Jump to content

அமெரிக்காவை இறுக்கும் கொடும் பனி: எட்டு பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
மிஷிகன் ஏரியில் கரைக்கருகில் பனியில் உறைந்த நீரில் நிற்கும் ஒரு கப்பல்.படத்தின் காப்புரிமை Getty Images

துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர்.

கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும்.

250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக்கின்றனர். ஆனால் புளோரிடா போன்ற தெற்கு மாகாணங்கள் இந்த இந்தப் பேரிடரில் இருந்து தப்பின.

எப்படி உயிரிழப்புகள் நேர்ந்தன?

தமது கல்லூரியில் கட்டடம் ஒன்றுக்கு கீழே புதன்கிழமை அதிகாலை கீழே விழுந்து கிடந்த அந்த மாணவர், பிறகு மருத்துவமனையில் இறந்தார்.

மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட்டில் புதன்கிழமை தமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டின் முன்பு 70 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

அதே மிச்சிகன் மாகாணத்தில் இன்னுமொரு 70வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவர் தமது பகுதியில் வெளியில் இறந்து கிடந்தார். அவர் குளிருக்குப் போதிய ஆடைகளை உடுத்தாமல் இருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-47084404

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் கடுமை தான்! நேற்று சமையலறை பைப் கொஞ்ச நேரம் உறைந்து அடைத்துக் கொண்டது- நல்ல காலம் வெடிக்கவில்லை. இன்று ஒரு குளியலறையின் நீர் வெளியேறும் குழாய் உறைந்து அடைத்துக் கொண்டது- சுடு நீர் ஊற்றி அசைக்க வேண்டியிருந்தது. நான் பரவாயில்லை, மருதர் ஆர்க்டிக் வெப்ப நிலையில் இருப்பார்!🏂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் சண்டியன்... அமெரிக்காவை,  கடவுள் சோதிக்கிறார் என்றுதான், நான் நினைக்கின்றேன்.  😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

உலகத்தின் சண்டியன்... அமெரிக்காவை,  கடவுள் சோதிக்கிறார் என்றுதான், நான் நினைக்கின்றேன்.  😋

டொனால்ட் ரம்புக்கு தாங்கள்(அமெரிக்கா) எல்லாத்திலையும் முதலாவதாய் நிக்கோணுமெண்டெல்லோசொல்லிக்கொண்டு திரியுறார்....tw_glasses:

அது தான் கடவுளாய் பாத்து தன்னாலை முடிஞ்சதை ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.:grin:
அமெரிக்கா....
சூறாவளி அழிவிலையும் முதலாமிடம்
காடு கரம்பை எரிஞ்சாலும் முதலாமிடம்
வெள்ளம் வந்தாலும் முதலாமிடம்
வெய்யிலடிச்சு அழிவுகள் வந்தாலும் முதலாமிடம்
துப்பாக்கி சூட்டிலையும் முதலாமிடம்

கொலை செய்யிறதிலையும் முதலாமிடம்
அடி வாங்கிறதிலையும் முதலாமிடம்
தானும் குழம்பி மற்றவனையும் குழப்புறதிலையும் முதலாமிடம்....tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்புக்கு தாங்கள்(அமெரிக்கா) எல்லாத்திலையும் முதலாவதாய் நிக்கோணுமெண்டெல்லோசொல்லிக்கொண்டு திரியுறார்....tw_glasses:

அது தான் கடவுளாய் பாத்து தன்னாலை முடிஞ்சதை ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.:grin:
அமெரிக்கா....
சூறாவளி அழிவிலையும் முதலாமிடம்
காடு கரம்பை எரிஞ்சாலும் முதலாமிடம்
வெள்ளம் வந்தாலும் முதலாமிடம்
வெய்யிலடிச்சு அழிவுகள் வந்தாலும் முதலாமிடம்
துப்பாக்கி சூட்டிலையும் முதலாமிடம்

கொலை செய்யிறதிலையும் முதலாமிடம்
அடி வாங்கிறதிலையும் முதலாமிடம்
தானும் குழம்பி மற்றவனையும் குழப்புறதிலையும் முதலாமிடம்....tw_tounge:

குமாரசாமி அண்ணா...   நான் மனதிற்குள்... எழுத நினைத்ததை, 
வார்த்தையில் எப்படி கொண்டு வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த விடயத்தை...
மிக அழகாகவும், விரைவாகவும்... நீங்கள்  எழுதியமை,பிரமிக்க வைத்தது. 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.