Jump to content

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்? -நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்? -நிலாந்தன்

February 10, 2019

george-fernande.jpg?zoom=3&resize=335%2C

கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள்.

ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு அஞ்சலி செலுத்தப்பட்டமை என்பது 2009ற்குப் பின்னரான இந்திய ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அவரவர் அரசியல் சமூக நோக்கு நிலைகளிலிருந்து ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்குள்ள ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் அவரைப் புகழ்ந்து அஞ்சலித்தார்கள். அதே சமயம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சனத்தோடு அணுகும் தரப்புக்களும் ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு உரிய மதிப்பைக் கொடுத்து அதே சமயம் விமர்சித்து அஞ்சலி செலுத்தினர்.இதில் குறிப்பாக முகநூற் பரப்பில் காணப்பட்ட அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளின் தொகுப்பு வருமாறு.

புலமையாளரும் சமூக அரசியற் செயற்பாட்டாளருமாகிய பேராசிரியர் ஆ.மார்க்ஸ் பின்வருமாறு கூறியிருக்கிறார்…….’எனக்கு அவருடன் ஒரு அனுபவம் உண்டு. 90களில் நிறப்பிரிகை குழுவினராகிய நாங்கள் பல ஈழ ஆதரவு சிறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து திருச்சியில் ‘புலம் பெயர்ந்த தமிழர் மாநாட்டை’ நடத்தினோம். அதில் பங்கேற்று ஈழத் தமிழ் ஏதிலியர்களுக்கான உரிமைகளை ஆதரித்துப் பேசியவர்களில் கெய்ல் ஓம்வேத், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஆகியோரும் இருந்தனர். எந்த நிதி உதவியும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் நடத்திய அந்தப் பெரிய மாநாட்டிற்கு அவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்து வந்தோம்.

எல்லோருக்கும் போடப்பட்டிருந்த ஒரு எளிய ஓட்டல் அறையில் தங்க வைத்தோம். அவருக்கு பயணப்படி என ஒரு குறைந்த தொகையை கவரில் போட்டு சற்றுக் கூச்சத்துடன் நீட்டினேன். அப்போது திருச்சியில் இருந்த ராஜன் குறையும் இருந்தார். ‘ஓ! அதெல்லாம் வேண்டாம். எனக்கு இலவச டிக்கட் வசதியெல்லாம் உண்டு. நீங்கள்தான் தங்கும் வசதியெல்லாம் செய்து தந்துவிட்டீர்கள்ர்களே.. இட்ஸ் ஆல்ரைட்… தாங்க்யூ…’ – என அவர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்து கண்களைக் கலங்க வைக்கிறது’

பி.பி.ஸி தமிழோசையில் பணிபுரிந்த ஊடகவியலாளர் எல்.ஆர்.ஜெகதீசன் ஜோர்ஜ் பெர்னான்டசை ‘வடநாட்டு வை.கோ’ என்று அழைக்கிறார். அவருடைய விமர்சனம் கலந்த அஞ்சலிக் குறிப்பின் ஒரு பகுதி வருமாறு………’தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார வலிமையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டையும் அதன் ஏழுகோடி தமிழ்மக்களையும் உண்மையிலேயே மதித்த, உளமாற நேசித்த வட இந்திய அரசியல் ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய மிகச்சிலர் வி பி சிங், பர்னாலா மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அதில் எஞ்சியிருந்த ஒற்றை மனிதரும் இன்று மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்திதான். பெர்ணாண்டஸின் அரசியலும் நம்மூர் வைகோ அரசியலைப்போன்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பால் உருவாகி பின்னர் திசைமாறி எங்கோ போய் எதிலோ முடிந்த அரசியல் பயணம். தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வடஇந்திய ஆளுமையும் மறைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை வட இந்திய ஆளுமைகளில் அப்படியானவர்கள் யார் என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்’

ஏறக்குறைய ஜெகதீசனைப் போலவே மற்றொரு சமூகச் செயற்பாட்டாளாராகிய கறுப்பு நீலகண்டனும் ஃபெர்னாண்டசை விமர்சனத்தோடு பின்வருமாறு அஞ்சலித்திருந்தார்……’ஒரு சோனியா காந்தி விதவையானதற்காக லட்சக்கணக்கனக்கானோர் இலங்கையில் விதவையாக வேண்டுமா?’ என சென்னை கடற்கரையில் நடைபெற்ற மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் அவர் கேட்ட தார்மீகமான மனிதார்த்தமான கேள்வி குஜராத் படுகொலை செய்த, முஸ்லீம்களை கேட்பாரின்றி கொலை செய்த இந்து பயங்கரவாதிகளை ஆதரித்தபோதே செத்துப்போனது…’

மற்றொரு அரசியற் செயற்பாட்டாளராகிய ஆழி செந்தில்நாதன்…….’ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர். சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த இராமேஸ்வரம் கோதண்டராம கோவில் அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர்.’ என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புக்களில் ஃபெர்னான்டஸை விமர்சிப்பவர்கள் கூட அவரை மதித்து அஞ்சலி செலுத்துமளவிற்கு அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது என்பதே இங்கு முக்கியமானது. அவருக்கு அஞ்சலி செலுத்திய வை.கோவும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள். அவருடைய வீடு எப்பொழுதும் அகதிகளுக்காகத் திறக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பர்மிய தீபெத்திய அகதிகள் அவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் அவருடைய வீட்டில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். தமிழகம் ஈழம் உள்ளடங்கலான பெருந்தமிழ்ப் பரப்பில் மதிப்போடு அஞ்சலிக்கப்படும் அளவிற்கு ஃபெர்னாண்டசின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

இதில் குறிப்பாக தமிழக மற்றும் ஈழச்செயற்பாட்டாளர்கள் ஃபெர்னான்டசுக்கு செலுத்திய அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றில் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் காணப்பட்டதற்காகப் போற்றப்படுவதைக் காணலாம். 1998ல் பெர்னாண்டஸ் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இடைமறிக்க வேண்டாம் என்று இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டதாகவும் இதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்று ஆயுதக்கப்பல்கள் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும் சநனகைக.உழஅ இணையத்தளம் எழுதியுள்ளது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ஒரு பாதுகாப்பு அமைச்சராக அவர் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு வெளியே வந்து ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்? அல்லது எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்க முடியும்? என்பதுதான்.

அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்னி மைய எழுச்சிக் காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை. வன்னியை மையமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படத் தொடங்கிய பின் அது யுத்தகளத்தில் பெரு வெற்றிகளைப் பெற்ற ஒரு காலகட்டம் இதுவாகும். இக்காலகட்டத்திலேயே அந்த இயக்கத்தின் மரபு ரீதியிலான படையணிகள் உலகத்தின் படைத்துறை வல்லுனர்களின் கவனிப்பைப் பெற்றன. அப்படையணிகளின் யுத்தகள சாதனைகள் வன்னியை ஓர் அதிகார மையமாக கட்டியெழுப்பின. அதன் விளைவே இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.
எனவே புலிகள் இயக்கத்தின் வன்னி மையக் காலகட்டத்தின் பேரெழுச்சிக் காலம் என்றழைக்கப்படும் காலமும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை என்பதனால் விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்ற வெற்றிகளோடு ஜோர்ஜ் ஃபெர்னான்டசைத் தொடர்புபடுத்தி சிலர் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக்கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் ஒரு தனி மனிதனின் நல்லிதயம் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்? ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ஃபெர்னான்டஸ் வழங்கிய ஆதரவு ஒரு தார்மீக ஆதரவா? அல்லது இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார் கொள்கைகளில் நெகிழ்வை ஏற்படுத்திய ஓர் ஆதரவா?
இக்கேள்விகளுக்கு விடை கூறவல்ல மிகச்சிலரே இப்பொழுது இப்பூமியில் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக வழங்கற் செயற்பாட்டிற்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனைப் போன்றவர்கள் வாயைத் திறக்கும் பொழுதே இது தொடர்பான உண்மைகள் வெளிவரும். அதுவரை ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் ஈழத்தமிழர்களுக்கு என்றென்றும் தமது தார்மீக ஆதரவை வழங்கினார் என்பதே இப்போதைக்கு உண்மையானதாகும். 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி ரெட்டிவ் – rediff.com இணையத்தளம் இதுதொடர்பாக எழுதியுள்ளது
1997ஆம் ஆண்டு பெர்னாண்டஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டில்லியில் ஒரு மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அதற்கு உட்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்தபடியால் பெர்னாண்டஸ் அந்த மாநாட்டை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தினார.; அம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் ‘தமிழீழம் தொடர்பாக இந்தியப் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதும்; அப்போராட்டத்தில் அவர்களைப் பங்காளிகள் ஆக்குவதும்தான.; ஏனெனில் அந்தப் போராட்டம் நீதியானது’ என்று பெர்னாண்டஸ் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் ஒன்று முன்னாள் ஸ்றீலங்க ராஜதந்திரி ஆகிய கல்யானந்த கொடகேயை மேற்கோள்காட்டி இருந்தது. ‘எல.ரி.ரி.க்கும் ஃபெர்னாண்டஸிற்கும் இடையிலான சரசம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலானது’ என்று கொடகே தெரிவித்திருந்தார். பாதுகாப்பு அமைச்சர்; ஃபெர்னாண்டஸ் தமிழ் மக்களுக்கு கதாநாயகனாக இருக்கலாம் ஆனால் கொழும்பிற்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அவர் ஒரு வில்லனாகவே இருக்கிறார் என்று ஸ்றீலங்கா அரசாங்கம் கூறியதாகத் தோன்றுகிறது’ என்று rediff.com இணையத்தளம் எழுதியுள்ளது.
ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் ஒரு தனி மனிதனாக அதுவும் வட இந்தியத் தலைவராக அவர் வழங்கிய ஆதரவை ஈழத்தமிழர்கள் எந்தளவிற்கு ஒரு கட்டமைப்பு சார் ஆதரவுத் தளமாக கட்டியெழுப்பினார்கள்? என்பதுதான். இக்கேள்வி எம்.ஜி.ஆரின் விடயத்திலும் பொருந்தும். தனிப்பட்ட நட்பும் நேசமும் புரிந்துணர்வும் தார்மீக ஆதரவும் வேறு. அதை நிறுவனமயப்படுத்தி ஒரு கட்டமைப்பு சார் செயற்பாடாக மாற்றுவது வேறு. இந்தியாவில் ஈழத்தமிழ் லொபி எனப்படுவது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? அதில் பெற்ற அடைவுகள் எவை? விட்ட பிழைகள் எவை? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.
தமிழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்திய மாநிலத் தலைநகரங்களிலும் தமிழ் லொபி எவ்வாறு செயற்பட்டது? அது நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாடாக இருந்ததா? அல்லது பெருமளவிற்கு தனிநபர்களில் தங்கியிருந்ததா? 2009ற்கு முன் அது எப்படிச் செயற்பட்டது? 2009ற்குப் பின்னிருந்து அது எப்படிச் செயற்பட்டு வருகின்றது? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமிழகத்திற்கு வெளியே எத்தனை இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன? தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுமுள்ள எத்தனை மனித உரிமை அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு வெளியே சிவில் சமூகங்கள் செயற்பாட்டு இயக்கங்கள் என்று கருதத்தக்க அமைப்புக்கள் எத்தனை அதை ஓர் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன?
ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் மகத்தானது. அது ஓர் அரசியல் தீர்மானம். அதற்குமப்பால் அது தமிழகத்தில் ஒரு பொதுசன அபிப்பிராயமாக திரட்டப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு வெளியே ஏனைய மாநிலங்களில் அது ஒரு பொதுசன அபிப்பிராயமாக அல்லது சிவில் சமூகங்களின் அபிப்பிராயமாக அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைச் செயற்பாட்டாளரின் அபிப்பிராயமாக திரட்சியுற்றுள்ளதா? ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ், எம்.ஜி.ஆர், நெடுமாறன், வை.கோ, தொல் திருமாவளவன், சீமான் போன்ற நட்பு சக்திகளை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஏன் ஒரு கட்டமைப்பாக நிறுவனமயப்படுத்த முடியவில்லை?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணவல்ல தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வுப் பார்வை தேவை. ஈழ-தமிழக உறவெனப்படுவது அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. ஆனால் அது எவ்வளவிற்கு எவ்வளவு அறிவுபூர்வமானதாக மாற்றப்படுகிறதோ அவ்வளவிற்கவ்வளவு பிராந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் வெற்றிகரமாகச் சுழியோட முடியும். அதைப் போலவே புதுடில்லியும் உட்பட ஏனைய மாநிலங்களை எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பில் ஈழத் தமிழர்களிடம் ஒரு கட்டமைப்பு சார் அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம். கற்பனைகளோடும் முற்கற்பிதங்களோடும் முடிந்த முடிபுகளோடும் பிராந்திய உறவுகளை மட்டுமல்ல அனைத்துலக உறவுகளையும் அணுக முடியாது. எனவே இதுவிடயத்தில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற பொருத்தமான ஆய்வொழுக்கங்களைக் கொண்ட சிந்தனைக் குழாம்களை ஈழத்தமிழர்கள் முதலில் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் அரசுடைய தரப்புக்களோடும், சிவில் அமைப்புக்களோடும் உலகளாவிய நிறுவனங்களோடும் இடையூடாடுவதற்குரிய பொருத்தமான சமயோசிதமான தீர்க்கதரிசனமிக்க ஒரு பொறிமுறையைக் கண்டுபிடிக்காதவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு வெளியே சிந்திப்பது என்பது முழுக்க முழுக்கக் கற்பனையே.

http://globaltamilnews.net/2019/112695/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.