Jump to content

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன? இது ஏன் நடக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இவா ஓண்டிவோரஸ் பிபிசி உலகச் சேவை
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன? ஏன் செய்யப்படுகிறதுபடத்தின் காப்புரிமை Getty Images

ஐ.நாவின் கணக்குப்படி, 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்.

உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு, பிறப்புறப்பின் வெளிபுறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளது.

பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் இன்று (பிப்ரவரி 6) அனுசரிக்கப்படுகிறது.

வயது வந்த பெண்கள், சிறுமிகளின் பிறப்புறப்பு சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது. சில சமயம் குழந்தைகளாக இருக்கும் போது சிதைக்கப்படுகிறது.

இதன் காரணமாக உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வரலாம்.

ஆப்ரிக்காவை சேர்ந்த பிஷாரா சேக் ஹமோ, "எனக்கு 11 வயது இருக்கும் போது என் பிறப்புறுப்பு சிதைப்புக்குள்ளாக்கப்பட்டது" என்கிறார்.

எனது பாட்டி என்னிடம், "ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானது என்று கூறினார்" என்கிறார் பிஷாரா.

ஆனால், என் பாட்டி எனக்கு சொல்லாத சில விஷயங்களும் உள்ளன. இதனால் மாதவிடாய் பாதிப்புக்கு உள்ளாகும். சீறுநீர்பை வாழ்நாள் முழுக்க பாதிப்புக்கு உள்ளாகும். வாழ்நாள் முழுக்க சுகபிரசவமே மேற்கொள்ள முடியாமல் போகலாம் என்கிறார் பிஷாரா ஷேக் ஹமோ.

இப்போது பிஷாரா பெண்பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பெண் பிறப்புறுப்பு சிதைவென்றால் என்ன?

என் கண்கள் கட்டப்பட்டன. நான் ஒரு நாற்காலியின் உட்காரவைக்கப்பட்டேம். என் கைகளும் கட்டப்பட்டன. என் கால்கள் விரிக்கப்பட்டன. பின்என் பிறப்புறுப்பின் வெளிபுற இதழ்களை ஊசிக் கொண்டு குத்தினர்.படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.

இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இது பெண்களை உடல்நல ரீதியாகவும், மனநல ரீதியாகவும் பாதிக்கும்.

இது பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்யப்படுகிறது.

பிபிசியிடம் பேசிய பிஷாரா எப்படி நான்கு பெண்களுடன் சேர்த்து நானும் பிறப்புறுப்பு சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டேன் என்பதை விவரித்தார்.

என் கண்கள் கட்டப்பட்டன. நான் ஒரு நாற்காலியின் உட்காரவைக்கப்பட்டேன். என் கைகளும் கட்டப்பட்டன. என் கால்கள் விரிக்கப்பட்டன. அதன் பின் என் பிறப்புறுப்பின் வெளிபுற இதழ்களை ஊசிக் கொண்டு குத்தினர்.

சில நிமிடங்களுக்கு பின், எனக்கு கடுமையான வலி ஏற்பட்டது. நான் கத்தினேன். திட்டினேன். ஆனால், யாரும் அழுகுரலை கேட்கவில்லை. நான் அங்கிருந்து எழ முயன்றேன். ஆனால், என்னால் முடியவில்லை.

இது பரிதாபகரமான ஒன்று. இது சுகாதாரமற்ற ஒன்றும் கூட. அவர்கள் ஒரே கத்தியை பல பெண்களுக்கு பயன்படுத்துவார்கள் என்கிறார்.

பிறப்புறுப்பு சிதைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அது பழக்கத்தில் இருக்கிறது என்கிறார்.

ஏன் இது பழக்கத்தில் உள்ளது?

Kenyan Maasai women raise their hands as they gather during a meeting dedicated to the practice of female genital mutilation on June 12, 2014, in Enkorika, Kajiado, 75km from Nairobi.படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு மதம் சார்ந்த மூடநம்பிக்கையும், பிற மூடநம்பிக்கைகளும்தான் காரணம். பெண்களை திருமணத்திற்கு தயார் செய்ய, ஆண்களின் உடலுறவு சுகத்தை அதிகரிக்கவென பல மூடநம்பிக்கைகள் இதனுடன் பின்னி பிணைந்துள்ளது.

பெண் பிறப்பு சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த பழக்கத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே கருதுகிறார்கள் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.

இந்த பழக்கமானது எங்கெல்லாம் உள்ளது?

இந்த பழக்கமானது ஆப்ரிக்கா முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது, பின் ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் இந்த பழக்கம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐரோப்பா, வட மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேறிய சில சமூகங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் உள்ளது.

யுனிசெஃப்பின் ஆய்வுப்படி ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.

பிரிட்டனில் இந்த பழக்கம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டாலும், இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

உகாண்டாவிலிருந்து வந்து பிரிட்டனில் குடியேறிய பெண்தான் முதல் முதலாக சட்டத்திற்கு புறம்பாக பெண் பிறப்புறுப்பு சிதைப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

https://www.bbc.com/tamil/global-47128223

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.