Jump to content

Recommended Posts

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2019 at 11:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 minutes ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

இங்கேயுமா  ராசா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

இங்கேயுமா  ராசா...??

விசுகர், தேசியவாதிகள் என்று நான் எழுதிய போது நினைத்தது ட்ரம்ப், விக்ரர் ஊர்பான், நைஜல் fபராஜ், மோடி போன்ற பேர்வழிகளை. வேறெந்த அர்த்தமும் இல்லை. அடையாளங்களில் அதிகம் ஆபத்தான அடையாளம் என்று தீவிர தேசிய அடையாளங்களை நான் கருதுவதால் அப்படிக் குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

உண்மை தான் ஜஸ்ரின். காலணித்துவ காலத்திலோ அல்லது அடக்குமுறை அதிகமாக இருக்கும் வேளைகளில் ஒரு தனிநபரோ, குழுவோ தம் அடையாளத்தை உணர்ந்து அதைப் பேணுவதற்கான வழிகளை முன்னெடுத்தல் தவறில்லை. இங்கே அவர்களின் அடையாளம் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகிறது (மொழி, மதம் என்பவை மிக மிக குறுகிய உதாரணங்கள் மட்டுமே). பல்வேறு காரணிகள் கூட்டாகச் சேர்ந்தும் ஒரு அடையாளத்தைக் கொடுக்க முடியும்.

எனினும் நீங்கள் சொல்வது போல 'எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப்படும் போது' ஆரோக்கியமற்ற ஓர் சூழல் உருவாகிறது. ஏனெனில் ஓர் குழுவானது தாம் சாராத ஏனைய குழுக்களின் அடையாளங்ககளப் புரிந்து மதிக்காத போது அங்கே முரண்பாடுகள் தோன்றுகின்றன. 

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். 😊 இவ்வாறான கருத்துக்கள் தான் தலைப்பை மேலும் சுவாரசியமாக்கும்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

ஈழப் பிரியன் அண்ணை, புகழ் என்பது மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடையாளமல்லோ? அது இருக்கும் போது வந்தால் என்ன போனால் பிறகு வந்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பையும், பன்பையும் அடையாளமாக்கி மணம் வீச செய்த மல்லிகையின் வாசம் வாசல் வரை கமகமக்கிறது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சிந்தனை...!

நான் என்பது தான் அடையாள,ம் எனப் பலர் கருதுகின்றார்கள்|

எனினும்....உற்று நோக்கும்போது...நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

தனது அடையாளத்தைப் பாடும் புலவர்களுக்கு அள்ளிக்கொடுத்ததும்....தனது அடையாளத்தை நிலை நிறுத்தக் கோவில்களும் ..கோபுரங்களும் கட்டியதும் தான் எமது வரலாற்றின் பெரும்பகுதியாகும்!

அப்பூதியடிகள் போன்று....அடையாளத்தை நிலை நிறுத்த அன்னதான மடங்களும்,....அனாதை விடுதிகளும்....மருத்துவ சாலைகளும் அமைத்தவர்கள்  வெகு சிலரே! ஆணவம் அகன்ற நிலையில்... தனது அடையாளத்தை...அடக்கி வாசித்து....திருநாவுக்காரசரின் அடையாளத்துக்குள் மறைந்து ...சமூகப் பணிகளை முன்னெடுத்தார்!

எனினும் நாவுக்காரசரை விடவும் ...அவரது அடையாளமே....இன்னும் வாழ்கின்றது!

சி;எ உண்மைகளை....நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில்...நமது சமூகத்தில் பெரும் முன்னேற்றத்தை....நாம் எதிர்பார்க்க முடியாது!

பெருமளவிலான பணக்கையிருப்பு எம்மிடமிருந்தும்.....போரின் வடுக்களினால்   பாதிக்கப்படட....உறவுகள்...பெண்கள்...குழந்தைகள்...அனாதைகள் என...எல்லோரையும் கை விட்டு விட்டுத்....தனி மனித அடையாளங்களை நிலை நிறுத்தவே முனைந்தோம்! இதைச் செய்தவர்கள் சாதாரணமாக மனிதர்கள் அல்ல! எமது சமூகத்தைத் துயரங்களிலிருந்து...தூக்கி விடப் புறப்படடவர்கள்! தனி மனித அடையாளங்கள்...சமூக முன்னேற்றத்துக்கு...இங்கே உதவவில்லை!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

நன்றி....மல்லிகை வாசம்!

Link to comment
Share on other sites

6 hours ago, புங்கையூரன் said:

நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

Link to comment
Share on other sites

41 minutes ago, மல்லிகை வாசம் said:

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

வழிமொழிகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

இந்த  தாக்குதலும் 

துவேச அதிகரிப்புக்கூட

உண்மையில் தானாக  வந்தததா??

வரவழைக்கப்பட்டதா?? என்ற  கேள்வியும் இல்லாமலில்லை.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, உடன் சூழல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அடையாளத்தை முன்னிறுத்துவது தனியன்களாக இல்லாமல் கூட்டாக ஒரு இலக்கை அடைவதற்கும், அல்லது ஒரு குழுவோடு தம்மை அடையாளப்படுத்தி இயங்கவும் உதவுகின்றது. அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இனமாக ஒன்றுபட்டாலும் இன்று அடையாளச் சிக்கலில் மாட்டுப்பட்டு உள்ளனர். கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான். 

உலகில் உள்ள வளங்கள் பல்கிப் பெருகியுள்ள மனித இனத்திற்குப் போதாது என்பதால் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுவர்களும் அடையாளங்களைச் சுமந்துதான் தமது இருப்பைப் பேண முயல்கின்றன. எனவே அடையாளம் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பைத் தக்கவைத்து கொள்ளவேண்டுமானால் இன்னொரு சமூகத்தை அடக்குமுறை செய்யவேண்டும் அல்லது அடக்குமுறைக்கு எதிராக போராடவேண்டும். 

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான்

 

 

On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது;  
ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

 

கிருபன், மேலே நீங்கள் எழுதிய கருத்துகளையும், எனது தலைப்பான பதிவையும் மீண்டும் ஒரு முறை நன்கு வாசித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்த கருத்துக்கும், நீங்கள் கொடுத்த பதிலுக்குமான முரண்பாடு நன்கு புரியும். 😊

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச அளவில் அல்லது இனம், மொழி, மதம், ஆண், பெண் என்ற பாரிய பாகுபாட்டின் அடிப்படையில் நான் எனது ஆரம்பப் பதிவை எழுதவில்லை. எனது பதிவின் நோக்கம் எவ்வாறு ஓர் தனி மனிதனானவன் தன்னுடன் உறவாடுவோரின் / தொடர்பாடுவோரின் அடையாளத்தை / தனித்துவத்தைப் நன்கு புரிந்துகொண்டு அவற்றை மதித்து நடப்பதன் மூலம் தான் தொழிற்படும் தளங்களாகிய குடும்பம், வேலைத்தளம், கல்விச்சாலை, வழிபாட்டு இடங்கள் ஏனைய சிறு சமூக அமைப்புகளில் (இது யாழ் இணையம் போன்ற சமூக மன்றங்கள் / வலைத்தளங்களுக்கும் பொருந்தும்!) நேர்மறையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கோடிட்டுக் காட்டுவது தான்.

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச, அரசியல், சமூக அளவிலான உலகப்பார்வை தேவையான ஒன்று என்பது மறுப்பதற்கு இல்லை. இந்த விடயங்களில் தேடலும், அறிவும் ஓர் தனி மனிதனுக்குத் தேவை தான். ஆனால் இந்த விவகாரங்களில் அவனது கட்டுப்பாடு (control) அல்லது செல்வாக்கு (influence) மிகக் குறைவாகவே இருக்கும். தனி ஒருவனின் சக்திக்கு மீறியது. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட அவன் தினமும் தொழிற்படும் தளங்களில் அவனால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி-பிள்ளைகள் இடையான புரிந்துணர்வையோ அல்லது ஓர் வகுப்பறையில் ஆசிரியர்-மாணவன்-மாணவர்கள் இடையேயான புரிந்துணர்வையோ சொல்லலாம். இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

அந்த அளவுக்கு உயர்ந்த குறிக்கோள் எனக்கில்லை, கிருபன். 😁 

உலக அரசியல் அதற்கு இடம்கொடுக்காது. எனினும், அப்படி ஒரு கனவு கண்டு கனவோடு மட்டும் நின்றுவிடாது, மேலே கூறியபடி சிறு அளவிலேனும், நமது சக்திக்குட்பட்ட வகையில் சக மனிதரைப் புரிந்து மதித்துப் பழகினால் நமக்கு ஒரு குறையும் வரப்போவதில்லையே! தற்போது இருப்பதை விட சிறிய முன்னேற்றம் கண்டாலும் அது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான வெற்றி தானே! 😊

On 2/8/2019 at 9:46 AM, மல்லிகை வாசம் said:

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

இந்தப் பதிவை பல தடவைகள் வாசித்திருந்தேன். ஆனாலும் அடையாளம் என்பது மிகவும் சிக்கலான சொல். திரியை வேறு திசையில் நகர்த்த முனையவில்லை. எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் அதே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

21 hours ago, கிருபன் said:

எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் தே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

அடையாளம் என்பது எளிமையான விடயம் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இயற்கையான அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் என்றால் அது பிறப்பினலும் வாழும் சூழலினாலும் கட்டியமைக்கப்படுவது. வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

கண்டிப்பாக கிருபன். 😊 ஒரு தனிமனிதனின் அடையாளம் என்பது கால ஓட்டத்தில் பல்வேறு பரிணாமங்களில் மாறக்கூடியது தான்.  ஆகவே, தான் தொடர்பாடும் / உறவாடும் சக மனிதர்களில் மட்டுமல்ல தன்னிலும் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு நடப்பவன் கூட்டுறவான, ஒத்திசைவான ஒரு சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறான் என்பது எனது கருத்து.

இருந்தாலும் கூட, அடையாளம் என்ற சொல் ஆன்மிகப் பார்வையில் மேலே புங்கையூரான் சொன்னது போல ஆழமான பொருளுடையது. 'நான் என்பது என் ஆத்மா' என்று முழுமையாகத் தெளிவு பெற்றவன் ஞானி ஆகிறான். அவன் சக மனிதர் மற்றும் அனைத்து உயிரினங்களில் தன்னைக் காண்கிறான். அவ்வாறு தெளிவு பெறாத நாம் உலக வாழ்வெனும் மாயையில் சிக்கிப் போராடுகிறோம், குழம்புகிறோம். நான் மேலே கூறிய மாற்றங்களை மேலும் புரிந்து கொண்டு, உலகியலில் செயற்பட இந்த ஆன்மிகப் பார்வையும் அவ்வப்போது கைகொடுக்கிறது. யோகா, தியானம் என்பவை சிறு உதாரணங்கள். 😊 ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி கிருபன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

 நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 

முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை.

அடையாளம் என்பது தனித்துவமானது. அனேகமானவர்கள் தமக்கான அடையாளத்தை அறியாமலேயே வாழ்வை முடித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிறப்பிற்குள்ளும் அந்தப்பிறப்பிற்கான இரகசியம் ஒளிந்திருக்கிறது அவற்றைப் பற்றி ஆழமாக அறிய முற்படுவதில்லை. அறிந்து கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக திகழ முடியும். அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

Link to comment
Share on other sites

5 hours ago, வல்வை சகாறா said:

அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

மிக நல்ல, மிக முக்கியமான கேள்வி அக்கா. 😊

உங்களுக்கு இது பற்றிய விளக்கம் அதிகம் தேவையிராது என நினைக்கிறேன். உங்களதுப் பிடித்த 'ஆன்மாவுடன் பேசுதல்' என்பதே மிகச்சுருக்கமான ஆனால் நேரடியான பதிலாக இருக்கும்! 😊

எனினும் மற்றோருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என்பதால் இது பற்றிய எனது பார்வையை இங்கு பதிய நினைக்கிறேன்:

நமது அடையாளத்தை / தனித்துவத்தை உணர்வதற்கு பல்வேறு தத்துவாசிரியர்களும், ஞானிகளும், ஆன்மீக நெறியாளர்ளும் பல்வேறு நெறிமுறைகளையும், விளக்கங்களையும் தந்து சென்றுள்ளனர். இவை மதங்கள், ஆன்மீக இயக்கங்கள், தத்துவ சமூகங்கள் மூலமாகக் காலம் காலமாக உலகெங்கும் வாழும் சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது / சொல்லப்படுகிறது. 

கடல் போன்ற விசாலமான இந்த விடயங்களின் சாராம்சம் 'உன்னை அறி' என்பது இற்றை வரை எனக்குள்ள புரிதல். பல்வேறு மதங்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் , மதங்களிலுள்ள நல்ல அம்சங்களாக இருப்பவை என்னவென்று பார்த்தால் 'நம்மை அறியும்' வழிமுறைகளை சடங்குகள், பிரார்த்தனைகள், விரதங்கள் மூலமாக மறைமுகமாக நம் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்தமை தான். மனச் சுத்தியுடன் விரதமிருந்து பிரார்த்தனை செய்யும் போது நமக்கு ஏற்படும் ஓர் தெய்வீக உணர்வு ஓர் சிறு உதாரணமாகும். எனினும் முறையற்ற, போலியான சில சடங்குகளால் தான் மதங்கள் மீதான விமர்சனம் எழுகிறது. இவற்றுக்கான காரணம் ஓர் மதம் தூய்மையான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டாலும், காலம் காலமாக உள்வாங்கப்பட்ட குப்பைகளாகும். எனவே இந்தக் குப்பைகளை மட்டும் விலக்கி நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிப்பது நமது அடையாளத்தை அறிய ஓர் வழியாக அமையும்.

அப்போ மத நம்பிக்கை இல்லாதோர் என்ன பண்ண? மதத்துக்கான மாற்று வழிகள் தான் தத்துவ சமூகங்கள், ஆன்மீக இயக்கங்கள் காட்டும் மார்க்கமாகும். எனினும், மதங்கள் போல் இவற்றின் மீதும் விமர்சனங்கள் உண்டு. எனவே இங்கும் நாம் சரியான நெறிமுறைகளை ஆராய்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையில் மேற்கூறிய எல்லா நெறிகளும், இயக்கங்களும் நம்மை நாமே உணர வழிகாட்டிகளாக இருக்கின்றன. விவேகானந்த சுவாமிகள் சொன்னது போல் "நதிகள் வேறு, ஆனால் அவை சென்று கலக்கும் சமுத்திரம் ஒன்றே". என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பதே எல்லா மதங்களின் அடிப்படையாகும். ஆன்மீகம் + கலாச்சாரம் = மதம். எனவே வெவ்வேறு கலாச்சாரங்களில் ஆன்மீக நெறி வெவ்வேறு மதங்களாக உருவெடுத்துள்ளது என்பது எனது கருத்து.

இந்த நெறிமுறைகள் ஆரம்பநிலையில் தன்னை அறிய முனைவோருக்குக் கைகொடுக்கலாம். எனினும் அனுபவம் அதிகமாக சுய விசாரணை செய்து நாமாகவே நமக்குள்ளேயே அந்தத் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சான்றோர் வாக்கு. தினமும் தியானம், பிரார்த்தனை, சுய விசாரணை இவற்றிற்குச் சிறிது நேரமாவது ஒதுக்குதல் நமது அடையாளம் பற்றிய தெளிவைத் தரும். அத்துடன் மேற்கூறிய ஏதாவது ஒரு நெறிமுறையும் கைகொடுக்கும். 

ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு நன்றி சகாறா அக்கா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் வாசிக்கவும் களைக்குதே மல்லிகைவாசம்.

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.