Jump to content

2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்: காலத்தை வரையும் தூரிகைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்: காலத்தை வரையும் தூரிகைகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை, மு.ப. 01:50Comments - 0

image_0ffc8eb0a2.jpgஉலக வரலாற்றில் சிந்தனையாளர்களுக்கு தனியிடம் உண்டு. அரசனுக்கு வால் பிடித்த சிந்தனையாளர்கள் முதல், அரசனைக் கேள்விகேட்ட சிந்தனையாளர்கள் வரை, எல்லா வகையிலுமான சிந்தனையாளர்களை உலகம் பார்த்திருக்கிறது.   

உலகின் திசைவழியைச் செதுக்குவதில், சிந்தனையாளர்களுக்குத் தனியிடம் உண்டு. சோக்கிரட்டீஸ் தொட்டு, மக்கியாவலி வரையானவர்களின் கதை ஒன்றானால், ரூசோ முதல் மார்க்ஸ் வரையானவர்களின் கதை இன்னொன்று.   

உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், சிந்தனையாளர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி, உலகையே புரட்டிய ரஷ்யப் புரட்சி என அனைத்திலும் சிந்தனைகளும் அதிலும் குறிப்பாகத் தத்துவத்தின் நடைமுறையும் முக்கியமானவையே.   

உலகில் வௌியுறவுக் கொள்கைகள் தொடர்பாக வெளிவரும் இதழ்களில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Foreign Policy சஞ்சிகையானது பிரதானமானது. 1970ஆம் ஆண்டு அமெரிக்க அரசறிவியலாளரும் ‘நாகரிகங்களிடையான மோதல்’ என்ற கருத்தாக்கத்தின் சொந்தக்காரனான சாமுவேல் ஹண்டிங்கனால் இச்சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.  

2010ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் உலகின் முக்கியமான 100 சிந்தனையாளர்களை Foreign Policy சஞ்சிகையானது பட்டியலிட்டு வருகிறது. அவ்வகையில் 2019ஆம் ஆண்டுக்கான 100 சிந்தனையாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.  

இப்பட்டியலை வெளியிடத் தொடங்கி, இவ்வாண்டுடன் பத்தாண்டுகள் முடிவடைகின்றன. அதை நினைவுகூர்ந்து, பத்துப் பிரிவுகளில் பிரிவுக்குப் பத்துப் பேராக 100 பேர் பட்டியல் இடப்பட்டிருக்கிறார்கள். இதில் உள்ள அனைவரையும் இப்பத்தியில் நோக்க முடியாவிட்டாலும் சில முக்கியமான நபர்களையும் அதற்கான காரணங்களையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.   

உலகின் பலவான்கள்  

இந்தப் பட்டியலின் முதலாவது பிரிவு, பலவான்கள் (The Strongman) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதன்மையான இடத்தை ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேக்கல் பெற்றுக் கொண்டுள்ளார். இந்தப் பட்டியலிடல் தொடங்கியது முதல், எட்டாவது தடவையாக இந்தப் பட்டியலில் (2017, 2018 நீங்கலாக) மேக்கல் இடம்பெறுகிறார்.   

இது, இரண்டு செய்திகளைச் சொல்கிறது. முதலாவது, வலுவின் மூலம், தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் ஒரு நாடாக ஜேர்மனி வளர்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கூட்டாக வைத்திருப்பதில் ஜேர்மனியின் பங்கு பெரிது. இவை இரண்டுக்காகவும் முதன்மையான இடத்தை மேக்கல் பெற்றிருக்கிறார். இன்னொரு வகையில், உலக விவகாரங்களில் அமெரிக்காவின் சரியும் செல்வாக்கை இது காட்டுகிறது.   

மூன்றாவது இடத்தில், அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜக் மா இருக்கிறார். இலத்திரனியல் வர்த்தகத்தின் மூலம், உலகளாவிய ரீதியில் பொருட்கள் விற்பனையை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் இவர்.   

அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஒன்லைன் வியாபாரத்தைத் தொடங்கி, இன்று யாருமே எட்டமுடியாத உயரத்தை, இவர் அடைந்துள்ளார். மேற்குலகம் தவிர்க்கவியலாமல் தங்களுக்கு வெளியிலானவர்களின் வெற்றிக் கதையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.   

நான்காவது இடத்தில், #MeToo இயக்கம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததோடல்லாமல், அது பற்றிய கலந்துரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.  

ஐந்தாவது இடத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டீன் லகார்ட் இருக்கிறார். இது, உலக விடயங்களில் குறிப்பாக, மூன்றாமுலக நாடுகளின் விடயங்களில், சர்வதேச நாணய நிதியத்தின் அசைக்கமுடியாத பிடியைக் காட்டுகிறது.   

 ஆறாவது இடத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியை, உறுதிப்படுத்துவதற்கான ஆணையாளர் மார்கரீட்டே வெஸ்டாகர் இடம்பெறுகிறார். கடந்தாண்டு, உலகின் தலையாய பல்தேசியக் கம்பெனிகளான அப்பிள், கூகிள், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதை சாத்தியமாக்கியமைக்காக, இவர் இப்பட்டியலில் உள்ளதாக Foreign Policy சஞ்சிகை சொல்கிறது.   

இது சொல்லாமல் சொல்லும் செய்தி என்னவெனின், முதலாளித்துவ விதிகளையே பெருமுதலாளிகள் மீறுகிறார்கள். கார்ல் மார்க்ஸ் எதிர்வு கூறியபடி, “சுறாக்கள் மீன்களைத் தின்று, திமிங்கிலங்கள்” ஆகின்றன. இது முதலாளித்தவ இயக்க விதிகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. இதனால், இதைத் தடுக்க நவதாராளவாதம், தாராளவாத ஜனநாயகத்தின் பேரால் போராடுகிறது.  

நாற்பது வயதுக்குள் நானிலம் போற்றும்   

இந்தப்பட்டியலில் கவனிக்க வேண்டிய இன்னொரு பிரிவு, 40 வயதுக்குள் உள்ள சிந்தனையாளர்கள் வரிசையாகும்.   

இவ்வாண்டுப் பட்டியலிலேயே, மிகவும் சுவையான பத்துப்பேரைக் கொண்ட பிரிவு இதுவாகும். இதில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா அன்டேன், பெண் உரிமைகளின் முக்கியமான குறிகாட்டியாக இருக்கிறார்.   

அதேவேளை, ஆறாவது இடத்தில் இருக்கும் அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கர், இந்தியத் தந்தைக்குப் பிறந்தவர்; மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். கத்தோலிக விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்தும் நாட்டில், இவர் இத்தகைய உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பது மாறிவரும் சமூகங்களையும் இவரது முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.   

இதற்கு மறுபுறத்தில், அதி வலது தீவிர நிலைப்பாட்டை உடைய 30 வயதில் நாட்டின் தலைவரான ஆஸ்திரியாவின் சான்சிலர் செபஸ்டியன் கூர்ஸ், ஐரோப்பாவில் அதிதீவிர வலதின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். 30 வயதில் நாட்டின் தலைவரான இவர், ஒருபுறம் இளையோரின் அரசியல் பங்கெடுப்பின் முன்னுதாரணமாகவும் மறுபுறம், அதிதீவிர வலது, குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாடுகள் இளந்தலைமுறையினரிடமும் உள்ளன என்பதன் குறிகாட்டியாகவும் உள்ளார்.   

நான்காவது இடத்தில், சவூதி அரேபியாவின் இளவரசர் முகமட் பின் சல்மான் இருக்கிறார். இவரும் முன்னையவருக்குச் சளைத்தவரல்ல.   

இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை, வடகொரியாவின் தலைவர் கிம் யொங்-உன் பெற்றுள்ளார். வடகொரியா, வௌியுறவுக் கொள்கையில் கைக்கொள்ளும் முதிர்ச்சியான செயற்பாடுகளுக்காக இவர் இடம்பெற்றுள்ளதாகச் சஞ்சிகை குறிப்பிட்டாலும், கிம் யொங்-உன் தனது செயற்பாடுகளால் மேற்குலகை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.   

முட்டாள், அறிவிலி என்று சில ஆண்டுகளுக்கு முன், மேற்குலக ஊடகங்களாலும் அமெரிக்க ஜனாதிபதியாலும் கேலிக்குள்ளாக்கபட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி, அவரைச் சென்று சந்திக்க வேண்டிய நிலையை நோக்கி, வௌியுறவுக் கொள்கையை நகர்த்தி வெற்றிபெற்றுள்ளார்.   

பாதுகாப்பின் காவலர்கள்   

உலகப் பாதுகாப்பின் முக்கியமான சிந்தனையாளர்களில் முதலிடம், ஈரான் இராணுவத்தின் உளவுச்சேவையின் தலைவர் குவாசிம் சுலைமானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பலவகைகளில் முக்கியமானது.   

முதலாவது, மேற்குலகப் பாதுகாப்புத் துறையின் தலைசிறந்த சிந்தனையாளராக ஈரான் இராணுவத்தில் ஒருவரைத் தெரிவுசெய்கின்றது என்றால் அந்தநபர் கொஞ்சம் விசேடமானவர் தான். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, ஈரானின் இரகசிய இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய இவரின் சுவடுகள், இன்று சிரியாவில் வலுவாக ஊன்றியுள்ளன. ஐ.எஸ்ஸின் தோல்வியைச் சாத்தியமாக்கியதில் இவரின் பங்கு பெரிது.   

இதே வரிசையில், இரண்டாம் இடத்தில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் ஐந்தாவது இடத்தில் அமெரிக்க விமானப்படை முன்னெடுக்கும் விண்வெளிப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டமான SpaceX இன் தலைவரும் உள்ளார்கள்.   

அதேவேளை, ஏழாவது இடத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய ஆலோசகர் விளாடிஸ்லாவ் சுர்கோவ் இருக்கிறார். நவீன சமூக வலைத்தள உலகில் நெருக்கடிகள், தடைகள், இருட்டடிப்புகளைத் தாண்டி, கடத்த வேண்டிய செய்தியைக் கடத்தும் வித்தை தெரிந்தவராக இவர் அறியப்படுகிறார். இன்று நவீன ‘சைபர்’ யுத்தத்தில் ரஷ்யா வகிக்கும் முதன்மைப் பாத்திரத்தில், இவரின் அடையாளம் தவிர்க்க இயலாதது.   

பாபா ராம்தேவ்: கைதேர்ந்த வியாபாரி  

image_07b250c274.jpg2019ஆம் ஆண்டுக்கான சிந்தனையாளர்கள் பட்டியலில், மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்த பெயர் இந்தியாவின் கோர்ப்பரேட் சாமியார்களில் ஒருவரான ‘பதஞ்சலி யோகா’ புகழ் பாபா ராம்தேவ். இவர் பொருளாதாரமும் வியாபாரமும் என்ற பிரிவில் ஏழாவது சிந்தனையாளராகப் பட்டியலிடப்பட்டு இருக்கிறார். இவரைப் பற்றி Foreign Policy சஞ்சிகை என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

‘பாபா ராம்தேவ், இந்தியாவின் நன்கறியப்பட்ட அதிகாரம்மிக்க மனிதர்களில் ஒருவர். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் தனது ஆயுர்வேத ஒப்பனைப் பொருட்களின் சாம்ராஜ்ஜியம் மூலமும் இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தின் ஆரோக்கியத்தை வணிகமாக்கியவர். அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவருக்கும் பி.ஜே.பிக்கும் இருக்கும் உறவு மிகவும் நெருக்கமானது. இவ்வாண்டு தேர்தலிலும் இவரது செல்வாக்கும் மில்லியன் டொலர்கள் பெறுமதியான செல்வமும் பாதிப்பைச் செலுத்தும். இவரது பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். ஒருநாள் இந்தியாவின் அதியுயர் பீடத்தில் இவர் அமரக்கூடும்’   

“பழங்குடிகளின் மூலிகை அறிவைத் தேடி விற்கும் அயோக்கியன்” என்று இந்திய நீதிமன்றம் இவரைக் கண்டித்திருக்கிறது. இவரது மோசடிகள் தனியே ஒரு கட்டுரை எழுதுமளவுக்குப் பெரியவை. இதன் முரண்நகை என்னவென்றால், இந்தியாவில் நன்கறியப்பட்ட ஆன்மீகவாதி நல்ல வியாபாரியாகப் பொருளாதார சிந்தனையாளராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார்.  

இவர் மக்களை ஏமாற்றுகிறரா, மதம் மனிதர்களை ஏமாற்றுகிறதா என்ற கேள்விக்கான பதிலை, உங்களிடமே விட்டு விடுகிறேன். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2019ஆம்-ஆண்டின்-சிந்தனையாளர்கள்-காலத்தை-வரையும்-தூரிகைகள்/91-229173

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.