Jump to content

பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி


Recommended Posts

பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி

 

பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம்.

p44.jpg

உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.
அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற நல்ல சக்திகளை உள்வாங்கி உடல் உள்ளுறுப்புகள் நல்ல முறையில் செயல்பட உதவுகின்றன. முத்திரைகளை நாம் முறையாகப் பயிற்சி செய்யும் போது பல நோய்கள் குணமாவதைக் கண்கூடாக உணர முடியும்.
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் அவசியமான, சில நோய்களைத் தடுக்கும் மற்றும் சில நோய்களைத் தீர்க்கும் எளிமையான முத்திரைகளைப் பழகுவோம். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவோம். ஐந்து விரல்களில் பஞ்சபூத தத்துவத்தைப் பார்ப்போம்.
சுண்டு விரல் - நீரைக் குறிக்கிறது.
மோதிர விரல் - நிலத்தைக் குறிக்கிறது.
நடுவிரல் - ஆகாயத்தைக் குறிக்கிறது.
ஆள்காட்டி விரல் - காற்றைக் குறிக்கிறது.
கட்டை விரல் - நெருப்பைக் குறிக்கிறது.
இப்போது கட்டை விரலை மற்ற விரல்களின் முனைப்பகுதியுடனோ அல்லது அடிப்பகுதியுடனோ இணைக்கும்போது வளிமண்டலத்திலுள்ள உயிராற்றல் விரல்கள் வழியாக உறிஞ்சப்பட்டு சக்தி மையங்களுக்கு மேலும் சக்தியூட்டப்படுகிறது. இத்தகைய உணர்வினை முத்திரைப் பயிற்சி செய்யும்போது உணர முடியும்.
இப்போது சில எளிய முத்திரைகளைப் பற்றியும், அதன் பயன்களையும் பார்ப்போம். பின்வரும் முத்திரைகளை தினசரி பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கையும், மனோதைரியமும் அதிகரிக்கும்.
அதிகாலை நான்கு மணிக்கு பின்பு, ஆறு மணிக்கு முன்பாகச் செய்வது மிகுதியான பலனைக் கொடுக்கும். அதைப்போன்று காலை 11.30 மணிக்கு பிறகு, மதியம் 12 மணிக்கு முன்பும் செய்வது நலம். மாலை நான்கு மணிக்கு பிறகு, ஆறு மணிக்கு முன்பாகவும் பழகலாம். பயிற்சி செய்யலாம். 
உணவுக்கு முன் பழகுவது நலம். உணவருந்திய நான்கு மணி நேரம் கழித்து, ‘முத்ரா’ பயிற்சி பழகலாம். பக்கவிளைவுகள் இல்லாதது. கடுமையான நோய்களைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முத்ரா பயிற்சியினால் சாத்திய மாகும்.

p44a.jpg

யோகி சிவானந்தம், பரம்பரைச்சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘யோகா தெரபி’யில் எம்.எஸ்ஸி., பட்டம் பெற்றவர். மருந்தில்லா மருத்துவ முறையில் யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் முத்திரைப் பயிற்சியின் மூலம் நோய்களை நீக்கும் யோக சிகிச்சையை 15 வருடங்களாக ஒரு தவம் போல் மேற்கொண்டு வருகிறார்.
‘ஆதி முத்திரை’

 

பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் என்று ஏதேனும் ஒரு தியான ஆசனத்தில் தரைவிரிப்பில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். கைகளைப் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளவும். இப்போது கட்டை விரலின் நுனிப்பகுதி 
சுண்டு விரலின் மேல்பகுதியைத் தொட்டவாறு இருக்கட்டும். இரு கைகளிலும் இப்படிச் செய்து இரண்டு கைகளையும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை இறுக்கி மூட வேண்டாம். சாதாரணமாக மூடி வைத்துக் கொண்டு இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
பயன்கள் : 1. மன உறுதியை அளிக்கும் 2. பாதுகாப்பு உணர்வைத் தரும் 3. உள்ளுறுப்புகளின் செயல் மேம்படும்
4. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
‘சின் முத்ரா’

 

பத்மாசனம், சுகாசனம் என்று ஏதேனும் ஆசனத்தில் கிழக்கு நோக்கி தரை விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். கண்கள் மூடி இருப்பது நலம். கட்டை விரல் ஆள்காட்டி விரலின் நுனியைத் தொட்டவாறு இருக்க வேண்டும். விரல்களை அழுத்தாமல் இருக்க வேண்டும்.
மனதினுள் ‘ஓம்... ஓம்...’ என்று உச்சரித்தவாறு இருப்பது மேலும் மிகுந்த பலனைத் தரும். இரு கைகளிலும் முத்திரை அமைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடம் இந்த நிலையில் இருக்கலாம் ‘ஓம்’ என்று உச்சரித்தவாறே.
பயன்கள் : 1. வளி மண்டலத்தில் உள்ள அண்ட ஆற்றலை உடல் உள்வாங்கும் 2. ரத்த ஓட்டம் சீராகும் 
3. இதயத் துடிப்பு இயல்பாக இருக்கும் 4. ரத்த அழுத்தம் வராது 5. ரத்த அழுத்தம் இருப்பின் படிப்படியாகக் குணம் அடையும்.
‘பிராண முத்ரா’

 

அமர்ந்த நிலை ஆசனம் ஏதேனும் ஒன்றில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி அமர வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்கட்டும். கட்டை விரலின் நுனிப் பகுதியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப் பகுதியுடன் (படத்தில் உள்ளவாறு) இணைத்து வைத்துக் கொள்ளவும். ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நேராக நீட்டியவாறு இருக்கட்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கவும்.
பயன்கள்: 1. நரம்புத் தளர்ச்சி தடுக்கப்படும் 2. உடல் சோர்வு நீங்கும் 3. நினைவாற்றல் பெருகும் 4. மூளையின் செயல்திறன் மேம்படும் 5. மூட்டுவலிகள் குணமாகும் 6. பிராண சக்தி அதிகரிக்கும்.
‘மகா சிரசு முத்ரா’

 

தியான ஆசனம் ஏதேனும் ஒன்றில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றின் நுனிப் பகுதியையும் ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ளவும். மோதிர விரலின் நுனிப் பகுதி உள்ளங்கையைத் தொட்டவாறு இருக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டியபடி இருக்கட்டும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
பயன்கள்: 1. தீராத தலைவலி குணமாகும் 2. தலை பாரம் சைனஸ் பிரச்னை நீங்கும் 3. மனஅமைதி ஏற்படும் 
4. ஜீரண உறுப்புகளின் செயல்பாடு தூண்டப்படும்.
‘இருதய முத்ரா’

 

தியான ஆசனத்தில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி கண்களை மூடி அமர்ந்துகொள்ளவும். கட்டை விரல், மோதிர விரல், நடுவிரல் மூன்று விரல்களின் நுனிப் பகுதியும் தொடுமாறு இணைத்து வைத்துக் கொள்ளவும். கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள கோட்டை ஆள் காட்டி விரலை மடக்கி தொட்டவாறு வைத்துக் கொள்ளவும். சுண்டு விரல் நீட்டியவாறு இருக்கட்டும். ஐந்து முதல் பத்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள்: 1. இதய நோய் வராமல் தடுக்கும் 2. நுரையீரலின் செயல்பாடு தூண்டப்படும் 3. கெட்ட கொழுப்பு இரத்தத்தில் படிவதைத் தடுக்கும் 4. மாரடைப்பு வராமல் தடுக்கும் 5. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

http://hinduspritualarticles.blogspot.com/2018/03/blog-post_31.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.