Jump to content

விமானத்தில் வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி - அதிர்ந்த அதிகாரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
பயணியின் பையில் சிறுத்தை குட்டி - அதிர்ந்த அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார்.

அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்தது.

வழக்கமாக அவரை சோதனை செய்யும் போது, அவரது பையிலிருந்து வித்தியாசமான ஒலி வருவதை அதிகாரிகள் கேட்டனர்.

இதனை அடுத்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடை உள்ள சிறுத்தை குட்டி இருந்தது.

இவர் பாங்காக்கிலிருந்து சனிக்கிழமை இரவு சென்னை வந்திருக்கிறார்.

பயணியின் பையில் சிறுத்தை குட்டி - அதிர்ந்த அதிகாரிகள்படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச கடத்தல்காரர்களுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு நாற்பத்தி ஐந்து வயதான அந்த நபர் மழுப்பலான பதில்களை கூறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த சிறுத்தை குட்டி பலவீனமாக இருப்பதாகவும், அச்சத்தில் கத்துவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அக்குட்டிக்கு அதிகாரிகள் புட்டியில் பால் ஊட்டுவது போன்ற காட்சிகள் விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அந்த சிறுத்தை விடப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-47108451

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை... என்னத்துக்கு, கொண்டு வந்திருப்பார்?
இந்தப் புலிக்குட்டி... தாய்லாந்து சுங்கத்துறையில்... அம்பிடாமல், 
இவ்வளவு தூரம் பயணித்து... சென்னை சுங்கத்துறையிடம் மாட்டுப் பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.