Jump to content

யாழில் மாணவன் மீது, "பகிடி வதை" தாக்குதல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

attacktype4803-720x450.jpg

யாழில் மாணவன் மீது தாக்குதல்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன்  பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் குறித்த மாணவன், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://athavannews.com/யாழில்-மாணவன்-மீது-தாக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இவன்கள் மாறவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகள். பகிடிவதை என்கிற பெயரில் சக மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் கொடூர குணம் கொண்ட விலங்குகள். விலங்குகள் கூட இவர்களைப்போல தனது சக விலங்கினைக் கொடுமைப்படுத்துவதில்லை.

இந்த அநியாயத்திற்கு இந்த மிருகங்கள் வைக்கும்  பெயர், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதாம்.

1998 இல் என்று நினைக்கிறேன். பேராதனையில் பிரகாஷ் எனும் மாணவனை பகிடிவதை என்கிற பெயரில் கொன்றுவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிய மிருகம் இன்னும் அங்கேதான் இருக்கிறது. பிரகாஷ் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவன் கொழும்பில் வசதியாக வாழ்ந்துவந்ததும், குறுகிய காலத்திலேயே அவன் சீமா எனப்படும் இங்கிலாந்து கணக்காளர் சோதனைகளை முடித்திருந்ததும்தான்.

பகிடிவதையின்பொழுது அவனை டிப்ஸ் அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். உடல்நிலை முடியாமலிருக்கிறது என்று அவன் சுருண்டு விழவும் சூழ்ந்துகொண்டு கால்களாலும் கைகளாலும் அடித்திருக்கிறார்கள். மயக்கமான அவன் வைத்தியசாலையில் உயிரிழந்திருக்கிறான். முன்னின்று நடத்திய மிருகம் வெளிநாடொன்றிற்குத் தப்பியோட, ஏனைய இருவரும் பிடிபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இவ்வாறே பார்த்தீபன் எனும் பொறியியல்ப் பீட மாணவனும் கரண்ட் ஷொட் எனப்படும் கரடுமுரடான சுவரில் முழங்கைகளில் மட்டுமே நிற்கச் சொல்லிவிட்டுக் கால்களைத் தட்டிவிடும் பகிடிவதையில் சுகயீனமுற்று கோமாவரை சென்றதும் நடந்தது.

பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும் நடக்கும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கேட்கவோ யாருமில்லாததினால், தொடர்ந்தும் நடக்கிறது.

மொரட்டுவை, கொழும்பு பல்கலைக் கழகங்களில் இவர்களின் கொட்டம் அடக்கப்பட்டு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதையை பகிடியாக செய்தால் அது வேதனை தராதா?!

Link to comment
Share on other sites

6 hours ago, ragunathan said:

காட்டுமிராண்டிகள். பகிடிவதை என்கிற பெயரில் சக மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் கொடூர குணம் கொண்ட விலங்குகள். விலங்குகள் கூட இவர்களைப்போல தனது சக விலங்கினைக் கொடுமைப்படுத்துவதில்லை.

இந்த அநியாயத்திற்கு இந்த மிருகங்கள் வைக்கும்  பெயர், ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதாம்.

உங்கள் கருத்துடன் 100% உடன்படுகிறன்!

6 hours ago, ragunathan said:

பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும் நடக்கும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கேட்கவோ யாருமில்லாததினால், தொடர்ந்தும் நடக்கிறது.

பேராதனையில இப்பவும் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்தும், பரு ஹாட்லி கல்லூரியில் இருந்தும் சென்று எஞ்சினீரிங் படிக்கும் காடையர்கள் பகிடிவதையில் காடைத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடமும் எல்லை மீறிய எஞ்சினீரிங் மாணவ காடையர்கள் சிலர் மீது விசாரணைகள் நடைபெறுகின்றன.

பெயர் விபரங்கள் உள்ளன. அவற்றை வெளியிடுவது முறையல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளெல்லாம் படிச்சு என்னத்தை சாதிக்கப்பாேகுதுகள்? இவ்வளவு படித்தும் எப்படி வாழவேண்டும் என்ற பண்பற்றவர்கள். பெற்றாேரும் கற்பித்த ஆசான்களும் வெட்கி தலைகுனிவதாேடு தம்மை வெளிப்படுத்தவும் தயங்குவர். புது மாணவருக்கு வழிகாட்டவேண்டியவர்கள் இப்படி கேவலமாய், இதுகள் என்ன பட்டம் பெறப்பாேகுதுகள்?  சகமாணவரை வேட்டையாடுதுகள்.

Link to comment
Share on other sites

4 hours ago, satan said:

இதுகளெல்லாம் படிச்சு என்னத்தை சாதிக்கப்பாேகுதுகள்? இவ்வளவு படித்தும் எப்படி வாழவேண்டும் என்ற பண்பற்றவர்கள். பெற்றாேரும் கற்பித்த ஆசான்களும் வெட்கி தலைகுனிவதாேடு தம்மை வெளிப்படுத்தவும் தயங்குவர். புது மாணவருக்கு வழிகாட்டவேண்டியவர்கள் இப்படி கேவலமாய், இதுகள் என்ன பட்டம் பெறப்பாேகுதுகள்?  சகமாணவரை வேட்டையாடுதுகள்.

100% உண்மை!

தற்போது பேராதனையில எஞ்சினீரிங் படிக்கும் 2ம், 3ம், 4ம், வருட மாணவ காடையர்கள் பலரால் நடைபெறும் பகிடிவதை காடைத் தனத்துக்கு பெற்றோர்களும், யாழ் இந்துக் கல்லூரி, பரு ஹாட்லி கல்லூரி ஆசிரியர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் அறிமுகம் (Induction)   மட்டும் போது. உடல் உள பாதிப்புக்களை தரத்தக்க பகிடிவதைகள் (Ragging ) சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. அதை எவரும் செய்யக் கூடாது. புதிய மாணவர்களும் அச்சமின்றி பகிடிவதைக்கு 'நோ' சொல்லிவிட வேண்டும். 

Image result for Ragging

Image result for Ragging

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.