Jump to content

தேர்தலுக்கான அரசியல் – பி.மாணிக்கவாசகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கான அரசியல் – பி.மாணிக்கவாசகம்

February 10, 2019

 

election.jpg?resize=800%2C600

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கின்றது.

நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தின்போது அரச தலைவராகிய ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய உரையானது, அரசாங்கத்தின் பிரகடன உரை என்ற கருத்தியலிலேயே நோக்க வேண்டும்.

சுதந்திரம் என்பது நாடு முழுவதுக்குமான ஒன்று. நாட்டு மக்கள் அனைவருக்கும் அது சொந்தமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சுதந்திர தினமாகப் பொது நிலையில் வைத்து கணிக்கப்படும். இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்த 71 ஆவது சுதந்திர தினம் உண்மையிலேயே அனைத்து மக்களுக்கும் உரித்தானதா என்ற வினா விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.

அது ஒருபக்கம் இருக்க, இந்த சுதந்திர தினத்தன்று ஆற்றப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டு பிரகடனத்தை வெளிப்படுத்துகின்ற அந்த உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய அரசாங்கம் அமைப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று கர்ச்சித்திருக்கின்றார்.

நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராகத் திகழ்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசியத்தை நோக்கிய ஒரு நகர்வில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். அத்தகையதோர் அரசியல் தலைவரிடமிருந்துதான் தேசிய அரசாங்கம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என்ற கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற கூரிய வாளை ஒத்த, மிகுந்த அரசியல் அதிகார பலத்தோடு திகழ்ந்த, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற ஓர் இரும்பு அரசியல்வாதியைத் தோற்கடித்து, அவரிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொது வேட்பாளராகத் தெரிவாகியவரே மைத்திரிபால சிறிசேன.

அந்த பொது வேட்பாளரை பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களும் சிறுபான்மையின மக்களாகிய தமிழ் முஸ்லிம் மக்களும் இணைந்து ஆதரித்திருந்தார்கள். அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த ஜனநாயகத்தைப் பாதுகாத்து நாட்டில் அமைதியையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து நல்லாட்சி ஒன்றை நிறுவுவதற்காகவே மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனாதிபதி பதவியில்  கொண்டிருந்த நிறைவேற்று அதிகார பலத்தை, அப்பொழுது மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பயன்படுத்தியிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையே சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஆயுதந் தரித்த இராணுவத்தினர் பகிரங்கமாகவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். இணக்கப்பாட்டையும், விட்டுக் கொடுப்பையும் அடிப்படையாகக் கொண்ட, ஒரு விருப்பத் தேர்வு நடைமுறையாகும். அது சாத்வீகமானது. ஆனால் ஆயுதந்தரித்த இராணுவம் என்பது, அதற்கு நேர்மாறானது. அது, அதிகாரத்தைப் பலத்துடன் பிரயோகிக்கின்ற வன்முறையின் முழு வடிவம்.

அதுவும் முப்பது வருடகால யுத்தம் ஒன்று அதியுச்ச ஆயுதப் பலப்பிரயோகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னணியில், பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகி நசிந்து நொந்து போயிருந்த மக்களை இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த நேரம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஓர் அரசியல் சூழலில்தான் சிறுபான்மை இன மக்கள் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து வாக்களித்திருந்தார்கள். அந்த நேரம் அந்த மக்கள் கொண்டிருந்த துணிவு என்பது அபாரமானது. ஏனெனில் அன்றைய சூழல், அவரை எதிர்த்து வாக்களிப்பது குறித்து, எவருமே கற்பனை செய்வதற்குக் கூட அச்சமடைகின்ற நிலைமையாக இருந்தது.

ஜனநாயகம் காப்பாற்றப்படுகின்றதா?

அத்தகைய சூழலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவும் அந்த முயற்சியானது தற்கொலைக்கு ஒப்பானது. மிகவும் ஆபத்தானது என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தார். ஆனால் மக்கள் தமது துணிகரமான வாக்களி;ப்பின் மூலம், அவரை வெற்றி பெறச் செய்திருந்தார்கள். தேர்தல் முடிவுற்றதன் பின்னர், அந்த நிலைமை குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் தான் தோல்வி அடைந்திருந்தால், ஆறடி மண்ணுக்குள் சங்கமமாக்கப்பட்டிருப்பேன் என்று தன் வாயாலேயே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தத் தேர்தலில் பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது யார் என்பது, அப்போது நிலவிய உயிராபத்தான நிலைமை காரணமாக இறுதி நேரம் வரையிலும் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதிகாரத்தின் அதி உச்சத்தில் எதையும் செய்கின்ற செயல் வல்லமை உடையவராகத் தன்னைக் காட்டியிருந்த ஒருவருக்கு எதிராகத் தேர்தலில் ஒருவர் பொது வேட்பாளராகப் பகிரங்கமாகக் களமிறங்கியிருந்தால், அவர் தேர்தலை எதிர்கொண்டிருக்க மாட்டார் என்ற சந்தேகம் நிலவிய நேரம் அது.

அத்தகைய ஒரு சூழலில் ஜனநாயகத்திற்கு உயிர் கொடுப்பதற்காகப் பொது வேட்பாளராகக் களமிறங்கி வெற்றியீட்டியவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர்தான், நாட்டு மக்களுக்கான 71 ஆவது சுதந்திர தின கொள்கைப் பிரகடன உரையில் தேசிய அரசாங்கம் உருவாகுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கர்ஜனை செய்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி நாட்டின் அரசாங்கத்தையே புரட்டிப் போடுவதற்கான நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அத்தகைய எதிர்ப்புதானே வெளிப்படும்?

இருந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய பொறுப்பையும், மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதார நிலைமையை சீர் செய்து, நாட்டை நேர்வழியில் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ள நாட்டின் அரச தலைவராகிய ஜனாதிபதியிடம் இருந்து இத்தகைய நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அந்தப் பிரகடனம் வெளிப்பட்டுவிட்டது. உண்மையில், எந்த அளவுக்கு அரசியல் நிலைமை மோசமாகியிருக்கின்றது என்பதை அது காட்டியிருக்கின்றது. இது கவலைக்குரியது.

அதிகார பலத்தைப் பிரயோகித்து, நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டவிதிகளைப் புறந்தள்ளி, எதையும் செய்ய முடியும் என்பதை அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டியிருந்தார். ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்காகத் தேர்தில் மக்களுடைய ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த அவர்தான், பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திடீரென பதவி நீக்கம் செய்து தங்களது அரசியல் விரோதியாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார். அவர்தான் இப்போது தேசிய அரசாங்கம் உருவாகுவதை அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாகக் கருத்துரைத்திருக்கின்றார். இதுதான், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற நடவடிக்கையோ?  இதுதான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகின்ற இலட்சணமோ?

எதிர்கட்சித் தலைவருடைய நிலைமை 

அக்டோபர் 26 ஆம் திகதிய திடீர் அரசியல் மாற்றத்தின்போது திடீர் பிரதமராக நியமனம் பெற்று, 52 நாட்களாக பிரதமருடைய அலுவலகத்தையே எட்டிப்பார்க்காத ஒரு பிரதமராகத் திகழ்ந்து பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கான வழிவகைகளைக் கொண்டிருக்கும் என்ற கூறப்படுகின்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்கமாட்டேன் என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த நிலைப்பாட்டை சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டிற்காகத் தெரிவிக்கப்பட்ட ஒரு சாதாரண அரசியல் கூற்றாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஆசிரியர்களுடன் வலிந்து நடத்திய ஒரு சந்திப்பில் – ஓர் ஊடக மாநாட்டில் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது  கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது முக்கியம்.

பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தையே குட்டிச்சுவராக்கி நாட்டில் அரசாங்கமே இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சேரும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, 52 நாட்கள் இந்த நிலைமை நீடித்திருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே இந்த அவல நிலையில் இருந்து நாடு மீட்சி பெற்றது.

இத்தகையதோர் அரசியல் நிலைமையின் பின்னணியில்தான் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். அது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், அந்த முயற்சியானது தேர்தலை நோக்கிய ஒரு நடவடிக்கை என்பது அவருடைய நிலைப்பாடு. தேர்தலில் தனக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அரசியல் தீர்வு காண தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

யுத்தம் முடிவடைந்ததும், அரசியல் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை என்று அவர் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார். அரசியல் தீர்வுக்காக 18 சுற்றுக்கள் அவருடைய ஆட்சியில் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட சில முடிவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. வேண்டுமென்றே அவற்றை உதாசீனம் செய்தது.

அத்தகைய ஒரு நிலையிலும் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி தாங்கள் அதில் இருந்து வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேறினால் அரசியல் தீர்வுக்கான முயற்சியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பே குழப்பியடித்த நாசமாக்கியது என்ற அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக பொறுமை காத்து அந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அரச தரப்பினர் கூட்டமைப்புத் தலைவர்கள் பொறுமை இழந்து பேச்சுவார்த்தை மேசையை விட்டு எழுந்து செல்ல வேண்டும் என்ற தந்திரோபாய நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளின் போது நடந்து கொண்டிருந்தார்கள்.

பேச்சுவார்த்தைகளுக்கான நாட்களில் அரச தரப்பினர் வருகை தருவதில் இருந்து பிரச்சினைகளை விவாதித்து முடிவு காண்பது வரையில் ஒத்துழையாத ஒரு போக்கையே கடைப்பிடித்திருந்தனர். ஆனால் கூட்டமைப்பினர் இறுதி வரையில் அந்தப் பேச்சுக்களில் விடாப்பிடியாகக் கலந்து கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை தினத்தன்று அரச தரப்பினர் வருகை தருவதற்குத் தாமதித்து நேரத்தை இழுத்தடித்திருந்த போதிலும், கூட்டமைப்பினர் அசாத்திய பொறுமையுடன் அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்ததன் பின்பே வெளியேறியிருந்தனர். அத்துடன் அந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கமே முடித்துக் கொண்டது.

அந்தப்பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கூடிய கவனம் செலுத்தவதைத் தவிர்த்து, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று திசை திருப்புகின்ற நடவடிக்கையை மேற்கொண்டு கூட்டமைப்பினர் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்று அரச தரப்பினர் வலியுறுத்தினர். அதற்குக் கூட்டமைப்பினர் இணங்கவில்லை. இந்த நிலையில்தான் அந்தப் பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் பலனேதுமின்றி, முற்றுப் பெற்றிருந்தன.

முழு பூசணிக்காயை மறைக்கும் முயற்சி………?  

ஆனால், இப்போது கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச அந்த நேரம் கூட்டமைப்பினர் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே அரசியல் தீர்வு காண முடியாமல் போனது என்று அப்பட்டமாக உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். அத்துடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர் கொண்டுள்ள முரண்பாடான நிலைப்பாட்டின் வெளிப்பாடும் ஆகும்.

அதேபோன்றதொரு முரண்பாடான நிலைப்பாட்டையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொண்டிருக்கின்றார். ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பதும், அதன் மூலம் அரசியல் தீர்வு காண்பது என்பதும் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனால்தான், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. இது நிபந்தனைகளற்ற ஆதரவு என்பதைத் தெரிவித்து. கடந்த நான்கு வருடங்களாக அதனைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்துள்ளது.

ஆனால் இந்த  நான்கு வருடங்களிலும் அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் உளப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

மறுபக்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாதகமான அரசியல் நிலைமைகள் நிலவியபோது, நல்லாட்சி அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வந்து அல்லது அதற்கு உரிய முறையில் மென்வழியில் அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அத்துடன் அரசியல் தீர்வு காண்பதற்குரிய தந்திரோபாய நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

ஜனாதிபதியின் பதவிக்காலமும், அரசாங்கத்தின் பதவிக்காலமும் முடிவை நெருங்குகின்ற சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் மேற்கொள்கின்ற முயற்சிகள் எந்த அளவுக்குப் பலனளிக்க முடியும் என்பது கேள்விக்குரியது.

வலுவான பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்தினால்தான் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், அதன் ஊடாக அரசியல் தீர்வு காணவும் முடியும். அதற்கு அவசியமான அரசியல் ஸ்திரத்தன்மை இப்போது நாட்டில் இல்லை. அதற்கு அவசியமான பெரும்பான்மை பலமும் அரசாங்கத்திடம் இல்லை. அது மட்டுமல்லாமல், ஐக்கிய தேசிய கட்சியின் தனிக்கட்சி அரசாங்கமே இப்பொது பதவியில் இருக்கின்றது. அதுவும் இறுக்கமான அரசியல் கருத்து நிலைப்பாட்டின் விளைவாக – அரசியல் நோக்க நிலைப்பாட்டின் விளைவாக ஏற்பட்ட ஒரு மோசமான அரசியல் குழப்பத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள ஓர் அரசியல் நிலைமையில் இத்தகைய பாரிய அரசியல் முயற்சி சாத்தியப்பட முடியாது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்திருந்த போது முடியாத காரியம், இரண்டு கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு சூழலில் வெற்றியளிக்கும் என்று கூறுவதற்கில்லை.

அதேநேரம், ஆட்சி அதிகாரத்தை அடுத்ததாக யார் கைப்பற்றுவது என்பதில் தீவிரமான அரசியல் போட்டி மனப்பாங்கும் நிலவுகின்றது. இதற்குத் தூபம் போடும் வகையில் மாகாண சபைக்கான தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான காலச் சூழலும் காணப்படுகின்றது.

இந்தத் தேர்தல்களில் எந்தத் தேர்தலை முதலில் நடத்தவது என்பதுபற்றிய விவாதம் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. எந்தத் தேர்தலானாலும்சரி, வரப்போகின்ற தேர்தலில் வெற்றியடைந்துவிட வேண்டும் என்பதற்கான மக்களைக் கவர்ந்திழுப்பதற்கான அரசாங்கத்தின் வழமையான தேர்தல் கால நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கம்பரெலிய என்ற கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பித்தாகிவிட்டது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் 30 கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் இடம்பெற்றிருக்கின்றது.

.இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை முறியடித்து, எப்படியாவது மக்களுடைய ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ச ஒரு பக்கத்திலும் மற்ற பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். இந்த முயற்சிகளில் இனவாத அரசியல் பிரசாரம் முதன்மை நிலையில் ஏற்கனவே தலைதூக்கி இருப்பதையும் காண முடிகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தி அரசியலின் மூலம் மக்களுடைய ஆதரவைத் திரட்ட முயற்சிக்கின்றார். மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் வேறு வேறாக இனவாத அரசியல் பிரசாரம் உள்ளிட்ட சிங்கள மக்களைக் கவர்வதற்கான தேர்தல் பிரசார உத்திகளைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய அரசாங்க உருவாக்கம் என்ற போர்வையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீரவு காண்பதற்கான அரசியல் நகர்வை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேலோட்டமாகக் காட்டி காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றது.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள பொருளாதார அபிவிருத்தி என்ற தேர்தல் பிரசார வலைக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஏற்கனவே சிக்கியிருக்கின்றது. அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் மக்களுடைய ஆதரவைத் திரட்டிவிட முடியும் என்ற அரசாங்கத்தின் எண்ணப்பாட்டுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணங்கிச் செல்கின்ற ஒரு போக்கு தெரிகின்றது.

அரசியல் தீர்வை முதன்மைப்படுத்தி உரிமை அரசியலுக்காகக் காய் நகர்த்தினாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி அரசியல் என்ற வேகமும் கவர்ச்சியும் நிறைந்த காய் நகர்த்தலுக்கு முன்னால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வலிமை உடையதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை.

ஆளாளுக்கொரு நிலைப்பாடு என்று தோன்றினாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் (கொழும்பு மற்றும் மலையகப் பிரதேசங்களில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளையும்கூட சேர்த்துக்கொள்ளலாம்) ஆகிய அனைத்துத் தரப்பினருமே, தேர்தல்களின் மூலம் எவ்வாறு மக்களுடைய செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் தீவிரம் காட்டுகின்ற அரசியல் சூழலே யதார்த்தமான அரசியல் நிலைப்பாடாகும்.

இந்த நிலையில் கொள்கைகளாக அல்லது கோட்பாடுகளாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு வேடிக்கையான அரசியல் நிலைப்பாட்டை  வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் காணப்படுகின்றார்கள். எனவே அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் நடவடிக்கைகள் உண்மையான நாட்டு மக்களின் ஈடேற்றத்திற்கான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மக்களை ஏமாற்றுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாகவே தடுக்க முடியாத நிலையில் எழுந்திருக்கின்றது.

 

 

http://globaltamilnews.net/2019/112768/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.