Jump to content

பாதிரியார்களின்- பாலியல் இச்சைகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த பாப்­ப­ர­சர் போப் பிரான்­சிஸ் முதல் தட­வை­யாக ஒரு விட­யத்­தைப் பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டார். உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய விட­யம் அது. கன்­னி­யாஸ்­தி­ரி­கள் மீதான பாதி­ரி­மார்­க­ளின் பாலி­யல் சேஷ்­டை­கள், வதை­கள் உண்­மையே என்­பதை முதல் தட­வை­யா­கப் போப் பிரான்­சிஸ் ஏற்­றுக்­கொண்­டமை கவ­னம்­பெற்­றது.

உல­க­ள­வில் இருந்து வரும் இந்­தப் பிரச்­சினை பல நாடு­க­ளி­லும் இனம் காணப்­பட்­டி­ருக்­கி­றது. 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016ஆம் ஆண்­டுக்கு இடை­யில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­தார் என்ற குற்­றச்­சாட்­டில், இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநில ஜலந்­தர் மறை­மா­வட்ட ஆயர் பிரான்கோ கைதா­கி­னார். அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கன்­னி­யாஸ்­தி­ரி­கள் போராட்­டம் நடத்­தி­னர். இந்­தப் போராட்­டத்­தில் பங்­கு­கொண்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைத் திருச்­சபை இட­மாற்­றம் செய்­தி­ருந்­தது. நிலமை இவ்­வா­றி­ருக்க, இந்­தியா முழு­வ­தும் பாதி­ரி­யார்­க­ளால் பாலி­யல் தொல்­லைக்கு ஆளா­கும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் குறித்­தும், அவர்­க­ளின் நேரடி அனு­ப­வங்­கள் குறித்­தும் செய்தி நிறு­வ­னம் ஒன்று ஆய்­வொன்றை மேற்­கொண்­டது.

அந்த ஆய்வு தரும் அதிர்ச்சி
பாதி­ரி­யார்­கள் அவர்­க­ளின் அந்­த­ரங்க அறைக்­குள் வலுக்­கட்­டா­ய­மாக அழைத்­துச் சென்­ற­தை­யும் பாலி­யல் உற­வுக்கு உட்­ப­டு­மாறு வற்­பு­றுத்­தி­ய­தை­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் ஆதங்­கத்­து­டன் கூறி­னர். இயேசு பிரா­னின் தூதர்­கள் என்று நம்­பிய பாதி­ரி­யார்­களே தங்­க­ளின் உட­லில் அத்­து­மீ­றிக் கை வைத்­த­தை­யும் இன்­னும் பிற­சம்பவங்களையும் பல்­வேறு தேவா­ல­யங்­க­ளில் பணி­பு­ரி­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் தயங்­கித் தயங்கி வெளியே கூறி­யுள்­ள­னர். தனது கதையை ஆரம்­பிக்­கும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வர், ‘’அவர் குடித்­தி­ருந்­தார்’’ என்று கூறினார்.

சில நிமி­டங்­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக நடந்த பாலி­யல் அத்­து­மீ­றல் குறித்­துக் கூறி­யுள்­ளார் பிறி­தொரு கன்­னி­யாஸ்­திரி. கத்­தோ­லிக்­கத் தலைமை, தங்­க­ளைக் காப்­ப­தில் அதிக சிரத்தை எடுத்­துக் கொள்­வ­தில்லை என்­றும் வேதனை தெரி­வித்­தார். ஆசியா, ஐரோப்பா, தென் அமெ­ ரிக்கா மற்­றும் ஆபி­ரிக்கா உள்­ளிட்ட பகு­தி­க­ளில் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைப் பாலி­யல் வதைக்கு உள்­ளாக்­கிய பாதி­ரி­யார்­கள் மற்­றும் பேரா­யர்­கள் குறித்து வத்­திக்­கான் நிர்­வா­கத்­துக்­குத் தெரி­யும் என்­றும் அதை நிறுத்­து­வ­தற்­குக் குறைந்த அள­வி­லான முயற்­சி­க­ளையே வத்­திக்­கான் எடுத்­தது என­வும் கடந்த ஆண்­டின் அறிக்கை ஒன்று கூறு­கி­றது. சில கன்­னி­யாஸ்­தி­ரி­கள், ‘‘பாலி­யல் முறைகேடு எல்லா இடத்­தி­லும் வழக்­க­மான ஒன்­று­தான்’’ என்று நினைக்­கின்­ற­னர். சிலர், ‘’அரி­தான ஒன்று’’ என்­கின்­ற­னர். எவ­ரும் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயா­ராக இருப்­ப­தில்லை. பெரும்­பா­லா­னோர் தங்­க­ளின் அடை­யா­ளம் மறைக்­கப்­பட வேண்­டும் என்ற விதி­யின் பேரில் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யைப் பேசி­யுள்­ள­னர்.

போராட்­ட­மும் அதன் விளை­வு­க­ளும்
கடந்த ஆண்­டில், கேரள மாநி­லத்­தில் கன்­னி­யாஸ்­தி­ரி­யைப் பாலி­யல் வன்புணர்வு செய்­த­தா­கக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டில் பேரா­யர் பிராங்கோ மூலக்­கல் கைது செய்­யப்­பட்­டார். ஆனால் அதற்கு முன்­பாக அந்­தக் கன்­னி­யாஸ்­திரி எதிர்­கொண்ட பிரச்­சி­னை­கள் ஏரா­ளம். 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கோட்­ட­யம் அருகே குரு­வி­ளங்­காடு பகு­தி­யில் உள்ள தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றி­ய­வர் பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல். இவர், தான் பணி­யாற்­றிய காலத்­தில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வரை மிரட்டி 13 முறை வன்­பு­ணர்­வில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு ­கி­றது.

இது தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி அப்­போது தேவா­ லய நிர்­வா­கி­ க­ளி­டம் முறைப்­பாடு அளித்­தும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி குரு­வி­ளங்­காடு பொலி­ஸில் முறைப்­பா­ட­ ளித்­துள்­ளார். குற்­றச்­சாட்­டுக்கு ஆளான பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல், பஞ்­சாப் மாநி­லம் ஜலந்­த­ரில் பேரா­ய­ராக இருந்து வரு­கி­றார். ஆனால், கன்­னி­யாஸ்­திரி கூறும் குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது, பொய்­யா­னது என்று பிராங்கோ மறுத்து வந்­தார். முறைப்­பாடு அளித்து 70 நாள்­கள் ஆகி­யும் பேரா­யர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று குற்­றம் சாட்­டிய கன்­னி­யாஸ்­தி­ரி­கள் 5 பேர் 14 நாள்­கள் போராட்­டம் நடத்­தி­னர். உல­கின் கவ­னத்­துக்கு இந்த நிகழ்வு வந்­த­தும் பாதி­ரி­யார் கைதா­னார்.

மற்­றொரு கன்­னி­யாஸ்­திரி மனம் திறக்­கி­றார்
டெல்­லி­யின் வறு­மை­யான பகு­தி­க­ளில் பணி­யாற்றி வரும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரி­டம் பேசி­ய­போது, ‘‘15 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால், ஒரு தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­தேன். அந்­தப் பாதி­ரி­யா­ருக்கு என் மேல் ஈர்ப்பு இருந்­த­து­போல உணர்ந்­தேன். ஒரு நாள் இரவு நிகழ்­வொன்­றுக்­குச் சென்ற பாதி­ரி­யார் இரவு தாம­த­மாக வந்­தார். 9.30 மணிக்கு மேல் இருக்­கும். என்­னு­டைய அறை­யைத் தட்­டி­னார். ‘’உன்­னைப் பார்க்க வேண்­டும். உன்­னு­டைய ஆன்­மிக வாழ்க்கை குறித்­துப் பேச வேண்­டும்’’ என்­றார். நான் கத­வைத் திறக்­க­வில்லை. வலுக்­கட்­டா­ய­மா­கத் தள்­ளிக் கத­வைத் திறந்­தார். என்­னால் போதை­யின் வாச­னையை உணர முடிந்­தது. ‘‘நீங்­கள் நிதா­னத்­தில் இல்லை. உங்­க­ளு­டன் பேசத் தயா­ராக இல்லை’’ என்­றேன். முத்­தம் கொடுக்க முயன்­றார். எங்­கெல்­லாம் முடி­யுமோ அங்­கெல்­லாம் தொட்­டார். அவரை வேக­மா­கத் தள்­ளி­விட்­டு­விட்­டுக் கத­வைப் பூட்­டி­னேன். அது பாலி­யல் பலாத்­கா­ரம் இல்லை என்­றா­லும் அது ஓர் அச்­சு­றுத்­தும் நிகழ்­வாக இருந்­தது. இது­கு­றித்து என்­னு­டைய மூத்த கன்­னி­யாஸ்­தி­ரி­யி­டம் சொன்­னேன். அவர், பாதி­ரி­யா­ரு­டன் மீண்­டும் சந்­திப்­பு­கள் நிக­ழாத வண்­ணம் பார்த்­துக்­கொண்­டார். நடந்­தவை குறித்து, தேவா­லய அதி­கா­ரி­க­ளுக்­குப் பெய­ரி­டப்­ப­டாத கடி­தங்­களை எழு­தி­னேன். ஆனால், நட­வ­டிக்கை எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை’’ என்­றார்.

புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யில்…
கத்­தோ­லிக்க வர­லாறு முழு­வ­தும் பெண்­கள் தங்­க­ளு­டைய புனி­தத் தன்­மை­யைக் காத்­துக் கொள்­வ­தற்­காக, தியா­கி­க­ளாக மாறி உயிர் துறந்த சம்­ப­வங்­கள் நிறைய நிகழ்ந்­தி­ ருக்­கின்­றன. புனி­தர் அகதா, திரு­ம­ணம் செய்­து­கொள்ள மறுத்­த­தால், மார்­ப­கங்­க­ளைக் கிழித்­துக் கொல்­லப்­பட்­டார். தனது புனி­தத்­தன்­மை­யைக் காத்­த­தற்­கா­கப் புனி­தர் லூசி, உயி­ரு­டன் எரித்­துக் கொல்­லப்­பட்­டார். வன்­பு­ணர்வு செய்ய முயன்ற ஒரு­வ­ரால் புனி­தர் மரியா கொரேட்டி, 11 வய­தில் கொல்­லப்­பட்­டார். ‘’இது புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யி­லான போராட்­டம்’’ என்­கி­றார் டெல்­லி­யைச் சேர்ந்த தத்­து­வ­வி­யல் அறி­ஞர் ஷாலினி மூலக்­கல்.

ஏன் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் முறை­யி­டு­வ­தில்லை?
பாதி­ரி­யா­ருக்கு எதி­ராக முறை­யி­டு­வது என்­றால் தேவா­லய நிர்­வா­கத்­தில் அவர்களுக்கு மேலாக இருப்­ப­வர் மீது குற்­றம் சுமத்­து­வது. இது ஏரா­ள­மான வதந்­தி­க­ளுக்­கும் தேவா­லய அர­சி­ய­லுக்­கும் வழி­வ­குக்­கும். இது அவ­ர­வர் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விக்­க­லாம். அது­மட்­டு­மல்­லா­மல் மத ரீதி­யான அர­சி­யல், பெண்­கள் என்­றாலே குறைச்­ச­லாக மதிப்­பி­டும் நம்­பிக்கை உள்­ளிட்­டவை கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளின் அமை­திக்கு ஊக்­கம் அளித்­து­வி­டு­கின்­றன. இன்­னும் சில கன்­னி­யாஸ்­தி­ரி­களோ, தங்­க­ளது முறைப்­பாடு தாங்­கள் சார்ந்­துள்ள தேவா­ல­யத்­தின் பெய­ரைக் குலைக்­கும் என்­றும் ஏனைய மத அமைப்­பு­க­ளின் விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள வேண்­டும் என­வும் அஞ்­சு­கின்­ற­னர்.

குடி­போ­தை­யில் இருந்த பாதி­ரி­யாரை எதிர்­கொண்ட கன்­னி­யாஸ்­திரி, ‘’நான் உண்­மை­யைச் சொன்­னால், தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வேனோ என்ற பயம்­தான் வெளியே சொல்­லா­த­தற்கு முக்­கிய கார­ணம். பாதி­ரி­யார்­க­ளுக்கு எதி­ராக முறை­ யி­டும்­போது, தங்­க­ளின் சொந்த மதத்­தி­ன­ரையே, தங்­க­ளின் மத உய­ர­தி­கா­ரி­க­ளையே எதிர்க்க வேண்டி வரு­கி­றது’’ என்­கி­றார். கன்­னி­யாஸ்­திரி ஷாலினி மூலக்­கல் மேலும் கூறும்­போது, ‘’நாங்­கள் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளா­கவே இருந்­தா­லும் கூட, அமை­தி­யாக இருக்­கவே முயற்­சிக்­கி ­றோம். பாலி­யல் அனு­ப­வங்­களை எதிர்­கொள்­ளும் பெண், அதை மறைத்து எல்­லாம் சரி­யாக இருக்­கி­றது போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தவே முயல்­கி­றாள்’’ என்­றார்.

https://newuthayan.com/story/13/பாதிரியார்களின்-பாலியல்-இச்சைகள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

திருமணம் செய்தால் ஒன்றோடுதான் இருக்க வேணும் அதுதான் சாமிமார்....:14_relaxed:

Link to comment
Share on other sites

18 hours ago, ஏராளன் said:


காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

 

காம  இயல்பற்றவர்கள் என்று  சொல்லக்கூடிய மனிதர்கள் இந்தப் பூமியில் யாரும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்த வரைக்கும் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருந்து மாமா வேலை பார்ப்பவர்கள் அல்லது தூதுவர்களாக இருப்பவர்களை இல்லையேல் மந்திர வேலை பார்ப்பவர்களை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

இது மேலோட்டமாக பார்க்க கூடிய விடயம் இல்லை 
சமூக போராளிகள் எல்லோருமே இதனால் பல சிக்கலை 
சந்திப்பவர்கள்தான் .... எல்லோருமே சாதாரண மனிதர்களை காட்டிலும் 
உணர்ச்சி மிகுந்தவர்கள். பதின்ம வயதில் காதல் தோல்வி உற்றால் தற்கொலை 
செய்வது இதனால்தான் இவர்களிடம் உணர்ச்சி மிகுந்துநிற்கும்.

இவர்கள் எதற்காக போராட போனார்களோ அதே கொள்கையில் 
மிகுந்த பற்றும் அதற்காக கொடுக்கும் அர்ப்பணிப்பும் ஏராளமாக இருக்கும்.
கால போக்கில் காமம் குறுக்கிடும்போது  அதை எப்படி கையாள்வது என்பது?
ஏற்கனவே பயிற்சி கொடுக்க பட்டு இருப்பின் தப்பித்து கொள்கிறார்கள் 
எஞ்சியவர்கள் மாட்டி கொள்கிறார்கள்.

இராணுவம் கெரில்லா போராளிகள் கடுமையான உடல் பயிற்சி 
மற்றும் பெண்கள் இல்லாத காடுகளில் முகாம் போட்டு தங்குவது 
தவறியவருக்கு கடுமையான தண்டனை போன்றவற்றால் பயிற்சி பெறுகிறார்கள் 

முன்னைய சமண புத்த சைவ முனிவர்மார் காமத்தை அடக்க கூடிய 
மஞ்சள் மற்றும் பல மூலிகைகளை உணவோடு கலந்து கொள்ளவார்கள் 
தவிர சுவாசத்தால் தமது உடலை கட்டுப்படுத்தும் பயிற்சி பெறுகிறார்கள் 

காமத்தை கடடவிழ்த்து விட்ட்டாலும் நான் மாட்டி கொள்ள மாடடேன் 
எனும் வெற்றிடம் இருக்கும் ... கிறிஸ்தவ பாதிரிமார் ...... ஹிந்து சாமிமார் 
இராணுவ கொமாண்டோ மார்   வெறி பிடித்த காம மிருகம் ஆகி விடுகிறார்கள் 
எமது ஊரிலேயே இது நடந்து இருக்கிறது ......... நாம் கேள்வி கேட்க போனால் 
நீங்கள் போய் உங்கள் கோவில் வேலையை பாருங்கள் என்று எம்மை விரட்டி விடுவார்கள் 
வெளியே கசிந்தால் சேர்ச்சு வண்டவாளம் வெளியே வந்துவிடும் என்று மூடி மறைக்கவே 
பெரிய முயற்சி செய்வார்கள் ...... இவைதான் பாதிரிமாரை மீண்டும் மீண்டும் தப்பு செய்ய 
அனுமதிக்கிறது ...... ஊர்மக்கள் கூடி ஒருவரை புரட்டி எடுத்தால் ... அடுத்து வருபவர் ஒழுங்காக இருப்பார்.

அடுத்தவன் மதத்தை பற்றி அக்கறை கொள்ளாமல் எனது மதம் 
புனிதமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதை சரி செய்ய எந்த மதவாதியும் 
துணியப்போவதில்லை .............. நான் இங்கு யாழிலேயே ஹிந்து மதம் பற்றி எழுதினால் 
என்னை கிறிஸ்த்தவன் ஆக்கி விடார்கள். 
பிரச்சனை பாதிரிமார் சாமிமார் இல்லை .... மதம் பிடித்த மூடர்கள்தான் முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்னைப்பொறுத்த வரைக்கும் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருந்து மாமா வேலை பார்ப்பவர்கள் அல்லது தூதுவர்களாக இருப்பவர்களை இல்லையேல் மந்திர வேலை பார்ப்பவர்களை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும்.
 

இப்போ கோவில் குளம் வேலையிடம் பாராளுமன்றம் என்று பாலியல் புகாத இடமே இல்லைப் போல இருக்கு.அதுக்குள் முற்றாக நிற்பாட்டுவதென்றால் எப்படி?

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்.அதே மாதிரி இனி எல்லா இடங்களிலும் பாதுகாப்பா ஏதாவது செய்யுங்கோ என்று இருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்.அதே மாதிரி இனி எல்லா இடங்களிலும் பாதுகாப்பா ஏதாவது செய்யுங்கோ என்று இருக்க வேண்டியது தான்.

பாதிரியார், சாமிகளுக்கு ‘Condom’ supply செய்தால், அவர்களிடம் போகும் பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, thulasie said:

பாதிரியார், சாமிகளுக்கு ‘Condom’ supply செய்தால், அவர்களிடம் போகும் பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா?

தவறு செய்யத் தான் போகிறேன் என்றால் அதற்கான பாதுகாப்பு மட்டுமே.

Link to comment
Share on other sites

22 minutes ago, ஈழப்பிரியன் said:

தவறு செய்யத் தான் போகிறேன் என்றால் அதற்கான பாதுகாப்பு மட்டுமே.

பாலியல் தவறு செய்யும் பாதிரிமார், சாமியாருக்கு ‘Condom’ சப்ளை செய்து, செய்வதை  பாதுகாப்பாக செய்யுங்கள் என்று ஊக்குவிக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் உந்த சாமிமார், பாதிரிமார், பிக்குகள், லெப்பையல், பண்ற அட்டகாசம், சொல்லி மாளாது.

மக்களை ஏமாத்தி காசினை தானமாக பெற்று, பிறகென்ன.... திண்டு, குடித்து, ******, சந்தோசமாக இருக்கினம்...

இப்படி வேலை டென்ஷனில் இருப்பதுக்கு, பேசாம ஒரு நல்ல இடமா பாத்து ஒக்கார வேண்டியதுதான்.... 😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்

அப்பிடியெண்டால் படிப்பிக்கிற நேர அட்டவணையிலை அதுக்கும் நேரம் ஒதுக்கவெல்லோ வேணும். :rolleyes:

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

எல்லா மதங்களிலும் உந்த சாமிமார், பாதிரிமார், பிக்குகள், லெப்பையல், பண்ற அட்டகாசம், சொல்லி மாளாது.

... 😤

மதவாதிகளைவிட, நாத்திகம் பேசும் கூட்டங்கள் செய்யும் அட்டகாசம், மதவாதிகளைவிட மிஞ்சியதாயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

மதவாதிகளைவிட, நாத்திகம் பேசும் கூட்டங்கள் செய்யும் அட்டகாசம், மதவாதிகளைவிட மிஞ்சியதாயிருக்கிறது.

மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்வதை பலர் விரும்பவில்லை
 

Link to comment
Share on other sites

26 minutes ago, putthan said:

மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்வதை பலர் விரும்பவில்லை
 

அட்டகாசம் - யார் விரும்புவார்கள்?

மதவாதிகளை விட,  நாத்திகக் கூட்டங்கள் செய்யும் அக்கிரங்கள், அநியாயங்கள் சொல்லி மாளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2019 at 5:58 PM, thulasie said:

அட்டகாசம் - யார் விரும்புவார்கள்?

மதவாதிகளை விட,  நாத்திகக் கூட்டங்கள் செய்யும் அக்கிரங்கள், அநியாயங்கள் சொல்லி மாளாது.

மதவாதிகள் மதத்தின் பெயரால் சமுகத்திற்கு தீங்கு விளைவிற்கும் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுகொள்ள்முடியாது...

நாத்திகவாதிகளை எவனும் க‌ண்டுகொள்வதில்லை....நாத்திகவாதிகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ,கெடுதல்  செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை சனத்திற்க்கு உண்டு.....ஆனால் மதவாதிகளுக்கு கடவுள் நம்பிக்கையாளன் என்ற கவசம் உண்டு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.