Jump to content

செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம்
 

* பத்திரிகை ஆசிரியர் ஒருவர், நிருபரை அழைத்து செக்ஸ் வலைதளங்கள் குறித்து புலனாய்வு செய்து கட்டுரை எழுதச் சொன்னார்.

ஆறு மாதம் போர்னோ வலைதளங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்த அந்த நிருபர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது ஓர் ஆண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரே வாரத்தில் போர்னோ வலைதளங்கள் ஈட்டிவிடுகின்றன! அவ்வளவுதான். கட்டுரை கொடுப்பதற்கு பதில் தன் ராஜினாமாவைக் கொடுத்தார். முழுநேர போர்னோ வலைதளத்தை தொடங்கிவிட்டார்! இப்போது கலிபோர்னியாவில் மிகப் பெரிய மூன்று மேன்ஷன்களுக்கு அவர் சொந்தக்காரர்! ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர்கள் விலைபோகும்!


3.jpgசத்தியமாக இது கற்பனை அல்ல. நிஜம்! ஸ்மார்ட் போன், குறைந்த விலையில் 4ஜி வந்தபின் உலகம் முழுவதும் இணைய செக்ஸ் தளங்களின் வருமானம் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் சினிமாத் துறைக்கு நிகராக போர்னோ திரைப்படங்களின் துறை வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் மிகப் பிரபலமான போர்னோ பட நடிகை ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். 

உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு குத்துமதிப்பாக 300 மில்லியன் டாலர்கள் வரை இத்துறையில் புரள்கிறது. வலைதளங்களின் வழியேதான் இவர்கள் முதலில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்று ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், மெசன்ஜர், ஸ்கைப், டேட்டிங் செயலிகள்... என ஆக்டோபஸ் ஆக விரிந்திருக்கிறார்கள்! இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் கூட இந்தியாவில் பலர் தங்கள் ஸ்மார்ட் போனில் ‘பிட்டு’ பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். ஏனெனில் இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 51% பேர் பாலியல் வீடியோக்களை மட்டுமே பார்ப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது.

எல்லாம் சரி... இதன் வழியாக எப்படி சம்பாதிக்கிறார்கள்? செக்ஸ் படங்களும் வீடியோக்களும் கொண்ட வலைதளங்கள் இன்று பெருகிவிட்டன. அதாவது இணையத்தில் இன்றிருக்கும் ஒரு மில்லியன் வலைதளத்தில் 30% ஆபாச தளங்கள்தான்! இணையப் பயன்பாட்டிலும் சுமார் 50% போர்னோ பயன்பாடுதான்!  இந்த வலைதளங்களில் இலவசமாக சிறுசிறு வீடியோக்களை பதிவேற்றி வைத்திருப்பார்கள். இதைப் பார்த்து தூண்டப்படுபவர்கள் முழு வீடியோவையும் பார்க்க விரும்புவார்கள். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்!  
3a.jpg

அதாவது ஒரு வீடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய அல்லது மாதச் சந்தா செலுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள். அஸ்கு புஸ்கு. இலவச வீடியோக்களைத்தானே நாங்கள் பார்க்கிறோம் என்கிறீர்களா? நல்லது. அப்படி பார்க்கும் வீடியோவில் நடு நடுவே விளம்பரம் வருகிறதல்லவா..? இதன் வழியாக அத்தளம் பணம் சம்பாதிக்கிறது. இப்படி விளம்பரம் கொடுக்க பலத்த போட்டி நடக்கிறது பாஸ்! எந்தவொரு போர்னோ வலைதளத்தை திறந்தாலும் ‘பாப்-அப்’ முறையில் பத்து பக்கங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவை எல்லாம் விளம்பரங்கள்தான். குளிக்கும் சோப்பு முதல் கார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை இதில் இடம்பெறுகின்றன என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.


3c.jpg

யெஸ். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, ஆபாச வலைதளங்களில் விளம்பரம் செய்யவும் பன்னாட்டு நிறுவனங்கள் கணிசமான தொகையை ஒதுக்குகின்றன. ஏனெனில் இதற்குத்தான் பார்வையாளர்கள் அதிகம் என்பது அந்நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும்! அடுத்து லைவ் ஸ்ட்ரீமிங். ஏற்கனவே காட்சியாக எடுத்து வைத்த படங்கள் இப்போது போர்னோ ரசிகர்களுக்கு சலித்துவிட்டன. எனவே, டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் லைவ்வாக காட்சிகளைப் பார்க்க பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

ஒரு பெண் தனியாக அல்லது தன் இணையுடன் நடத்தும் அந்தரங்க செயல்கள் அனைத்தும் லைவ்வாக நகரும். அவர்களது அைனத்து நடவடிக்கைகளையும் செயல்களையும் இன்ச் பை இன்ச்சாக இருந்த இடத்தில் இருந்தே லைவ் ஸ்ட்ரீமிங் வழியே பார்த்து ரசிக்கலாம்.இப்போது ஹாட் ஆக இருக்கும் இதுதான் மிகப்பெரிய சந்தையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பணம் கட்டிவிட்டால் போதும். நபர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், செக்‌ஷுவல் ஆக்டிவிட்டி? 
3d.jpg

அது தொடரும். மட்டுமல்ல... அதிகப் பணம் செலுத்தினால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திரையில் அவர்கள் உறவு கொள்வார்கள்! ஏற்கனவே ஷூட் செய்த படங்களைவிட இந்த மாதிரியான லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களுக்குத்தான் இப்போது ஏக டிமாண்ட்! மூன்றாவதாக, லைவ் ஸ்ட்ரீமிங்கை அப்படியே appக்கு பொருத்துவது. நம் வாட்ஸ்அப் முதல் மெசன்ஜர் வரை தகவல் தொடர்புக்கு பயன்படும் செயலிகளில் (app) படங்களாக அல்லது வீடியோ கால்களாக செக்ஸ் காட்சிகள் வந்து கொண்டே இருக்கும். ம்ஹும். இலவசமாக அல்ல. பணத்துக்கு! எவ்வளவு தொகை செலுத்துகிறோமோ அதற்கு ஏற்ப படங்களும் வீடியோ காட்சிகளும் வரும். அதாவது 7 செகண்ட் காட்சிக்கு ஒரு தொகை. 5 நிமிட காட்சிகளுக்கு ஒரு தொகை! 

ஒரே படம் அல்லது ஒரே வீடியோ துணுக்கை பலருக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒன்று தெரியுமா..? டிக்டாக் app, ஒரு காலத்தில் போர்னோ காட்சிகள் குவிந்திருந்ததால் தடை செய்யப்பட்ட செயலிதான்! பல கட்டுப்பாடுகளுடன் இப்போது அந்த செயலி சந்தைக்கு வந்திருக்கிறது! ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நம் கையில் இருப்பது ஸ்மார்ட் போன் அல்ல. பாலியல் உறுப்பு!                             

- வினோத் ஆறுமுகம்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14845&id1=4&issue=20190201

Link to comment
Share on other sites

450 பேருக்கு மேல் இந்த திரியை வாசித்தும் கம் என்று இருக்கினம் (நானும் தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தியை வாசித்தபின் நானும் இப்படி ஒரு இணையத்தளத்தினை ஆரம்பிக்காலாமோ எனத்தோன்றுகிறது. நாய் சம்பாதித்த காசு குரைக்கவா போகிறது.யாழ் களத்தில் யாராவது இணையத்தளம் ஆரம்பிப்பது அதை வழிநடாத்துவது அதாவது வர்க்தக ரீதியில் இருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளவும் முதலில் கொஞ்சம் பிட்டுப்படங்களைக் காட்சிப்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

450 பேருக்கு மேல் இந்த திரியை வாசித்தும் கம் என்று இருக்கினம் (நானும் தேன்)

இங்கே எழுதி மினக்கெடுவதை விட இணையத்தளத்தை உருவாக்கலாம் என்று ரொம்ப பிசியாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இந்தச்செய்தியை வாசித்தபின் நானும் இப்படி ஒரு இணையத்தளத்தினை ஆரம்பிக்காலாமோ எனத்தோன்றுகிறது. நாய் சம்பாதித்த காசு குரைக்கவா போகிறது.யாழ் களத்தில் யாராவது இணையத்தளம் ஆரம்பிப்பது அதை வழிநடாத்துவது அதாவது வர்க்தக ரீதியில் இருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளவும் முதலில் கொஞ்சம் பிட்டுப்படங்களைக் காட்சிப்படுத்துவோம்.

நான் பாத்ரூமுக்குள  குளிக்கேக்க எடுத்த செல்பியை போடலாமே எண்டு யோசிச்சு வையுங்கோ.... வைன் கிளாஸை நிரப்பிக்  கொண்டோடி வாறன் ...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் வாசித்ததை பகிர்கிறேன். கட்டுரையாளர் அறுமுகத்தார்  விசயம் கணக்க தெரியாமல் மேலோட்டமா கதை சொல்லி இருக்கிறார்.

தளங்களை உருவாக்கி நடத்துவது, படங்கள் ஏத்துவது எல்லாம் இலகுவானது தான். ஆனால் சந்தைப்படுத்துவது அவ்வாறு இல்லை. சில நாடுகளில் நேரடியாக தடை.

அவர்களது தளங்கள் இயங்குவது தடை இல்லாத நாடுகளில், பெரும்பாலும், அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு தான்  இயங்குவார்கள். வரும் பணம் அந்த நாட்டில் தான் process  ஆகும். 

இந்த மாதிரி தளங்கள் இயங்குவது அமேசான் முறையில்.... அவர்கள் தளத்தில் யாரும் விடியோவை போடலாம்.... viewers பார்பதற்கு அமைய பணம் வரும்.

நீலப் படங்கள் எனப்படும் அந்த மாதிரி படங்களில், பணத்தை வாங்கிக் கொண்டு கட்டிலில் நடிப்பதில் பணம் கொட்டுவது இல்லை. 

கமரா கண்கள் தங்களை கண்காணிப்பது தெரியாமல் அறையில் நடந்து கொள்வதை, (innocent) காட்டுவதே பணம் கொட்டுகிறதாம்.

நடிகை திரிசா , தங்கி இருந்த ஹோட்டலில், பாத்ரூமில் கமராவை வைத்து, அதை பதிவு ஏற்றி, ஒரு சிறிய பகுதியை அந்த மாதிரி தளங்களில் விளம்பரமாக காட்டி,  அதை வைத்து, தமது தளத்துக்கு வர வைத்து பணம் பார்த்தது ஒரு கோஸ்ட்டி.

திரிஷா, அது நான் இல்லை, மார்பிங் என்று (வேறு வழி இல்லை, பாவம்) ஒதுங்கிக் கொள்ள, இந்த கொடூரர்கள் தப்பித்தார்கள்.

இப்ப நடிகைகள், சில முகவர்களை வைத்து, தாம் தங்கப் போகும் ஹோட்டல் ரூமை செக் பண்ணுகிறார்கள்.

முன்னர், கவர்ச்சி காரமான ஆணை வைத்து, பெண்களை காதலிக்க வைத்து, தென் இந்தியாவில் இருந்து, கிளப்பி, பம்பையில் சிவப்பு விளக்கு பகுதிக்கு கொண்டு போவார்கள்.

இப்போது அப்படி மினக்கெடுவதில்லை. அப்பாவி பெண்ணுடன் உறவு கொள்வதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இந்த வகை தளங்களில் ஏத்தி விடுகிறார்கள். அதுக்கு பார்வையாளர்கள் கொடுப்பது மிக மிக அதிக கட்டணம்.

வீட்டில் ஒரு ரூமை வாடகைக்கு கொடுத்து இருந்தால், அந்த வாடகை காரருடன் முரண்பாடா? பாத்ரூம் போகும் போது கவனம்..... கமரா படம் பிடித்து, இந்த வகை தளத்தில் ஏறிவிடும், அந்த வாடகைக்கு குடியிருப்பாளார் அயோக்கியனாக இருந்தால்... 

உண்மையில் இது ஒரு இருண்ட  பகுதி. பாதிக்கப் பட்ட பெண்ணோ, ஆணோ, அவர்களா அங்கே போய் பார்த்தால் அன்றி, அவர்களுக்கு தாம் ஒரு காட்சி பொருள் என்று தெரியாது. அதேவேளை அங்கே போனவர்களும் வாய் திறக்க மாட்டார்கள், தாம் பார்த்ததாக.

முறைப்பாடு செய்தால் அன்றி, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. முறைப்பாடு செய்யாவிடில், பணத்துக்காக இவர்கள் நடித்ததாகவே கருதப்படும்.

இதுவே, சட்டத்தின் கண்களில் அவர்கள் தப்பிவிட உதவுகிறது.

அண்மையில் பெங்களூரில் ஒரு பெண்... tiktalk இல் பெரிய ரசிகர் வட் டம். அவரது முகத்தினை, வேறு ஒரு நிர்வாணப் பெண்ணின் படத்தில் ஒட்டி (எல்லாம் அழகாக செய்வார்கள்) இந்த மாதிரி தளத்தில் போட்டு விட்டார்கள்.

யாரோ ஒருவர், அதை screenshot எடுத்து இவருக்கு அனுப்பிவிட, அவர் அதிர்ந்து போய் , போலீசுக்கு போய் இருக்கிறார்.

அவர்களோ, உடல் பகுதி உன்னுடையது இல்லை என்றால், இதில் நேரத்தை விரயம் செய்யாதே என்று அட்வைஸ் பண்ண, அவர் இணையத்தை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால்  அந்த தளத்தில் இன்னும் இருக்கும்.

இது ஒரு சிக்கலான பிரச்சனை ..... நாம் பாதிக்கப் பட்டு இருக்கிறோமா என்று நமக்கே தெரியாது. உதாரணமாக நம்ம குமாரசாமியார் சிவனே என்று தேவார திருவாசகத்தை பாடிக்  இருக்க, அவர் முகத்தோட ஒருத்தர், நயனதாரா முகத்தோட மார்பிங் செய்யப்பட்ட இன்னோர் பெண்ணுடன், கட்டிலில் இருப்பார்.

என்னத்தை சொலவ்து.

(இன்னோரு கிளாஸ் நிரப்பிக் கொண்டோடி வாறன்  பொறுங்கோ)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

நான் அண்மையில் வாசித்ததை பகிர்கிறேன். கட்டுரையாளர் அறுமுகத்தார்  விசயம் கணக்க தெரியாமல் மேலோட்டமா கதை சொல்லி இருக்கிறார்.

தளங்களை உருவாக்கி நடத்துவது, படங்கள் ஏத்துவது எல்லாம் இலகுவானது தான். ஆனால் சந்தைப்படுத்துவது அவ்வாறு இல்லை. சில நாடுகளில் நேரடியாக தடை.

அவர்களது தளங்கள் இயங்குவது தடை இல்லாத நாடுகளில், பெரும்பாலும், அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு தான்  இயங்குவார்கள். வரும் பணம் அந்த நாட்டில் தான் process  ஆகும். 

இந்த மாதிரி தளங்கள் இயங்குவது அமேசான் முறையில்.... அவர்கள் தளத்தில் யாரும் விடியோவை போடலாம்.... viewers பார்பதற்கு அமைய பணம் வரும்.

நீலப் படங்கள் எனப்படும் அந்த மாதிரி படங்களில், பணத்தை வாங்கிக் கொண்டு கட்டிலில் நடிப்பதில் பணம் கொட்டுவது இல்லை. 

கமரா கண்கள் தங்களை கண்காணிப்பது தெரியாமல் அறையில் நடந்து கொள்வதை, (innocent) காட்டுவதே பணம் கொட்டுகிறதாம்.

நடிகை திரிசா , தங்கி இருந்த ஹோட்டலில், பாத்ரூமில் கமராவை வைத்து, அதை பதிவு ஏற்றி, ஒரு சிறிய பகுதியை அந்த மாதிரி தளங்களில் விளம்பரமாக காட்டி,  அதை வைத்து, தமது தளத்துக்கு வர வைத்து பணம் பார்த்தது ஒரு கோஸ்ட்டி.

திரிஷா, அது நான் இல்லை, மார்பிங் என்று (வேறு வழி இல்லை, பாவம்) ஒதுங்கிக் கொள்ள, இந்த கொடூரர்கள் தப்பித்தார்கள்.

இப்ப நடிகைகள், சில முகவர்களை வைத்து, தாம் தங்கப் போகும் ஹோட்டல் ரூமை செக் பண்ணுகிறார்கள்.

முன்னர், கவர்ச்சி காரமான ஆணை வைத்து, பெண்களை காதலிக்க வைத்து, தென் இந்தியாவில் இருந்து, கிளப்பி, பம்பையில் சிவப்பு விளக்கு பகுதிக்கு கொண்டு போவார்கள்.

இப்போது அப்படி மினக்கெடுவதில்லை. அப்பாவி பெண்ணுடன் உறவு கொள்வதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து இந்த வகை தளங்களில் ஏத்தி விடுகிறார்கள். அதுக்கு பார்வையாளர்கள் கொடுப்பது மிக மிக அதிக கட்டணம்.

வீட்டில் ஒரு ரூமை வாடகைக்கு கொடுத்து இருந்தால், அந்த வாடகை காரருடன் முரண்பாடா? பாத்ரூம் போகும் போது கவனம்..... கமரா படம் பிடித்து, இந்த வகை தளத்தில் ஏறிவிடும், அந்த வாடகைக்கு குடியிருப்பாளார் அயோக்கியனாக இருந்தால்... 

உண்மையில் இது ஒரு இருண்ட  பகுதி. பாதிக்கப் பட்ட பெண்ணோ, ஆணோ, அவர்களா அங்கே போய் பார்த்தால் அன்றி, அவர்களுக்கு தாம் ஒரு காட்சி பொருள் என்று தெரியாது. அதேவேளை அங்கே போனவர்களும் வாய் திறக்க மாட்டார்கள், தாம் பார்த்ததாக.

முறைப்பாடு செய்தால் அன்றி, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. முறைப்பாடு செய்யாவிடில், பணத்துக்காக இவர்கள் நடித்ததாகவே கருதப்படும்.

இதுவே, சட்டத்தின் கண்களில் அவர்கள் தப்பிவிட உதவுகிறது.

அண்மையில் பெங்களூரில் ஒரு பெண்... tiktalk இல் பெரிய ரசிகர் வட் டம். அவரது முகத்தினை, வேறு ஒரு நிர்வாணப் பெண்ணின் படத்தில் ஒட்டி (எல்லாம் அழகாக செய்வார்கள்) இந்த மாதிரி தளத்தில் போட்டு விட்டார்கள்.

யாரோ ஒருவர், அதை screenshot எடுத்து இவருக்கு அனுப்பிவிட, அவர் அதிர்ந்து போய் , போலீசுக்கு போய் இருக்கிறார்.

அவர்களோ, உடல் பகுதி உன்னுடையது இல்லை என்றால், இதில் நேரத்தை விரயம் செய்யாதே என்று அட்வைஸ் பண்ண, அவர் இணையத்தை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால்  அந்த தளத்தில் இன்னும் இருக்கும்.

இது ஒரு சிக்கலான பிரச்சனை ..... நாம் பாதிக்கப் பட்டு இருக்கிறோமா என்று நமக்கே தெரியாது. உதாரணமாக நம்ம குமாரசாமியார் சிவனே என்று தேவார திருவாசகத்தை பாடிக்  இருக்க, அவர் முகத்தோட ஒருத்தர், நயனதாரா முகத்தோட மார்பிங் செய்யப்பட்ட இன்னோர் பெண்ணுடன், கட்டிலில் இருப்பார்.

என்னத்தை சொலவ்து.

(இன்னோரு கிளாஸ் நிரப்பிக் கொண்டோடி வாறன்  பொறுங்கோ)
 

அந்தமாதிரி  பிரிச்சு  மேய்ஞ்சு  ஆராய்ஞ்சிருக்கான்யா...😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னுமோர் விசயம் revenge porn என்பது.

அதாவது, கணவன், மனைவி, சந்தோசமாக இருக்கும் போது.... தாங்கள் அறையில் நடந்து கொள்வதை படம் பிடிப்பது.... பின்னர் மணமுறிவு உண்டானதும், ஒருவரை அடுத்தவர் பழி  வாங்க இந்த மாதிரி தளங்களில் பதிவு ஏத்துவது.

இதுவேதான் காதலர், காதலிக்கும் இடையே.... ஒருத்தரை ஒருத்தர் வெட்டி விட்டால், தாங்கள் தனிமையில் இருந்த படங்களை பதிவு ஏத்துவது.  

இது 2015 முதல் பிரிட்டனில், கனடாவில், அமெரிக்காவில் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். ஆனாலும், அந்த படங்கள் அங்கே உள்ளன என சம்பந்தபட்டவருக்கு தெரிய வரும் சந்தர்ப்பங்கள் குறைவு என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.

அதுதான்... ஆட்களை வைத்து எடுக்கும் போது.... பணக் கொடுக்கல் வாங்கல்களினால், காட்டிக் கொடுக்கப் பட்டு மாட்டுப் படும் சந்தர்ப்பங்கள் கூட.

அதேவேளை, ரகசிய கமரா.... யார் எடுத்தார், எங்கே என்பது யாருக்கும் தெரியாது. எடுப்பவர்களுக்கு, background மாத்திவிடுவதால்.... இது எங்கே எடுக்கப் பட்டது .... நாம் தானோ என குழப்ப மடைவார்கள். அத்துடன் இவ்வகை வீடியோக்களுக்கே டிமாண்ட் அதிகம் என்பதால்..... 

ம்... நாம தான் ஹோட்டலுக்கு போனால் கவனமாக இருக்க வேண்டும்..... லபக்கென்று நித்தா கொள்ள வேண்டியது தான்...

சில வருடங்களுக்கு முன்னர் நடிகை சோனியா அகர்வால், (இவர் மன்மதராசா தனுஷ் அண்ணன் செல்வராகவனை திருமணம் செய்தவர்) இனது  நிர்வாண படம் இணையத்தில் வந்துள்ளதாக தமிழக மீடியாக்கள் தெரிவித்தன. 

அது தலை மட்டும் மாத்தப் பட்ட படம் என்று பிறகு சொன்னார்கள்.

ஆயினும், சுசி லீக்ஸ் கசிந்த போது, நடிகை ஆண்ட்ரியா, தனது அந்தரங்க படங்கள் சில செல்வராகவானால் எடுக்கப்பட்டதாகவும், அவை அழிக்கப் பட வேண்டும் என கோரியிருந்தார். இது தொடர்பில் அவர் அனுப்பிய ஈமெயில் கூட வெளியே வந்திருந்தது.

இதுக்கும் சோனியா படத்துக்கும் முடிச்சு போட்டு அப்ப, அது ஒரிஜினல் தான் என்று கிளப்பினார்கள்.

தமிழ் நாட்டில் இந்த சம்பாத்தியத்தில் ருசி கண்ட, டாக்டர் பிரகாஷ் என்பவர், இது போல படங்கள் எடுத்து, மாட்டி சிறை சென்றார்.  

இதில இன்னுமோர் மிக, மிக மோசமான வகை குழந்தைகள் படங்கள். (இதனை ஆங்கிலத்தில் போடுவதே பிரச்னை).

இது மிக ரகசிய வலையமைப்பு ஊடாக பகிர்கிறார்கள். குழந்தைகள் ஒருபோதுமே இதற்கு இணங்குவது  இல்லை என்பதால், அதிகாரிகளும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்கள். பல அதிகாரிகள், சட்ட  ரீதியாக, தாமே அந்த படங்களை விட்டு, யாரு வாங்கி மாட்டுகிறார்கள்..... யார் யாருக்கு பகிக்கிறார்கள் என்று பொறி வைத்து இவர்களை பிடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

Filter பண்ணுங்கோ..... 

இந்த மாதிரி படங்கள் pop  up ஆவதை தடுப்பது எப்படி என்று கூகிளிடம்  கேளுங்கோ ..... 

விலாவரியாக சொல்வார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

(இன்னோரு கிளாஸ் நிரப்பிக் கொண்டோடி வாறன்  பொறுங்கோ)
 

கிளாஸ் நிரப்ப இவ்ளோ நேரமா தல?!!!

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

இதில ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கணனியில் படம் நாடகம் ஏதாவது பார்க்க அழுத்தும் போதும் தானாகவே வந்து தொலைக்கிறது.

நம்பீட்டம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கிளாஸ் நிரப்ப இவ்ளோ நேரமா தல?!!!

நிரப்பிக் கொண்டு வந்து தானே, உங்க குரு - சிஷ்யன் கதைக்கு பதிலைப் போட்டேன்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

அதுக்கு ரிப்பேர் பண்ண கொடுக்க வேண்டியதில்லை. வேறு விசயமா தருவதாக சொல்லி ஆப்ஸ் இலவசமாக தந்து, வீடியோக்களை, படங்களை உருவுவது....

இப்படி தான் பல அங்கே தளமேருகிறது. நல்ல பணம் கிடைப்பதால், உருவுற ஆப்ஸ் எழுதுகின்றனர். 

இங்கேதான் சட்ட  சிக்கல் உருவாகின்றது. தமது படம் அத்தகைய இணைய தளத்தில் இருக்கிறது என தெரிந்தால், ... சிக்கலோ சிக்கல்... அவர்கள் தாமே எடுத்த படம்.... எவ்வாறு அங்கே போனது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். 

கணவன் ஆயின், மனைவியையும், மனைவி ஆயின் கணவனையும் சந்தேகிப்பார்....

அல்லது அதை வெளியே சொல்லி பிரச்சனை ஆக்காமல் , சரி பார்த்துட்டு போகட்டுக்கே என்று அமுசடகமாய் இருந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்த பிறகு ஹொட்டல்களில் போய் தங்கவே பயமாயிருக்கு 😪

Link to comment
Share on other sites

10 hours ago, ரதி said:

இதை வாசித்த பிறகு ஹொட்டல்களில் போய் தங்கவே பயமாயிருக்கு 😪

பெண்களை தாயாக பார்கிறோம்.  தெய்வமாக மதிக்கிறோம்  என்று அளவுக்கு அதிகமாக பீலா விடும் நாடுகளில் மிக அவதானமான இருங்கள். அங்கு தான் ஆபத்து மிக மிக அதிகம். சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பெண்களை தாயாக பார்கிறோம்.  தெய்வமாக மதிக்கிறோம்  என்று அளவுக்கு அதிகமாக பீலா விடும் நாடுகளில் மிக அவதானமான இருங்கள். அங்கு தான் ஆபத்து மிக மிக அதிகம். சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு. 

இந்த விசயத்தில் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சக தோழியாக மதிக்கும் நாடுகளில் ஆபத்து குறைவு.

ஏனெனில், ஏதோ ஓர் காரணத்திற்காக தோழி மீது தோழனுக்கோ அல்லது மறுவளமாகவோ ஆசை வந்தால் தோழனை தோழியோ அல்லது தோழியை தோழனோ தனது ஆசை தெரிவித்து மற்றவரின் காதல், காமம், கலவி பற்றிய எண்ணத்தை வெளிப்படையாக கேட்காலம்.

இது மேலை நாடுகளில் சர்வ சாதாரணம்.

அண்ணல் ஆசை எப்போது வரும் என்று சொல்வது மிகவும் கடினம்.

On 2/10/2019 at 5:06 PM, ஏராளன் said:

இதில இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்லவேணும் ஸ்மார்ட் போன்களில் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ (கள்ள) தமது உறவு நேரத்தில் எடுத்த வீடியோவை பார்த்துவிட்டு அழித்து விட்டோம் என்றிருப்பார்கள்.

ஆனால் போனில் பழுது/ பற்றி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு திருத்தும் இடத்தில் வழங்கும் போது அவர்கள் றிகவரி மென்பொருள் மூலம் வீடியோக்கள் படங்களை எடுத்து இணையத்தளங்களுக்கு வழங்குகிறார்கள்.

இது பழைய முறை.

இப்பொது மொபைல் போன், laptop, PC, tablet, வீடுகளுக்கு உள் இருக்கும் cctv camera    ஐ hack  பண்ணுவது நடக்கிறது.  

IoT (உ.ம். தானாக இயங்கும் vaccum cleaner இல் கேமரா இருக்கிறது), 5G பாவனை பரந்தளவில் பெருகும் போது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும்

அதனால்,  நீங்கள் பாவிக்கும் PC, laptop, tablet இல் camera இ பவித்தவு முடிந்தவுடன் disable பண்ணிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

தனால்,  நீங்கள் பாவிக்கும் PC, laptop, tablet இல் camera இ பவித்தவு முடிந்தவுடன் disable பண்ணிவிடுங்கள்.

Hackers உள்ளே நுழைந்தால் கமெராவை  வேலை செய்யப் பண்ணலாம்தானே!

அடிப்படையான இணையப்பாதுகாப்பு இருந்தாலே பலவிடயங்களைத் தவிர்க்கலாம். 

Firewall , up to date anti-virus கட்டாயம் தேவை. நாடகம் பார்க்கப் போகும் திருட்டு இணையத்தளங்கள் மூலம் வரும் spyware எல்லாவற்றையும் திருடிக்கொண்டுபோகும் என்று அவதானமாக இருந்தால் போதும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

Hackers உள்ளே நுழைந்தால் கமெராவை  வேலை செய்யப் பண்ணலாம்தானே! 

அடிப்படையான இணையப்பாதுகாப்பு இருந்தாலே பலவிடயங்களைத் தவிர்க்கலாம். 

Firewall , up to date anti-virus கட்டாயம் தேவை. நாடகம் பார்க்கப் போகும் திருட்டு இணையத்தளங்கள் மூலம் வரும் spyware எல்லாவற்றையும் திருடிக்கொண்டுபோகும் என்று அவதானமாக இருந்தால் போதும்.

நீங்கள் சொல்லும் best practice நிச்சயமாக இருக்கவேண்டும்.

ஆனாலும், உள்ளே நுழைய எத்தனிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான (Script Kiddies) hacking.

அதனால் தான், இலத்திரனியல் இணைய வலையில் தொடுத்திருக்கும் camera உள்ள கருவிகளை பாவித்து முடித்தவுடன் அதில் உள்ள கேமராவின் கண்களை மறைத்து விட வேண்டும் என்பது.

உதாரணம், லேப்டாப் ஐ முற்றாக மூடி விடுவதும், முற்றாக மின்னிணைப்பில் இருந்து துண்டிப்பதும் . எல்லோராலும் செய்யக் கூடியது.

ஓர் கோணத்தில், இவையும் best practice தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

நீங்கள் சொல்லும் best practice நிச்சயமாக இருக்கவேண்டும்.

ஆனாலும், உள்ளே நுழைய எத்தனிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான (Script Kiddies) hacking.

அதனால் தான், இலத்திரனியல் இணைய வலையில் தொடுத்திருக்கும் camera உள்ள கருவிகளை பாவித்து முடித்தவுடன் அதில் உள்ள கேமராவின் கண்களை மறைத்து விட வேண்டும் என்பது.

உதாரணம், லேப்டாப் ஐ முற்றாக மூடி விடுவதும், முற்றாக மின்னிணைப்பில் இருந்து துண்டிப்பதும் . எல்லோராலும் செய்யக் கூடியது.

ஓர் கோணத்தில், இவையும் best practice தானே.

 

   எங்கடை பொம்புளையள் பாவிக்கிற ஸ்ரிக்கர் பொட்டு ஒன்றை கமராவுக்கு மேலை ஒட்டிவிட்டால் பயப்பிடத்தேவையில்லை...😀

RED sticker Bindi à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தளத்தில் நாம் விவாதித்ததின் தொடர்பானதே, பொள்ளாச்சி சம்பவம் 😓🤑

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.