Jump to content

பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

February 5, 2019

paris-1.jpg?resize=620%2C413

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஏ மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைத்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்.  மேலும் சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 paris-2.jpg?resize=300%2C168paris-3.jpg?resize=800%2C448paris.jpg?resize=300%2C168

 

http://globaltamilnews.net/2019/112254/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரீஸ் தீ விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்

  •  
பிரானசில் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் எட்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உள்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஆறு தீயணைப்பு வீரர்கள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மிக மோசமான நிலையில் உள்ளார்.

இந்த கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து வெளியேறிய தீப்பந்தங்களால் அங்கிருந்த ஏறத்தாழ 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து வேண்டுமென்றே யாரோ ஒருவரால் ஏற்பட்டிருக்கலாம் என்று பாரீஸை சேந்த சட்டப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரான்சில் தீ விபத்துபடத்தின் காப்புரிமை B MOSER

பாரீஸில் உள்ள ஏர்லங்கார் வீதியில் உள்ள இந்த 1970 காலகட்டத்தில் கட்டடத்தில் 12 மணிக்கு (ஜிஎம் டி நேரம்) இரண்டு தளங்களை தாண்டி தீ பரவ ஆரம்பித்ததால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற நேர்ந்தது

கட்டடத்தின் மேற்பகுதியில் தீ பிழம்பு காட்சிகளும், தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படிகளில் ஏறுவதும் தெரிந்தன.

போயிஸ் டி பௌலாக்னி பூங்காவிற்கு மிக நெருங்கியுள்ள இந்த சம்பவ இடத்தில் கூரையில் சிக்குண்டோரை மீட்பதற்கு சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் இந்த இடத்தை சென்றடைந்தபோது, உலக முடிவு கால நிலைமையை நாங்கள் எதிர்கொண்டதுபோல இருந்தது. சன்னல்கள் வழியாக பலர் உதவி செய்ய கூக்குரலிட்டனர் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

காயமடைந்தோரில் 6 பேர் தீயணைப்பு வீரர்கள் என்று பிரெஞ்ச் ஒளிபரப்பு நிறுவனமான பிஃஎப்எம்டிவி தெரிவித்தது.

இந்த கட்டடம் ஹெச் வடிவத்தில் இருந்ததால் அதன் முற்றம் வழியாக கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. எனவே, கட்டடத்தின் முன்புறத்தில் இருந்து ஏணிகள் மூலம்தான் தீயில் சிக்கியிருந்தோரை மீட்க முடிந்தது. தீயணைப்பு வீரர்களின் தொழில்முறை திறமையை இந்த சம்பவத்தில் பாராட்டியாக வேண்டும் என்று பாரீஸ் துணை மேயர் இம்மானுவெல் கிரகோரி, ராய்ட்டர்ஸ் நியூஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

பிரான்சில் தீ விபத்துபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இந்த தீயை அணைப்பதற்கு அவர்களின் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை என்பதால், இது மிகவும் சிக்கலான கடமையாக இருந்தது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடக்கம்

தீயால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பாரீஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ, உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபி காஸ்டானரோடு சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நகரின் மத்தியில் உள்ள பேக்கரியில் சில வாரங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெரியதொரு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/global-47131078

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.