Jump to content

ஆஸி -இலங்கை இரண்டாவது முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறிய ஆஸி.யை மீட்ட பேர்ன்ஸ் - ஹெட்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களை குவித்துள்ளது.

aus.jpg

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண தொடரில் விளையாடி வருகிறது,

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில், தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டி இன்று கேன்பிராவில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 28 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோய் பேர்ன்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தாடி அவுஸ்திரேலிய அணியை ஸ்திரமான நிலைக்கு கொண்டு சேர்த்தனர்.

aus2.jpg

அதன்படி இவர்கள் இருவருமாக இணைந்து அணிக்காக 308 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை டிராவிஸ் ஹெட் 161 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 87 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 384 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ஜோய் பேர்ன்ஸ் 172 ஓட்டத்துடனும், மார்னஸ் லேபுஷேன் 6 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக விஷ்வா பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும், சமிக கருணாரத்ன ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

sl.jpg

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். 

 

http://www.virakesari.lk/article/49138

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸி.!

ushman.jpg

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதில் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோர் தலா 8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்ரேலியா அணி 3 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அவ்வணி சார்பில் உஸ்மான் கவாஜா 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ட்ராவிஸ் ஹெட் 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கசுன் ராஜித இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய தினம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 534 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதில் அவுஸ்ரேலியா அணி சார்பில், மார்கஸ் ஹரிஸ் 11 ஓட்டங்களையும், ஜோ பார்ன்ஸ் 180 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா ஆட்டமெதுவும் பெறாத நிலையிலும், மார்னஸ் லேபுஸ்சேக்ன் 6 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குர்டிஸ் பெட்டர்ஸன் 114 ஆட்டமிழக்காது ஓட்டங்களையும், டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் விஸ்வா பெர்னான்டோ 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தின் 2 ஆம் பாதியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் 46 ஓட்டங்களுடன் காயம் காரணமாக ஓய்வறை திரும்பிய திமுத் கருணாரத்ன, மீண்டும் வந்து 59 ஓட்டங்களையும், திரிமன்னே 41 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அத்தோடு காயம் காரணமாக குஷால் பெரேராவும் 29 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். இறுதியில் 215 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

மேலும், பந்துவீச்சில் அவுஸ்ரேலியா அணி சார்பில், மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களையும், நாதன் லியோன் 2, பெட் கம்மின்ஸ் மற்றும் மார்னஸ் லேபுஷ்சாக்னே தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Dydl_IjV4AEkK4e.jpg

Dydl63wVAAY5qn0.jpg

Dydl3XGUUAAwtw8.jpg

http://athavannews.com/இலங்கை-அணிக்கு-இமாலய-இலக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டியிலும் படுதோல்வி

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 

aus1.jpg

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து, ஆட்டத்தை இடை நிறுத்தியது. 

பின்னர் முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கிய இலங்கை அணி நேற்றுமுன்தினம் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாவது நாட் ஆட்டம் நேற்று ஆரம்பிக்க முதல் இன்னிங்சில் 215 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் பாலோ-ஒன் கொடுக்காது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தாடி 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற்று, 2 ஆவது இன்னிங்ஸை இடை நிறுதிக் கொண்டது.

அதனால் அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 515 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி துடுப்பெடுத்தாட நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றது.

லஹிரு திரிமன்ற மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆடுகளத்தில் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். 

இந் நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று 17 ஓட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 51 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

srilanka.jpg

திமுத் கருணாரத்ன 8 ஓட்டத்துடனும், லஹிரு திரிமன்ன 30 ஓட்டத்துடனும், தினேஸ் சந்திமால் 4 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல 27 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 42 ஓட்டத்துடனும், குசல் பெரேரா டக்கவுட் முறையிலும், தனஞ்சய டிசில்வா 6 ஓட்டத்துடனும், சமிக கருணாரத்ன 22 ஓட்டத்துடனும், தில்றூவான் பெரேரா 4 ஓட்டத்துடனும் விஷ்வா பெர்ணான்டோ டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க குசல் ஜனித் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்செல் ஸ்டாக் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்னின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜோய் ரிச்செரட்சன் மற்றும் நேதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

mitchel.jpg

இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

 

http://www.virakesari.lk/article/49295

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.