Jump to content

உலகை எதிர்கொள்ள ‘பெண் குழந்தைகளை தயார்படுத்துவோம்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Editorial / 2019 ஜனவரி 12 சனிக்கிழமை, மு.ப. 09:39 Comments - 0 Views - 102

image_89db963ac4.jpgஇந்த உலகை, பெண் குழந்தைகளும் ஆள வேண்டும் என்பதே, பல பெற்றோரின் கனவாக அமைகிறது. உலகை எதிர்கொள்வதற்காக, சிறு வயதிலிருந்தே, பெண்கள் குழந்தைகளும் தயார்படுத்தப்படல் வேண்டும். ஒருவரில் தங்கியிருக்காது, தீர்மானிக்கும் திறன் இயல்பாகவே ஏற்படுத்திவிடல் வேண்டும். இதனை எத்தனை பெற்றோர் செய்கின்றனர். அல்லது எத்தனை பெற்றோர், ஒரு பெண் குழந்தையை ஆண் குழந்தைக்கு சமனாக வளர்க்கின்றனர்?   

இந்தச் சமூகமானது, பாலின சார்பு கொண்டதாகக் காணப்படுகின்றது என்பது, நாம் அறிந்ததே. இத்தகைய ஒரு சமூகத்தில், ஒரு பெண், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான பணியை முன்னெடுப்பது கடினமே. என்றாலும், இச்சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இந்த சமுதாயத்தில் சுய மரியாதையுடன் வாழவேண்டும் என்ற முக்கியமான பொறுப்பு, பெற்றோர்களிடத்திலேயே உண்டு. பெற்றோர்களாகிய உங்களது நடவடிக்கைகளும் வார்த்தைகளும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில், ஒரு வெற்றிப்பாதையை இட்டுச் செல்லவேண்டும்.   

 முன்மாதிரியாக இருங்கள்

பெண் பிள்ளைகளின் உடல் தொடர்பான அதிக கவனம் செலுத்துவதில், தாய்மாருக்கு அதிக பங்குண்டு. அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள். அவர்களுக்கு முன்னால், உங்கள் உடல் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதையோ அல்லது உங்கள் உடல் தொடர்பாக அதிகம் கேள்வியெழுப்புவதையோ தவிருங்கள். உங்கள் குழந்தை, உங்களைப் பார்த்தே விடயங்களைக் கற்றுக்கொள்வர்.   

நவநாகரிகத்தைப் பின்பற்ற விடுங்கள்

அவளுக்கு மனது அவளுக்கு என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றி, அவளுக்குள் இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு வழிவிடுங்கள். விளையாட்டுத்துறையோ, நாடகக்கலையோ, இசையோ எதுவாக இருந்தாலும் புதிய செயற்பாடுகளை முயன்று பார்ப்பதற்கு வழிசெய்யுங்கள். புதிய விடயங்களை முயல்வதன் மூலம், அவளது தன்னம்பிக்கை வளர்ச்சியடையும்.   

image_5576d12898.jpgதோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்

அவளது தார்மீகத்தை அதிகரிக்க, அவளைப் பாராட்டவேண்டும்; ஆனால், “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று பாராட்டுவதைக் குறையுங்கள். அவளிடமுள்ள நேர்மை, இரக்கம் போன்ற குணங்களைப் பாராட்டுங்கள். அதேபோன்று, உங்கள் உள் தோற்றத்திலும் நீங்கள் கவனமாக இருத்தல் அவசியம். அவள், எப்போதும் தாயைப் பார்த்தே பழக ஆரம்பிப்பாள்.   

அவளது முயற்சியைப் புகழுங்கள்

அவளுடைய இலக்கை அடைவதற்காக, அவள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் பாராட்டுங்கள். ஒரு விடயத்தில் அவள் தோல்வியடைந்துவிட்டாலும், அதை ஏற்றுக்கொண்டு, அவள் மீண்டும் முயன்று வெற்றியடைவதற்கான ஊக்கத்தை வழங்குங்கள்.   

மற்றைய பெண்கள் பற்றி குறைகூறாதீர்கள்

மற்றப் பெண்ணைப் பற்றி, அவளிடம் குறைகூறாதீர்கள்; உங்கள் வீட்டில், யாரும் அப்படிக் குறைகூறுவதற்குக் கூட இடமளிக்காதீர்கள். மற்றைய பெண்கள் பற்றிய கிசு கிசுகளை பேசுவதை நிறுத்திவிட்டு, ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, எவ்வாறான கஷ்டங்களை அனுபவிக்கிறாள், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் எவ்வளவு கடினமானது என, பெண்ணின் கடின உழைப்பைப் பாராட்டுங்கள்.   

அவளையும் பேச விடுங்கள்

இக்காலத்துக் குழந்தைகள், பல ஊடகங்களைப் பார்த்து, பல தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அவளுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்து, சில முக்கியமான சம்பவங்கள் குறித்து, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை, சாதாரணமாகக் கலந்துரையாடுங்கள். அவளுடைய மனதில் உள்ளது என்ன என்பதை வெளிப்படுத்த விடுங்கள். அவள் எதை நம்புகிறாளோ, அதற்காகப் போராடுவதற்கு, அவளுக்கு ஊக்கமளியுங்கள்.   

நீங்கள் அவளை நேசிக்கின்றீர்கள் என்பதை அவள் அறியவேண்டும்   

நீங்கள், அவள் மீது அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதை, அவள் அறிந்திருக்கவேண்டியது கட்டாயமாகும். அவளை நம்புங்கள், இது, அவளது சுய நம்பிக்கையையே மேலும் அதிகமாகும்.   

விமர்சனங்களின் முக்கியத்துவம்

சரியானது மற்றும் தவறானவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளும் விதமான விமர்சனங்களும் முக்கியமானதாகும். அவர்களது ஒவ்வொரு சாதனைகளையும் நீங்கள் பாராட்டுவதைப் போன்றே, அவர்கள் தவறு செய்யும் போது, அவற்றை திருத்தி, எது சரியானது என்பதையும் தவறானதைச் செய்தால் என்னவாகும் என்பதையும் விளங்கப்படுத்துங்கள். அவளுக்கு, நல்ல நடத்தைகளை உள்ளீர்ப்பது என்பது, மிகவும் முக்கியமானதாகும்.    

http://www.tamilmirror.lk/life/உலகை-எதிர்கொள்ள-பெண்-குழந்தைகளை-தயார்படுத்துவோம்/58-227860

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.