Jump to content

ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

jamal-kashogi-egnas-720x440.jpg

ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை!

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை பற்றி விசாரிக்கும், துருக்கியின் திறனை சவுதி அரேபியா மிக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகே அங்கு சென்று விசாரிப்பதற்கு துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 2 ஆம் திகதி, கஷோக்கி சென்றபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய ஊடகவியலாளராக அவர் கருதப்பட்டார்.

இவ்வாறான கொலைச் சம்பவம் ஒன்று இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இதில் இளவரசர் தொடர்புபடவில்லை என்றும் சவுதி முகவர்கள் சிலர் கஷோக்கியை கொலை செய்ததாகவும் அந்தநாட்டு அதிகாரிகள் தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தனர். இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சவுதி, அதில் 5 பேருக்கு மரண தண்டனை கோரி வருகிறது.

பல சவுதி அதிகாரிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தநாட்டு மக்களை துருக்கிக்கு வெளியேற்ற சவுதி மறுத்து வருகிறது.

ஊடகவியலாளரின் கொலை குறித்து சர்வதேச மனித உரிமை விசாரணையை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் எக்னஸ் கலாமார்ட், ஜனவரி 28ம் திகதியில் இருந்து பெப்ரவரி 3ஆம் திகதிவரை துருக்கிக்கு சென்று ஆராய்ந்துள்ளார்.

“சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு கஷோக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்று முதல்கட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சவுதி அரேபியா, கொலை இடம்பெற்ற இடத்திற்கு துருக்கி விசாரணையாளர்களை செல்வதற்கு அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதாக்கியது.

ஒக்டோபர் 2ஆம் திகதி கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்த போதும், ஒக்டோபர் 15 ஆம் திகதியே துணைத் தூதரகத்திற்குள் நுழைய துருக்கி அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

அத்துடன் ஒக்டோபர் 17ஆம் திகதியே அவரது குடும்பத்திடம் சென்று விசாரிக்க முடிந்தது. இது முக்கியமாக தடயவியல் விசாரணையை பாதித்ததாக அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்த “பெரும் கவலைகளை” எழுப்புவதாக எக்னஸ் கலாமார்ட் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஜமால்-கஷோக்கி-கொலை-விவகா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.