Jump to content

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்


Recommended Posts

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

 

Kokkilai-Map-300x200.jpgமுல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன.

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kokkilai-Map.jpghttp://www.puthinappalakai.net/2019/02/10/news/36320

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர்.

1 hour ago, nunavilan said:

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

6 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

Link to comment
Share on other sites

மூன்று மாதங்கள் போதாது , கடலுக்கால் பலம் காட்டுவதால் , piling வேலை செய்யவே குறைந்தது ஆறு மாதம் தேவை .. இரண்டு வருடம் தேவை இதனை நேர்த்தியாக கட்ட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

அந்த சீனத்து கொம்பனியிடம் contract கொடுத்தால் மூன்று மாதத்தில் முடிப்பார்கள்.

இலங்கையில் சீனாக்காரர் வேலை செய்வது குறித்து அறிந்திருப்பீர்கள்.

இந்த வகையில் சிறை கைதிகளை பயன்படுத்தி வேலை வாங்குவதால், சீனாவின் முயற்சிகளை, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் எதிர்க்க முடியாமல் மேலை நாடுகள் தடுமாறுகின்றன.

சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து பேசினாலும், கடூழிய சிறைத்தண்டனையின் அர்த்தம் என்ன என்றவுடன், உள்நாட்டில் செய்யலாம் வெளி நாட்டில் செய்யக்கூடாதா என்று கேட்க...  மேலே பேச முடியாமல் மனித உரிமை அமைப்புகள் பம்முகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

போற போக்கை பாத்தால் உவையள் கடன் வாங்காத இடமே இல்லைப்போலை கிடக்கு...
எண்டாலும் மாலைதீவிட்டை கடன் வாங்கியிருக்க மாட்டினம் எண்டொரு நம்பிக்கை எனக்கிருக்கு....:grin:

பிற்குறிப்பு: மாசிக்கருவாடு கடனுக்கு வாங்கினதெல்லாம் கடன் லிஸ்ற்லை வராது. 😎

Link to comment
Share on other sites

16 hours ago, nunavilan said:

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

ஆரம்ப பணிகளுக்கு மட்டும் 3 மாதம்  எண்டால் சரி. சராசரியாக இந்தமாதிரி ஒரு பாலத்தை நீண்ட கால உத்தரவாதத்துடன் கட்டுவதெண்டால் 2 முதல் 3 வருடம் செல்லும். நீங்கள் தொண்டைமானாறு பாலத்தை பார்த்தல் தெரியும் அது ஒரு 150 முதல் 200மீட்டர் நீள  பாலம். அதை கட்டி முடிக்க 20 மாதத்துக்கு கிடட முடிந்தது

12 hours ago, ஏராளன் said:

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் 3 மாதத்தில் முடிக்க முடியாது. இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் அதற்கு Piles , Pile caps  and  Abutments  concrete கொண்டுதான் கட்டிட வேண்டும். Piers and  bridge deck வேண்டுமானால்   இரும்பு கேடர் கொண்டு அமைக்கலாம்.

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

 

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Shanthan_S said:

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்களம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பகுதிகளை சிறுக சிறுக ஆக்கிரமித்து தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கு அடி நாதமாக இருக்கும் வடக்கு கிழக்கை இணைக்கும் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடிக் கொண்டு இருக்கும் போது இப் பாலம் பற்றிய செய்தி வருகுது. கண்டிப்பாக இது சிங்கள ஆக்கிரமிப்பை மேலும் வேகமாக முன்னெடுக்க செய்யும் ஒரு விடயம்.

வழக்கம் போல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அதை எதிர்க்கும் கட்சிகளும் தமக்குள் அடிபட்டு கொண்டு இதையும் கோட்டை விடப் போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

சிங்களம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பகுதிகளை சிறுக சிறுக ஆக்கிரமித்து தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கு அடி நாதமாக இருக்கும் வடக்கு கிழக்கை இணைக்கும் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடிக் கொண்டு இருக்கும் போது இப் பாலம் பற்றிய செய்தி வருகுது. கண்டிப்பாக இது சிங்கள ஆக்கிரமிப்பை மேலும் வேகமாக முன்னெடுக்க செய்யும் ஒரு விடயம்.

வழக்கம் போல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அதை எதிர்க்கும் கட்சிகளும் தமக்குள் அடிபட்டு கொண்டு இதையும் கோட்டை விடப் போகின்றனர்.

இது மட்டுமல்ல.. நயினாதீவுக்கு நடுக்கடலுக்குள்ளால்.. நல்ல தண்ணி போகப் போகுது. அதற்கான வேலை திட்டங்களும் நிகழ்கின்றன. அதோடு புங்குடுதீவின் முகப்பில் பெரிய புத்தர் அமர்ந்திட்டார். அதுவும் மிக விரைவில்.. நயினாதீவு நாக விகாரை பக்த கோடிகளின் வாழ்விடமாகும்.

சிங்களம் தனது ஆக்கிரமிப்புத் தேவைக்கு தேவையான அனைத்தையும்.. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் செய்து வரும் நிலையில்.. எம் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் ஊரில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு UNDP ஆல் வழங்கப்பட்ட 7 இலட்சம் வீட்டுத்திட்டத்தை கூட 3 இலட்சத்தோடு அரைகுறையாக முடித்துவிட்டு.. மிச்சத்தை ஆட்டையும் போட்டிருக்கிறார்கள்.. சொறீலங்கா அதிகாரிகள். 

இந்த நிலையில்.. இந்தப் பாலங்கள் எம் நிலத்தை நிரந்தரமாக சிங்கள மயமாக்கும் நோக்கின் செயலே ஆகும்.

சிங்கள பக்கம் எல்லாம்.. காணிகளின் விலை அசுர நிலையை அடைந்துள்ளது. குருணாகல்.. கேகாலை.. பொல்காவலை.. கண்டி.. என்று எல்லா இடமுமே காணிகளின் விலை அதிகூடிவிட்டது. 

ஆனால்.. தமிழர் நிலம் மட்டுமே... இப்போ.. எடுப்பார் கைப்பாவை போலாகிவிட்டது. அதனை சிங்களர்களும் இஸ்லாமியர்களும் ஆட்டையைப் போடத் துடிக்கிறார்கள். 

நாம் எம் மண்ணையும் உரிமைகளையும் கண் முன்னே இழந்து கொண்டிருக்கிறோம்..... வெறும் போலி வெளிநாட்டு மோகத்தினாலும்.. எம் போலி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டும். 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

இது மட்டுமல்ல.. நயினாதீவுக்கு நடுக்கடலுக்குள்ளால்.. நல்ல தண்ணி போகப் போகுது. அதற்கான வேலை திட்டங்களும் நிகழ்கின்றன. அதோடு புங்குடுதீவின் முகப்பில் பெரிய புத்தர் அமர்ந்திட்டார். அதுவும் மிக விரைவில்.. நயினாதீவு நாக விகாரை பக்த கோடிகளின் வாழ்விடமாகும்.

சிங்களம் தனது ஆக்கிரமிப்புத் தேவைக்கு தேவையான அனைத்தையும்.. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் செய்து வரும் நிலையில்.. எம் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் ஊரில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு UNDP ஆல் வழங்கப்பட்ட 7 இலட்சம் வீட்டுத்திட்டத்தை கூட 3 இலட்சத்தோடு அரைகுறையாக முடித்துவிட்டு.. மிச்சத்தை ஆட்டையும் போட்டிருக்கிறார்கள்.. சொறீலங்கா அதிகாரிகள். 

இந்த நிலையில்.. இந்தப் பாலங்கள் எம் நிலத்தை நிரந்தரமாக சிங்கள மயமாக்கும் நோக்கின் செயலே ஆகும்.

சிங்கள பக்கம் எல்லாம்.. காணிகளின் விலை அசுர நிலையை அடைந்துள்ளது. குருணாகல்.. கேகாலை.. பொல்காவலை.. கண்டி.. என்று எல்லா இடமுமே காணிகளின் விலை அதிகூடிவிட்டது. 

ஆனால்.. தமிழர் நிலம் மட்டுமே... இப்போ.. எடுப்பார் கைப்பாவை போலாகிவிட்டது. அதனை சிங்களர்களும் இஸ்லாமியர்களும் ஆட்டையைப் போடத் துடிக்கிறார்கள். 

நாம் எம் மண்ணையும் உரிமைகளையும் கண் முன்னே இழந்து கொண்டிருக்கிறோம்..... வெறும் போலி வெளிநாட்டு மோகத்தினாலும்.. எம் போலி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டும். 🙄

நாம் குடிபெயர ஆர்வம் காட்டுவதால், காணிகளை விற்க விரும்புகிறோம்.

பணம் அதிகமாக கொடுக்கக் கூடிய யாரும் வாங்கிக்கொள்கின்றனர்.

மறுபுறம் திரும்பி பணத்துடன் செல்லும் நம்மவர்களுடன் போட்டி போட முடியாது கொள்பிட்டி முதல், கல்கிசை வரை தமிழருக்கு விற்றுவிட்டு போகின்றனர்.

ஆகவே இது டிமாண்ட் அண்ட் சப்ளை தானே. 

அரசு பிளான்ரேசன் முறையில் பலாத்காரமாக குடியேற்றாமல் இருந்தால் போதும்.

 

Link to comment
Share on other sites

On 2/11/2019 at 2:13 PM, Nathamuni said:

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

அண்ணா நீங்கள் கூறுவதுபோல அதி நவீன இயந்திரங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த இயந்திரங்கள் பவிப்பதெண்டால் அந்த புரஜெக்ட் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும். இந்த மாதிரி 1km நீள பாலத்துக்கு இந்தமாதிரி கனரக நவீன இயந்திரங்களை கொண்டுவருவது மிகவும் நடை முறைச்சிக்கல் நிறைந்த  மற்றும் செலவு கூடின விடையம். நான் 2014 -2015 காலப்பகுதியில் கத்தார் நாட்டில் வேலை பார்க்கும்போது அங்கை இதுமாதிரி நவீன பிரிட்ஜ் டேக்கிங் மெஷின் பாவித்து தான் Doha மெட்ரோ லைன் கடினவங்கள். அது நீண்ட தடம் எண்ட படியால் இந்த மெஷினை பாவித்தார்கள். அதைவிட கத்தார் அரசாங்கத்துக்கு பணம் ஒரு பெரிய விடியும் இல்லை. இந்தமாதிரி மெஷின் மூலம் பிரிட்ஜ் டெக் மட்டும்தான் போட முடியும். பைல், பைல் cap, பியர்ஸ் மற்றும் abutment என்பன சாதாரண முறையில்  தான் கட்டிட வேண்டும். இதற்க்கு நீண்ட காலம் தேவை.

அண்ணா அடிப்படியில் நான் ஒரு பொறியியலாளன் இல்லை. நான் ஒரு கணிய அளவையியலாளன் (Quantity Surveyor). 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.