Jump to content

போலி அமெரிக்க பல்கலைக்கழகம்: 129 மாணவர்கள் கைது - இந்திய அரசு கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காபடத்தின் காப்புரிமை US GOVT

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்பதை தெரிந்தே பதிவு செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்திய மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கைது குறித்து மேலதிக தகவல்களை, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இந்திய அரசு கோரியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காபடத்தின் காப்புரிமை Getty Images

"மாணவர்களின் மரியாதை குறித்தும் நலன் குறித்தும் கவலைப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை இந்திய தூதர் சந்திக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என்றும் இந்திய வெளியுறவுத்துறையால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை பதிவு செய்ய வைத்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

"இதுதொடர்பான முழு விவரங்களையும், கைதாகியுள்ள மாணவர்கள் குறித்த அவ்வப்போதான தகவல்களையும், இந்திய அரசிடம் அளிக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களை உடனையாக விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பமின்றி நாட்டைவிட்டு வெளியேற்ற கூடாது என்று கோரியுள்ளோம்" என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ள வாஷிங்டனில் தொலைப்பேசி உதவி அழைப்பு எண் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா` செய்தி தெரிவிக்கிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்தியா, தங்களிடம் தகவல்களை கோரியிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் மேற்கொண்டு தகவல்களை வழங்கவில்லை.

அமெரிக்க அதிகாரிகளால் இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையல்ல. 2016ஆம் ஆண்டு குடிவரவு அதிகாரிகளால் போலியாக அமைக்கப்பட்ட வடக்கு நியூ ஜெர்சி என்ற பல்கலைக்கழகம் மூலம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய இந்த நடவடிக்கையில், ஃபர்மிங்கடன் பல்கலைக்கழத்தின் புகைப்படங்கள் அதன் வலைதளத்தில் பகிரப்பட்டிருந்தன அதில் மாணவர்கள் வகுப்புகளில் இருப்பது போன்றும், நூலகத்தில் படிப்பது போன்றும், புல்தரையில் அமெர்ந்திருப்பது போன்றும் புகைப்படங்கள் இருந்தன.

மாணவர்கள்படத்தின் காப்புரிமை Reuters

இளநிலைப்படிப்புக்கு 8,500 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும், முதுநிலை மாணவர்களுக்கு 11,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழகத்துக்கான முகநூல் பக்கமும், அதில் காலண்டர் நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.

கடந்த வாரம் வெளியான ஆவணங்கள்படி இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமையின் ரகசிய பணியாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த போலி பல்கலைக்கழக நடவடிக்கை 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்குள் மாணவ விசா மூலம் நுழைந்து அங்கேயே தங்கும் வெளிநாட்டு நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மிஷிகனில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இந்த மாணவர்களுக்கு இது சட்டவிரோதமான முறை என தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் வெளிநாட்டு குடிமக்களால் `பே டூ ஸ்கீமி`ற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் மாணவ விசாக்களை தக்க வைத்துக் கொள்ள போலியாக கல்லூரியில் பதிவு செய்வதே இந்த `பே டூ ஸ்கீம்` ஆகும்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-47106559

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மாணவர்கள் 129 பேர் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘F 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி‘F 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு.

அந்த வகையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை நாடடினர்.

இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இப்பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்.

மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர்.

இந்த நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் தங்கள் குற்றவாளிகள் இல்லை என வாதாடினர்.

இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,‘‘வகுப்புகள் ஏதும் நடைபெறாது, வகுப்புகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிந்தே இவர்கள், பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டு கட்டணம் செலுத்தினர். தவறான முறையில் மாணவர் என்ற அந்தஸ்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/49432

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.