Jump to content

கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம்

மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:28 Comments - 0

‘வெளியே வந்து பாருங்கள்... போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார்.   

உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்கங்கள் எதுவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.   

image_7330660250.jpg

வீதியால் போகின்ற போது, வீதிச் சமிக்ஞை சந்திகளில், தெருமுனைகளில், சனக் கூட்டத்துக்குள் நம்மிடம் கையேந்துகின்ற பெண்கள், வயோதிபர்கள், குடும்பஸ்தர்களைத் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.   

‘பசிக்கின்றது ஏதாவது தாருங்கள்’ என்று நமக்குப் பின்னே வருகின்ற சின்னஞ் சிறார்களின் குரல்கள், இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இயந்திரமயமான வாழ்வும் ‘நமக்கு ஏனிந்த வேலை’ என்கின்ற எண்ணமும் அந்த மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல்ச் செய்து விடுகின்றன.   

நாட்டில் பொதுவாகவே, பல தேசிய முக்கியத்துவமிக்க விடயங்கள், எப்போதுமே பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசமைப்பு, சட்டவாக்கங்கள், பெரும் ஊழல்கள், கொலைகள், கொலைக் குற்றச்சாட்டுகள், தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற எத்தனையோ விடயங்களைப் பற்றிக் கருத்துகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.  பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், ஆட்சியதிகாரத்துக்காகப் பெருந்தொகை பொதுப் பணமும் செலவிடப்படுகின்றது.   

ஆனால், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். புள்ளிவிவரங்களுக்குள் உள்ளடங்காத இன்னும் எத்தனையோ பேர், வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருப்பதாகவும் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் ஊடாக, அரசாங்கம் பிரசித்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற சமகாலத்திலேயே, எந்த வருமானமும் இன்றி, அடிப்படை வசதிகள் இன்றி, வாழவும் தெரியாமல் மாழவும் முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள் பற்றிக் கவனிக்க வேண்டியுள்ளது.   

அதற்காக, மேற்குறிப்பிட்ட தேசிய மட்ட விவகாரங்கள் எல்லாம் நமக்கு அவசியமில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, உண்பதற்கு உணவும் அடிப்படை வசதிகளும் இருக்கின்ற மனிதன்தான் இனப்பிரச்சினைத் தீர்வு, அரசமைப்பு, தேர்தல், தேசியப் பிரச்சினைகள் பற்றிச் சிந்திப்பான். தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அடுத்த வேளை உணவு என்ன, எங்கே போவது, யாரிடம் இரந்து கேட்பது என நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் அமெரிக்காவில் யார் ஆட்சி செய்தால் என்ன, இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவன் எதைப் பற்றியுமே சிந்திக்க மாட்டான்.   

அதாவது, வயிறு நிரம்புகின்ற பிரஜைதான், நாட்டின் நடப்பு நிலைவரங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற மனோநிலையைப் பெறுவான். எனவே, ‘போதும் போதும்’ என்று சொல்லி, சிலபோதுகளில் அளவுக்கு அதிகமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தாராகிய நடுத்தர, மேல் நடுத்தர, மேற்தட்டு மக்களே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய தார்மீகக் கடமையைக் கொண்டிருக்கிறார்கள்.   

எல்லா நாடுகளையும் போல, இலங்கையிலும் கூட, பெரும்பகுதி செல்வம் என்பது அரசியல்வாதிகள், வர்த்தகப் புள்ளிகள் உள்ளடங்கலான மேற்தட்டு, உயர் நடுத்தர வர்க்கத்தினர் இடையேதான் குவிந்து காணப்படுகின்றது. நாட்டின் மொத்த வருமானத்தில், ஏழைகள், கீழ்நடுத்தர மக்களுக்குச் சென்று சேர்கின்ற தொகை என்பது மிகக் குறைவாகும். சொற்ப அளவான மக்களுக்கு அதிக வருமானமும் அதிகமான மக்களுக்கு சொற்ப வருமானமும் கிடைக்கின்ற சமமற்ற தன்மை என்பது, உலகப் பொது ஒழுங்காகும்.   

இலங்கையில் தனிநபர் வருமானமும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்திருக்கின்றது என்று அரசாங்கமும் மத்தியவங்கியும் சொல்வதை மறுப்பதற்கில்லை.   

புள்ளிவிவரத் திணைக்களத்தை மேற்கோள்காட்டும் மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2010ஆம் ஆண்டில் இருந்த தனிநபர் வருமானம், 2,808 அமெரிக்க டொலர்களாகும். இது, 2017ஆம் ஆண்டு 3,800 டொலரைத் தாண்டி விட்டது. இப்போது அண்ணளவான தனிநபர் வருமானம் 4,000 அமெரிக்க டொலர் எனத் தரவுகள் குறிப்பிடுகின்றன.   

image_697cf2787a.jpg

இன்று நடைமுறையிலுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி பார்த்தால், இலங்கையின் தனிநபர் வருமானம் என்பது ஏழு இலட்சங்களாகும். அப்படியாயின், மாத வருமானம் 58,000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும். இது எத்தனை பேருக்கு கிடைக்கின்றது என்பது சிந்தனைக்குரியது.   

உண்மையில், தனிநபர் வருமானம் சுமார் 4,000 அமெரிக்க டொலர் எனக் கூறப்படுவது ஒரு சராசரியான மட்டமாகும். அதன்படி, 4,000 அமெரிக்க டொலருக்கு அதிக தனிநபர் வருமானம் பெறுவோரும் அதேபோல் அதைவிடக் குறைவாக வருமானம் உழைப்போரும் இருக்கின்றனர் என்பதே இதன் உள்ளர்த்தமாகும்.   

ஆனாலும், இலங்கையில் பட்டதாரி தகுதியுடன் இருக்கின்ற இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்களின் மாதச் சம்பளம் கூட, 58 ஆயிரத்தை விடக் குறைவாகும். பதவிநிலை உத்தியோகத்தர்கள், மேலதிகாரிகளே அவ்வளவு சம்பளத்தைப் பெறுகின்றனர். அவர்களில் பலருக்கு, நடுத்தர வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பொருட்களின் விலை அதிகரிப்பும் ஆடம்பரச் செலவுகளும் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த இலட்சணத்தில், ஏழைகளின் நிலைமை எவ்வாறிருக்கும் என்று நினைக்கவே முடியாதுள்ளது.   

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற இலங்கையர் (அது பற்றிய முக்கிய தரவுகள் இப் பத்திக்கு அருகில் குறிப்பிடப்பட்டுள்ளன) ஒரு முஸ்லிமாக, தமிழராக, சிங்களவராக யாராக இருப்பினும், அவரது மாத வருமானம் இலங்கையின் தனிநபர் வருமானக் குறிகாட்டி சொல்வது போல், ஏழு இலட்சமாக இல்லை என்பதே கசப்பான நிதர்சனமாகும்.   

நிரந்தர வருமானம் இல்லாத ஏழைக் குடும்ப‍ங்களின் தலைவர்கள், தலைவிகள் இதைவிடக் குறைவாகவே உழைக்கின்றனர். நாள்சம்பளத் தொழிலாளர்கள் 2,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர். இருந்தபோதிலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்கு அது ‘யானைப்பசிக்கு சோளப் பொரியாகவே’ அமைந்து விடுகின்றது.   

4,000 அ. டொலர் பெறுவோருக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்ற போது, 400 அ.டொலரும் வருமானமுமில்லாத மக்களின் வாழ்வு எப்படியிருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை.   
இலங்கையில் வறுமையைக் குறைப்பதற்கு அரசாங்கங்களும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் பாரிய பங்களிப்பைச் செய்திருப்பதையும் அது சிறப்பான வெற்றியைத் தந்துள்ளதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.   

அந்தவகையில், இலங்கையின் வறுமை 4.1 சதவீதமாகக் கணிசமாகக் குறைவடைந்துள்ளது மகிழ்ச்சியே. அத்துடன், 2020ஆம் ஆண்டில், தனிநபர் வருமானத்தை 4,350 அமெரிக்க டொலராக அதிகரிக்க மத்திய வங்கி திட்டமிடும் அளவுக்கு, மக்களின் வருமானம் அதிகரிக்கச் செய்யப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியதே.   

ஆனால், இலங்கையில் தனிநபர் வருமானம் அதிகரித்த காலங்களில், பொருட்களின் விலையில் பன்மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டு, மக்களின் கொள்வனவுச் சக்தி குறைவடைந்திருக்கின்றது என்பதும், தனிநபர் வருமான அதிகரிப்புகள் கணிசமான ஏழை மக்களின் வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை (வருமானத்தை) அதிகரிக்கச் செய்யவில்லை என்பதும், அடிக்கடி உணரப்படும் விடயங்களாகும். இதுதான் இங்கு கரிசனைக்கு உரியதாகின்றது.   

இலங்கையில் பொதுவான அடிப்படையில், தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரித்திருக்கின்றது என்பதையும் வறுமை குறைவடைந்திருக்கின்றது என்பதையும் வறிய குடும்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது என்பதையும் மறுத்துரைக்கவில்லை.   

இருப்பினும், இந்தத் திட்டங்கள் சென்றடையாத மக்கள் கூட்டமும் இருக்கின்றார்கள் என்பதையும் புள்ளிவிவரத் தரவுகளுக்குள் உள்ளடங்காத ஏழைகளும் இருக்கின்றார்கள் என்பதையும் இன்னும் இந்த வறுமையொழிப்பு முழுமைத்துவம் பெறவில்லை என்பதையுமே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.   

மத்திய வங்கி வெளியிட்ட இலங்கையின் பொருளாதார, சமூகப் புள்ளிவிவரத் தொகுப்பின் பிரகாரம், இலங்கையில் எல்லா இனங்களுக்கு மத்தியிலும் வறுமை இருக்கின்றது. பெருந்தோட்டத்தில் ஒப்பீட்டளவில் வறியவர்கள் அதிகம் என்றாலும், நகரம், கிராமம் மற்றும் பெருந்தோட்டங்களில் காணப்படும் வறுமை சதவீதத்துக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை.   

வறுமை குறைவடைந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்ற போதும், நாம் எத்தனையோ பிச்சைக் காரர்களை, வாழ நாதியற்றவர்களை இப்போதும் காண்கின்றோம்.   

உண்பதற்கு உணவற்ற குடும்பங்களை, பெண் பிள்ளைகளைக் கரைசேர்க்க உதவி தேடித் திரியும் தாய்மார்களை, மருந்து வாங்குவதற்குக் கூடப் பணமில்லாத தந்தைமார்களை, அணிய ஆடையில்லாத சிறார்களை ஒவ்வொரு நாளும் கடந்து செல்கின்றோம். ஆனால் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.   

எனவே, வறுமை ஒழிப்பு என்பது, அர்த்தபுஷ்டியுள்ளதாக இருக்க வேண்டும். தேசிய அளவிலான விவகாரங்களில் காட்டுகின்ற அதே முக்கியத்துவத்தை, ஏழை மக்கள் விடயத்தில் காட்டுவதும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதும் அரசாங்கத்தினதும் வல்லமையுள்ள ஏனைய மக்களினதும் தார்மீக பொறுப்பாகும்.   

இலங்கையில் வறுமை: முக்கிய குறிப்புகள்

இலங்கையில் வறுமை ஒழிப்புத் திட்டம், கோட்பாட்டு அடிப்படையில் வெற்றி அளித்துள்ளதாகவே கூறலாம். ஆனாலும், இன்னும் இத்திட்டங்கள் எல்லாம், சென்றடையாத இலட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் என்பதற்கும், பொது விலைமட்டத்தின் அதிகரிப்பும் வாழ்க்கைச் செலவும் கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரையும் ஒருவித செயற்கைத் தனமான வறுமையை நோக்கி நகர்த்த முனைகின்றது என்பதற்கு நாமே வாழும் அத்தாட்சிகளாகின்றோம்.    

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இலங்கைப் பொருளாதார சமூகப் புள்ளிவிவரங்கள் (2017) தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டில் 1995ஆம் ஆண்டு 28.8 சதவீதமாகக் காணப்பட்ட வறுமையானது, 2013இல் 6.7 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது.   
2016ஆம் ஆண்டில் இது 4.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, மிதமான விதத்தில் பேணப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.   

அதேநேரம், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4,000 அமெரிக்க டொலரை அடைய முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவரின் சராசரி தனிநபர் வருமானத்தை 4,350 அ.டொலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

ஆனால், இதன் பலாபலன்கள் ஏழைகளைச் சென்றடையுமா என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.   

• மேற்படி அறிக்கையின் படி, நாட்டில் 4.1 சதவீதம் வறுமை என்றால் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வீடுகளில் வறுமை குடிகொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. (நிஜத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும்)   

• பெருந்தோட்டத்துறையில் அதிக வறுமை இருப்பதாகத் தெரிகின்றது. அதற்கடுத்த இடங்களைக் கிராமிய,  நகர்ப்புற ஏழைகள் பெறுகின்றனர்.   

• ஊவா, கிழக்கு மாகாணங்களில் (10 சதவீதத்துக்கும்) அதிக வறுமை காணப்படுகின்றது.   

• மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 19 சதவீதத்துக்கும் அதிகமான வறுமை என்று அறிக்கை இடப்பட்டுள்ளது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கண்டுகொள்ளப்படாத-மக்கள்-கூட்டம்/91-229266

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.