Jump to content

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

பத்மா கபே.....பழைய நினைவுகள்.....சிலவற்றைக் கிழறி விட்டு விட்டது!

போதாக்குறைக்கு...... கமீதியா கபேயும் வந்து போகுது....!

இந்தத் திருவாசக  மணி மண்டபம்.....சந்தர்ப்பம் கிடைக்கும் போது.....கட்டாயம் பார்க்க வேண்டும்.....!

இதற்கு.....நிலம் கொடுத்து உதவி செய்தவர்.....சிட்னியில் வசிக்கும்....வைத்திய கலாநிதி மனோமோகன் என்று நினைக்கிறேன்!  

தொடர்ந்தும்....எழுதுங்கள்....சுவியர்...!

நானும் இந்ததடவை சென்று வந்தேன் .எமது பிள்ளைகள் இங்கு தேவாரம் பாடினார்கள்.....வைத்திய கலாநிதி மனமோகன் தான் இந்த கோவிலுக்கு காணி வழங்கினார்...

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை......(17).

                                                                            20180828-125305.jpg

 


                                          முள்ளியவளை நோக்கி கிளாலி பாலத்தால் சென்று பின் பரந்தன் சந்தியால் வாகனம் செல்கின்றது. நான் வற்றாப்பளை கண்ணகை அம்மனையும் தரிசித்து விட்டு போவோம் என்று சொல்ல புதுக்குடியிருப்பு சந்தியால் திரும்பி நந்திக் கடல் ஓரமாக வான் செல்கின்றது. இந்தியன் ஆர்மி யாழ்பாணத்துக்குள் வந்து எமது வாழ்வை அழித்த அந்த நாளில்  நான் மனிசி எல்லோரும் யாழ்ப்பாணத்தில் ஆதீனத்தில் தங்கி விட்டோம். அம்மா,மாமி, மச்சாள்மார் எல்லோரும் குடி பெயர்ந்து வந்து கண்ணகை அம்மன் கோவிலில்தான் தங்கி இருந்தனர். நந்திக் கடலைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலும் நினைவில் நிழலாடி கண்கள் பணிகின்றன. அந்தப் பெரிய காட்டைக் கடந்து கோவில் வாசலில் வான் வந்து நிக்கின்றது. அங்கிருந்த குழாயில் கைகால் கழுவி விட்டு கோபுரத்தின் முன்னால் கற்பூரம் ஏற்றி  சிதறுதேங்காய் போட்டுவிட்டு உள்ளே போகின்றோம்.ஓரளவு சனம் இருந்தது.மத்தியானம் பூசை நடந்து கொண்டிருக்கு.

                                                                       20180828-125328.jpg

                              கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

                                                                            20180828-134155.jpg
                                                மீண்டும் கிளம்பி முள்ளியவளையில் அத்தான் அக்கா வீட்டுக்கு வருகின்றேன்.அக்காவும் இரு வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். அங்கு அத்தானுடன் இருந்து கதைத்து சிரமபரிகாரம் செய்துவிட்டு கிளம்பி தண்ணீரூற்று பிள்ளையார் கோவிலுக்கு வருகிறோம். நான் சுமார் ஆறுமாதம் வரை தண்ணீரூற்றில் வேலை செய்திருக்கின்றேன்.அக்காலங்களில் தினமும் மாலை அந்தக் கேணியில் இருக்கும் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிப்பது. அப்போது அங்கு கிண்ணியாவைப் போல் ஆறேழு தொட்டிகள் இருக்கும்.அவற்றில் நீர் ஊற்றேடுத்து பெருகி வரும். இயற்கையை ரசித்து கொண்டே நீராடலாம். ஆனால் சுடுதண்ணீர் இல்லை.சுற்றிவர முப்போகமும் விளைந்து கொண்டிருக்கும் வயல்கள். நிலத்தை நிகத்தால் சுரண்டினால் நீர் வரும் பூமி. இப்பொழுது அந்தத் தொட்டிகளைக் காணவில்லை. ஒரே கேணியாக்கி பெரிய மதிலால் மூடிக் கட்டியிருக்கிறார்கள்.அது எனக்கு ரசிக்கவில்லை.

                                                                        20180828-134208.jpg

யாத்திரை தொடரும்........!

சம்பவம் : தெய்வம் எங்காவது பொய் சொல்லுமா, சொன்னதே எனக்காக சொன்னது.... மாலை ஆறு மணியானால் வீட்டில் பித்தளை விளக்கு,ஒரு மேசை லாம்பு, ஒரு அரிக்கன் லாம்பு பளிங்கு போல் துடைத்து மண்ணெண்ணெய் விட்டு திரியெல்லாம் கத்தரித்து விளக்கேற்றுவார்கள்.அந்த நேரம் எனக்கு ராகுகாலம். நான் வீட்டை விட்டு வளவுகளுக்குள் ஓடி விடுவேன்.பெரும்பாலும் பின்னாலே நாலுவீடு தள்ளி இருக்கும் பெரியம்மா(அம்மா,மாமா,குஞ்சம்மா,சின்னம்மா எல்லோருக்கும் அக்கா) அங்கு போய் விடுவேன்.அங்கு எனக்கு அண்ணாவும் அக்காவும் இருக்கினம்.என்ர தெய்வம் அக்கா என்னை அறைக்குள் தள்ளி விடும்.வாசலில் தான் இருந்து கொண்டு தன்னை சுற்றி சீலை சட்டைகள் தைப்பது போன்ற பாவனையில் பரப்பி வைத்திருப்பா.அல்லது கடகத்தில் புளியம்பழம் கொட்டி பரப்பி உடைத்து கொண்டிருப்பா.பிசாசுகள் என்னை எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கும். இங்கேயும் வரும்.

உவன் தம்பி உங்க நிக்கிறானோ. யார் சுவியோ அவன் இஞ்ச வந்து எத்தனை நாள். இஞ்ச வரேல்ல. குரங்கு படிக்கிற கள்ளத்தில் எங்கேயோ போய் ஒளிச்சுட்டுது.வரட்டும் காலை முறித்து அடுப்புக்கை வைக்கிறன் என்று விட்டு போய் விடுவினம். பின்பு அக்கா தன்பாட்டில் அங்கிருந்து பாடும்.இந்து லேடிஸ் ஸ்டூடன்ற்.நல்லா படிப்பா.ஒருநாளும் பெரியம்மாவும் அக்காவும் எனக்கு அடித்ததே இல்லை.ஆங்கில பாட்டுக்கள் பாபா பிளாக் சீப், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார், ரெய்ன் ரெய்ன் கோ எவேஎல்லாம் முற்றத்தில் நின்று நடித்து நடித்து பாடுவா.நானும் கூட சேர்ந்து பாடுவேன். ஜாக் & ஜில் பாடினால் இருவரும் தண்ணியோடு விழுந்து உருளுவார்கள்.நாங்களும்தான், பின்பு ஹா ஹா என்று சிரிப்பு வேற. உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாரதியாரை விட ஆவேசத்தில் 45 டிகிரியில் கையை உயர்த்தி பாடினால் விழுந்த வானம் மீண்டும் போய் ஒட்டி கொள்ளும். மற்றும் பாடப்புத்தகங்களில் வரும் கதைகள் பாடல்கள் எல்லாம் நீ படி என்று சொல்லாமலே என் தலைக்குள் ஏற்றி விடும். சிலேட்டு இல்லை கொப்பி பென்சில் இல்லை இதுதான் படிப்பு என்று தெரியாமலே படித்திருக்கிறேன்.

 சில காரணங்களால் மனிசி பிள்ளைகளையும் பார்க்காமல் நான் பிரான்சிக்கு வருகிறேன்.என் எண்ணம் இரண்டு சாவியுடன் இங்கு வேலை செய்யலாம் என்று.ஆனால் இங்கு சட்டதிட்டங்கள் கடுமை. பாஷை தெரியாது.ஆங்கில எழுத்துக்கள் ஆனால் ஆங்கிலமாய் உச்சரிப்பு இல்லை. ஒரு போர்த்துகீஸ்காரனிடம்  வேலை செய்கிறேன்.ஒருத்தர் வந்து நின்று நெடுநேரம் எனது வேலையை பார்த்து கொண்டு நிக்கறார்.கொஞ்ச நேரத்தில் எனக்கு பாஷை தெரியாது என்பதை புரிந்து கொண்டு நீ நல்லா வேலை செய்கிறாய் என்று சைகையாலும் சிறிது ஆங்கிலத்திலும் பாராட்டுகிறார். நானும் ஆங்கிலத்தில் எனது வீரப்பிரதாபங்களை அள்ளி விடுகிறன். சற்று நேரத்தி அவர் தனது கார்டை காட்டி நான் போலீஸ் நாளை காலை ஸ்டேசனுக்க வா என்று எனது கார்டை வாங்கி கொண்டு விலாசம் தந்து விட்டு போய் விட்டார்.அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது ஒரு மொழிபெயர்பாளருடன் விசாரணை நடந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது இந்நாட்டில் இது குற்றம் என்று சொல்லி விடுகிறார்கள்.வெளியே வந்தால் எனக்கு வேலை தந்தவரும் உள்ளே இருந்து வாரார்.
             பின்பு நான் இங்கு "அடாப் "(addap)பில் மூன்றுமாதம் படித்தேன். அங்கு ஒரு வியட்னாம் ஆசிரியர். அவர் படிப்பிக்கும் போது கொப்பியில் எழுத சொல்வதில்லை."எக்ரி தான் லு தெத்" தலையில் எழுது என்று சொல்லுவார். மிகத்  தேவையான வாக்கியங்களை வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் மீன்டும் மீன்டும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டும். உதாரணமாக இந்த இடத்துக்கு எப்படி போவது. வழி சொல்லுவது. கடையில் சாமான்கள் வாங்குவது என்று அன்றாடம் புழக்கத்தில் உள்ள வாக்கியங்கள்.பிற்காலத்தில் இந்த படிப்பு எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. வங்கிகளில் கடன் வாங்கவும், எலக்ரிக் கடைகளில் கடனுக்கு சாமான்கள் வாங்குவதற்கும்.

யாழ் இந்துவில் படிக்கும்போது ஏ .எஸ் கனகரட்னம் மாஸ்டர். ஆங்கில வகுப்பு எடுப்பவர்.வேட்டி சட்டையுடன் வருவார்.prefact கார் வைத்திருந்தார்.அவர் அதிகமாக எங்களுக்கு ஆங்கில வகுப்பை விடுதியில் உள்ள சாப்பாட்டு அறையில்தான் நடத்துவார்.அது ஒதுக்கு புறமாக இருப்பதால் யாருடைய இடையூறும் இருக்காது. அங்கு பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை நாங்கள் புத்தகத்தை பார்த்தே அந்தந்த பாத்திரங்களாக இருந்து நடிக்க வேண்டும்.சிங்கம் முயல் கதையை எல்லோரும் மாறி மாறி பேசி நடிக்க வேண்டும்.ஒருத்தரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.அப்போது ஒரு டேப்ரெக்காடர் இரண்டு பெரிய வீல் மேலே நாடாவுடன் சுற்றி கொண்டிருக்கும்.அதில் ஆங்கிலத்தை எப்படி உச்சரிப்பது, இருவர் எப்படி உரையாடுவது என்று எல்லாம் இருக்கும்.அதை முதல் பத்து நிமிடம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பின்பு அதே போல் உரையாட வேண்டும். எல்லாம் ஞாபகத்தில் வந்து போகின்றது.....!

                      ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும்  (மாமாவின் மகன்)  மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை  கெதியாய் குடிக்கத்  தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 11:15 AM, suvy said:

யாத்திரை .....(14)

                                    IMG-20181018-WA0015.jpg


 

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2019 at 3:29 PM, ஈழப்பிரியன் said:

பத்மாகபே என்னாச்சு?

ஈழப்பிரியன்..... நீங்கள், பத்மா கடையில்... 
சைக்கிள் கடை மணியன், காசில்....   சாப்பிட்ட  ஆளா நீங்கள்.
அப்படி... என்றால், நெருங்கி வந்து விட்டோம்... மச்சான்.  🤪 😝 🤑  😍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

  கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

இந்த குடுப்பினை எல்லாருக்கும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

சிறி வெள்ளிக்கிழமைகளில் மதியம் கடையில் வாங்கி சாப்பிடும்படி காசு தருவார்கள்.அனேகமாக பத்மாகபேயிலும் மைதான மூலைக்கடையில் கீரைவடையும் மாறிமாறி சாப்பிடுவேன்.கீரைவடை 10 சதத்திற்கு வாங்கியதாகவே ஞாபகம்.ஒரு வடை சாப்பிட்டாலே போதும்.

இந்த வயிரவர் கோவிலில் ஒரு குண்டு ஐயர் இருந்தவர்.அந்த நேரம் அவரை பகிடி பண்ணுவோம்.கோவிலுக்குள் இருந்து தவளை பிடித்து எங்கள் மீது எறிவார்.

Link to comment
Share on other sites

சுவி அண்ணா, தங்கள் அனுபவப் பகிர்வுகள் எம்மையெல்லாம் தாயகத்துக்கு மீண்டும் கூட்டிச் செல்கின்றன. உங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிடக்கூடிய ஆற்றலை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

                 20180816-172129.jpg

இதுதான் வயிரவர் கோவில். அது ஒரு அம்மன் கோவில்.முன்பு அது எமது உறவினரின் வீட்டுக்குள் இருந்தது. பின்பு அந்த காணி பள்ளிக்கூடத்துக்கு கொடுத்ததும் அவர்கள் கோவிலை அப்படியே விட்டு விட்டார்கள். நான் படிக்கும்போதும் கீரைவடை  பத்துசதம்தான்.பக்கத்தில் முருகன் பேக்கரி இருந்தது. அதில் சீனி ஒழுக ஒழுக  பனிஸ் ஐந்து சதத்துக்கும் , பூ பிஸ்கட் மேலே பூவாய் ஐசிங் செய்தது ஐந்து சதத்துக்கு கை நிறைய அள்ளித் தருவினம்.  ரோஸ்பான் அரை றாத்தல் கால் றாத்தல் என்று இருக்கும்.நல்ல ருசி.அந்தக் குண்டு ஐயர் இப்பொழுது இல்லை.(நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருது இன்னொரு ஐயரின் சம்பவம் ஒன்று). மில்லிய ஐயர் ஒருவர் பூசை பண்ணுகிறார். அவரையும் காத்திருந்து சந்தித்து விட்டு வந்தேன்.  😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை ....(18).
                 
                   20180828-134859.jpg

                       பிள்ளையாரையும் நன்றாகத் தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு புளியங்குளம் வீதியூடாக வவுனியா வந்து  கொழும்பு நோக்கி செல்கின்றோம். அங்கு வவுனியா பன்சாலையை (விகாரை) கடந்து போகும்போது அன்று அங்கிருந்த தேக்கங்காடும், பின்னால் இருந்த பெரிய கருங்கல்லுக்குழியும் (எந்நேரமும் நீர் நிறைந்திருக்கும். புதிதாய் யாராவது அந்த நீரில் புழங்கினால் சலக்கடுப்பு இலவசம்).அதைச் சுற்றி வாழ்ந்த மக்களும் நினைவில் வந்து போகின்றார்கள்.
கொழும்பில் சகோதரியின் வீட்டில் தங்கி சிரமபரிகாரம் செய்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு நள்ளிரவில் விமானநிலையம் வந்து மீண்டும் கட்டார் விமானத்தில் பயணம் செய்து பாரிஸ் வருகின்றோம்.விமானத்தில் விஷாலின் " துப்பறிவாளன்" மற்றும் அமிதாப் நடித்த இன்னொரு படமும் பார்த்தேன். விமானத்தை விட்டிறங்கி வெளியே வர எனது மகளும் பேரனும் வந்திருந்து வரவேற்கிறார்கள்....!

                பாரிஸில் எனது பெறாமகளின் திருமணம்.அதற்காக அவசரமாய் வரவேண்டி இருந்தது. அது முடிந்து அடுத்தடுத்த நாள் மீண்டும் விமானத்தில் பெர்லின் நகருக்கு பயணமாகின்றோம்.ஜன்னலால் கீழே பார்க்கின்றேன்.
                                                  " தலையின் மேல் நின்று கூத்தாடும் மேகங்கள் 
                                                              காலின் கீழ் நகரும் விமானத்தில் 
                                                                                பறக்கும்போது "
கவிதையாய் மனசு பறக்கின்றது.அங்கு எனது மச்சாளின் வீடுகுடிபூரல். அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அங்கு நாங்களும் மச்சாள் சகலன் எல்லோருமாய் பெர்லின் முருகன் கோவிலுக்கு செல்கின்றோம். அங்கும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு எனக்கு. வசந்த மண்டபத்தில் பூசை நடக்கின்றது. அன்று கோவில் திருவிழா நடந்து கொடி இறக்கும் நாள். அந்த கோவிலிலும் நல்லூர் திருவிழாக்களின் வரிசைப்படிதான் திருவிழா நடப்பது வழக்கம். ஐயரும் பஞ்சபுராணம் படிக்க அழைப்பு விடுகின்றார். அடியேனும் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த பக்தர்களிடம் நான் பாடவா என்று கேட்கிறேன்.அவர்களும் பெரிய மனதுடன் எனக்கு வழிவிட ஒலிபெருக்கியில் மெய்சிலிர்க்க கண்களில் நீர் வடிய பாடுகின்றேன் . பின்பு சுவாமி எழுந்து வந்து பார்த்திருக்க கொடி இறக்கம் நடைபெறுகின்றது. கொடியேற்றம் பார்ப்பவர்கள் கொடி இறக்குவதும் பார்ப்பது சிறப்பு. எங்களுக்கும் நல்லூர் முருகனின் கொடியேற்றமும் பெர்லின் முருகனின் கொடியிறக்கமும் தரிசிக்கும் பெரும்பேறு கிட்டியது முன் செய் புண்ணியம்.

                         வான்முகில் வழாது பெய்க மலிவலஞ் சுரக்க மன்னன் 
                                கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க 
                         நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க 
                                  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்......!

                                   இதுவரை என்னுடன் சேர்ந்து எங்களுடைய திவ்ய தேசத்தின் சில திருத்தலங்களை தரிசித்து வந்த அனைத்து உறவுகளையும் நன்றியுடன் என்றும் நினைத்திருப்பேன்.எங்காவது பிழைகள் இருந்தால் தயவுடன் பொறுத்தருள வேண்டும். கோயில் யாத்திரை சிலருக்கு சில சமயம் சலிப்பு தட்டலாம் என நினைத்ததால்தான் என் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நானும் நினைவு கூர்ந்தேன்.அவற்றையும் நீங்கள் ரசித்து படித்தும் ஊக்கமும் தந்திருக்கின்றிர்கள். உங்களுக்கும் எல்லா நலன்களும் கிட்டட்டும். நன்றி....

                                                                    20180828-093508.jpg     

                                                                                                                  Image associée

சம்பவம் : முல்லைத்தீவில் அத்தான் ஒரு கந்தோரில் வேலை செய்கிறார்.அவர் அந்த சுற்றுவட்டாரம் முழுதும் பிரசித்தமானவர்.அவர் அங்கு என்னை ஒரு கராஜில் சேர்த்து விட்டார். அப்போது அந்த ஒரு கராஜ்தான் அங்கிருந்தது. காலையில் அவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது மாலையில் பேரூந்தில் வீட்டுக்கு வருவது.(5 கி.மி.இருக்கும்).அங்கு ட்ரக்டர் வேலைகள் ஈஸியாக இருந்தது.பக்கத்தில் ஒரு தியேட்டர்.மாலை ஆறு மணியானால் ஊரெல்லாம் கேட்கும்படி  "நிலவோ அவள் இருளோ " என்னும் பாடல் ஒலிக்கும்.தினமும் இதே பாடல்தான். கையை கழுவிட்டு கிளம்பிடுவேன். ஒருநாள் பஸ் இல்லை. அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வருகின்றேன்.அதுவும் ஒவ்வொரு அடியையும் எண்ணிக்கொண்டு.அதுக்கு பதிலா "ராமா ராமா" என்று சொல்லியிருந்தாலும் ராமன் தரிசனம் தந்திருப்பான்.

                 அங்கு தினமும் மாலையில் நாலைந்து உத்தியோகத்தர்கள் எங்கள் வீட்டில் கூடுவார்கள். எல்லோரும் காட்ஸ் விளையாடுவார்கள். நான் அங்கு 304 நன்றாகவும், பிரிட்ஜ் சுமாராகவும் விளையாட கற்றுக்கொண்டேன். பின்னாளில் நான் திருமணமாகி நல்லூரில் இருக்கும் பொழுது இந்தியன் ஆர்மி அடிக்கடி ஊரடங்கு சட்டமும்,ஆறுமணி ஊரடங்கு சட்டமும் போடுவார்கள்.அப்போது அங்கு எனக்கு பொழுது போகவில்லை.நிறைய மச்சாள்மார். எல்லோருக்கும் 304 விளையாட பழக்கி விட்டேன்.அவர்களும் சில நாளிலேயே சிறப்பாக கற்று கொண்டார்கள்.அவர்களில் சிலர் பிரான்ஸ் வந்திருந்தனர்.எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம். அப்போதும் காட்ஸ் விளையாட கை குறையும் பொது கை கொடுத்து உதவினார்கள். ஏதோ என்னால் முடிந்த உதவி.

                       பின்பு தண்ணீரூற்றில் இருக்கும் அத்தானின் நண்பர் தனது கராஜில் வேலை செய்ய என்னை தரும்படி அத்தானிடம் கேட்க அவரும் முல்லைத்தீவு முதலாளியிடம் சொல்லி விட்டு தண்ணீரூற்றில் வேலை செய்தேன். அது வீட்டுக்கு பக்கத்தில் சைக்கிளில் போய் வந்தேன்.தினமும் அந்த கோயில் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிக்கிறது. எமது விட்டு கிணறு சுமார் நாற்பது முழ ஆழம். ஒரு வாளி தண்ணி ஊற்றிவிட்டு அடுத்தது அள்ளுவதற்கிடையில் மேல் காய்ந்து விடும்.

                        ஒருநாள் இரவு எனது நண்பன் என்னை தேடி கொண்டு ஓடி வாரான். டே சுவி அந்த ஐயர் நான் காரில் வரும்போது தடுமாறி கார்மேல் விழுந்திட்டார்.நான் பயத்தில் என்று ஓடி வந்திட்டேன் என்று சொன்னான். நீ வீட்டுக்குள் இரு நான் பார்த்துட்டு வாறன் என்று அங்கு போனேன்.அவர் மிகவும் வயதானவர். சாந்தியை கண்டால் சைக்கிளில் இருந்து இறங்கி வளைவு தாண்டி சென்று பின் ஏறி ஓட்டுபவர்.சந்தியில் அப்படி இறங்கும் போதுதான் தடுமாறி காரின் மேல் விழுந்துடார். சிலர் அங்கு  நிக்கினம். நான் அவரை கூட்டிக் கொண்டு அவரது சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரி ஓடலி ஒருவர் அங்கிருந்தவர்.அவரிடம் கூட்டிச்சென்று சில சிராப்புகள்தான், மருந்து போட்டு விட்டு வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.அடுத்த நாள் நண்பனுடன் சைக்கிளையும் எடுத்து சென்று குடுத்து  கதைத்து விட்டு வந்தோம். அதன் பின் அந்த ஐயர் சைக்கிள் ஓடுவதே இல்லை.......!

யாழ் இணையம் அகவை 21 

ஆக்கம் சுவி......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்..... நீங்கள், பத்மா கடையில்... 
சைக்கிள் கடை மணியன், காசில்....   சாப்பிட்ட  ஆளா நீங்கள்.
அப்படி... என்றால், நெருங்கி வந்து விட்டோம்... மச்சான்.  🤪 😝 🤑  😍
 

சிறி நீங்கள் எனக்கு பிறகு தான் படித்திருக்கலாம்.

இந்துவைச் சுற்றி இருந்தவர்களில் என்னோடு படித்தவர்கள் ஜெகா தாயாபரன் லோகேந்திரன் கப்பல் பாலா பாபு கோடீசின் தம்பி கிரி.இவர்களெல்லாம் சுவியின் அயலவர்கள்.

நீங்கள் சைக்கிள்கடை எனும்போது ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
அதையே இந்த வருட யாழுக்கான அகவை21 ஆக எழுதலாம் என்றிருக்கிறேன்.6ம் திகதி சன்பிரான்ஸ்சிஸ்கோ போகிறேன் அதன் பின் ஒரு மாதம் யாழ் தான் தஞ்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 3:45 PM, suvy said:

கொஞ்சம் புரிந்தாலும் அவரின் அறிமுகத்துக்காக காத்திருந்தேன்.அவர் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நிஜமாகவே ஆச்சரியமான விடயம்."முனி" என்றும் "தனி" என்றும் யாழில் பெயர்கொண்ட கனிவான அந்த இளைஞர் பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவாகவே இருந்தார். வீட்டில் இருந்து கதைத்து கொண்டிருந்தோம். வெய்யில் நேரமாய் இருந்ததால் ஜூஸ் ட்ரேயில் வந்தது.மூவரும் எடுத்து குடித்துக் கொண்டே கதைத்தோம்.(இப்படி விருந்தினர் வரும் போதுதான் எனக்கும் ட்ரேயில் உபசரிப்பு நடக்கும்).


              பின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே  கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோருக்கும் ஜீவனை நன்றாக தெரிந்திருக்கின்றது. அங்கு வடையும் பால் தேநீரும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் நாளை கண்டிப்பாக சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றோம். நானும் அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கவேண்டும் என்று தயார் நிலையில் இருந்தேன்.ஆனால் பின்பு அவர்களை சந்திக்க முடியவில்லை. தனி  அவசரமாக ஊருக்கு போய் விட்டதாக ஜீவன் தகவல்  சொன்னார்.

கொஞ்ச வேலைக்கான அழைப்புக்கள் வர ஊர் செல்ல நேர்ந்தது மீண்டும் ஓர் நாள் சந்திக்கலாம் அண்ண நன்றி நினைவு கூர்ந்தமைக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நீங்கள் கூறிய மூன்று கோவில்களுக்கு நானும் போய்யிருந்தேன்
நாவற்குழி திருவாசக மடம்,வற்றாப்பளை அம்மன் கோவில்,மற்றும் தண்ணீருற்று பிள்ளையார் கோவில்....அந்த கோவில் ஐயர் கடந்த வருடம்   ஒரு மோட்டர்  சைக்கிள் விபத்தில் இறந்து விட்டார்.

தண்ணீருற்று எனது மனைவியின் த‌ந்தையின் ஊர். திருமணம் முடிக்கமுதல் அந்த பக்கம் சென்றதில்லை.  திருமணத்தின் பின்பு பலதடவை சென்று வ‌ந்திட்டேன்..

On 2/23/2019 at 9:38 PM, suvy said:

தண்ணீரூற்றில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2019 at 4:42 PM, மியாவ் said:

அசாதரமான நிகழ்வு...

சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... 

தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... 

சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற...

சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது...

--தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா...

இதில் முக்கியமான ஒரு விடயம், ஒரு தாய் ஒருத்தர் தனது பிள்ளைகளை படகின் கரையில் இருந்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.குளிரும் தெறிக்கும் கடல் நீருமாக கைகள் எல்லாம் விறைத்திருந்திருக்கின்றது. பிள்ளையொன்று நீருக்குள் தவறி விட்டது. இருட்டில் யாருக்கும் தெரியவில்லை. கரையில் வந்த பின்தான் அதை தெரிந்து கொண்டனர்......!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மியாவ்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பதிவு நல்லாயிருக்கு, சுவி..! 

பகிர்விற்கு மிக்க நன்றி..!!  sermain.gif

சில நேரம் அலுவலக கணனியில் யாழ்க் களம் தெரியும்..படிப்பதுண்டு.

நீங்கள் சொல்லிய இந்து பள்ளி (இதுக்கு பேரு கல்லூரியா..? - நாங்கள் அதை 'பள்ளிக்கூடம்' என்றுதான் சொல்வது ! ) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் ஒரு உலா வந்தேன்.. 

  • மைதானதுக்கு அப்பால ரோட்ல கார் 'ஏசி' பொருத்தும் காரஜ் ஒன்னு கீதுபா..
  • இந்தண்டை சந்தியில, ரெண்டு மளிகை கடையும், கணனி திருத்துற கடைகூட  கீது..
  • ரோட்டுக்கு இப்பால  வூடுக அல்லாம் கொஞ்சம் கேரளா ஸ்டைலு..

ஊரு சூப்பரா கீது.. vil-heureux.gif

மத்தபடி ஆளுக..? vil-cligne.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2019 at 9:23 AM, suvy said:

ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும்  (மாமாவின் மகன்)  மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை  கெதியாய் குடிக்கத்  தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!

சுவி நான் திருமணமாகி மகன் பிறந்த பின்பும் எனது தகப்பனார் ஒருநாள் தடியோடு வந்து ஏதோ சிந்தனையில் கலியாணமும் கட்டி பிள்ளையும் பொத்துப் போட்டாய் இல்லையென்றால் தோல் உரியும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

Link to comment
Share on other sites

On 2/23/2019 at 9:38 PM, suvy said:

 

இதுவரை என்னுடன் சேர்ந்து எங்களுடைய திவ்ய தேசத்தின் சில திருத்தலங்களை தரிசித்து வந்த அனைத்து உறவுகளையும் நன்றியுடன் என்றும் நினைத்திருப்பேன்.எங்காவது பிழைகள் இருந்தால் தயவுடன் பொறுத்தருள வேண்டும். கோயில் யாத்திரை சிலருக்கு சில சமயம் சலிப்பு தட்டலாம் என நினைத்ததால்தான் என் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நானும் நினைவு கூர்ந்தேன்.அவற்றையும் நீங்கள் ரசித்து படித்தும் ஊக்கமும் தந்திருக்கின்றிர்கள். உங்களுக்கும் எல்லா நலன்களும் கிட்டட்டும். நன்றி....

                                                             யாழ் இணையம் அகவை 21 

ஆக்கம் சுவி......! 

சுவி அண்ணா, தெய்வீக அனுபவமும், பயண அனுபவமும் மிகச் சிறப்பான முறையில் தொகுக்கப்பட்ட உங்கள் பயணத்தொடரை வாசித்தமை இனிய அனுபவமாக இருந்தது. 

இங்கு பகுதிகளாகப் பகிரப்பட்டவையை ஒன்று சேர்த்து PDF வடிவில் இங்கு பகிர்ந்து கொண்டால் மீள் வாாசிப்புக்கு இலகுவாக இருக்கும். யாழில் அந்த வசதி இருக்குமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நன்றாக இருக்கிறது அண்ணா. நானும் இப்போதான் போய்வந்தாலும் உங்கள் எழுத்து புதிதாகக் கேட்பது போல் இருக்கண்ணா.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2019 at 5:13 PM, Justin said:

அருமையான தரிசனங்களுக்கு நன்றி சுவியர்! நானும் யோகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் யோகா பயின்றேன், அது நல்லை ஆதீனத்திற்கு அருகில் இருக்கும் மண்டபம் என நினைக்கிறேன், சரியா? 

நல்லூர் திருவிழா வரும் அதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது ஆசனக் கோவில் (தலைமைக் கோவில்) எனப் படும் அடைக்கலமாதா ஆலய திருவிழாவும் வரும். அதனால் எல்லா நாட்களும் நல்லூர் போகக் கிடைக்காது. ஆனாலும், நல்லூரின் சப்பறத்திருவிழாவுக்கும், தேருக்கும் வீட்டில் மச்சம் புளங்காமல் குடும்பமாகப் போய்வருவோம். மதஸ்தானம் என்பதைத் தாண்டி நல்லூர் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய அடையாளம், எங்கள் எல்லாருக்கும் பொதுவானது! 

அப்பொழுது யோகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வகுப்புகள் தொடங்கவில்லை ஜஸ்ட்டின்.....!

அடைக்கலமாதா கோவிலுக்கு அண்மையில் ஒரு கடையும் வைத்திருந்தேன். அதனால் அந்த கோவிலுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.அன்று சின்னக்கடையடியில் ஒரு பல் வைத்தியர் இருந்தவர்.ஒருமுறை எனக்கு கொடுப்பு பல்லில் வலியெடுக்க அதை சீர்செய்து ஈயத்தால் அடைத்து விட்டவர்.அது நான் லிபியா சென்று பின்பு பிரான்ஸ் வந்தபின்பும் கனகாலம் நன்றாக இருந்தது.ஒரு நாலைந்து வருடத்துக்கு முன்தான் அது கழன்று  விடட்து. அதன்பின் இங்கு ஐந்தாறு தரம் அடைத்து விட்டேன். அதிநவீன உபகரணங்களுடன் செய்கிறார்கள். ஆனால் ஒரு வருடம்கூட நிக்குதில்லை. இப்பொழுது நான் அதை அப்படியே விட்டு விட்டேன். ஞாபகம் வந்தது அதுதான் எழுதினேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜஸ்ட்டின்.....!  😄

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரிசனத்தின் படத்தை மேலே ஒட்டியதற்கு மிகவும் நன்றி கு. சா வாழ்க வளமுடன்.இரு வருடங்களுக்கு முன் நல்லூர் திருவிழாவில் அங்கு நிக்கிறோம்.....!   🌹

அந்தநாள் ஞாபகங்கள் மீண்டும் நினைவலைகளில் ....!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

இந்த தரிசனத்தின் படத்தை மேலே ஒட்டியதற்கு மிகவும் நன்றி கு. சா வாழ்க வளமுடன்.இரு வருடங்களுக்கு முன் நல்லூர் திருவிழாவில் அங்கு நிக்கிறோம்.....!   🌹

அந்தநாள் ஞாபகங்கள் மீண்டும் நினைவலைகளில் ....!   😇

உங்கள் வாழ்த்துக்களை இருகரம் கூப்பி சிரம் தாழ்ந்து உள்வாங்கிக்கொள்கின்றேன்.நன்றி

நானும் பலதடவைகள் யாழ்கள விம்பத்தில் அவசியமற்ற தேவையில்லாத படங்களை கூகிளில் தேடி வெட்டி ஒட்டிக்கொண்டிருந்தேன். அண்மையில் ஒரு யோசனை தட்டுப்பட்டது(அடேய் குமாரசாமி உனக்கு?). யாழ்களத்தில் எமது உறவுகளிடம் இல்லாத திறமைகளா கூகிளில் இருக்கின்றது? கருத்துக்களாயினும் சரி கவிதைகளாயினும் சரி கதைகளாயினும் சரி சுயசரிதை/பயணக்கட்டுரையாயினும் சரி என்ன இல்லை இங்கே? கடல் போல் பரந்து மலை போல் குவிந்து இருக்கின்றது அல்லவா.இனிவரும் காலங்களில் எம்மவர்களின் படைப்புகளே யாழ்கள முகப்பில் கோபுரமாக இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே..:)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.