித்தனர்.

ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் கரவெட்டியில் நடந்தது. ஒரு பெரியவர் சொன்னார் ‘சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களிற்கு வாக்களிக்கமாட்டோம்’ என்றார்.

சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கான காரணத்தை அவருக்கு புரியவைத்தேன். ‘அங்கு போனது சரியென்றுதான் இப்போதும் நினைக்கிறேன். சரியென நான் நினைப்பதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் நான் சென்றது பிழையென கருத உங்களிற்கு பூரண உரிமையுள்ளது. நான் போனது பிழையென நினைத்தால் தயவுசெய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். நான் போனது சரியென நினைத்தால் மாத்திரமே வாக்களியுங்கள்’ என்றேன். பின்னர் அந்தக் கூட்டம் முடிந்து நான் சென்ற பின்னர் அந்தப் பெரியவர் எனக்கு மட்டும்தான் வாக்களிப்பதாக சொன்னதாக கேள்விப்பட்டிருந்தேன்.

வெளிப்படையாக என்னுடைய கருத்துக்களை கூறியிருந்தேன். மக்களும் தெரிவு செய்திருக்கின்றனர். ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டி இருக்கின்றது. அதேநேரத்தில் அரசாங்கமும் காலத்தை இழுத்தடிக்கிறது. உரிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமலும் இருக்கிறது. இதனால் மக்களின் அவநம்பிக்கை அதிகரிக்கலாம். அது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. மகிந்த காலத்தில் நேரடியாகவே எதிர்த்தோம். அது இலவானது. இப்போதைய சூழ்நிலை மிக கஸ்ரமானது. அரசாங்கத்தை கவிழவும் விடக் கூடாது. அதேநேரத்தில் அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையில் இந்த இரட்டைகுதிரையில் சவாரி செய்கிறோம்.

யாரோ

நன்றி FB

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் வந்த நண்பரின் கருத்து..

 

இந்த கட்டுரை தமிழ் வாக்காளர் மத்தியில் ஒரு ஆதரவு  அலையை ஏற்படுத்தி விடும் நோக்கோடு மிகத் திட்டமிட்டு வரையப்பட்டுளது.

சுமந்திரன் கடந்த முறை தேர்தலில் நின்ற போது தொழில் முறை  தேர்தல்  பரப்புரையாளர்களை கூலிக்கு வைத்திருந்தார் (இதற்குரிய பணத்தை யார் கொடுத்தது) தேர்தலை மாத்திரம் அல்ல, தொடர்ச்சியாக சுமந்திரனையும் சம்மந்தனையும் தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைக்கும் பிரச்சார உத்தி, தொழில் முறை பரப்புரையாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. 

எனது ஊரில் மைக்கேல் விளையாட்டுக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது அவர்களின் FB யில்  நாள் தவறாமல் சுமந்திரன் மற்றும் அவர்களின் சகபாடிகளான ஆனோல்ட் , சுகிர்தனின் புகழ்பாடி செய்திகள் வரும்.......

பாத்து கொள்ளுங்கள் இவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான அனைத்துக் கட்டமைப்புகளிலும் எவ்வாறு தமது ஆதரவு தளங்களை உருவாக்கி விட்டுள்ளார்கள் என்று.

1958  மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை 1983 ஐ விட அதன் தாக்கம் மிக அதிகம் ( 1983 யே பலர் பாரிய இன அழிப்பு எனக் கூறுவர் அது தவறு)
கிட்டத்தட்ட 20 வருடங்கள் எமது தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் தமிழரை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றார்கள் அந்த நேர்மையாவது அவர்களிடம் இருந்தது. (இறுதியில் ஆயுதப்போரும் வந்தது அழிவும் வந்தது). 

2009 மிகப்பெரிய அவலம் .... 10 வருடங்கள் கடந்து விட்டது. இன்னுமொரு 10 வருடங்களில் தமிழரை யாரும் காப்பாற்ற முடியாது என்கின்ற நிலை வரலாம் அப்போதாவது அதனை நேர்மையாக ஒத்துக் கொள்ளும் பக்குவம் சுமந்திரனிடம் இருக்குமா தெரியாது.

அவ்வாறான நிலமை வரும் போது ..... மீளவும் ஒரு சந்ததி ஆயுதப் போருக்குச் செல்லலாம் அப்போது நானோ எனது பிள்ளைகளோ அங்கு செல்லப்போவதில்லை. ஊரில் யார் யாரோ பலரின் பிள்ளைகள் ...... 

விடுதலைப்போராட்டத்தை அஞ்சலோட்டத்தோடு ஒப்பிடுவார்கள் ஆற்றல் உள்ளவன் ஓடுவான் முதலா கடசியா என்பது இங்கு பிரச்சினை இல்லை. இலக்கை ஓடி முடிப்பவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான்.

ஆனால் நம்ம நா***** ஒவ்வொருதரா அஞ்சல் தடியை வாங்கிக் கொண்டு பின்பக்கமாக ஓடினாலும் பரவாயில்லை கிரண்டை விட்டே ஓடிட்டு எண்ட ஓட்டத்தை பார் எண்டு வீராப்பு பேசுறாங்களே! இது தான் தமிழர்களின்
நிலை ..... என்ன செய்வது?


வேட்டை நாய்களை வளர்த்தோம் வேட்டையாடின...
வேட்டை நாய்களை வாங்கினோம் - அவை நம்
வேட்டியை உருவின...

Link to comment
Share on other sites

ஆஹா அருமை , செய்வது பொறுக்கி வேலை , படிப்பது சிவபுராணம் ...
கரவெட்டியில் இவர் வந்தால் .... பாதுகாப்பு இல்லாமல் வர சொல்லவும் ...அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள் ....

அடுத்த தேர்தலுக்கு இவரின் எடுபிடிகள் செய்த பிரசங்கித்தனமே இது ..... வெட்கம் இல்லை இதனை எழுத்துவதட்கு ...துரோகிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.