Jump to content

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை ......(11)

                                                 20180810-114947.jpg

                   இன்று எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து கதைத்தால் எதிர் முனையின் அன்னை நான் இந்த கோயிலடியில் நிக்கிறன், நீங்கள் வீட்டில் நிக்கிறிர்களா வெளியிலா என்று கேட்கிறார். நான் ஆர்வத்தில் வெறுங்காலோடு ரோட்டுக்கு ஓடிவந்து கையை அசைக்கிறேன் ரகுவரன் போல ஒருவர் ஒரு குட்டி மோட்டார் சைக்கிளில் வந்திறங்குகின்றார் ஜீவன்.அவரை அனைத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்து செல்கின்றேன்.மனைவி,மச்சாள் எல்லோரும் வர அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.உள்ளுக்குள் ஒரு உதைப்பு. முன்பு பாரிஸில் விசுகுவை அவர்களின் கடையில் வைத்து இவளுக்கு அறிமுகப்படுத்தும்போது, விசுகுவின் மனைவி மற்றும் எனது மனைவி எல்லாம் நல்லூரில் ஒரே அயலைச் சேர்ந்தவர்களாகவும் ஒரே பாடசாலையில் படித்தவர்களாகவும்  இருந்தார்கள்.அப்புறம் நான் தேமே என்று வாய் பார்க்க அவர்கள் கதைத்து கொண்டிருந்தார்கள். நல்லகாலம் அப்படி ஒன்றும் ஆகவில்லை.

எமது முற்றத்தில் இருந்த வெற்றிலை கொடியை கண்டதும் ஜீவன் பரவசத்துடன் ஓடிச்சென்று ஒரு இலை பறித்து சாப்பிட்டார். நான் முதல்நாள் ஒரு வெறும் வெற்றிலை சாப்பிட்டு தொண்டை கட்டி விட்டது.அவ்வளவு காரம். பின்பு பொதுவாக பல விடயங்களையும் பேசினோம்.அவர் சென்ற நாடுகள், எடுத்த படங்கள்.காங்கேசன் துறையில் விடுவித்த காணிகள் பள்ளிக்கூடங்கள் என்று பேச்சு சென்று கொண்டிருந்தது. ஜுஸ் சிற்றுண்டியுடன் சுவாரஸ்யமாய் கதைத்தோம். யாழ் இணையம் மூலமாக எவ்வளவு பேரை எங்கெங்கெல்லாமோ சந்திக்கிறோம். எந்த நாட்டுக்கு சென்றாலும் இது ஒரு நம்பிக்கையும் தைரியமும் தரும் என்றே நினைக்கிறன். பின்பு மீண்டும் சந்திப்பதாக கூறி சென்றார்.நானும் நான் நல்லூரில் நிக்கும்போது சந்திக்கிறேன் என்று சொன்னேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

                                         Résultat de recherche d'images pour "nallur sivan kovil jaffna"

                        இன்று ஒரு வியாழக்கிழமை நல்லூர் சிவன் கோவிலுக்கு சென்றோம்.கூட்டமில்லை. எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பாக பட்டுகள் சாத்தி அர்ச்சனைகள் செய்தோம். வழக்கம்போல் அம்பாளுக்கு பட்டுப்புடவை ஐயர் அதை அப்பொழுதே துர்க்கை அம்பாளின் மேனியில் சாத்தி விட்டார். பின்பு பிரகாரத்தை சுற்றும்போது சில நண்பர்களை சந்தித்தேன்.நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன். பின்பு முருகன் கோவிலுக்கும் போயிட்டு அப்படியே ஆட்டோவில் பெரிய கடைக்கு வந்து சில சாமான்களும் வாங்கிக் கொண்டு மதியம் மாலயன் கபேயில் சாப்பிட்டு விட்டு வந்தோம். எனது மச்சாள் (அண்ணன் மனைவி).காலமாகி விட்டார். அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராய் பணி புரிந்தவர்.நிறைய ஆசிரியர்களும் மாணவர்களும் பெருந்திரளாக வந்திருந்து அவருக்கு அஞ்சலி செய்தார்கள்.

                                             Image associée

                                            Résultat de recherche d'images pour "malayan cafe jaffna"

யாத்திரை தொடரும்.......!

சம்பவம் :  சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால்  தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.

  அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.

                மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன்  கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு  கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும்  அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன்  கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு  கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும்  அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! 

ஆகா அகப்பட்டுவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் மச்சான் மச்சாளை திருமணம் செய்யும் எமது காலத்திலேயே அழிந்துவிடும் என எண்ணினேன்.பரவாயில்லை இன்னும் நீடிக்குதே.
எனது மகளுக்கும் வரன் பார்க்குறோம் நெருங்கிய உறவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை தொடரட்டும் சுவி காவி அணியல்ல ஆனால் பின்னால் வருகிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாத்திரை தொடரட்டும் சுவி காவி அணியல்ல ஆனால் பின்னால் வருகிறோம் 

என்ன ராசன்  முந்தநாள்த்தானே கலியாணம் ஆச்சுது....அதுக்கிடையிலை இஞ்சை தடக்குப்படுறீங்க...😑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்ன ராசன்  முந்தநாள்த்தானே கலியாணம் ஆச்சுது....அதுக்கிடையிலை இஞ்சை தடக்குப்படுறீங்க...😑

சச்ச அப்படி ஒன்றும் இல்ல  சும்மா பாதையால தேர் போகும் போது பக்திப்பரவசத்தில் எட்டி நின்று பார்ப்பது வழமை தானே அண்ணே

Link to comment
Share on other sites

என்ன சுவியர் 

ரொம்ப சுவாரசியமா இருக்குதே!

அனுபவங்களை உண்மையா எழுதுவது இதுதான் 

எதையுமே பொய்யாக இல்லாமல், திரிக்காமல் எழுதும் உங்கள் எழுத்துநடை பிடித்திருக்கு.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொடர் சுவி..... தொடருங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்....நெருங்கி வந்திட்டியள் போல கிடக்கு!

அந்த விரிவுரையாளர்...உங்கள் மச்சாளா? 

மனதை மிகவும் பாதித்த மரணங்களில்....அதுவும் ஒன்று...!

தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை ......(12).

                                   IMG-20181018-WA0037.jpg  IMG-20181018-WA0039.jpg

 

  IMG-20181018-WA0043.jpg

IMG-20181018-WA0042.jpg

IMG-20181018-WA0040.jpg

 

 


                                                   இன்று  ஆடி அமாவாசை. நானும் மனைவியும் மகனுமாய் பஸ்ஸில் கீரிமலை சென்றோம். நான் அங்கு ஒரு குருக்களுடன் இருந்து கொண்டு எமது தந்தையருக்கு எள்ளும் நீரும் இறைத்து ஈமக்கடன்கள் செய்து கடலில் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது முதலில் விநாயகர் வர அடுத்தடுத்து சிவன் பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை என நிறைய தெய்வங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக வந்து உரிய இடங்களில் கொலுவிருக்கின்றனர். பின் கடலில் தீர்த்தமாடல் நடை பெறுகின்றது.அர்ச்சகர்கள் பக்தி சிரத்தையுடன் கடலில் செய்து பூசை கொண்டிருந்தார்கள்.ஏராளமான பக்தர்களுக்கிடையில் நானும் நெருக்குப்பட்டுக்கொண்டு முன்னால் நின்று கண்குளிர தரிசிக்கின்றேன். அதே நெருக்குதல்களுடன் ஒரு போத்திலில் தீர்த்தம் எடுத்து கொண்டு வெளியே வருகின்றோம். கேணியிலும் ஏராளமான சனம் நீராடுகின்றனர். தாய்க்கும்  தண்ணீருக்கும் தோஷம் கிடையாது.பார்க்கவும் கூடாது. மனசுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது. தண்ணீர் பந்தலில் சுட சுட கோப்பியும் வாங்கி குடித்து விட்டு நகுலேஸ்வரர் ஆலயத்துக்கு வருகின்றோம். உள்ளே சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வீட்டுக்கு வருகின்றோம்.

                          அடுத்தடுத்த நாட்கள்  உறவினர் வீடுகள், நண்பர்கள் மற்றும் நல்லூரில் எமது காணிகள்,வீடுகள் என்று பார்த்து விட்டு வந்தோம். பெரும்பாலும் நானிங்கு சைக்கிளில்தான் சுற்றித் திரிவது. இங்கு ஒரு மூன்று கி.மீ  ஓட களைப்பு வந்திடும், வியர்வை வராது.அங்கு நன்றாக வியர்க்கிறது.

யாத்திரை தொடரும்......!

சம்பவம் :  எனது சிறிய வயதில் தாயார் மறுமணம் புரிந்து தெல்லிப்பளை வந்திருந்தார்.நான் அம்மம்மா, மாமாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்து கொண்டு இருந்தேன். (அப்போது மூன்று வயதில் அரிவரி வகுப்பு போகிறதென்று நினைக்கிறன். பதினாலு வயதில் . s .s .l .c  எடுத்தனான். எட்டாம் வகுப்பின் (jsc)  பின்  ஒன்பதாம் வகுப்பு (prop) இருமுறை படிக்க வேண்டும்).

                           எனது சின்னையா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து என்னை அங்கு கூட்டிக்கொண்டு போய் இருந்துவிட்டு பின் திங்கள் காலை என்னை இங்கு கொண்டுவந்து விடுவார்.ஒவ்வொரு வருடமும் அவருடன்தான் ஆடிஅமாவாசை அன்று கீரிமலை போய் வருவது வழக்கம். அதுவும் வீட்டில் இருந்து கொல்லங்கலட்டி ஊடாக கல்லுக்காட்டு பாதையில்தான் போய் வருவது.சின்னையா என்னை தோளில் தூக்கிக்கொண்டுதான் போவார்.நான் தந்தையை கண்டதில்லை ஆனால் சின்னையாவும் ஆத்தையும் (அவரின் தாயார்) என்னை தந்தை தாயை விட மேலாக அப்படித் தங்குவார்கள். பிறகு அவர் ஒரு சைக்கிள் வாங்கி விட்டார்.அவர் ஒரு சைக்கிள் ஓட்ட வீரன். அங்கிருந்து மடு, வவுனியா எல்லா இடமும் அதில்தான் போய் வருவார். அங்கு எப்படியும் மாதம் ஒருமுறை பங்கு இறைச்சி போடுவார்கள்.அதை அம்மா சமைத்து வாழை இலையில் கட்டி மோட்டர் மா (ஹார்லிக்ஸ்) போத்தலில் எலும்பு சூப் எல்லாம் வைத்து குடுத்து விட்டால் அதை அந்த தெய்வம் இங்கே எனக்கு கொண்டுவந்து தந்து விட்டுத்தான் போய்  அவர் சாப்பிடுவார். 

                                    ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர் யாழ்ப்பாணம் வந்து என்னை கூட்டிக்கொண்டு போவது வழக்கமாகி விட்டது.நானும் வளர்ந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் காலை நாலுமணிக்கு என்ன குளிர் எண்டாலும் சரி, மழை எண்டாலும் சரி  தலையில் கோணிச்சாக்கை போட்டுக்கொண்டு கையில் அரிக்கன் லாம்புடன் எங்களுடைய பனங்காணிகளுக்கு சென்று ஓலைகள், மட்டைகள், பன்னாடைகள், சாணிகள் எல்லாம் பொறுக்கி  உரிய இடத்தில் போட்டு விட்டு, வேலிகளின்  குப்பைகள் எல்லாம் கூட்டிப் போட்டு விட்டு வர எட்டு மணியாகிவிடும்.(இவையெல்லாம் பெண்களின் தனியான வருமானம்). பின்பு சின்னையாவுடன் சேர்ந்து வேலைக்கு போவேன். மாலையில் வரும்பொழுது அவர் கொட்டிலில் நல்லா கள்ளு குடிப்பார். எனக்கு டேஸ்ட்டுகள் வாங்கி தருவார். அப்போது அவரிடம் இருந்து கணீரென்ற குரலில் காத்தவராயன் கூத்து, ஏழுபிள்ளை நல்லதங்காள்.அரிச்சந்திரன் மயான காண்டம், பட்டி விக்கிரமாதித்தன் என்று தங்கு தடையின்றி ஒரு பிசிறின்றி பாடுவார். வீட்டிலும் அக்கம் பக்கத்தவர்கள் வந்திருந்து பாடல்கள்  கேட்பதற்காகவே கள்ளு வாங்கி குடுப்பினம்.

IMG-20181018-WA0005.jpg

சில வருடங்களின் எனக்கு தம்பியும், மேலும் சில வருடங்களின் பின் இரணைப்பிள்ளைகளாக இரு தங்கைகளும் பிறக்கின்றார்கள். எங்கள் வீட்டின் அருகில் ஒரு காளி கோவில் உண்டு. அந்த கோவிலின் விளக்குகள்,தீபங்கள்,தட்டங்கள் எல்லாம் நானும் இன்னும் ஓரிரு பொடியாளும் சேர்ந்து புளி போட்டு கழுவுவோம். அந்தக்கோவிலின் திருவிழாவில் வைந்தன் அடி என்று சொல்லப்படும் கோலாட்டம் மிகவும் பிரசித்தமானது.நிறைய கூத்துக்கள் நடைபெறும். இப்பொழுது அந்தக்கோயில் கொஞ்சம் சிதிலமடைந்து காடு மண்டிப்போய் இருக்கின்றது.பார்க்கும்போது மனம் மிகவும் வேதனையாய் இருந்தது.பின்னாளில் ஆத்தையும்  சின்னையாவும் காலமாகிவிட அம்மாவும் தம்பி தங்கைகளுடன் யாழ்ப்பாணம் வந்து விட்டார்.அங்கே மறக்க முடியாத பல நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கின்றன.....!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

பதினாலு வயதில் . s .s .l .c  எடுத்தனான். எட்டாம் வகுப்பின் (jsc)  பின்  ஒன்பதாம் வகுப்பு (prop) இருமுறை படிக்க வேண்டும்).

சுவி நான் இந்துவில் படிக்கும் போதும் 8க்கு பின் 9(பிறெப்)பின்பு தான் 10.

Link to comment
Share on other sites

சுவி அண்ணா, திருத்தல தரிசனத்துடன் உங்கள் பழைய நினைவுகளையும் சேர்த்து மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை ......(13).

                                  IMG-20181018-WA0016.jpg


இன்று நல்லூர் கொடியேற்றம்.எனது மனைவியும் இந்தப் பயணத்தில் முருகனின் சில  திருவிழாக்கள் என்றாலும் பார்த்தே தீருவது என்று பிடிவாதமாய் இருந்தாள்.ஏராளமான பக்தர்கள்,எப்படியோ கோவிலின் உள்ளே மிக அருகே சென்று அமர்ந்து கொண்டோம்.சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இந்த சந்தர்ப்பம் கூடி வருது. கண்கள் குணமாகி பார்வை மறைக்கிறது."முருகனுக்கு அரோகரா" எனும் சொல்லைத் தவிர்த்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. பறவைகள் எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற தான் பிறந்த மரத்துக்குத்தான் வந்து சேரும். வசந்த மண்டப பூசை முடித்து என் அருகாக அழகிய மயில் வாகனத்தில்  முருகப் பெருமானும் பின்னால் வள்ளி தெய்வானையும் வந்து கொடிமரத்துக்கு பக்கத்தில் நிக்கிறார்கள்.

                                     அர்ச்சகர்களின் வேத மந்திர ஒலியுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா என்னும் கோஷத்துடன் கொடி ஏறுகின்றது. கண்கள் குளிரத் தரிசித்து விட்டோம். இனி திருவிழா முடிந்து கொடி இறக்கும்போது ஊரில் நிக்க மாட்டோம் என நினைக்கையில் மனதில் சிறு சலனம். முருகா என்று நெஞ்சம் விம்ம உள்வீதி வலம் வந்து வெளியே வருகின்றோம்.

                     IMG-20181018-WA0028.jpg

அடுத்தநாள் மனைவியும் மகனும் பாசையூர் அந்தோனியார் சர்ச்சுக்கு போய் விட்டு வருகிறார்கள். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் போக முடியவில்லை.

                                              மகன் இரண்டு கிழமை விடுமுறையில் வந்ததால் அவரை வழியனுப்ப மீண்டும் கொழும்புக்கு வானில் வருகின்றோம். வரும் வழியில் வவுனியாவில் எனது மச்சாள் வீட்டிற்கு செல்கின்றோம்.(அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக கடமையாற்றுகின்றார்).அங்கு அக்கா தங்கை என்று பல உறவினர்கள் இருக்கின்றனர்.நான் அங்கு இருக்கும்போது எல்லோரும் ஒரே அயலுக்குள்தான் இருந்தோம். அப்போது எல்லோரும் சிறு பிள்ளைகள்.இப்ப அவர்களில் அநேகமானோர் வவுனியாவில் அங்கங்கே இருக்கின்றார்கள். நேரம் இரவாகி விட்டது.நானும் மோட்டுத்தனமாக அறிவிக்காமல் போய் இறங்கி விட்டேன்.  

                                                   அவளுக்கு எதிர்பாராமல் என்னையும் தமக்கை மற்றும் மகனையும் பார்த்ததும் அளவற்ற சந்தோசம்.என் பிள்ளைகளை தூக்கி வளர்த்தவர்கள். அவள் கணவர் உடனே போன் எடுத்து எல்லோருக்கும் சொல்லுகின்றார்.அத்தான் அக்கா வந்திருக்கினம்.இரவாயிட்டுது எல்லா இடமும் வர ஏலாது நீங்கள் வாங்கோ என்று. அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் அவர்கள் அவர்களின் மருமக்கள் பேரன் பேத்திகள் என்று நாற்பது ஐம்பது பேர் வந்து இறங்குகின்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு தயாராக வைத்திருந்த அத்தனை உணவுப்பதார்த்தங்களும் இருக்கின்றன. நான் என்ன புண்ணியம் செய்தேன் இவர்களை உறவாய் பெறுவதற்கு.

                            Image associée

  இரவு ஒரு மணியளவில் விடை பெற்று புறப்பட்டோம் மேலும் கொழும்பிலும் பல உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாளை மறுநாள் அவருக்கு விமானம்.அதனால் இன்று காலை கொழும்பில் கொட்டகேனா அந்தோனியார் சர்ச்சுக்கு சென்றோம்.அங்கு உப்பும்,மிளகும் காணிக்கை வைத்து வணங்கினோம். 

                                    IMG-20190122-WA0005.jpg

IMG-20190122-WA0000.jpg

                                                       பின்பு முன்னால் இருக்கும் வீரமாகாளி அம்மன்கோவிலுக்கும்,பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கும் சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வந்தோம். பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலின் வெளியே சனீஸ்வரப் ப்ரிதிக்காகவும் தோஷ நிவர்த்திக்காகவும் ஒரு பெரிய காகத்தின் சிலை வைத்து அதைச்சுற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குகின்றனர்.நாங்களும் தீபமேற்றி வணங்கி விட்டு வருகின்றோம். வெளியே கடையில் தேனீர் வடைகள் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் மணிக்கடைகளில் இவர்கள் ஞாபகார்த்தமாக சில பொருட்களை வாங்குகின்றனர். நான் கொஞ்சம் பெரிய மடுமாதா சுருவம் ஒன்று வாங்குகின்றேன்.

                      20181009-095646.jpg 20171017-104207-001.jpg

யாத்திரை தொடரும்.....!

சம்பவம் : (1) 1988/89 ம் ஆண்டு என நினைக்கின்றேன்.அன்றும் நல்லூர் கொடியேற்றம். நான் எனது மகளுடன் தனியாக வந்து கொடிக்கம்பத்துக்கு அருகில் நிக்கிறேன்.அவளோ சிறுமி.எனது தோளில் இருக்கின்றாள்.கொடியேற்றம் முடிந்ததும் சனம் தள்ளு முள்ளுப்பட்டு நெருக்குகின்றது.ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாள முடியவில்லை.அவளை அந்த கம்பிக்கு உள்ளே இறக்கி விட்டு விட்டேன்.அது சிரித்துக் கொண்டு நிக்குது.அபாயம் புரியாமல், நான் தாக்குப்பிடித்து சனம் குறைத்ததும் தூக்கிக் கொண்டுவந்து விட்டேன். இன்று நினைக்கையிலும் வேர்க்கிறது.....!

                         

சம்பவம் : (2)  பிரான்சில் நான் இருக்கும் இடத்துக்கு அருகே ஒரு மலையில் ஒரு மாதா கோவில் உண்டு.கதிரை மாதா என்று சொல்லுவோம்.பாலகன் ஜேசுவை மடியில் வைத்துக் கொண்டு கதிரையில் அமர்ந்திருப்பார். அங்கு ஒரு கண்ணாடி அறையில் பல இடங்களில் இருக்கும் பிரசித்தமான மாதா,அந்தோனியார்,ஜோசெப்,மைக்கல் சம்மனசு மற்றும் புனிதர்களின் சுருவங்கள் இருக்கின்றன.அவற்றை பார்க்கும் போது நினைப்பதுண்டு நான் நாட்டுக்கு போனால் மடுமாதாவின் சுருவம் ஒன்று வாங்கி வந்து அவர்களின் அனுமதி பெற்று அங்கே வைக்க வேண்டும் என்று. நாங்கள் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் அங்கு போய் வருவது வழக்கம். இப்போதும் அங்கு சென்று வந்துதான் எழுதுகின்றேன். அங்கே அந்த மடுமாதா ஜம் என்று விற்றிருக்கின்றா. நான் மடு பக்கத்தில் சுமார் ஒரு வருடம் காட்டிலாகா வேலைகள் செய்திருக்கின்றேன்.தினமும் மடுக்கோவிலில்தான் குளிக்கிறதும் குடிப்பதற்கு தண்ணீரும் ட்ராக்ட்டரில் எடுத்து கொண்டு வாடிக்கு போவது வழக்கம்.அதனால் அவவின் மீது மிகுந்த அன்பு உண்டு.

                                      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை நல்லூருக்கும் .......கீரி மலைக்கும் போய்....வந்த மாதிரி ஒர் உணர்வு.....!

வெகு சிலரால் மட்டுமே......தான் சென்ற இடங்களுக்கு.....வாசகர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியும்...!

மடு மாதாவின்நினைவுகள்....என்னிடம் இப்போதும் உடனிருக்கின்றன!

அங்கு வாங்கிய சிலைகளை......ஊரில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டேன்!

ஒரு தண்ணீர் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் கான் ஒன்று...என்னிடம் உள்ளது!

என்ன செய்வது என்று தெரியவில்லை.....!

வெளியே ஊத்தவும்.....மனுசி விடுகுதில்லை!

யாராவது....ஆலோசனை சொன்னால்...நல்லது!

குடிக்கலாமா என்றும்  யோசிக்கிறேன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

மீண்டும் ஒரு முறை நல்லூருக்கும் .......கீரி மலைக்கும் போய்....வந்த மாதிரி ஒர் உணர்வு.....!

வெகு சிலரால் மட்டுமே......தான் சென்ற இடங்களுக்கு.....வாசகர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியும்...!

மடு மாதாவின்நினைவுகள்....என்னிடம் இப்போதும் உடனிருக்கின்றன!

அங்கு வாங்கிய சிலைகளை......ஊரில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டேன்!

ஒரு தண்ணீர் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் கான் ஒன்று...என்னிடம் உள்ளது!

என்ன செய்வது என்று தெரியவில்லை.....!

வெளியே ஊத்தவும்.....மனுசி விடுகுதில்லை!

யாராவது....ஆலோசனை சொன்னால்...நல்லது!

குடிக்கலாமா என்றும்  யோசிக்கிறேன்...!

உங்கள் வீட்டில் பூக்கண்டுகள் இருந்தால் அவற்றில் விடலாம்......!சிறிய போத்தில் என்றால் அது பூசை அறையில் ஒருபக்கத்தில் இருந்திட்டு போகட்டுமே.......!  🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை .....(14)

                                    IMG-20181018-WA0015.jpg


                                         இன்று இரவு மகனை விமானத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வருகிறோம். ஒரு செவ்வாய்கிழமை  எதிர்பாராமல் ஜீவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.எங்கை அண்ணை நிக்கிறீங்கள், உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்.நானும் நீங்கள் வாருங்கோ நானும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுகின்றேன் என்கிறேன். நானும் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவரும் ஒரு ஸ்கூட்டரில் இன்னொரு ஸ்மார்ட்டான யங்மான் உடன் வந்திறங்குகின்றார். கொஞ்சம் புரிந்தாலும் அவரின் அறிமுகத்துக்காக காத்திருந்தேன்.அவர் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நிஜமாகவே ஆச்சரியமான விடயம்."முனி" என்றும் "தனி" என்றும் யாழில் பெயர்கொண்ட கனிவான அந்த இளைஞர் பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவாகவே இருந்தார். வீட்டில் இருந்து கதைத்து கொண்டிருந்தோம். வெய்யில் நேரமாய் இருந்ததால் ஜூஸ் ட்ரேயில் வந்தது.மூவரும் எடுத்து குடித்துக் கொண்டே கதைத்தோம்.(இப்படி விருந்தினர் வரும் போதுதான் எனக்கும் ட்ரேயில் உபசரிப்பு நடக்கும்).


              பின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே  கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோருக்கும் ஜீவனை நன்றாக தெரிந்திருக்கின்றது. அங்கு வடையும் பால் தேநீரும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் நாளை கண்டிப்பாக சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றோம். நானும் அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கவேண்டும் என்று தயார் நிலையில் இருந்தேன்.ஆனால் பின்பு அவர்களை சந்திக்க முடியவில்லை. தனி  அவசரமாக ஊருக்கு போய் விட்டதாக ஜீவன் தகவல்  சொன்னார்.

                              இன்று புதன்கிழமை காலை நான் சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினேன்.ஓட்டுமடத்தில் ஒரு நண்பரை சந்தித்துவிட்டு அப்படியே காக்கைதீவு வழியாக கல்லுண்டாய் வைரவர் கோவிலுக்கு சென்றேன். அந்த வழியெங்கும் யந்திரங்களுடன் உதவியுடன் பெரிய பெரிய குழாய்கள் தாட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒருவேளை காரைநகருக்கு குடிநீர் விநியோகத்துக்காக இருக்கலாம்.அதேபோல் பண்ணைக்கடல் பக்கமும் செய்கிறார்கள். கோவிலில் சனம் இல்லை. சிதறு தேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வயல் வெளியைக்கடந்து, சரியான காற்று.அந்த வெளியில் எதிர்திசையில் சைக்கிள் மிதிப்பதே கஷ்டமாய் இருக்கிறது. அங்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டு நவாலி மூத்தவிநாயகர் கோவிலுக்கு வருகின்றேன். அந்த கோயில் குளத்தில் நீர் வற்றிப்போய் தாமரை கொடிகள் எல்லாம் காய்ந்து போய் கிடக்கின்றன. கிணற்றில் நீர் அள்ளி கை ,கால் அலம்பி கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்டு, (பொதுவாய் நான் எல்லா கோவிலுக்கும் சிதறுதேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வழிபடுவதே வழக்கம்). மானிப்பாய் விதியை பிடித்து ஆறுகால் மடம் கோம்பையன் மணல் சுடலைக்கு வந்தேன்.அந்த சுடலை வைரவரையும் வணங்கி கொஞ்ச நேரம் அங்கு உட்க்காந்திருந்து விட்டு ஐயனார் கோயிலடிக்கு வந்தேன்.அங்கு ஒரு பெட்டிக்கடையில் அருமையான ருசியுடன் மோர் விற்கிறார்கள்.அமிர்தமாய் இருந்தது. தாகம் தீர வாங்கிக் குடித்து விட்டு வீட்டுக்கும் பைக்கட்டில் தயிர் வாங்கிக் கொண்டு ஐயனாரையும் தரிசித்து விட்டு தட்டாதெரு சந்தியால் வீட்டுக்கு வந்தேன். சுமார் பத்து கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் ஓடியது எனக்கே வியப்பாய் இருந்தது.......!

யாத்திரை தொடரும்......!

சம்பவம் : நான் முன்பு வேலை செய்யும் காலத்தில் இரவிரவாக வேலைகள் செய்வது வழக்கம். அந்நேரத்தில் வாகனங்கள் ஓடி பரிசோதிப்பதற்காக காக்கைதீவு வீதியைத்தான் பயன்படுத்துவது. அப்போது கல்லுண்டாய் வைரவர் கோவில் மிகவும் சிறிது. மாலை நேரமானாலே அங்கு யாரும் போய்வர மாட்டார்கள். ஆனால் இரவு  ஒரு மணிக்குக் கூட நானும் எனது நண்பரும் (அப்போது அவர் நவாலியில் இருந்தார்).அங்கு போய் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு வருவோம்.....!

அதுபோல் நவாலி மூத்தவிநாயகர் கோவில் குளத்திலும் மாரிகாலத்தில் தண்ணீர் மேலால் தளும்பும்.தாமரை பூக்களும், இலைகளும் நிறைந்து மிக மிக அழகாய் இருக்கும்.தாமரைக்குளத்தில் அந்தக் குளிர்ச்சியில் நீந்திக்  குளிப்பது ஒரு சுகம். வயலில் வேலை செய்பவர்கள் என்று நிறைய ஆட்கள் வந்து நீராடுவார்கள்.  நான் பல தடவை அங்கு நீராடியிருக்கின்றேன்.எனது தந்தையாரும் வவுனியாவில் ஒரு குளத்தில் நண்பர்  ஒருவருக்கு உதவி செய்யப்போய்த்தான் குளத்தில் கொடிகளில் சிக்குப்பட்டு இறந்தவர்.....! 

   கோம்பையன் மணல் சுடலையில் பல பெரிய பெரிய தென்னைகள் இருக்கின்றன. அதில் ஒரு தென்னை மரம் எனது தந்தையாரை புதைத்த இடத்தில் வைத்தது. இறந்த உறவினர்களைத் தகனம் செய்ய போகும் சமயங்களில் பெரியவர்கள் சொல்வார்கள்.அவர் அகால மரணம் அடைந்ததால் தகனம் செய்யவில்லை. நான் எப்பொழுது அங்கு சென்றாலும் அதன் கீழ் சாய்ந்து நிப்பது வழக்கம்.......!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அன்னாரின் எம்மதமும் சம்மதம். வரவேற்க தக்கது ..  பயணத்த தொடர்  சுவாரசியமானது தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை......(15).

                                                                              20180826-112525.jpg  

                                                                              20180826-112519.jpg

                                                                             20180826-112723.jpg

                                  அன்று ஒரு வெள்ளிகிழமை. கச்சேரி  நல்லூர் வீதியில் இருக்கும் நாச்சியம்மா கோவிலில் வரலட்சுமி பூசை மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பெண்கள் அதில் கலந்து கொண்டு திரு விளக்கு பூசை செய்து மங்கலநூல் பெற்றுக்கொண்டார்கள்.எனது மனைவியும் அதில் கலந்து கொண்டிருந்தார்.அன்று அதிக நேரம் அந்த கோவிலில் இருந்தோம். அங்கிருந்து  சிறிது தூரத்தில் எனது காணியும் மாமி வீடுகளும் இருந்ததால் நான் அங்கும் இங்குமாக சென்று வந்தேன். பின்பு நான் சைக்கிளில்  வீரமாகாளி அம்மன் கோவில்,கலட்டி அம்மன் கோவில்,கே.கே.எஸ்.வீதியில் நாச்சிமார் கோவில் எல்லாத்துக்கும் சென்று வந்தேன்.

                       20180826-112553.jpg

                                 அடுத்தநாள் வீட்டில் இருந்து நடந்து பெரியகடை  தொடர்ந்து கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கும் போய் வந்தேன். திருவிழா காலமாதலால் வீதிகள் எல்லாம் சுத்தமாய் இருந்தன.மக்களின் முகங்களில் பக்திப் பரவசம் தெரிகின்றது. இப்பொழுதும் முத்தவெளியில் வாகன அனுமதிபத்திரம் எடுப்பதற்குரிய பரீட்சைகளும் வாகன ஒட்டங்களும் நடக்கின்றன.நிறைய பெண்பிள்ளைகள் ஸ்கூட்டர் அனுமதிப்பத்திரம் எடுக்க காத்திருந்தார்கள். நானும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வணங்கி விட்டு வந்தேன். கோவிலை பெரிதாகவும் அழகாகவும் கட்டியிருந்தார்கள்.கோட்டை அகழிப்பக்கமாக அதிக ஆண்கள் பெண்கள் நடமாடுகின்றார்கள்......!

யாத்திரை தொடரும்.......!

சம்பவம் : நல்லூரில் எங்கள் வீடும்  எனது (முறையில்) பெரியம்மா வீடும் எனது வளவுக் காணியும் ஒரு முக்கோணமாக (ஃ ) இருக்கும். அதை சுற்றி வேறு மாமிமார்,மச்சான் வீடுகள் ஏழு எட்டு உண்டு.நான் சவூதி போய் வந்திருந்த நேரம்.எங்கள் வீட்டில் டீ .வீ ,டெக், ஓடியோ கேசட் போடும் ரேடியோ, காஸ் அடுப்பு என்று  நிறைய பொருட்கள் இருந்தன.ஏராளமான வீடியோ,ஓடியோ கேசட்டுகள்.(தமிழ்,ஹிந்தி, மலையாளம் என்று). எல்லோரும் எங்கள் வீட்டில் நிறைந்திருப்பினம்.


                    நான் கடையில் இருந்து வேலை முடிந்ததும் நேராக மோட்டார் சைக்கிளில் (ஹோண்டா 125, ஆனால் 200 இஞ்சின் பூட்டியிருந்தேன்). அம்மா வீட்டுக்கு சென்று( இந்து கல்லூரியடி) இருந்து தேனீர் குடித்து  கதைத்து விட்டு பின் நல்லூருக்கு வருவது வழக்கம். அந்நேரம் அம்மாவுடன் சிறு பிரச்சினை, ஒரு வாரமாக வீட்டுக்கு போகவில்லை.நான் ஹோலில் இருக்கும்போது  பக்கத்து வீட்டில் இருந்து அக்கா குழறிக்கொண்டு ஓடி வருகின்றா தம்பி அம்மா கிணத்துக்க விழுந்துட்டாடா என்று. நான் உடனே பதறி அடித்துக்கொண்டு எழுந்து ஓடி சைக்கிளை ஸ்டார் ட்பண்ணி படலையை இடித்துக் கொண்டு எடுக்க அக்காவும் ஐயோடா தம்பி உன்ர அம்மா இல்லடா என்ர அம்மா எங்கட கிணத்துக்குள் விழுந்திட்டா என்று சொல்ல நான் சைக்கிளை போட்டுட்டு பாய்ந்து போய் பார்க்கும்போது அவ கயித்தை பிடித்துக் கொண்டு நிக்கிறா.பிறகு இறங்கி அவவை வெளியே தூக்கியது.

                            எனது காணியில் லொறியால் பறித்து நிறைய வீர விறகு மரங்கள் உண்டு.தினமும் காலையில் நான் உடற்பயிற்சியாக வேர்த்து ஒழுக ஒழுக விறகு கொத்துவது வழக்கம். அன்றும் அப்படி கொத்தும்போது பெரியம்மா ஒரு பெரிய மூக்குப்பேணியில் சுத்தமான பசும்பால் தேத்தண்ணி கொண்டுவந்து தருகிறா.இவங்கள் எல்லோரும் ஜொள்ளு விட்டுக்கொண்டு பார்த்திருக்க நான் குடிப்பேன்.இது தினமும் கன காலமாய் நடந்தது.....! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 5:15 AM, suvy said:

பின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே  கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார்.

பத்மாகபே என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை.....(16).

                             IMG-20180724-130246.jpg

                                                                IMG-20180618-105300.jpg


                       அன்று சனிக்கிழமை பிரான்சில் எங்கள் அயலில் இருக்கும் நண்பர் அப்போது ஸ்ரீலங்காவில் இருந்தார்.அவர் என்னை பூம்புகார் நகருக்கு வரச்சொன்னார்.அரியாலைக்கு அருகே உள்ள இடம்.நானும்  எனது மருமகளுடன் ஸ்கூட்டரில் அங்கு சென்றோம்.ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் சொன்ன ஒரு வைரவர் கோவில் சிதிலமடைந்து இருக்கு.அதை அவர் புணருத்தானம் செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.அந்த வயிரவர் அவர்களின் குலதெய்வமான படியால் அவர்களது குடும்பத்தினரே பொறுப்பாக அதை செய்து முடித்திருந்தனர்.பல வருடங்களாகவும் சென்ற வருட ஆரம்ப மாதங்கள் வரை  உடைந்து போய் இருந்த அந்த கோவில் சுமார் நான்கு மாதங்களில் புத்தம் புதுப் பொலிவுடன் பூரணமாக முடிவடைந்து கும்பாபிஷேகமும் முடிந்து விட்டிருந்தது. 

                              IMG-20180909-102241.jpg
                                               இதில் விசேஷம் யாதெனில் அவர் முன்பு பெரிதாக சாமி,தெய்வம் என்று அலட்டிக் கொள்ளாதவர்.ஆனால் அது மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்.அவரையே தனக்கு உகந்தவராக தேர்ந்தெடுத்து தன் வேலைகளை முடித்து கொண்டது. மேலும் இன்னொருவரால் அங்கேயே தங்கியிருந்து இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. இன்னொரு விசேஷம் அந்தக் கோவிலில் இதுவரை உண்டியலும் இல்லை, ஐயரும் இல்லை. பக்தர்கள் பூசைப் பொருட்களுடன் சென்று தாங்களாகவே அங்கு பொங்கி படைத்து சாப்பிட்டு வருவார்கள்.அதை ஆரம்பித்த நாளில் இருந்து அவர் குடும்பத்தில் இருந்த சில பல தடைகள் துன்பங்கள் எல்லாம் முற்றாக விலகிப் போய் விட்டது. நாங்களும் தரிசித்து விட்டு வந்தோம்.

                IMG-20180822-182550.jpg

                                        இன்று மாலை நல்லூரில் பத்தாம் நாள் மஞ்சத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நானும் மனைவியும் சென்று வந்தோம்.

                                                                              20180825-180524.jpg

பிரான்சுக்கு வரும் நாள் கிட்டி விட்டதால் அடுத்தநாள் காலை வானில் கொழும்புக்கு புறப்பட்டோம்.

                                         IMG-20190104-WA0000.jpg

                   IMG-20190105-WA0001.jpg

வரும்பொழுது நாவற்குழியில் திரு ஆறுதிருமுருகன் அவர்களின் முயற்சியில் உருவான "சிவபூமி" என்னும் சிவாலயத்தை மனங்குளிரத் தரிசித்தோம். முகப்பில் பிள்ளையார், நந்தியும் அடுத்து ஆவுடையாருடன் அருகே நின்ற கோலத்தில் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். எல்லாம் கருங்கற்களால் ஆன சிலாவடிவங்கள்.உள்ளே வீதிகள் முழுதும் வரிசையாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். சுவர்கள் முழுதும் கருப்பு கிரானைட் கற்களில் திருவாசகம் முழுதும் கைகளால் பொழிந்து இருக்கின்றார்கள்.ஒரு அருமையான தரிசனம்.முடிந்தவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஸ்தலம் சிவபூமி. தொடர்ந்து முள்ளியவளை நோக்கி பயணப்பட்டோம்.....!

யாத்திரையின் தொடரும்.........!


சம்பவம் :  நான் கல்லூரியில் படிக்கும்போது அங்குள்ள கேண்டீனில் வடை, போண்டா தேனீர் எல்லாம் கிடைக்கும். அண்ணல் கல்லூரியை விட்டு வெளியில் வந்தால் உடனே போவது கே.கே. எஸ் வீதியில் கல்லூரியின் முன்னால் இருந்த "பத்மா கபே"க்குத்தான். அங்கு எமது கையில் இருக்கும் காசுக்கு ஏற்ற சிற்றுண்டிகள் கிடைக்கும்.இப்பொழுது அந்தக் கடை அங்கு இல்லை.வேறு பெயரில் வேறொரு கடை உண்டு. நானும் ஜீவனும் தனியும் அந்த இடத்தில் நின்று சில படங்கள் எடுத்திருந்தோம்.

                       பின்பு நான் கல்லூரி விட்டு அருகில் இருந்த கராஜில் வேலை செய்த காலத்தில் அந்தக் கடை முதலாளியின் கார் எங்கள் கராஜில்தான் வேலைக்கு வரும். எமது கராஜ் முதலாளி (நண்பனின் சித்தப்பா) ஒரு பதினோரு மணியளவில் ஆளுக்கு பத்து பத்து சதம் தந்து தேத்தண்ணி குடித்து விட்டு வர சொல்லி அனுப்புவார். ஒன்பது ஒன்பதரைக்கு வேலை ஆரம்பம்.பதினோரு மணி தேனீர். மூன்று மணி மத்தியான சாப்பாடு. பின் எட்டு எட்டரை  வரை வேலை.அதன்பின் பிளவ்ஸ், மொக்கங்கடையில் சாப்பாடு.பின்பு  செக்கன்ட் ஷோ படம்.இது தினசரி எமது டைம்டேபிள். நாங்களும் பத்மா கபேக்கு போவோம்.அங்கு கடை முதலாளி கல்லாவில் இருந்தால் எங்களைத் தனியாக உள்ளே கூட்டிக் கொண்டுபோய் வாழையிலையில் இடியாப்பமோ புட்டொ வைத்து முதல்நாள் மீன் குழம்பு,றால் குழம்பு என்று எது இருக்குதோ அவற்றைப் போட்டுத் தருவார். நாங்கள் பின்பு காசு குடுக்க போகும்போது ஒடுங்கடா என்று திரத்திவிடுவார். 

      நிறைய சம்பவங்கள், காலம் நேரம் கருதி பலவற்றைத் தவிர்த்து கொண்டு போகிறேன்.......! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுவியண்ணா அவசரப் பட்டு முடிக்கிறீர்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 11:15 AM, suvy said:

கல்லுண்டாய் வைரவர் கோவில் மிகவும் சிறிது. மாலை நேரமானாலே அங்கு யாரும் போய்வர மாட்டார்கள். ஆனால் இரவு  ஒரு மணிக்குக் கூட நானும் எனது நண்பரும் (அப்போது அவர் நவாலியில் இருந்தார்).அங்கு போய் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு வருவோம்.....!

ஏற்கனவே வைரவரும் கறுப்பு......வாகனம் நாயும் கறுப்பு......நிலமை இப்பிடியிருக்க!!!!!!!!!
இருட்டினால் பயமாய்த்தானே இருக்கும்.

Black Dog GIF - Black Dog What GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மா கபே.....பழைய நினைவுகள்.....சிலவற்றைக் கிழறி விட்டு விட்டது!

போதாக்குறைக்கு...... கமீதியா கபேயும் வந்து போகுது....!

இந்தத் திருவாசக  மணி மண்டபம்.....சந்தர்ப்பம் கிடைக்கும் போது.....கட்டாயம் பார்க்க வேண்டும்.....!

இதற்கு.....நிலம் கொடுத்து உதவி செய்தவர்.....சிட்னியில் வசிக்கும்....வைத்திய கலாநிதி மனோமோகன் என்று நினைக்கிறேன்!  

தொடர்ந்தும்....எழுதுங்கள்....சுவியர்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.