Jump to content

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?


Recommended Posts

kilinochchi-buddha-statue-1-300x200.jpgவடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

வடக்கில், இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடத்தப்படாத நிலையில், பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன், வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த ஆளுநர்கள் பதவியில் இருந்த போதே, இத்தகைய மாநாடு நடத்தப்படாத நிலையில், தமிழரான ஆளுநரின் தலைமையில், பௌத்த மயமாக்கல் குறித்து குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இத்தகைய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், அரச செயலகங்களில் மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சுரேன் ராகவன், பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kilinochchi-buddha-statue-1-300x200.jpgவடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

வடக்கில், இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடத்தப்படாத நிலையில், பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன், வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த ஆளுநர்கள் பதவியில் இருந்த போதே, இத்தகைய மாநாடு நடத்தப்படாத நிலையில், தமிழரான ஆளுநரின் தலைமையில், பௌத்த மயமாக்கல் குறித்து குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இத்தகைய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், அரச செயலகங்களில் மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சுரேன் ராகவன், பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/02/10/news/36334

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு காலத்தில் கொண்டாடிய புத்தன் தானே!
நடத்தட்டும். 
பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து அவர்களை வாழ்க்கைத்தரம் உயர இது போன்ற நிகழ்வுகள் ஒரு போதும் உதவாது.
புத்தனையும் அவரை வழிபடுவோரையும் வெறுக்க தான் உதவும்.

Link to comment
Share on other sites

இவர் சுத்து மாத்து மந்திரன் மாதிரியான அடுத்த சிங்கள கூலி .....மைத்திரி சும்மா ஒருவரை நியமிப்பாரா ...
எங்கள் விக்கி ஐயா போன்றவர்கள் தேவை மிக அவசியம் ....

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபாதாசன் said:

இவர் சுத்து மாத்து மந்திரன் மாதிரியான அடுத்த சிங்கள கூலி .....மைத்திரி சும்மா ஒருவரை நியமிப்பாரா ...
எங்கள் விக்கி ஐயா போன்றவர்கள் தேவை மிக அவசியம் ....

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

ஏன் நீங்கள் செய்றது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nellaiyan said:

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இது உங்களுக்கே ஓவராய் தெரியேல்லை?

அடங்கொக்கா மவனே!

யாழ்ப்பாணத்திலை வாழுற பௌத்த சனங்களுக்கு என்னபிரச்சனை? என்ன சவால்கள்?


ஆரப்பா உந்த சுரேன் ராகவனை கண்டு புடிச்சது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

தாராளமாக செய்யலாம், ஆளுனர் அழைப்பிதழ் அனுப்பினால்.

 

ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பியே இதுவரை விக்கியர் செய்தது....

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 

யாழ்ப்பாணத்திலை வாழுற பௌத்த சனங்களுக்கு என்னபிரச்சனை? 

யாழில் சந்திக்கு சந்தி புத்தரை மணவறையில் வைக்க, யாழ் மக்கள் விரும்பவில்லையாம்.

Link to comment
Share on other sites

முதலில் யார் இந்த சுரேன்?

* மூதாதையர்கள் கேரள தொடர்பு!
* முன்னாள் சிறிலங்கா அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையில் சிங்கள ஒலி/ஒளிபரப்பிற்கு பணிப்பாளர்
* பெளத்தத்திலேயே முனைவர் பட்டம்
* பெளத்த மதத்திற்கு மத மாற்றம்
* மைத்திரியின் முன்னாள் ஆலோசகர்

... சிறிலங்கா அரசின் வடக்கு ஆளுனர் சுரேன் பதவிக்கு வந்த முதல் வேலை... வடக்கில் அரச நிறுவனங்களில் உள்ள பெயர்பலகைகளை மூன்று மொழிகளிலும் மாற்ற உத்தரவிட்டதே" !

... தற்போது பெளத்தர்கள் பெரும்பான்மையாக(?), பல்லாயிரம் ஆண்டுகாலமாக(?) வாழும் வடபகுதியில், பெளத்த மாநாடு!

சும்/சம் கும்பலுடன் எம்மில் பலர் விசிலடித்தோம், சுரேனின் வருகைக்காக! அன்று மைத்திரி/ரணிலுக்காக விசிலடித்து, இன்று வாந்தி எடுப்பதை போலவும் .. சுரேனின் முகத்தில் பூச்சு போடப்பட்டு இறக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்திலேயே கரைய தொடங்கி விட்டது! உண்மை முகம் தெரிய வெகுகாலம் காத்திருக்க தேவையில்லை!

Link to comment
Share on other sites

10 minutes ago, MEERA said:

ஆளுநர் அழைப்பிதழ் அனுப்பியே இதுவரை விக்கியர் செய்தது....

ஆளுநர் முன்னிலையில், விக்கியார் தலையாட்டிப் பொம்மைதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

ஆளுநர் முன்னிலையில், விக்கியார் தலையாட்டிப் பொம்மைதானே!

உண்மையை ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

மாநாடு, வவுனியாவில்.

யாழில் அல்ல.

பயப்படத் தேவையில்லை.

புரியவில்லை........ஏன் பயப்பட தேவையில்லை......

Link to comment
Share on other sites

16 minutes ago, MEERA said:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

 

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர், இலங்கை அரசின் சட்ட திட்டங்களின் கீழ் சுதந்திரமாக செயல்பட முடியும்.

சந்திக்கு சந்தி புலி அரசியல் பேசும், முதலமைச்சருக்கு,  நீங்கள் விரும்பும் சுதந்திரம் கிடைக்காதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர், இலங்கை அரசின் சட்ட திட்டங்களின் கீழ் சுதந்திரமாக செயல்பட முடியும்.

சந்திக்கு சந்தி புலி அரசியல் பேசும், முதலமைச்சருக்கு,  நீங்கள் விரும்பும் சுதந்திரம் கிடைக்காதுதான்.

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, thulasie said:

யாழில் சந்திக்கு சந்தி புத்தரை மணவறையில் வைக்க, யாழ் மக்கள் விரும்பவில்லையாம்.

மக்கள் விரும்பாததை அரசு ஏன் செய்ய வேண்டும்?
மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மக்கள் விரும்பாததை அரசு ஏன் செய்ய வேண்டும்?
மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா?

சிங்கள பெளத்த மக்களுக்காக அரசு

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

 

6 minutes ago, MEERA said:

எந்த இலங்கை அரசின் சட்டத்தின் கீழ் தமிழரசுக்கட்சியினர் மாவீரர் தினத்தில் விளக்கேற்றுகிறார்கள்.

சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள்

27 minutes ago, MEERA said:

உண்மையை ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரே சுதந்திரமாக செயற்பட முடியாது....

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

அரச பணத்தில் மாதாந்தம் உதவியாளருடன் விமானப்பயணம் செய்ய உரிமை இருக்கிறது. முக்கியமான உரிமையை எடுத்து வைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

 

சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள்

ஆம் சம் சும் கும்பலுக்கு மட்டும், இல்லாவிடின் கஞ்சா கடத்தல்காரரை விடுவித்து இருக்க முடியுமா?

3 minutes ago, Jude said:

அரச பணத்தில் மாதாந்தம் உதவியாளருடன் விமானப்பயணம் செய்ய உரிமை இருக்கிறது.

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

Link to comment
Share on other sites

10 minutes ago, MEERA said:

 

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

மகிந்த கூறுவது எல்லாம் உண்மையா??

அது எப்படி சாத்தியம், வடக்கு முதலமைச்சருக்கு என்று தனியான சட்டம் உள்ளதா?

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

மகிந்த கூறுவது எல்லாம் உண்மையா??

அது எப்படி சாத்தியம், வடக்கு முதலமைச்சருக்கு என்று தனியான சட்டம் உள்ளதா?

விக்கியார், சட்டத்திற்கு மீறிய அரச உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது பிற மாகாண முதலைமைச்சர்களின் விசனம்.

அந்த விசனத்தை வெளியில் போட்டு உடைத்தவர் மஹிந்த.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

விக்கியார், சட்டத்திற்கு மீறிய அரச உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது பிற மாகாண முதலைமைச்சர்களின் விசனம்.

அந்த விசனத்தை வெளியில் போட்டு உடைத்தவர் மஹிந்த.

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சாெல்வது காெடுப்பதுபாேல் காெடுத்து இருப்பதையும் எடுப்பதென்று, விக்கியரில் உந்த விளையாட்டு பலிக்கிதில்லை. எடுத்ததெல்லாம் தா. அதன்பிறகு நாங்கள் யாேசிப்பாேம் உனக்கு தாறதா வேண்டாமா? என்று நிக்குது ஆள்.   நீ இண்டைக்கு தருவாய் நாளைக்கு எடுப்பாய். இதை செய்யேலை அதை செய்யேலை எண்டு கணக்கு காட்டுவாய். அதெல்லாம் வேண்டாம் எங்களுக்குரியதை எங்களிடம் தா. எங்களுக்கு தெரியும் எமது மக்களுக்கு எது வேண்டுமென்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.