Jump to content

கிணற்றில் வீழ்ந்த பசுமாட்டை மீட்ட இளைஞர்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது.

வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர்.

எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டினை மீட்டனர்.

cow-3.jpgcow-2.jpgcow-1.jpgcow-5.jpgcow-4.jpg

https://newuthayan.com/story/16/கிணற்றில்-வீழ்ந்த-பசுமாட்டை-மீட்ட-இளைஞர்கள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

மாரிக் கிணற்றில் குதிச்சும் நல்ல வேளை தப்பினீர்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு சுவி அண்ணாவும் கிடைத்து இருக்க மாட்டார், துருச்சாமியும் கிடைத்து இருக்க மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

ஒரு அஞ்சு ரூபாப் பாத்திரத்திற்காக இந்தாள் ஐனூறு ரூபாவுக்கு கிணறு இறைக்க வைச்சிருக்குது! இங்க கவனம், பழக்க தோசத்தில குழாய்க்கிணறுக்குள்ள குதிச்சு விடாதையுங்கோ, பிறகு சக்சன் போட்டுத் தான் எடுக்க வேணும்! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

சுவியர்.... மண்ணெண்ணை தட்டுப்பாடான நேரத்தில...
மாரிக் கிணத்தை  இறைக்கச்  சொன்ன ஊர்ப் பெருசுகளை, என்ன செய்வது?
ஆமா.... அந்த நேரம்  கிணத்தை இறைத்த  செலவையும், பேணியின் விலையையும்.. அறிய மிக ஆவலாக உள்ளது. 🤪
அது கிடக்கட்டும்.. முன் பின் யோசியாமால், உங்கள் உதவும் மனப் பான்மையை மிக பாராட்டுகின்றேன்.
அது தான்.. மனிதம், சுவியர். 👍

Link to comment
Share on other sites

இளைஞர்கள் செயல் பாராட்டப்பட வேண்டும்!

 

8 hours ago, suvy said:

நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

உங்களுக்கு "உயிர்காக்கும் உத்தமர்" விருது வழங்கப்பட வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களின் பொறுப்பான செயல் மெய்ச்சப்பட வேண்டும்.

ஆனாலும், இது வரை யாழ் இணையத்தில், விபத்துகளும் கிணற்றுடன் சம்மந்தப்பட்ட விபத்துக்கள் , அநேகமாக தூர்வடைந்த அல்லது போதிய அளவு உயரமில்லாத  தடுப்பின்றி சிறு வயதினர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த விபத்துக்களும் செய்திகளாக அவ்வப்போது வந்த வண்ணமே என்ற நிலை இருக்கிறது.

இந்த செய்தியில் உள்ள கிணறு தூர்வடைந்து, தெருவோரம், பலரும் புழங்கும் இடத்தில்  இருக்கிறது.

இப்படிப்பட்ட கிணறுகள் பல இருக்கவே சந்தர்ப்பம் இருக்கிறது, ஏனெனில் யுத்தத்தின் காரணமான இடப்பெயர்வும், அழிவுகளும்.

இப்படிப்பட்ட கிணறுகளை  மூடுவதற்கு அல்லது பராமரிப்பில் கொணர்ந்து, உபயோகப்படுத்துவதற்கு, அந்தந்த கிராம மற்றும் உள்ளூராட்சி சபைகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதை அதிக பிரசங்கியாக இங்கு சொல்லவில்லை.

Public Health and safety யில் உதாரணமாக பின்பற்றப்பட கூடிய நாடு South  Africa.

இலங்கையைப் போன்ற திட்டமிட்ட, வன்முறையான பாரிய இனம், பொருள் அழிவுகள் இல்லாவிட்டாலும்,  கறுப்பின சமூகம் வன்முறை கலந்த பொருளாதார, கலாசார, நிறவெறி ஒடுக்குமுறைகளை  எதிர்கொண்டது.

ஆனாலும், South Africa இல் இப்போது கூட கொலை, கொள்ளை சாதாரணமானது. Public    Health and safety இல் யாரவது கைவைத்தால், அல்லது ஒழுங்கு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், சவுத் ஆபிரிக்கா அரச நிர்வாகத்தின் கோரப்பற்களுக்கு இரையாக வேண்டி வரும்.
 

 

Link to comment
Share on other sites

17 hours ago, suvy said:

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

மாரிக் கிணறு என்றால் நிறையத் தண்ணீர் இருக்குமே.....! அவ்வளவு தண்ணீருக்குள்ளும் குதித்த பயத்தில் வந்த அந்த மஞ்சள் நிறத்தண்ணீரை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் சுவி அவர்களே.? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

இளைஞர்களுக்கு  பாராட்டுக்கள்.......!

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

----- நானும் ஒரு பசு விழுந்து விட்டது. பின் சேலைகளால் அதன் வயிற்றில் கட்டி துலா கயிற்றில் இழுத்து கட்டி மேலிருந்து நண்பர்கள் இழுக்க காப்பாற்றப்பட்டது.

----- நல்லூரில் எனது பெரியம்மா தவறி கிணற்றில் விழ ஓடிப்போய் குதித்து தூக்கியது.

----- யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டு ஐயா ஒருநாள் போதையில் விழுந்திட்டார். அவரை காப்பாற்றியது.

------  என் உறவுக்கார அம்மா ஒரு பாழுங் கிணற்றில் விழுந்திருக்கிறார். அவரை தேடி திரிந்து இறுதியில் அங்கு கண்டுபிடித்து தூக்கியது.

----- தட்டாதெருவடியில்  அக்கா கிணத்தடியில் பாத்திரம் கழுவ பேணி பறந்து கிணற்றில் விழ அவ கலங்கி நிக்க, கலங்காதே என்று சொல்லி நான் சட்டென்று குதித்து அதை தேடி எடுத்து மேலே வர  நிண்டவர் போனவர் எல்லாம் துலைவானே  மாரி  கிணத்துல ஏண்டா குதித்தனி, பேணி போனால் போகுது என்று  கண்டபடி அக்காவுக்கும் எனக்கும் பேச கடைசியாய் சொன்னாங்கள் எங்கையாவது மிசின் பிடிச்சு கொண்டுவந்து இப்ப கிண்ணத்தை இறையுங்கோ என்று சுபமாக முடித்து வைத்தார்கள்.....!  

ம்......மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு.....!  😁

இளங்கன்று பயமறியாது.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

கிணற்றுக்கு எனக்கும் கூட நிறைய பொருத்தம் உண்டு.இங்கு பலருக்கும் இருக்கலாம் ஆனால் நான்தான் முந்திரி கொட்டை. அடியேனின்  செயல்கள் சில. .....!

 

இன்று முதல் உங்கள் கெளரவப் பெயர் கிணறு பாய்ந்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.