Jump to content

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

அன்புறவுகளுக்கு ,

                                        நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில்  உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில்  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

 நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

 

யாத்திரை தொடரும்.......!

அடியேனும் பின் தொடர்வேன்.

 

Link to comment
Share on other sites

பிறந்து வளர்ந்த மண்ணில் உள்ள கோயில்களைப் பல நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தரிசிப்பது உண்மையிலேயே பரவசமான அனுபவம். ஆன்மீகம், நம் கலாசாரம் கலந்த அந்த நினைவுகள் தரும் ஆனந்தத்துக்கு ஈடில்லை. (கடந்த ஆவணி மாதத்தில் நானும் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.)

உங்கள் ஆன்மீகப் பயணத்தில் ஐக்கியமாக அடியேனும் காத்திருக்கிறேன். தொடருங்கள்...! ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                    Résultat de recherche d'images pour "france map"

யாத்திரை ....( 2 ).

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கு இடைவிடாத வேலைப்பளு. பிள்ளைகளும் சிறுவர்கள்.மற்றும் வயதான பெற்றோர் (அம்மாவும், மாமியும்) .  போன்ற சூழ்நிலைகளால் ஊருக்கு போகும் எண்ணம் "சாம்பல் பூத்த நெருப்பாக" எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது.  காலம் உருள பிள்ளைகளும் வளர்த்து விட்டினம். பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தி விட்டார்கள்.

சென்ற வருட ஆரம்பத்தில் நினைத்தோம், எப்படியும் இந்த வருடம் ஊருக்கு போய் வர வேண்டும் என்று. மனைவி சொன்னார்,ஒருநாள் என்றாலும் நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்று. அதற்கேற்றாற் போல் கட்டார் எயர் விமானத்தில் விமானசீட்டு முன் பதிவு செய்து கொண்டோம்.

ஒரு ஆளுக்கு 40 கிலோவும், கைப்பெட்டியில் 7 கிலோவும், மற்றும்  தோளில் தொங்கும் ஒரு பையும் கொண்டு செல்லலாம். 40 கிலோவை இரு பெட்டிகளில் 20, 20 ஆக வைக்க வேண்டும். அதன்படி நாங்கள் பாரிஸில் நின்று உறவினர்கள் தந்த பொருட்களையும் சேர்த்து கட்டிக்கொண்டோம்.

யாத்திரை தொடரும்....!

சம்பவம்: பெட்டிகளில் சாமான்கள் வைக்கும் போது  அவை 19 கிலோவுக்கு மேற்படாமல் பார்த்து கொண்டோம்.அது விமான நிலையத்தில் பொதிகளை அனுப்பும் இடத்தில் பேருதவியாய் இருந்தது.

அடுத்து மகனுக்கு அவரது வேலையின் நிமித்தம் 20 நாட்கள்தான் தங்க முடிந்தது. அதனால் அவர் எமக்கு முன்பே கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் ஒரு மாதம் தங்கி நின்று வந்தோம்......!

ஊக்கமளிக்கும் உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா ...எங்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                             Image associée

                                                           

 

யாத்திரை....(3).

சென்ற ஆடி மாதக் கடைசியில் உறவினர்களும் நண்பர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைக்க பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்.தரமான உணவு வகைகளும்,சிறப்பான சேவையும் அந்த விமானத்தில் இருந்தது.ஒவ்வொரு இருக்கைக்கு முன்னும் ஒவ்வொரு சிறிய திரை.அதில் படங்கள்,பாட்டுகள்  மட்டுமன்றி அந்த விமானத்தின் வழித்தடங்களையும் பார்க்க முடிந்தது. சுமார் ஐந்து மணித்தியாலப் பறப்பின் பின் இடைத் தங்கலாக கட்டாரில்    தரை இறங்கியது. இரு மணித்தியாலத்தின் பின் அதே போன்ற மற்றோரு விமானத்தில் பயணம் தொடர்ந்தது. அந்த விமானம் இலங்கை நேரப்படி அதிகாலை 01 : 30 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அரைமணி நேரத்தில் சுழன்று வந்த எமது பெட்டிகளை எடுத்து வண்டிலில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தோம். அங்கே தயாராக எனது மருமகள் வானோடு வந்து எம்மை வரவேற்றாள்.

                                                               Image associée
                             பரஸ்பரமான விசாரிப்புகளின் பின்பு நாம் கொழும்பு செல்லாமல் நேராக யாழ்ப்பாணம் செல்வது என முடிவெடுத்தோம்.இரவுப் பிரயாணத்தில் வாகன நெரிசல் இருக்காது மதியத்துக்கு முன் யாழ்ப்பாணம் போய் விடலாம் என சாரதி சொன்னதை  ஏற்றுக் கொண்டு யாழ் நோக்கி பயணப் பட்டோம். வான் செல்லும்போது வழியில் விதியோரக் கடையில் துக்கத்தில் இருந்த கடைக்காரரை எழுப்பி ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களும் வாங்கிக் கொண்டோம். 

                                                                                       Image associée
காலை எட்டு மணியளவில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கு கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து கடையில் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக்கொண்டு போய் கோயிலடியில் கற்பூரம் ஏற்றி சிதறு தேங்காய் போட்டு விட்டு பிள்ளையாரை சேவிக்க பூசை நடந்து  கொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி.நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வந்து மறக்காமல் சில தேங்காய் சில்லுகளும் பொறுக்கி எடுத்து கொண்டு வந்து கடையில் கச்சானும் புழுக்கொடியலும் வாங்கிக் கொண்டு (இப்ப எல்லாம் பைக்கட்டுகளில் கிடைக்கிறது) தேநீர் குடித்து விட்டு மீண்டும் பயணப்பட்டோம்.

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: நான் கோவிலை சுற்றி வரும்போது எனது மருமகள் கேட்கிறாள், மாமா இங்கு சாப்பிடுவோமா அல்லது கிளிநொச்சியில் சாப்பிடுவோமா என்று அது என் காதிலேயே விழவில்லை அப்படி ஒரு பரவசநிலையில்  நான்.மனிசி சொல்கிறாள் அவருக்கு இப்ப ஒன்றும் கேட்காது, நாங்கள் கிளிநொச்சிக்கு போய் சாப்பிடுவம் என்று. அது பரவாய் இல்லை.பிறகு சொன்னாள்.பார் இப்ப வானில் எறியவுடனே உந்தக் கடலை,புழுக்கொடியல் எல்லாம் தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஒரு வழி பண்ணிடுவார் என்று. அதேபோல் நானும் அதுகளை எடுத்து அரைக்க சாரதி உட்பட எல்லோரும் சிரிக்கினம். நான் புரியாமல் விழிக்கிறேன்.....! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி சென்ற ஆவணியில் யாழ் உறவுகள் பலர் தாயகம் சென்று வந்துள்ளோம். உங்கள் பயண அனுபவங்களைத் தொடருங்கள் சுவி. நான் தாயகம் மட்டுமல்ல தமிழகம் கேரளா மற்றும் பாண்டிச்சேரி என பல இடங்களிலுள்ள ஆலயங்கள் கோவில்களெல்லாம் தரிசித்தேன். நேரம் இல்லாத காரணத்தால் எழுத முடியவில்லை. உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாய் உள்ளோம். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாத்திரை :(4).

                                                                                                                             Résultat de recherche d'images pour "ammachi kilinochi"

                                                                  
நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க  ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது.
                                                                                     
                                                                                                                       20180731-051053.jpg

நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள்.

                                                                                                         20180731-061407.jpg

         எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன்  அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

                                                                                                            Image associée

யாத்திரை தொடரும்........!

சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும்.  அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது.
  நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

Link to comment
Share on other sites

49 minutes ago, suvy said:

நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

அசாதரமான நிகழ்வு...

சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... 

தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... 

சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற...

சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது...

--தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை .. தொடருங்கள் தோழர் .. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்... "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!" என்ற தலைப்பை முன்பு பார்த்து விட்டு,
ஏதோ... பத்திரிகைகளில், யாரோ எழுதிய கட்டுரையின் இணைப்பு என்று விட்டு, உள்ளே போய் பார்க்கவில்லை.
இன்று தான்... உள்ளே போய் பார்த்தால், சுவியரின் சொந்தக்  கட்டுரை ஆக இருந்தது.
பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய  கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன்.  தொடருங்கள் .

.. அடுத்து என்ன  என்ற ஆவலுடன்   வா சிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2019 at 8:07 PM, suvy said:

அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்

குடும்பத்தோடை போனாலும் குசும்புக்கு குறைவில்லை.....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 8:58 PM, suvy said:

.... கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லைநாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

இங்க பார்ரா அக்குறும்பை..!  ffou2.gif

(பாவம்..) reverie.gif

 

Link to comment
Share on other sites

சுவாரசியமானச் செல்லும் பயண அனுபவங்கள், சுவி அண்ணா. தொடருங்கள், ஆவலாய் உள்ளோம். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை....(5).
                                                                                                   20190205-175951-1.jpg

மதியம் வீட்டுக்கு வந்து விட்டோம். என்னுடைய மச்சாள்  அறுசுவையோடு அசைவங்களும் சேர்த்து நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தாள். எனது மனைவியும் அவாவும் புளுகி புளுகி கதைத்துக் கொண்டிருக்கினம். எங்கள் மகனையும் "நீ ரொம்ப வளர்ந்திட்டாயடா" என்று பாசத்துடன் பக்கத்தில் இருத்தி கதைக்கினம். நான் போய் தோய்ந்து குளித்துவிட்டு வர அருகில் உள்ள காளி கோவிலில் இருந்து பூசை மணி   ஒலித்தது. மச்சாளும் நீங்கள் வந்த நேரம் இன்று கோயிலில் அன்னதானம். ஐயர் வந்துட்டார் போல அதுதான் மணி கேட்குது என்று சொல்ல நானும் இருங்கோ வாறன் என்று சொல்லிவிட்டு முற்றத்தில் இருந்த நித்யகல்யாணியில் இருந்து நாலு பூவை பறித்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு வந்தேன். கண்ணீர் மல்க அம்பாளை மனமுருக நன்றாக சேவித்து விட்டு அங்கேயே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசை தீர அன்னதான பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். அங்கிருந்த யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. பழைய ஆட்கள் சிலர் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு பிறகு வந்து கட்டிப்பிடித்து கதைத்தார்கள்.

                                             பின்பு வீட்டுக்கு சென்றதும் சமைத்ததை சாப்பிடவில்லை என்று பாசமான திட்டுகள் வாங்க வேண்டி வந்தது. மாலைநேரம் உறவினர்கள் நண்பர்கள் என்று அறிந்து அறிந்து வந்து பார்த்து கதைத்து விட்டு சென்றனர். இரவு சாப்பிட்டு விட்டு நானும் மனைவியும் மச்சாளும் கதைத்துக் கொண்டிருக்க மகன் மேல் வீட்டில் போய் படுத்து விட்டார்.கொஞ்ச நேரத்தின் பின் நானும் மேல் அறையில் படுக்க போகும் போது  அவள் சொன்னாள்  நீ அங்க போய் படுகிறது சரி,ஆனால் நான் சொல்லாமல் கீழ இறங்கி வரக்கூடாது என்று.உடனே நான் சீ ச் சீ  நாங்கள் இப்ப விரதம் என்றேன்.
உன்ர விரதம் கிடக்கட்டும், இரவு அவர் உவடம் முழுக்க உலவித் திரிவார். நாளைக்கு விரதம் பிடிக்க நீ இருக்க மாட்டாய் நம்பாவிட்டால் பல்கனியை எட்டிப்பார் என்று. எட்டிப்பார்த்தேன் என்னளவு உயரத்தில் வைரவர் வாகனம் அமைதியாக என்னை பார்த்து கொண்டு கம்பீரமாய் நிக்குது. குரைத்திருந்தால் கடிக்காது என்று நம்பி இருப்பேன். இது குரைக்கவில்லை. நான் மேலே சென்று அறையைப் பூட்டியதும் அவர் அவளுடன் கீழே சென்று உலாவித் திரிகின்றார்.

                                                                                                                          Résultat de recherche d'images pour "black dog"

                                                                                                                                          இவர் போன்ற ஒருவர்,ஆனால் இவர் அவரல்ல......!

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: முன்பெல்லாம் அந்தக் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது.ஒரு வீட்டுக்கு உள்ளேதான் இருந்தது. இப்பொழுது வெளியே கோவிலாய் உள்ளது. நானும் தினமும் காலையில் வேலைக்கு போகும்போது ஒரேயொரு மல்லிகை அல்லது செம்பருத்தம் பூ எடுத்து வந்து வெளியில் நின்று அந்த வேலித் தகரத்தில் உள்ள ஒரு துவாரத்தில் வைத்து வணங்கி விட்டுத்தான் போவது வழமை. அதுக்காகவா அந்தத் தாய் நான் வந்ததும் வராததுமாக காத்திருந்து என்னை அழைத்து எனக்கு உணவளித்தாள்......!
 

Link to comment
Share on other sites

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

என் வீட்டில் சைவமும் நலனன்றாக தான் சமைப்பார்கள், ஆனால் அசைவம் என்றால் ஒரு தனி கிளு கிளுப்பு தான்...

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

ஐயா சுவி அவர்களுக்கு அசைவம் பிடிக்காதா அல்லது தங்களுக்கு பிடிக்காதா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 10:28 AM, suvy said:

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

 

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

சுப சீக்கிரஸ்ய.... நல்ல காரியங்களை தள்ளிப்போடக் கூடாது உடனே ஆரம்பியுங்கள்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 1:39 AM, suvy said:

ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

51642160_302251460482869_70992463623356416_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-syd2-1.xx&oh=e7394b564f44106896f329741f2fa84f&oe=5CEA8616

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.