Jump to content

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்


Recommended Posts

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

 

Kokkilai-Map-300x200.jpgமுல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன.

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kokkilai-Map.jpghttp://www.puthinappalakai.net/2019/02/10/news/36320

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர்.

1 hour ago, nunavilan said:

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

6 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

Link to comment
Share on other sites

மூன்று மாதங்கள் போதாது , கடலுக்கால் பலம் காட்டுவதால் , piling வேலை செய்யவே குறைந்தது ஆறு மாதம் தேவை .. இரண்டு வருடம் தேவை இதனை நேர்த்தியாக கட்ட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

அந்த சீனத்து கொம்பனியிடம் contract கொடுத்தால் மூன்று மாதத்தில் முடிப்பார்கள்.

இலங்கையில் சீனாக்காரர் வேலை செய்வது குறித்து அறிந்திருப்பீர்கள்.

இந்த வகையில் சிறை கைதிகளை பயன்படுத்தி வேலை வாங்குவதால், சீனாவின் முயற்சிகளை, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் எதிர்க்க முடியாமல் மேலை நாடுகள் தடுமாறுகின்றன.

சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து பேசினாலும், கடூழிய சிறைத்தண்டனையின் அர்த்தம் என்ன என்றவுடன், உள்நாட்டில் செய்யலாம் வெளி நாட்டில் செய்யக்கூடாதா என்று கேட்க...  மேலே பேச முடியாமல் மனித உரிமை அமைப்புகள் பம்முகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

போற போக்கை பாத்தால் உவையள் கடன் வாங்காத இடமே இல்லைப்போலை கிடக்கு...
எண்டாலும் மாலைதீவிட்டை கடன் வாங்கியிருக்க மாட்டினம் எண்டொரு நம்பிக்கை எனக்கிருக்கு....:grin:

பிற்குறிப்பு: மாசிக்கருவாடு கடனுக்கு வாங்கினதெல்லாம் கடன் லிஸ்ற்லை வராது. 😎

Link to comment
Share on other sites

16 hours ago, nunavilan said:

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

ஆரம்ப பணிகளுக்கு மட்டும் 3 மாதம்  எண்டால் சரி. சராசரியாக இந்தமாதிரி ஒரு பாலத்தை நீண்ட கால உத்தரவாதத்துடன் கட்டுவதெண்டால் 2 முதல் 3 வருடம் செல்லும். நீங்கள் தொண்டைமானாறு பாலத்தை பார்த்தல் தெரியும் அது ஒரு 150 முதல் 200மீட்டர் நீள  பாலம். அதை கட்டி முடிக்க 20 மாதத்துக்கு கிடட முடிந்தது

12 hours ago, ஏராளன் said:

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் 3 மாதத்தில் முடிக்க முடியாது. இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் அதற்கு Piles , Pile caps  and  Abutments  concrete கொண்டுதான் கட்டிட வேண்டும். Piers and  bridge deck வேண்டுமானால்   இரும்பு கேடர் கொண்டு அமைக்கலாம்.

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

 

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Shanthan_S said:

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்களம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பகுதிகளை சிறுக சிறுக ஆக்கிரமித்து தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கு அடி நாதமாக இருக்கும் வடக்கு கிழக்கை இணைக்கும் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடிக் கொண்டு இருக்கும் போது இப் பாலம் பற்றிய செய்தி வருகுது. கண்டிப்பாக இது சிங்கள ஆக்கிரமிப்பை மேலும் வேகமாக முன்னெடுக்க செய்யும் ஒரு விடயம்.

வழக்கம் போல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அதை எதிர்க்கும் கட்சிகளும் தமக்குள் அடிபட்டு கொண்டு இதையும் கோட்டை விடப் போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

சிங்களம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பகுதிகளை சிறுக சிறுக ஆக்கிரமித்து தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கு அடி நாதமாக இருக்கும் வடக்கு கிழக்கை இணைக்கும் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடிக் கொண்டு இருக்கும் போது இப் பாலம் பற்றிய செய்தி வருகுது. கண்டிப்பாக இது சிங்கள ஆக்கிரமிப்பை மேலும் வேகமாக முன்னெடுக்க செய்யும் ஒரு விடயம்.

வழக்கம் போல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அதை எதிர்க்கும் கட்சிகளும் தமக்குள் அடிபட்டு கொண்டு இதையும் கோட்டை விடப் போகின்றனர்.

இது மட்டுமல்ல.. நயினாதீவுக்கு நடுக்கடலுக்குள்ளால்.. நல்ல தண்ணி போகப் போகுது. அதற்கான வேலை திட்டங்களும் நிகழ்கின்றன. அதோடு புங்குடுதீவின் முகப்பில் பெரிய புத்தர் அமர்ந்திட்டார். அதுவும் மிக விரைவில்.. நயினாதீவு நாக விகாரை பக்த கோடிகளின் வாழ்விடமாகும்.

சிங்களம் தனது ஆக்கிரமிப்புத் தேவைக்கு தேவையான அனைத்தையும்.. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் செய்து வரும் நிலையில்.. எம் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் ஊரில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு UNDP ஆல் வழங்கப்பட்ட 7 இலட்சம் வீட்டுத்திட்டத்தை கூட 3 இலட்சத்தோடு அரைகுறையாக முடித்துவிட்டு.. மிச்சத்தை ஆட்டையும் போட்டிருக்கிறார்கள்.. சொறீலங்கா அதிகாரிகள். 

இந்த நிலையில்.. இந்தப் பாலங்கள் எம் நிலத்தை நிரந்தரமாக சிங்கள மயமாக்கும் நோக்கின் செயலே ஆகும்.

சிங்கள பக்கம் எல்லாம்.. காணிகளின் விலை அசுர நிலையை அடைந்துள்ளது. குருணாகல்.. கேகாலை.. பொல்காவலை.. கண்டி.. என்று எல்லா இடமுமே காணிகளின் விலை அதிகூடிவிட்டது. 

ஆனால்.. தமிழர் நிலம் மட்டுமே... இப்போ.. எடுப்பார் கைப்பாவை போலாகிவிட்டது. அதனை சிங்களர்களும் இஸ்லாமியர்களும் ஆட்டையைப் போடத் துடிக்கிறார்கள். 

நாம் எம் மண்ணையும் உரிமைகளையும் கண் முன்னே இழந்து கொண்டிருக்கிறோம்..... வெறும் போலி வெளிநாட்டு மோகத்தினாலும்.. எம் போலி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டும். 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

இது மட்டுமல்ல.. நயினாதீவுக்கு நடுக்கடலுக்குள்ளால்.. நல்ல தண்ணி போகப் போகுது. அதற்கான வேலை திட்டங்களும் நிகழ்கின்றன. அதோடு புங்குடுதீவின் முகப்பில் பெரிய புத்தர் அமர்ந்திட்டார். அதுவும் மிக விரைவில்.. நயினாதீவு நாக விகாரை பக்த கோடிகளின் வாழ்விடமாகும்.

சிங்களம் தனது ஆக்கிரமிப்புத் தேவைக்கு தேவையான அனைத்தையும்.. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் செய்து வரும் நிலையில்.. எம் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் ஊரில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு UNDP ஆல் வழங்கப்பட்ட 7 இலட்சம் வீட்டுத்திட்டத்தை கூட 3 இலட்சத்தோடு அரைகுறையாக முடித்துவிட்டு.. மிச்சத்தை ஆட்டையும் போட்டிருக்கிறார்கள்.. சொறீலங்கா அதிகாரிகள். 

இந்த நிலையில்.. இந்தப் பாலங்கள் எம் நிலத்தை நிரந்தரமாக சிங்கள மயமாக்கும் நோக்கின் செயலே ஆகும்.

சிங்கள பக்கம் எல்லாம்.. காணிகளின் விலை அசுர நிலையை அடைந்துள்ளது. குருணாகல்.. கேகாலை.. பொல்காவலை.. கண்டி.. என்று எல்லா இடமுமே காணிகளின் விலை அதிகூடிவிட்டது. 

ஆனால்.. தமிழர் நிலம் மட்டுமே... இப்போ.. எடுப்பார் கைப்பாவை போலாகிவிட்டது. அதனை சிங்களர்களும் இஸ்லாமியர்களும் ஆட்டையைப் போடத் துடிக்கிறார்கள். 

நாம் எம் மண்ணையும் உரிமைகளையும் கண் முன்னே இழந்து கொண்டிருக்கிறோம்..... வெறும் போலி வெளிநாட்டு மோகத்தினாலும்.. எம் போலி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டும். 🙄

நாம் குடிபெயர ஆர்வம் காட்டுவதால், காணிகளை விற்க விரும்புகிறோம்.

பணம் அதிகமாக கொடுக்கக் கூடிய யாரும் வாங்கிக்கொள்கின்றனர்.

மறுபுறம் திரும்பி பணத்துடன் செல்லும் நம்மவர்களுடன் போட்டி போட முடியாது கொள்பிட்டி முதல், கல்கிசை வரை தமிழருக்கு விற்றுவிட்டு போகின்றனர்.

ஆகவே இது டிமாண்ட் அண்ட் சப்ளை தானே. 

அரசு பிளான்ரேசன் முறையில் பலாத்காரமாக குடியேற்றாமல் இருந்தால் போதும்.

 

Link to comment
Share on other sites

On 2/11/2019 at 2:13 PM, Nathamuni said:

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

அண்ணா நீங்கள் கூறுவதுபோல அதி நவீன இயந்திரங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த இயந்திரங்கள் பவிப்பதெண்டால் அந்த புரஜெக்ட் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும். இந்த மாதிரி 1km நீள பாலத்துக்கு இந்தமாதிரி கனரக நவீன இயந்திரங்களை கொண்டுவருவது மிகவும் நடை முறைச்சிக்கல் நிறைந்த  மற்றும் செலவு கூடின விடையம். நான் 2014 -2015 காலப்பகுதியில் கத்தார் நாட்டில் வேலை பார்க்கும்போது அங்கை இதுமாதிரி நவீன பிரிட்ஜ் டேக்கிங் மெஷின் பாவித்து தான் Doha மெட்ரோ லைன் கடினவங்கள். அது நீண்ட தடம் எண்ட படியால் இந்த மெஷினை பாவித்தார்கள். அதைவிட கத்தார் அரசாங்கத்துக்கு பணம் ஒரு பெரிய விடியும் இல்லை. இந்தமாதிரி மெஷின் மூலம் பிரிட்ஜ் டெக் மட்டும்தான் போட முடியும். பைல், பைல் cap, பியர்ஸ் மற்றும் abutment என்பன சாதாரண முறையில்  தான் கட்டிட வேண்டும். இதற்க்கு நீண்ட காலம் தேவை.

அண்ணா அடிப்படியில் நான் ஒரு பொறியியலாளன் இல்லை. நான் ஒரு கணிய அளவையியலாளன் (Quantity Surveyor). 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.