Jump to content

தாத்தா ரீ.வி கொடுத்தாரு ; அப்பா சேற்றாப் பாக்ஸ் கொடுப்பார் ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா ரீ.வி கொடுத்தாரு; அப்பா செற்றாப் பாக்ஸ் கொடுப்பாரு' - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.!

us1.jpeg

தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

இந்தக் கூட்டங்களில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரம் கடுமையான கேள்விகளையும் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். மதுக்கடைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் இந்தக் கூட்டங்களில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலினுடன் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையும் பேசியது.

மஹிதா என்னும் அந்தக் குழந்தை, "ஸ்டாலின் தாத்தா வணக்கம்..” எனக் கூறியது. உடனடியாக குறுக்கிட்ட ஸ்டாலின் ``ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா” எனக் கூறினார். அவரின் நகைச்சுவை பேச்சைக் கேட்டு மக்கள் சிரித்தனர். இந்த வீடியோ வைரலானது. அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

ஆனால் இந்த ஸ்டாலினுக்கு அல்ல. அவரின் மகன் உதயநிதிக்கு நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் நேற்று உதயநிதி கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் குறைகூறி ஒரு பெண், “கலைஞர் ஆட்சியில் இலவச டி.வி., கொடுத்தாங்க. அப்போது கேபிள் தனியார்கிட்ட இருந்தாலும் குறைஞ்ச ரூபாயில நிறைய சேனல்களை பார்த்தோம். இப்போ அப்படி இல்ல. கேபிள் டி.வி., அரசு வச்சிருந்தும், கட்டணம் கூடிருச்சு. நிறைய சேனல்கள் தெரியல. செற்றாப்  பாக்ஸ் இருந்தான் சேனல்கள் தெரியும்ணு சொல்றாங்க” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உதயநிதி, “எங்க தாத்தா டி.வி., கொடுத்தாரு. எங்க அப்பா ஆட்சிக்கு வந்தா இலவச செற்றாப் பாக்ஸ் கொடுப்பாங்க.” என்றார். அவரின் பேச்சைக் கேட்டு கூட்டத்தில் இருந்த மக்கள் சிரித்தனர்.

https://tamil.thesubeditor.com/tamilnadu/10554-udhayanithi-stalin-funny-speech-in-tuticorin.html

டிஸ்கி :

உண்மையில் மனைவி அவரின்ட அம்மா வீட்டுக்கு போய்விட்டால் இந்த கணவர்மார் படும் அவஸ்தை இருக்கே .. அய்யோ சொல்லி மாளாது .. இது ஒரு சர்வதேச பிரச்னை .. இதற்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவிடுங்கப்பா .. 🤔 " நான் சமையலை சொன்னேன்.."😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

டிஸ்கி :

உண்மையில் மனைவி அவரின்ட அம்மா வீட்டுக்கு போய்விட்டால் இந்த கணவர்மார் படும் அவஸ்தை இருக்கே .. அய்யோ சொல்லி மாளாது .. இது ஒரு சர்வதேச பிரச்னை .. இதற்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவிடுங்கப்பா .. 🤔 " நான் சமையலை சொன்னேன்.."😎

 

உங்கள் ஃபிரிட்ஜ் பழுது என்றால் அதை திருத்தும்வரை உங்களுக்கு தற்காலிகமாக ஒரு ஃபிரிட்ஜ் தரலாம்.

உங்கள் வண்டி பழுது என்றால் அதை திருத்தும் வரை உங்களுக்கு தற்காலிகமாக ஒரு வண்டி தரலாம்.

மனைவி ஊருக்கு போனால் அதுக்காக நீங்கள் தற்காலிகமாக வேறொரு மனைவியை எதிர்பார்க்கக் கூடாது.......!  😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

உண்மையில் மனைவி அவரின்ட அம்மா வீட்டுக்கு போய்விட்டால் இந்த கணவர்மார் படும் அவஸ்தை இருக்கே .. அய்யோ சொல்லி மாளாது .. இது ஒரு சர்வதேச பிரச்னை .. இதற்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவிடுங்கப்பா .. 🤔 " நான் சமையலை சொன்னேன்.."😎

நயன்தாரா சும்மாதான் இருக்கிறாவாம் ....கேட்டு சொல்லட்டே? :cool:

nayanthara à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாத்தா ரீ.வி கொடுத்தாரு; அப்பா செற்றாப் பாக்ஸ் கொடுப்பாரு' - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.!

Bildergebnis für remote control gif

நான் அரசியலுக்கு வந்து... "ரிமோட் கொன்றோல்" தருவேன். - உதய நிதி. - 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.