Jump to content

சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம்

Nantha-720x400.jpg

லண்டன் – சற்ரன் நகர சபையில் சித்திரைப் புத்தாண்டினை இந்து-பௌத்த புத்தாண்டுக் கொண்டாட்டம் என்னும் பெயரில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.

ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த நாட்டில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த பல்லின மக்கள் வாழ்கின்றனர். நாம் எமது தாய்நாட்டின் நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு நல்லவாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கின்றது.

எங்கள் வேறுபாடுகள் அனைத்தினையும் களைந்து எமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள் மூலமாக சற்ரன் வாழ் மக்கள், லண்டன் வாழ் மக்கள் மற்றும் அனைத்துப் பிரித்தானிய மக்களோடும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று கூறினார்.

சற்ரன் நகர சபையின் தலைவரான கவுன்சிலர் ரூத் டொம்பி கூறுகையில்; ஒவ்வொருவரும் தத்தமது கலாசாரங்கள் மற்றும் மரபுகளை கொண்டாடவேண்டும்.

ஏனைய மதங்கள் மற்றும் ஏனைய சமூகங்களின் மரபுகளை நாம் எல்லோரும் புரிந்துகொள்வதன் மூலம் எங்கள் வாழ்க்கையை வளப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

பெருமளவிலான ஈழத்தமிழர்கள் வாழும் கனடாவில் ஜனவரி மாதமானது தமிழர்களின் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது.

 

http://athavannews.com/சற்ரன்-நகரசபையில்-சித்தி/

 

 

Link to comment
Share on other sites

கனடாவில் தமிழர்மரபுரிமை மாதம் ஐனவரியில் அங்கீகரிக்கப்பட  இங்கிலாந்தில் ஏபரலில்.  ஏன் இந்த முரண்பாடு?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.