Jump to content

கடவுள் படைக்காத மனிதர்கள்! 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் படைக்காத மனிதர்கள்! 

அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. 

டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது  மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம்.

ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும்  சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த  மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது. கூர்ப்பியல் சார்ந்த இந்த இலகுவான விளக்கத்தை அடிப்படை வாதக் கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்து Intelligent Design எனும் தங்கள் கற்பனைக் கொள்கையொன்றை ஊக்குவிக்கிறார்கள். இன்ரெலிஜென்ட் டிசைன் கூர்ப்பினால் மனிதன் பெற்ற சிறப்புகளின் உரிமையை அப்படியே தங்கள் கடவுளின் கைவண்ணமாகச் சித்திரிக்கிற ஒரு நொண்டி முயற்சி. அமெரிக்காவின் சில தென் மானிலங்கள், தமது பாடசாலைகளில் கூர்ப்புக் கொள்கையின் "நன்மை தீமைகளை" ஆராயும் பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டுமென்று சட்டமியற்றியிருக்கின்றன. இதன் நீண்ட கால இலக்கு, மத நம்பிக்கையின் பால் பட்ட இன்ரெலிஜென்ற் டிசைன் ஒரு மாற்றுத் தியரியாக திணிக்கப் பட்டு குழந்தைகளை அதை ஏற்கச் செய்வதாக இருக்கிறது. 

டார்வின் கூர்ப்பினால் தக்கன பிழைத்து சூழலுக்கு இயைபாக்கம் அடைந்து புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று ஊகித்த போது "ஜீன்" என்ற ஐடியாவே உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இயற்பியலில் ஐன்ஸ்ரைனின் கோட்பாடுகள் நவீன பௌதீகவியலாளர்களால் இன்றும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருப்பது போல, டார்வினின் கூர்ப்பியல் நூல் வெளியாகி சரியாக நூறு ஆண்டுகளில் பின்னர் டி.என்.ஏ (DNA) மூலக்கூறினை விஞ்ஞானிகள் வாட்சனும் கிறிக்கும் கண்டு பிடித்து, கூர்ப்பின் மூலக்கூற்று அடிப்படையை ஆரம்பித்து வைத்தனர். 

தற்போதைய கூர்ப்பை நிரூபிக்கும் ஆய்வுகள், வெளித்தோற்றங்களைத் தாண்டி, நேரடியாக டி.என்.ஏ மூலக் கூறுகளையே ஆய்வு செய்து பல தகவல்களை உறுதி செய்கின்றன. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் அப்படியான ஒரு டி.என்.ஏ சார் கூர்ப்பியல் ஆய்வு தான்.

ரஷ்யாவுக்கும் மொங்கோலியாவுக்கும் இடையே இருக்கும் டெனிசோவா எனும் பனி உறைந்த குகையொன்றை மனித வரலாறு தொடர்பான ஆய்வாளர்கள் 1980 இல் இருந்து அகழ்வு செய்து ஆராய்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே கண்டெடுக்கப் பட்ட என்புத் துகள்கள், மற்றும் கல்லாயுதங்கள் என்பவற்றை அவை அங்கே படிமமாகிய காலக் கணிப்பீட்டோடு ஆய்வு செய்யப் பட்ட போது பல சுவாரசியமான , மனிதக் கூர்ப்பின் படிமுறைகளை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குகையில் கிடைத்த ஒரு என்பின் டி.என்.ஏயின் படி, ஹோமோ சேபியன்ஸுக்கு நெருக்கமான டெனிசோவியன்ஸ் என்ற ஆதிமனிதர்களும் அவர்களுக்கு முன்னைய ஆதி மனிதர்களான நியண்டதால் (Homo neanderthalensis) மனிதர்களும் இனப் பெருக்க ரீதியில் கலப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள் (அதான்பா, அந்தக் குஜால் மேட்டர்!) என்பது தெளிவாகியிருக்கிறது. இது, மனிதனின் கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு. ஏன்? கூர்ப்பு என்பதன் அடிப்படை "ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. இந்த டெனிசோவாக் குகைகளில் நடந்த இன்னுமொரு ஆய்வில், 50,000 வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கக் கூடிய நவீன ஹோமோ சேபியன்ஸ் இனத்துடன் தொடர்பான கல்லாயுதங்களும்  கண்டெடுக்கப் பட்டிருப்பது, இந்த ஊகத்திற்கு மேலதிக உறுதி சேர்க்கிறது. 

நாம் பல இடங்களில் காண்பது போல, அறிவியல் ஆய்வு முயற்சிகள் கடினமானவை, நீண்ட முயற்சியை வேண்டுபவை. அந்த அறிவியல் வியர்வை சிந்தி வெளிக்கொண்டு வரும் எமது கதையை கடவுளின் பக்தர்கள் தங்கள் அடிப்படை வாதத்தை வளப்படுத்தப் பாவிப்பது இன்னும் தொடரும் என நம்பலாம். இந்த இறுதிக் கண்டு பிடிப்பு இன்ரெலிஜென்ற் டிசைன் காரர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

ஆதாரங்கள்:      

1. Dating of hominin discoveries at Denisova, Dennell, R. Nature, vol 565, 571–572 (2019).

2. Timing of archaic hominin occupation of Denisova Cave in southern Siberia, Nature, vol 565, 594–599 (2019) . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள்!
தொடர்ந்தும் எழுதுஙகள், ஜஸ்டின்..!

Link to comment
Share on other sites

அருமையான பதிவு. இவ்வாறான யாழுக்கென்றே படைக்கு ஆக்கம் தான் யாழை மெருகேற்றும்.

நன்றி

Link to comment
Share on other sites

நியான்டர்தால் அழிந்தமைக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது... மற்ற இனங்களை விட நியாண்டர்தால் வலிமையானவர்கள்... அவர்களது வலிமையால் மற்ற இனங்களை தங்கள் சௌகரியத்திற்காக உணவு சுலபமாக கிடைக்கும் இடங்களை விட்டு விரட்டி அடித்தார்கள்... வலிமை குறைந்தவர்கள் வேறு வழியில்லாமல் வாழ்கையை ஓட்டுவதற்க்கு மூளையை உபையோகிக்கும் நிலைக்கு தள்ள பட்டார்கள், இடமும் பெயர்ந்தார்கள்... கடினமாக வேட்டை ஆடினார்கள், ஆயுதங்கள் பெருகின... அதே சமையம் நியான்டத்தார்கள் சுலபமாக கிடைக்கும் உணவுகளுக்காக தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டார்கள், உணவும் குறைந்து போயின...மாண்டும் போனார்கள்... இடம் பெயர்ந்த சில பல நியான்டர்த்தால் இனம் மூளை கூர்மையான மற்ற இனங்களிடம் தோற்றும் போனார்கள்...

Link to comment
Share on other sites

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று தற்போது அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு தடவை வாசித்தேன் ஒன்றுமே புரியவில்லை.நேரம் வரும் போது இன்னொரு முறை முயற்சி பண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

On 2/1/2019 at 1:14 PM, Justin said:

உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த  மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது.  இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. 

தேடல்கள் எப்போதும் சுவாரசியமானவை. மனித குலத்தின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் சுவாரஸ்யமானது, கூடவே சிக்கலானது.

நல்லதோர் ஆய்வுக் கட்டுரையை அருமையாகத் தமிழில் தந்தமைக்கு நன்றி, ஜஸ்ரின். இவ்வாறான ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 😊

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பயனுள்ள ஆக்கம் ஜஸ்ரின். 👍🏾

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று நிரூபிக்க பலர் முயன்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஏவாளுக்கு பொக்குள் இல்லை என்று சொல்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2019 at 11:19 AM, கிருபன் said:

நல்லதோர் பயனுள்ள ஆக்கம் ஜஸ்ரின். 👍🏾

டார்வினின் கூர்ப்புக்கொள்கை பிழையானது என்று நிரூபிக்க பலர் முயன்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஏவாளுக்கு பொக்குள் இல்லை என்று சொல்வார்கள்!

ஏவாளுக்கு மட்டுமா பொக்குள் இல்லை? விக்ரோறியாஸ் சீக்ரட் உள்ளாடை மொடலான கரோலினா குர்கோவாவுக்கும் தான் பொக்குள் இல்லை!😊 படம் இணைக்கப் பயமாக இருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ்த்தவர்களின் பைபிளில் மிகவும் பழமையானது ஆதியாகமம். சொல்லப்பட்டிருக்கும் கதைகளில் பெரும்பாலானவை எழுதியவர்களால் ஊகிக்கப்பட்டவை அல்லது, இப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களை விஞ்ஞான ரீதியில் நிறுவுவதற்கு எந்த சான்றும் இல்லை. அதிலொன்றுதான் ஆதாமினதும் ஏவாளினதும் கதை. எனது கடவுள்கள் பற்றிய விளக்கத்தை இதற்குமேல் தொடர விரும்பவில்லை.

கூர்புக் கொள்கை பற்றி முன்னர் எனக்குத் தெளிவு இருக்கவில்லை. குரங்கலிலிருந்து மனிதன் வந்திருந்தால், குரங்குகள் இன்னும் ஏன் இருக்கின்றன என்பதே அந்தத் தெளிவின்மைக்குக் காரணம். ஆனால், இப்போது அதுபற்றி நன்கு விளங்கிவிட்டது. 

கூர்பென்பது அதன் மூலத்திலிருந்து இன்றுவரைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் ரெண்டு அல்லது மூன்று உயிரினங்களிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் தனது மூதாதையர்களை அழித்துத்தான் உருவாகவேண்டிய தேவையில்லை என்பது தெளிவாகிறது. இதுவே மனிதர்களாகிய நாமும் சிம்பான்ஸிகளும் மச்சான்கள் எனும் விளக்கத்திற்குக் காரணம்.

இன்னுமொருமுறையில் விளங்கப்படுத்தினால், பூனைக்குடும்பத்தில் உள்ள வீட்டுப்பூனை, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகிய அனைத்துமே இன்று சமாந்தரமாக உயிர்வாழ்கின்றன என்பது. 

கல்வியறிவும், உலகறிவும் இல்லாத காலத்தில் மக்களுக்கு தாம்விரும்பும் ஒரு விடயத்தைக் கடவுள் எனும் நாமத்தைப் பாவித்துப், பயப்படுத்திப் புகட்டினார்கள். ஆனால், இன்று எதையுமே கேட்டு அறிந்து, புரிந்துகொள்ளுகிறோம். மதம் சொல்லும் விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், பொய்யென்று நிரூபிக்கப்படுவதும் தடுக்கமுடியாததாகிவிடுகிறது.

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ragunathan said:

கிறீஸ்த்தவர்களின் பைபிளில் மிகவும் பழமையானது ஆதியாகமம். சொல்லப்பட்டிருக்கும் கதைகளில் பெரும்பாலானவை எழுதியவர்களால் ஊகிக்கப்பட்டவை அல்லது, இப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களை விஞ்ஞான ரீதியில் நிறுவுவதற்கு எந்த சான்றும் இல்லை. அதிலொன்றுதான் ஆதாமினதும் ஏவாளினதும் கதை. எனது கடவுள்கள் பற்றிய விளக்கத்தை இதற்குமேல் தொடர விரும்பவில்லை.

கூர்புக் கொள்கை பற்றி முன்னர் எனக்குத் தெளிவு இருக்கவில்லை. குரங்கலிலிருந்து மனிதன் வந்திருந்தால், குரங்குகள் இன்னும் ஏன் இருக்கின்றன என்பதே அந்தத் தெளிவின்மைக்குக் காரணம். ஆனால், இப்போது அதுபற்றி நன்கு விளங்கிவிட்டது. 

கூர்பென்பது அதன் மூலத்திலிருந்து இன்றுவரைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் ரெண்டு அல்லது மூன்று உயிரினங்களிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் தனது மூதாதையர்களை அழித்துத்தான் உருவாகவேண்டிய தேவையில்லை என்பது தெளிவாகிறது. இதுவே மனிதர்களாகிய நாமும் சிம்பான்ஸிகளும் மச்சான்கள் எனும் விளக்கத்திற்குக் காரணம்.

இன்னுமொருமுறையில் விளங்கப்படுத்தினால், பூனைக்குடும்பத்தில் உள்ள வீட்டுப்பூனை, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகிய அனைத்துமே இன்று சமாந்தரமாக உயிர்வாழ்கின்றன என்பது. 

கல்வியறிவும், உலகறிவும் இல்லாத காலத்தில் மக்களுக்கு தாம்விரும்பும் ஒரு விடயத்தைக் கடவுள் எனும் நாமத்தைப் பாவித்துப், பயப்படுத்திப் புகட்டினார்கள். ஆனால், இன்று எதையுமே கேட்டு அறிந்து, புரிந்துகொள்ளுகிறோம். மதம் சொல்லும் விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், பொய்யென்று நிரூபிக்கப்படுவதும் தடுக்கமுடியாததாகிவிடுகிறது.

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

எதிர்காலம் பற்றிய பயத்தில் உருவாகியதே மதங்கள் எனக் கருதுகின்றேன்!

மழை, இடி, மின்னல் போன்றவற்றையும்...அதன் விளைவுகளான வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றைக் கண்டு பயந்தவனுக்கு...ஒரு கடவுள் தேவைப்பட்டது!

இறப்பைக் கண்டு பயந்தவனுக்கும்.....ஒரு கடவுள் தேவைப்பட்டது!

மழையின்றி....விவசாயம் பொய்த்துப் போகும் போதும்...ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

சந்ததியில்லாமல் போகும் போதும்....ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

தனது இயலாமையை.....துன்பங்களைக் கேட்பதற்கும்....ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

தனது மனச்சாட்சி....தன்னை உறுத்தும் வேளைகளில்...அந்தப் பாரத்தைச் சுமக்கவும்...ஒரு கடவுள் தேவைப்பட்டார்!

இப்போது...பொருளாதாரத் தேவைகளுக்கும், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கூடக் கடவுள் தேவைப்படுகிறார்!

சக மனிதனை....அழிப்பதற்கும்.....சுரண்டுவதற்கும்....கூட...ஒரு கடவுள் இப்போது.....தேவைப்படுகிறார்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இலகு நடையில் சுவாரசியமாக விளங்கத் தக்க வகையில்  எழுதியிருக்கிறீர்கள் ஜஸ்டின்,    வாழ்த்துக்கள்.  சம காலத்தில் நண்பன் ராஜ் சிவா எழுதும் ஆக்கங்களைப் படித்திருக்கிறீர்களா .

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2019 at 10:21 PM, ரஞ்சித் said:

அப்படியானால், மதமும் கடவுளும் எதற்கு ? தெரியவில்லை, அப்படியொன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கும், அறிவில்லாத மனத்திற்கு மட்டும்.

அண்மையில் ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை பார்த்தேன். "மதங்கள் வந்த பின்னர் மனித நாகரீகங்கள் வளர்ந்தனவா அல்லது மனித நாகரீகங்கள் வளர்ந்ததால் மதங்கள் உருவாகினவா?" என்று கடந்த 10,000 ஆண்டுகளின் தொல்லியல் தரவுகளை வைத்து ஒரு ஆய்வு செய்திருந்தனர். ஆய்வு முடிவின் படி, சிக்கலான மனித சமூக அமைப்புகள் உருவான பின்னரே மதங்கள் உருவானதாகத் தெரிகிறது. எனவே, அரசியல் யாப்பு, சட்டம் போல மதமும் ஒரு கடிவாளம் போடும் ஏற்பாடு போலத் தெரிகிறது. யாப்புகள், சட்டங்கள் போலவே, மதங்களும் பிரிவினைகளை ஊக்குவிப்பது இதனால் தான் போலும்!

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை தொடர்ந்து எழுதப்போகிறீர்கள் என நினைக்கிறேன்.

ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

எமது இன்றைய மரபணுவில் 2% ஹோமோ செபியன்ஸ் நியண்டடாலியன்ஸ்சினது என்று எங்கோ வாசித்த நியாபகம்.

எம்மைவிட, உடல் வலுவும் மூளைகன அளவும்(?)  கூடிய இவர்கள் அழிந்து போய் நாம் தக்கண பிழைக்க எமது social skills and communication skills காரணம் என்கிறார் தனது Sapiens a brief history of human kind எனும் புத்தகத்தில் யுவல் நோவா ஹராரி.

சுருங்க சொல்லின் எமக்கு ஒரு culture ஐ உருவாக தெரிந்து இருந்ததால் நாம் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஒரு பொது நோக்கில் (அரசு, சாதி, மதம்) செயல்பட கூடியதாக இருந்ததாம். ஆனால் நியன்டடாலிஸ் 10-20 பேரை மட்டுமே சேர்க்கும் இயலுமை பெற்று இருந்தனராம்.

இதுவே நாம் தக்கன பிழைக்க ஒரு பெரும் காரணமாம்.

 

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.