Jump to content

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.


Recommended Posts

10 minutes ago, போல் said:

அது தான் உண்மை!

சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் இராணுவ கும்பல்கள் ஒருபக்கம் சட்டவிரோத புத்தர் சிலைகளை நிறுவிக்கொண்டு மறுபுறத்தில் சகல சமூக விரோத செயல்களிலும் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும்  இருந்து கொண்டு புத்தர் சிலை என்பது காட்டுமிராண்டிகளின் சின்னம் என்பதை நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டுப்படுத்த தமிழர் பகுதியில் உரிய கட்டமைப்புகள் தற்போது இல்லை.

இந்தப் பின்னணியில் வேறுவழியின்றி தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சமூகவிரோத கும்பல்களை கட்டுப்படுத்தும், காமுகர் பிடியிலிருந்து தப்பும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தமது பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் மக்கள் தாங்களே ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

 

28 minutes ago, கிருபன் said:

 

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது!

அப்படி என்றால் சிங்களம் எதை அங்குள்ளவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றதோ அதை தான் அவர்கள் செய்கின்றனர்.

சிங்களம் இப்படியான எதிர்வினைகளை தான் எம் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கும். ஒரு படித்த மெச்சூரிட்டி கூடிய சமூகமாக அங்குள்ளவர்கள் மாறுவது சிங்களத்தின் நீண்டகால இனவழிப்பு திட்டத்துக்கு எதிராக போய்விடும். எனவே சிந்திக்க முடியாதவர்களாக, வன்முறையை முதல் தெரிவாக எடுப்பவர்களாக எம் மக்கள் மாறினால் அதனால் இலகுவாக இனவழிப்பை தொடர முடியும்.

இப்பவும், இந்த செயலின் மூலமும் சிங்களத்தின் நோக்கங்கள் தான் நிறைவேறுகின்றது. நாம் மேலும் மேலும் முட்டாள்களை அதிகம் கொண்ட சமூகமாக, நாகரீக வளர்ச்சியடையாத குழுமமாக, உலகின் பொதுப்பண்புக்கு மாறானவர்களாக ஆகிக் கொண்டு சிங்களத்தின் கனவை நிறைவேற்றுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

இப்ப சும்மா ரெண்டு தட்டு போட்டது பிழையெண்டால்....

கோழிகள்வர்கள் கூட மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு, பொட்டா, பூவா என்று கேட்டு தண்டனை வழங்கிய படியால் தான், போராட்ட காலத்தில், ஆவா கோஸ்டிகள், பெண்களுடன் சேட்டை  விடும் கோஸ்டிகள்,   தூள் கோஸ்டிகள் எல்லாம் துண்டைக் காணம், துணியைக் காணம் எண்டு  வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி போனவையள் எண்டது நிழலியருக்கு மறந்து போனதேன்?

 

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

 

அப்படி என்றால் சிங்களம் எதை அங்குள்ளவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றதோ அதை தான் அவர்கள் செய்கின்றனர்.

சிங்களம் இப்படியான எதிர்வினைகளை தான் எம் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கும். ஒரு படித்த மெச்சூரிட்டி கூடிய சமூகமாக அங்குள்ளவர்கள் மாறுவது சிங்களத்தின் நீண்டகால இனவழிப்பு திட்டத்துக்கு எதிராக போய்விடும். எனவே சிந்திக்க முடியாதவர்களாக, வன்முறையை முதல் தெரிவாக எடுப்பவர்களாக எம் மக்கள் மாறினால் அதனால் இலகுவாக இனவழிப்பை தொடர முடியும்.

இப்பவும், இந்த செயலின் மூலமும் சிங்களத்தின் நோக்கங்கள் தான் நிறைவேறுகின்றது. நாம் மேலும் மேலும் முட்டாள்களை அதிகம் கொண்ட சமூகமாக, நாகரீக வளர்ச்சியடையாத குழுமமாக, உலகின் பொதுப்பண்புக்கு மாறானவர்களாக ஆகிக் கொண்டு சிங்களத்தின் கனவை நிறைவேற்றுகின்றோம்.

கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

உங்கள் கோணத்தில் சிந்திப்பதென்றால் அதற்கான ஒரே தீர்வு உடனடியாக சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் கும்பல்களை வட மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் நீதியை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் தான்!

இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் தற்போதைய கள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை! இங்கு நடந்த சம்பவம் ஒரு குழுவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத செயல் இடம்பெற்ற போது அயலவர்களால் / ஊர் மக்களால் சடுதியாக ஒன்று கூடி, சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்தப்பட்ட இயற்கை நீதி!

இதற்கு காரணம் 10 வருடங்களாக தமிழ் மண்ணில் பரவலாக நடக்கும் 95% ஆன சமூக விரோத செயல்கள், தமிழின விரோத காட்டுமிராண்டித் தனங்கள் அனைத்திலும் சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் நேரடி பங்களிப்பு தான். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

இப்ப சும்மா ரெண்டு தட்டு போட்டது பிழையெண்டால்....

கோழிகள்வர்கள் கூட மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு, பொட்டா, பூவா என்று கேட்டு தண்டனை வழங்கிய படியால் தான், போராட்ட காலத்தில், ஆவா கோஸ்டிகள், பெண்களுடன் சேட்டை  விடும் கோஸ்டிகள்,   தூள் கோஸ்டிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி போனவையள் எண்டது நிழலியருக்கு மறந்து போனதேன்?

 

நீங்கள் கோழிக் களவர்களை மின் கம்பத்தில் வைத்து புலிகள் / போராளிகள் போட்ட காலத்துடன் அங்கிருந்து வந்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். புலிகள் ஆரம்பகாலத்தில் செய்த இப்படியான வேலைகள் பிழை எனக் கருதியதால் தான், தமிழீழ காவல் படை, நீதிமன்றம் என்பனவெல்லாம் அமைத்து சிங்கள அரசின் நீதித்துறையை விட சிறப்பாக நீதி வழங்கினார்கள். அதற்கென்றே தனித்து தமிழீழ சட்டக்கோவை உருவாக்கினார்கள். இணையத்தில் தேடினால் அவர்களின் சட்டங்கள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கலாம்,வாசித்துப் பாருங்கள்.

அவர்களின் நிர்வாகம் இயங்கி வந்த காலத்தில் விசாரணை இன்றி எவரும் தண்டிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்தனர்; அது புலிகளின் தளபதியாக இருந்தால் கூட...

Link to comment
Share on other sites

4 minutes ago, போல் said:

கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

உங்கள் கோணத்தில் சிந்திப்பதென்றால் அதற்கான ஒரே தீர்வு உடனடியாக சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் கும்பல்களை வட மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் நீதியை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் தான்!

இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் தற்போதைய கள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை! இங்கு நடந்த சம்பவம் ஒரு குழுவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத செயல் இடம்பெற்ற போது அயலவர்களால் / ஊர் மக்களால் சடுதியாக ஒன்று கூடி, சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்தப்பட்ட இயற்கை நீதி!

இதற்கு காரணம் 10 வருடங்களாக தமிழ் மண்ணில் பரவலாக நடக்கும் 95% ஆன சமூக விரோத செயல்கள், தமிழின விரோத காட்டுமிராண்டித் தனங்கள் அனைத்திலும் சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் நேரடி பங்களிப்பு தான். 

ஊர் மக்கள் சேர்ந்து ஒருவரை பிடிப்பது வேறு, இது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று. ஆனால் தாமே விசாரணை செய்வதும், தண்டனை கொடுப்பதும், படம் பிடித்து அதை பகிர்வதும் நாகரீக சமூகத்தின் நடவடிக்கை அல்ல. அப்படி கொடுத்தும் கடைசியில்  பொலிசில் தான் கொடுத்து உள்ளார்கள். அதை முதலியே செய்து இருக்கலாம்.

இதனால் அந்த நபர் திருந்துவார், இனி களவு செய்ய மாட்டார் என நினைத்தால், நீங்கள் குற்றம் / தண்டனை பற்றிய யதார்த்தம் அறியாதவராக இருப்பவர் என தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கு. அவர் முன்னை விட அதிகம் தைரியமும், வன்மமும் கொண்டவராக தான் ஆகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நீங்கள் கோழிக் களவர்களை மின் கம்பத்தில் வைத்து புலிகள் / போராளிகள் போட்ட காலத்துடன் அங்கிருந்து வந்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். புலிகள் ஆரம்பகாலத்தில் செய்த இப்படியான வேலைகள் பிழை எனக் கருதியதால் தான், தமிழீழ காவல் படை, நீதிமன்றம் என்பனவெல்லாம் அமைத்து சிங்கள அரசின் நீதித்துறையை விட சிறப்பாக நீதி வழங்கினார்கள். அதற்கென்றே தனித்து தமிழீழ சட்டக்கோவை உருவாக்கினார்கள். இணையத்தில் தேடினால் அவர்களின் சட்டங்கள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கலாம்,வாசித்துப் பாருங்கள்.

அவர்களின் நிர்வாகம் இயங்கி வந்த காலத்தில் விசாரணை இன்றி எவரும் தண்டிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்தனர்; அது புலிகளின் தளபதியாக இருந்தால் கூட...

இதனுள் போனால் பல விடயங்களை விவாதிக்க வேண்டி வரும்.

சிம்பிளாக சொல்வதானால், புலிகளோ, வேறு இயக்கங்களோ, தமிழீழ காவல்துறையோ தமக்கு உரிய வேலைகளை, லஞ்சம் இல்லாமல் செய்த போது எல்லாம் சரியாக இருந்தது.

மக்களுக்கு எந்த கவலையும் இருக்க வில்லை.

இப்போது சிங்கள போலீசார், தமது பகுதியினை மட்டுமில்லாது, எமது பகுதிகளையும் நாசமாக்கி கொண்டிக்கின்றனர்.

ஆகவே மக்கள் தம்மை, தமது உடமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை தோன்றி உள்ளது.

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

இதனுள் போனால் பல விடயங்களை விவாதிக்க வேண்டி வரும்.

சிம்பிளாக சொல்வதானால், புலிகளோ, வேறு இயக்கங்களோ, தமிழீழ காவல்துறையோ தமக்கு உரிய வேலைகளை, லஞ்சம் இல்லாமல் செய்த போது எல்லாம் சரியாக இருந்தது.

மக்களுக்கு எந்த கவலையும் இருக்க வில்லை.

இப்போது சிங்கள போலீசார், தமது பகுதியினை மட்டுமில்லாது, எமது பகுதிகளையும் நாசமாக்கி கொண்டிக்கின்றனர்.

ஆகவே மக்கள் தம்மை, தமது உடமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை தோன்றி உள்ளது.

இவ்வாறான செயல்களால் ஒருவர் திருந்தியோ அல்லது இவ்வாறு செய்கின்றவர்கள் பயப்பட்டோ இனி தவறு செய்ய மாட்டார்கள் என நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் நான் அப்படி நம்பவில்ல. இது இந்த நபரை மேலும் கெடுத்து இவர் போன்றவர்களை மேலும் வளர்த்தெடுக்கவே உதவும் என நான் நம்புகின்றேன்.

தீர்வு இல்லாத வெறும் தண்டனைகள் மேலும் மேலும் குற்றவாளிகளையே உருவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

இவ்வாறான செயல்களால் ஒருவர் திருந்தியோ அல்லது இவ்வாறு செய்கின்றவர்கள் பயப்பட்டோ இனி தவறு செய்ய மாட்டார்கள் என நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் நான் அப்படி நம்பவில்ல. இது இந்த நபரை மேலும் கெடுத்து இவர் போன்றவர்களை மேலும் வளர்த்தெடுக்கவே உதவும் என நான் நம்புகின்றேன்.

தீர்வு இல்லாத வெறும் தண்டனைகள் மேலும் மேலும் குற்றவாளிகளையே உருவாக்கும்.

இதை தண்டனை என்று கருதுவதால் தான் நீங்கள் குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இது மக்களின், கோபம், இயலாமை, விரக்தி.....

போனவாரம் தான் சிங்கள அமைச்சர் சொன்னார், யாழ்ப்பாணத்தில்  வாள் வெட்டு கோஸ்டிகள் கட்டுப்படுத்தப்பட்டனர் என. 

இந்த வாரம் மீண்டும் கைவரிசை காட்டி விட்டனர்.

இங்கே UK யில் கூட, neighbhourhood watch உள்ளது. அதன் அர்த்தம், பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதை கவனிப்பது. வீதியில் கூட பதாதைகளை வைத்துள்ளனர். திருடர்களுக்கு எச்சரிக்கை செய்ய. அதேவேளை வீட்டுக்குள் வந்த திருடனை தாக்குவதே சிக்கலானது இங்கே.... அப்படி ஒரு சமூக, சட்ட  அமைப்பு.

அதேபோல, இந்த திருடனோ, அவனது கூட்டாளிகளோ, இந்த ஏரியா ஆபத்தானது, சாத்துவார்கள், முகமும் தெரிஞ்சு போச்சு என்ற எச்சரிக்கை எண்ணம், வந்திருக்கும்.

நாலு சாத்து சாத்துவது, அங்கே சமூக அமைப்பு. 

போலீஸ்க்காரர் , இவர் போன்ற திருடர்களை, பூட்டிய அறைக்குள், தலை கீழாக கட்டி தொங்க விட்டு, மிளகாய் தூள் கண்ணுக்குள் அடிக்கும் சித்திரவதை அங்கே தான் நடக்கின்றது. அதை நாம் பார்ப்பதில்லை.

ஆனால் இந்த தட்டுக்கு மட்டும் கவலைப் படுவது.... சரிதானா?

Link to comment
Share on other sites

3 minutes ago, நிழலி said:

ஊர் மக்கள் சேர்ந்து ஒருவரை பிடிப்பது வேறு, இது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று. ஆனால் தாமே விசாரணை செய்வதும், தண்டனை கொடுப்பதும், படம் பிடித்து அதை பகிர்வதும் நாகரீக சமூகத்தின் நடவடிக்கை அல்ல. அப்படி கொடுத்தும் கடைசியில்  பொலிசில் தான் கொடுத்து உள்ளார்கள். அதை முதலியே செய்து இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன் உங்கள் தர்க்க ரீதியான விவாதம் "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதற்கு ஒத்ததாகும்! கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் ஆதரவு /பாதுகாப்பு தமக்கு இருக்கும் என்ற துணிவில் திருட்டுகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருடர்கள் சமூக விரோதிகள் இதன் பின்னர் அந்த பகுதிக்கு செல்ல அச்சப்படுவர்! இது தான் உண்மை! அது தான் அந்த மக்கள் சாதித்த சாதனை! இது இயற்கை நீதி! எழுதப்பட்ட சட்டங்களை விட வலிமையானது இயற்கை நீதி! எனவே கடைசியில் போலீசிடம் கொடுத்துள்ளார்கள் என்பது உண்மையை உணர மறுக்கும் விதண்டாவாதம்!

11 minutes ago, நிழலி said:

இதனால் அந்த நபர் திருந்துவார், இனி களவு செய்ய மாட்டார் என நினைத்தால், நீங்கள் குற்றம் / தண்டனை பற்றிய யதார்த்தம் அறியாதவராக இருப்பவர் என தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கு. அவர் முன்னை விட அதிகம் தைரியமும், வன்மமும் கொண்டவராக தான் ஆகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

நீங்கள் கருதுவது போல ஊர்மக்களின் தண்டனையால் இவர் திருந்தமாட்டார் என்றால், அதனது கருத்து அவருக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை போதாது என்பது தான்!

பல நாகரிகமான நாடுகளில் கசையடி தண்டனை இன்றும் உண்டு!

Link to comment
Share on other sites

திருடுவது குற்றம்,  ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் ஒருவரை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்தி காயப்படுத்துவது. ஒரு குற்றத்திற்கு என்னுமொரு குற்றம் தீர்வாகாது.  

தமிழர்களது போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு சிங்கள அரச இயந்திரத்தை அனுசரித்து வாழலாம் என்ற முடிவுக்கு பெரும்பான்மை மக்கள் வந்தபின் அவர்களது காவல்துறை சரியில்லை என்பதில் எந்த நியாயமும் இல்லை. 

திருடுபவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்லாம் தவிர தண்டனை வழங்குவது  குற்றமே.  தண்டனையை நீதிமன்றமே வழங்க முடியும். நீதி கிடைக்காத பட்சத்தில் நீதி கேட்டுப் போராடவேண்டியதுதான். போராடியும்  கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து போராடவேண்டியதுதான். ஆலமரம் புளியமரத்தின் கீழ் இருந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்கு கூட அதிகாரமற்ற இடத்தில் யார் வேண்டுமானலும் யாருக்கும் தண்டனை கொடுக்கலாம் என்பது தவறு. வேண்டுமானால்  போராடி அதிகாரத்தை கையில் எடு.. இன்ன இன்ன குற்றங்களுக்கு இன்ன இன்ன தண்டனை என்பதற்கான ஒப்புதலை மக்களிடம் இருந்து வாங்கி  யார் யார் தண்டனை வழங்க யோக்கியதை உள்ளவர் என்பதை வரையறை செய்து பின்னர் தண்டனை வழங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால கட்டத்தில் நாங்கள்  தவிர்க்கவேண்டியது தூரநோக்கற்ற சிந்தனையும் செயல்களும். சம்பவம் நடக்கும்போது நாம் அருகில் நிற்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும்கூட எங்களில் எத்தனைபேர் தண்டனை வழங்கும் அந்த ஊர்வாசிகளுடன் சேர்ந்து கள்வனை அடித்திருப்போம். இந்தச் செயலை ஆதரிக்கும் உறவுகளில் எத்தனைபேர் தமது பிள்ளைகளை நீயும் போய் இரண்டு தட்டு தட்டிட்டு வா என்று அனுப்பிவைப்பார்கள். மொத்தத்தில் நாங்கள் இல்லாத ஒரு ஊருக்கு வழிகாட்டுகிறோம்.

 நாங்கள் இன்றைய யதார்த்தத்தை உணராமல் புலிகள் அன்று அதைச் செய்தார்கள் இதைச்செய்தார்கள் என்று  இல்லாத புலிகளைப்பற்றி பேசி அந்த நாள் கனவில் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க எவரும் தயாரில்லை.  நாட்டில் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்யவேண்டிய வேலைகளை மக்கள் இன்று  செய்து கொண்டிருக்கிறார்கள். இன அழிப்பு அரசின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. எதிரி போரில் அழித்ததுபோக மீதியை  எமது மக்களின் சமுக, கல்வி,  பொருளாதார கட்டமைப்புகளைச் சிதைப்பதானால் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறான். 

இதை புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு இளைய சமுதாயத்தை மழுங்கடிக்க போதைப் பொருளை தாராளமாக விற்பனைக்கு விட்டிருக்கிறான். அராஜகத்தை வளர்த்தெடுக்க வாள்வெட்டுக் குழுக்களை ஏவிவிட்டிருக்கிறான். தமிழினம் காட்டுமிராண்டித்தனமான இனம் என்று  சர்வதேசத்துக்கு சாட்சியுடன் சொல்கிறான். படிப்படியாக தமிழினமும் ஒரு பொறுப்புள்ள இனமாக  ஒன்றிணைந்து சக மனிதர்களை அனுசரித்து  வாழ்வதிலிருந்து விடுபட்டு  ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் களவு எடுத்தவனை பற்றியே கதைக்கின்றிர்கள் ..... திருவாளர் கள்ளர் அவர்கள் இதுக்கு முன்னும் பல வீட்டில் இருந்து திருடி வந்திருக்கின்றார்.  ஒரு நிமிடம் களவு கொடுத்தவனை யோசித்து பாருங்கள். அவன் இன்னும்  இருக்கின்றானா அல்லது விட்டத்தில் தொங்குகின்றானா தெரியவில்லை......!  😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வீட்டில் இந்தக் கள்வரால் நடந்த அநியாயம் உங்களுக்கு தவறாகப் தெரியவில்லை 

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுதென்று புலம்புகிறீர்கள். இப்படிப்பட்ட கள்வரால் பணம், பொருள், மானம் மரியாதை, உயிர் இழந்து அடிஉதைபட்டு இருக்கும் அப்பாவிகளுக்காக அழுதிருக்கிறீர்களா? அடுத்த வீட்டில் நடந்த சம்பவம் உங்களை மனிதாபிமானம் பேசவைக்குது. இதுவே உன்கடவீட்டில் நடந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? எனது அயல் கிராமத்தில் வயதான அம்மா சாப்பிடுவதற்காக தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது மின்சாரம் நின்று  
விட்டது. நேரம் பாத்து கூரை வழியாக இறங்கியவன் அவரை கொலை செய்து, காதோடை அறுத்து அவரின் தாேட்டை காெண்டு பாேய்விட்டான். அவர் எவ்வளவு துடித்திருப்பார்? இது உங்கள் அம்மாவாக, சகாேதரியாக, மனைவியாக இருந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? சிங்களம் எங்கள் இனத்தை சுறணை இல்லாத காட்டு மிராண்டிகளாக உருவாக்குவதாேடு, நிரந்தரமாக சிங்களப்படை வடக்கில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதுபாேன்ற செயல்களை ஊக்குவிக்கிறான். இவன் குற்றவாளிகளை தண்டிப்பானா? நீதிமன்றம் பாேனால், எங்கள் பகற்காெள்ளை சட்டத்தரணிகள் மறுநிமிடமே வெளியில காெண்டு வந்துவிடுவினம். எம்மவருக்கு வேறவழியில்லை பாம்பை கண்டால் யாரும் யாேசித்துக்காெண்டிருக்க மாட்டார்கள். இதில் தண்டனை காெடுப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்று சாெல்ல முடியாது. ஆனால் இந்த திருடனையாே, அவன் குழுவையாே கண்டால் மக்கள் எச்சரிக்கையாய் இருக்கமுடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை பிடிச்சு அடிக்கிறதாலே இந்த கள்ளன் திருந்துவானோ இல்லையோ  இதை பார்க்கும் மற்ற கள்வர்களுக்கு ஒரு பயம் வரும்...எதற்கும் ஒரு எல்லை இருக்குது அல்லவா?...இவரை பிடித்து அடிக்காமல்,கொள்ளாமல் போலீசிடம் கொடுத்தால் பயம் விட்டுப் போகும்...திருப்பி பிணையில் வந்தும் இதைத் தான் செய்ய மனம் சொல்லும் ..இப்ப இவரை அடையாளம் காட்டிய படியால் அங்கு இருப்பவர்கள் அவதானமாக இருக்க சந்தர்ப்பங்கள் அதிகம்...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் களவை ஒழிக்க முடியாது ...கூலி வேலைக்கு போயாவது குடும்பத்தை காப்பாத்தாமல்[ஊரில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. ] குறுக்கு வழியில் இலகுவாய் அடுத்தவர் சம்பாதித்த பணத்தை அடைய நினைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு இந்த தண்டனை காணாது என்றே நான் நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சண்டமாருதன் said:

திருடுவது குற்றம்,  ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் ஒருவரை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்தி காயப்படுத்துவது. ஒரு குற்றத்திற்கு என்னுமொரு குற்றம் தீர்வாகாது.  

தமிழர்களது போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு சிங்கள அரச இயந்திரத்தை அனுசரித்து வாழலாம் என்ற முடிவுக்கு பெரும்பான்மை மக்கள் வந்தபின் அவர்களது காவல்துறை சரியில்லை என்பதில் எந்த நியாயமும் இல்லை. 

திருடுபவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்லாம் தவிர தண்டனை வழங்குவது  குற்றமே.  தண்டனையை நீதிமன்றமே வழங்க முடியும். நீதி கிடைக்காத பட்சத்தில் நீதி கேட்டுப் போராடவேண்டியதுதான். போராடியும்  கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து போராடவேண்டியதுதான். ஆலமரம் புளியமரத்தின் கீழ் இருந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்கு கூட அதிகாரமற்ற இடத்தில் யார் வேண்டுமானலும் யாருக்கும் தண்டனை கொடுக்கலாம் என்பது தவறு. வேண்டுமானால்  போராடி அதிகாரத்தை கையில் எடு.. இன்ன இன்ன குற்றங்களுக்கு இன்ன இன்ன தண்டனை என்பதற்கான ஒப்புதலை மக்களிடம் இருந்து வாங்கி  யார் யார் தண்டனை வழங்க யோக்கியதை உள்ளவர் என்பதை வரையறை செய்து பின்னர் தண்டனை வழங்கலாம். 

 சிறிய விடயங்களுக்கும் போராடி வெற்றி பெறலாம் என்பதற்கு நிறைய நாடுகள் உள்ளன.

ஆனால் இலங்கையில் அது சாத்தியப்பட அறிகுறிகளே இல்லை.

உதாரணத்திற்கு ஒரு கஞ்சா கடத்தல் விவகாரத்தில் சுமந்திரனின் ஆதிக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு திருடுவதை கண்டு பிடித்து தண்டனை கொடுப்பவர்கள் மிளகு திருடுபவனை கோட்டை விடுகிறார்கள் ஆனால் அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்  மிளகு க்காரர்கள்

இதை புலிகள் காலத்தில் ஒப்பிடுவதும் நல்லதல்ல புலிகள் தண்டனை கொடுத்ததை இப்பவும் நம்மவர்கள் பலர் ஏற்றுக்கொள்ள வில்லை நடந்த பக்க சார்பான நடவடிக்கைகள் மூலம்  அதாவது பூரணமான விசாரணை இன்றி தண்டனை கொடுத்த தாகும் 

Link to comment
Share on other sites

17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடுகு திருடுவதை கண்டு பிடித்து தண்டனை கொடுப்பவர்கள் மிளகு திருடுபவனை கோட்டை விடுகிறார்கள் ஆனால் அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்  மிளகு க்காரர்கள்

இதை புலிகள் காலத்தில் ஒப்பிடுவதும் நல்லதல்ல புலிகள் தண்டனை கொடுத்ததை இப்பவும் நம்மவர்கள் பலர் ஏற்றுக்கொள்ள வில்லை நடந்த பக்க சார்பான நடவடிக்கைகள் மூலம்  அதாவது பூரணமான விசாரணை இன்றி தண்டனை கொடுத்த தாகும் 

அப்படியே விசாரணைக்கு பிறகு நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை சரி என்கிறீர்களா...

Link to comment
Share on other sites

18 hours ago, satan said:

அடுத்த வீட்டில் இந்தக் கள்வரால் நடந்த அநியாயம் உங்களுக்கு தவறாகப் தெரியவில்லை 

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுதென்று புலம்புகிறீர்கள். இப்படிப்பட்ட கள்வரால் பணம், பொருள், மானம் மரியாதை, உயிர் இழந்து அடிஉதைபட்டு இருக்கும் அப்பாவிகளுக்காக அழுதிருக்கிறீர்களா? அடுத்த வீட்டில் நடந்த சம்பவம் உங்களை மனிதாபிமானம் பேசவைக்குது. இதுவே உன்கடவீட்டில் நடந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? எனது அயல் கிராமத்தில் வயதான அம்மா சாப்பிடுவதற்காக தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது மின்சாரம் நின்று  
விட்டது. நேரம் பாத்து கூரை வழியாக இறங்கியவன் அவரை கொலை செய்து, காதோடை அறுத்து அவரின் தாேட்டை காெண்டு பாேய்விட்டான். அவர் எவ்வளவு துடித்திருப்பார்? இது உங்கள் அம்மாவாக, சகாேதரியாக, மனைவியாக இருந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? சிங்களம் எங்கள் இனத்தை சுறணை இல்லாத காட்டு மிராண்டிகளாக உருவாக்குவதாேடு, நிரந்தரமாக சிங்களப்படை வடக்கில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதுபாேன்ற செயல்களை ஊக்குவிக்கிறான். இவன் குற்றவாளிகளை தண்டிப்பானா? நீதிமன்றம் பாேனால், எங்கள் பகற்காெள்ளை சட்டத்தரணிகள் மறுநிமிடமே வெளியில காெண்டு வந்துவிடுவினம். எம்மவருக்கு வேறவழியில்லை பாம்பை கண்டால் யாரும் யாேசித்துக்காெண்டிருக்க மாட்டார்கள். இதில் தண்டனை காெடுப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்று சாெல்ல முடியாது. ஆனால் இந்த திருடனையாே, அவன் குழுவையாே கண்டால் மக்கள் எச்சரிக்கையாய் இருக்கமுடியும்.

 

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுது என்று இங்கு எவரும் கருத்தை முன்வைக்கவில்லை. களவு எங்கும் நியாயப்படுத்தப்படவில்லை மாறாக தண்டனை கொடுக்கும் முறையே இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.. நீங்கள் இந்த சம்பவத்தை முழுக்க முழுக்க உணர்ச்சிவசத்தால் அணுகுகின்றீர்கள். இங்கு வழங்கப்படும் தண்டனையும்  அவ்வாறே அணுகப்படுகின்றது. இதை இவ்வாறே சரி என்று நியாயப்படுத்தினால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படமாட்டாது மாறாக குற்ங்கள் பெருகுவது மட்டுமல்ல  சிறு குற்றங்கள் பெருங் குற்றங்களாக பரிணமிக்கும். தெருவுக்கு நாலுபேர் கூடி அவர்களுக்கு எது குற்றம் என்று படுகின்றதோ அவர்களுக்கு தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

இலங்கை அரசு  சமூக இயல்புநிலையையும் சமநிலையையும் குலைப்பதை போரிற்கு பின்னரான தனது நடவடிக்கையாக கொண்டுள்ளது. அப்போதுதான் இந்த மக்கள் கூட்டத்தை தனக்கேற்றதுபோல் வைத்திருக்கமுடியும்.  இதற்காகவே வாள்வெட்டுக்குழுக்களை  கண்டும் காணாமலும்  அனுமதிப்பதும் கஞ்சா போதைப் பொருட்கள் பாவனையை வரலாற்றில் என்றுமில்லாதவாறு யாழில் மறைமுகமாக அனுமதித்தும் உள்ளது. 

இவற்றை எல்லாம் அவர்கள் சிங்களவர்களை கொண்டு செய்வதில்லை மாறாக தமிழர்களின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி செய்கின்றார்கள். இந்த பொருளாதார சமநிலையை குலைப்பதுயார் என்று பார்த்தால் அதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு பெருமளவு உள்ளது. தினமும் ஆயிரத்து இரு நூறு ருபாவுக்கு கூலிக்கு போய் ஆயிரம் ருபாவை நுண்கடனுக்கு வட்டிகட்டும் ஒரு தரப்பு மக்கள் கைகால்களில் மறைமுகமாக விலங்கிடப்பட்ட அடிமைகளாக உள்ளார்கள். என்னுமொருபுறம் மதம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் பல லட்சங்களை வெளிநாடுகளில் இருந்து உழைப்பின்றி பெற்றுக்கொள்ளும் மக்கள் கூட்டம். பொருளாதார சமநிலையை  வெளிநாடுகளில் இருந்து போகும் பணம் சீர்குலைக்கின்றது. புதிய வர்க்க ஏற்றதாள்வுகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தகின்றது.  இந்த ஏற்றதாழ்வுகள் முரண்பாடுளில் இருந்துதான் குற்றங்கள் முளைக்கின்றது அதையே பேரினவாதம் வளர்க்கின்றது. முன்பு எப்படி தமிழர்களது மத சாதிய பிரதேசவாத முரண்பாடுகளை பேரினவாதம் போராட்டத்தை சிதைக்க பயன்படுத்தியதோ அவ்வாறே ஒரு ஸ்திரமான சமூகம் கட்டமைப்புக்கு எதிராக இப்போது பயன்படுத்துகின்றது. 

என்னுமொரு இனத்தால் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இனத்துள் ஒரு குற்றம் நடக்கும்போது அதற்கான பின்னணி என்ன அதற்கு வழங்கப்படும் தண்டனையின் பின் விழைவு என்ன என்பதை அறிவுபூர்வமாக அணுகுவதே  பிரயோசனத்தை கொண்டுவரும்  தவிர உணர்ச்சிவசப்பட்டு எந்த பலனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மியாவ் said:

அப்படியே விசாரணைக்கு பிறகு நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை சரி என்கிறீர்களா...

சில தண்டனைகளை சரி என்பேன் சில தண்டனைகளை பிழை என்ன்பேன்  ஆனால் தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தண்டனைகளை பிழையென்பேன்

Link to comment
Share on other sites

31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சில தண்டனைகளை சரி என்பேன் சில தண்டனைகளை பிழை என்ன்பேன்  ஆனால் தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தண்டனைகளை பிழையென்பேன்

தீர விசாரித்து நிரூபித்திருந்தாலும் கூட குடுக்கபட்ட தண்டனை பிழை தான்...

இதுவே ஒரு சிறுமியை களவாட முயல்பவனுக்குண்டான வாதம் வேறு திசையில் இருந்திருக்கும்...

தண்டனைகள் தர்ம ரீதியுனுள் அடங்கி இருக்க வேண்டும் என்பது எனது வாதம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மியாவ் said:

தண்டனைகள் தர்ம ரீதியுனுள் அடங்கி இருக்க வேண்டும் என்பது எனது வாதம்....

நீதிபதி அப்படி பார்ப்பதில்லை சாட்சிகளும் சந்தர்பங்களும் சுற்றவாளியை கூட குற்றவாளியாக நிருபிக்கும் போது அங்கே தண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றது 

Link to comment
Share on other sites

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீதிபதி அப்படி பார்ப்பதில்லை சாட்சிகளும் சந்தர்பங்களும் சுற்றவாளியை கூட குற்றவாளியாக நிருபிக்கும் போது அங்கே தண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றது 

விசாரணை நடத்தி நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை முறை சரியா தவறா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மியாவ் said:

விசாரணை நடத்தி நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை முறை சரியா தவறா??

குற்றம் நிருபிக்கடுமாயின் தண்டனை சரிதான் ஆனால் தண்டனை கொடுக்க இவர்கள் யார் (மக்கள்)  தண்டனைகள் எல்லாவற்றுக்கும் சிறந்தது என்றால் ஒரு பொய் சொல்வதும் குற்றமே அப்படியானால் தண்டனை கொடுக்க வெளிக்கிட்டால் இந்த உலகத்தில் ??

ஒவ்வொரு குற்றங்களுக்கும் தண்டனை வகுக்கப்பட்டுள்ளது அதையே கொடுக்க வேண்டும் அடிப்பது அல்ல அவனும் மனிதன் தான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒரு ஜனநாயக நாடு.  அங்கு புலிகள் ஜனநாயகமாக தெரிவு செய்ய படாமல் தாமே ஒரு சட்டத்தை வகுத்திட முடியாது.  கு‌ற்ற‌ம் புரிந்தவர்களை இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை காவல் துறையிடமோ ஒப்படைத்து இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

11 hours ago, ரதி said:

கள்ளனை பிடிச்சு அடிக்கிறதாலே இந்த கள்ளன் திருந்துவானோ இல்லையோ  இதை பார்க்கும் மற்ற கள்வர்களுக்கு ஒரு பயம் வரும்...எதற்கும் ஒரு எல்லை இருக்குது அல்லவா?...இவரை பிடித்து அடிக்காமல்,கொள்ளாமல் போலீசிடம் கொடுத்தால் பயம் விட்டுப் போகும்...திருப்பி பிணையில் வந்தும் இதைத் தான் செய்ய மனம் சொல்லும் ..இப்ப இவரை அடையாளம் காட்டிய படியால் அங்கு இருப்பவர்கள் அவதானமாக இருக்க சந்தர்ப்பங்கள் அதிகம்...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் களவை ஒழிக்க முடியாது ...கூலி வேலைக்கு போயாவது குடும்பத்தை காப்பாத்தாமல்[ஊரில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. ] குறுக்கு வழியில் இலகுவாய் அடுத்தவர் சம்பாதித்த பணத்தை அடைய நினைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு இந்த தண்டனை காணாது என்றே நான் நினைக்கிறேன்.

 

இவர்கள் சிறிய கள்ளர் - ஏழைகள். பெரிய கள்ளர் வாள் வெட்டு குழுக்களையும் சுவிஸ்குமார் போன்ற கொலைகாரரையும் உங்கள் அண்ணரையும்  பிள்ளையானையும் துணைக்கு வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.