Jump to content

குருவும் சீடர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருவும் சீடர்களும்

குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை  குரு பார்த்தார், உடனே  குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம்.
இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான் கேட்டேன் குரு ஏன் முட்டாள் தனமாக செயற்பட்டார்?! ஒரு தடியினால் தேளை தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாமே! தந்தை சிரித்து கொண்டு சென்றுவிட்டார்.
சொல்லுங்க மக்களே நான் கேட்டது தப்பா?

Link to comment
Share on other sites

37 minutes ago, ஏராளன் said:

குருவும் சீடர்களும்

குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை  குரு பார்த்தார், உடனே  குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம்.
இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான் கேட்டேன் குரு ஏன் முட்டாள் தனமாக செயற்பட்டார்?! ஒரு தடியினால் தேளை தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாமே! தந்தை சிரித்து கொண்டு சென்றுவிட்டார்.
சொல்லுங்க மக்களே நான் கேட்டது தப்பா?

குரு கூறியது முழுவதும் தவறல்ல...

குருவின் சுபாவம் முட்டாள் தனமாக இருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உருவகக் கதை..... 

நீங்கள் தெரிந்து கொள்வதற்காக கேட்டீர்கள். நீங்களாக தெரிந்து கொள்ளட்டும் என்று அப்பா சென்று விட்டார். ....!

கதையில் குருவுக்கு தேளை முறையாக பிடிக்காத தெரியும். ஆனால் சீடனுக்கு இதன் மூலம் அவர் பாடம் நடத்துகிறார். நீ துன்பப்படுபவர்களுக்கு உதவும்போது சில சமயம்  அவர்களால் உன் மனசு காயப்படும்படி நேரிடலாம், அதுக்காக நீ மனம் தளரக்கூடாது., உதவுவதையும் நிறுத்த கூடாது. அறிவுள்ள சீடன் புரிந்து கொள்ளுவான்.(அட என்ற மூளையும் வேலை செய்யுதுபோல கிடக்கு)....!  😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவின் செயல் சரியானதே!

குரு படித்தவர் எனினும் மனிதர் தானே!

தடியைத் தேடும் கால் இடைவெளிகள்...அந்தத் தேள் இறந்து விடக்கூடும்....அல்லது அவரது மனம் மாறி விடவும் கூடும்!

அதனாலேயே உடநடியாகச் செயல் பட்டார்!😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மியாவ், சுவியண்ணா, புங்கையண்ணா, ரதியின் சிரிப்புக்கும்.
நானும் புரிந்து கொண்டேன் சுவியண்ணா மற்றும் புங்கையண்ணா, பகுத்தறிதல் என்ற ஒன்றால வாற கேள்விதான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா யோசித்திருப்பார், இந்தப் பெடிய எந்தக் குருவிடம் அனுப்பிறது என்று.

கையால், விரல்களால் பிடித்து தூக்கலாம், தடியால் அவ்வாறு செய்ய முடியாது அல்லவா ஏராளா என்று நிணைத்தவாறே நடந்திருப்பார். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம்ஸ்.

தவழ முயல்கிறேன்.

Link to comment
Share on other sites

நிஜத்தில் இப்படிப்பட்ட ஜீவகாரணியம் உள்ள குருவை பார்க்கமுடியாது. அதனால் கதையில் உருவாக்கி உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான் கேட்டேன் குரு ஏன் முட்டாள் தனமாக செயற்பட்டார்?! ஒரு தடியினால் தேளை தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாமே! தந்தை சிரித்து கொண்டு சென்றுவிட்டார்.
சொல்லுங்க மக்களே நான் கேட்டது தப்பா?

அது தானே வழமையில் தேளைக் கண்டால் காலில் போட்டிருக்கும் செருப்பையாவது கழட்டி அடித்துவிடுவோம்.
எப்படி கொட்டக் கொட்ட தேளை கரை சேர்ப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நிஜத்தில் இப்படிப்பட்ட ஜீவகாரணியம் உள்ள குருவை பார்க்கமுடியாது. அதனால் கதையில் உருவாக்கி உள்ளார்கள். 

ஒரு சில மனிதர்கள் மகான்களாக உயிர் நேயம் மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் தானே!

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தானே வழமையில் தேளைக் கண்டால் காலில் போட்டிருக்கும் செருப்பையாவது கழட்டி அடித்துவிடுவோம்.
எப்படி கொட்டக் கொட்ட தேளை கரை சேர்ப்பது?

எங்கட வீட்ட வருகை தரும் பெரும்பாலான விச உயிரிகள் (பாம்பு, சிலந்தி, தேள், மட்டத்தேள்) கொல்லப்படாது தூரமாக வெளியேற்றிவிடுவோம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஏராளன் said:

ஒரு சில மனிதர்கள் மகான்களாக உயிர் நேயம் மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் தானே

இருக்கலாம்.அவர்கள் மனிதர்களக இருப்பார்கள். மகான்கள் என்று பெயரெடுத்தவர்கள் அப்படி அல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.