Jump to content

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன்

E.Saravanapavan.jpg

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை எமது மக்கள் நிராகரித்தார்கள். 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் மாற்றுக் கட்சிகளை அவர்கள் நிராகரித்தார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மாற்றுக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கின. ஆனால், களத்தில் நின்ற எமது மக்கள், மாற்றுக் கட்சிகளைத் தோற்கடித்தன. இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.

விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டுவந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார்கள். கூட்டமைப்பில் இருந்தவர்கள் பலரும் அதனை அன்றே எதிர்த்தார்கள்.

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது எவரினது சொல்லையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார்” – என்று தெரிவித்தார்.

 

http://athavannews.com/தமிழ்-மக்களின்-செல்வாக்க/

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம்.

2 hours ago, கிருபன் said:

வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை

சரவணபவனின் உளறலில் எத்தனை முரண்பாடு!
2வது, 3வது, ..... பிழைகளையும் சொல்லியிருக்கலாமே.


அரசியல் சூனியமான சரவணபவன் அரசியல் பற்றி கதைப்பது "குரங்கின் கைப் பூமாலை" போலத் தான்.

தமிழின படுகொலைகாரர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டுவதே சரவணபவன் செய்த ஒரேயொரு சாதனை. 

 

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் .....உள்ளுராட்சி தேர்தலில் தெரியவில்லையோ அண்ணருக்கு ..
பொறுங்கள் அடுத்த தேர்தல் சொல்லும் .......
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் நீங்கள் எதைத்தான் சரியாகச் செய்துள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

9 hours ago, போல் said:

 

தமிழின படுகொலைகாரர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டுவதே சரவணபவன் செய்த ஒரேயொரு சாதனை. 

 

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

யாழ் மக்களுக்கு அவைகளை புறக்கணிக்கச் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கு எதிர்கடை இல்லை என்கிற துணிவு அவரை இப்படி பேச வைக்கிறது ஆனால் எல்லா நேரமும் அவர்களுக்கான காலமாய் இருக்காது விக்கினேஸ்வரனுக்கு அரசியல் தெரியாமல் இருக்கலாம் ஆனால் மக்களின் விருப்பு வாக்கில் முன்னணியில் இருந்தவர் .

3 minutes ago, thulasie said:

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

யாழ் மக்களுக்கு அவைகளை புறக்கணிக்கச் செய்யுங்கள்.

அது என்ன வகையான உணவு பொருள்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டுவந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார்கள்.

தன்ர தலைமைக்கும் அது தெரியாது என்று ஒத்துக்கொள்றார்!

Link to comment
Share on other sites

19 minutes ago, ஏராளன் said:

தன்ர தலைமைக்கும் அது தெரியாது என்று ஒத்துக்கொள்றார்!

தங்களுக்கு தெரிந்த ஒன்று,  கூட்டமைப்பிற்கு தெரியாமல் போனது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையாக காட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, thulasie said:

தங்களுக்கு தெரிந்த ஒன்று,  கூட்டமைப்பிற்கு தெரியாமல் போனது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையாக காட்டுது 

கூட்டமைப்ப சொல்லல துளசி, அதன் தலைமையை சொன்னேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

Cake

 

1 hour ago, thulasie said:

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

cake மட்டும்தான் சிங்களவர்களின் உற்பத்தி பொருள்கள் ?

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

 

cake மட்டும்தான் சிங்களவர்களின் உற்பத்தி பொருள்கள் ?

சிங்களவரின் உற்பத்திப் பொருட்கள் களத்தில் கருத்துக்களையும் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா....? 

Link to comment
Share on other sites

3 hours ago, thulasie said:

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

நீங்கள் அதை தானே செய்கிறீர்கள் போல இருக்கு!
தெளியுது! தெளியட்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

சிங்களவரின் உற்பத்திப் பொருட்கள் களத்தில் கருத்துக்களையும் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா....? 

சிங்களவரின் உற்பத்திப் பொருள்களில், கேக்கும் ஒன்று.

சுவைத்துப் பாருங்கள், யாழில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... சரவணபவன் என்பவர்,  
தனது,  வளர்ந்த மகளுக்கு....  ஜனாதிபதி  மைத்திரி பாலாவை....
தனது வீட்டிற்கு கூப்பிட்டு.. கேக் வெட்டி...  "கும்மி"  அடித்தவர்.
இதைப்  பார்த்த பிறகு.... மக்களிடம், செல்வாக்கு குறையவில்லை என்று சொல்வது.. வேடிக்கையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

சிங்களவரின் உற்பத்திப் பொருள்களில், கேக்கும் ஒன்று.

சுவைத்துப் பாருங்கள், யாழில்.

சிங்களவரின் உற்பத்தி பொருள்களில் கேக்கு தானா உங்களுக்கு கிடைத்தது சுவைத்துப்பார்க்க....... 😉 

Link to comment
Share on other sites

கடந்த உள்ளூராட்சி தேர்த்தலில் ஈபிடிபியுடனும் , கஜேந்திரன் பொன்ம்பலத்துடனும் சேர்ந்தே  நகரசபைகளின் ஆட்சி அமைக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதை எப்படி இவர் இலகுவாக மறந்து விட்டார்?? 

Link to comment
Share on other sites

11 hours ago, MEERA said:

சிங்களவரின் உற்பத்தி பொருள்களில் கேக்கு தானா உங்களுக்கு கிடைத்தது சுவைத்துப்பார்க்க....... 😉 

அதில் என்ன சந்தேகம்.....?:103_point_down:

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... சரவணபவன் என்பவர்,  
தனது,  வளர்ந்த மகளுக்கு....  ஜனாதிபதி  மைத்திரி பாலாவை....
தனது வீட்டிற்கு கூப்பிட்டு.. கேக் வெட்டி...  "கும்மி"  அடித்தவர்.
.


 

கேக் வெட்டுவது, சாப்பிடுவதற்கு.

கும்மியடிப்பதற்கு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:


 

கேக் வெட்டுவது, சாப்பிடுவதற்கு.

கும்மியடிப்பதற்கு அல்ல.

அட நான் இவ்வளவு நாளும் மாறி நினைத்துகொண்டு இருந்துவிட்டன்  நன்றி அரிய விளக்கத்துக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.