Jump to content

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்

e62364c2f7f171a55bd567409bd0caa3?s=26&d=By ஈழமதி On Feb 10, 2019
 
 
Share

 

17882-2-9d20d639128e598820430c741125ad73வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன், இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்பாடுகள்தான் எமது இடத்தின் களவு கொள்ளையை குறைக்கமுடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  திருடர்கள் என்றால்... 40 - 50 வயதுக்கு மேல் இருப்பார்கள்.
இவரைப் பார்க்க இளைஞராக உள்ளார். படிக்கிற காலத்தில், இந்த அவமானம் தேவையா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

அப்ப கள்ளனை பிடிச்சு அவனிடம் இலஞ்சம் வாங்கிவிட்டு.. ஓடிடா என்று துரத்திவிடும்.. சொறீலங்கா பொலிஸில் ஒப்படைப்பது தான் சட்டமாகுமோ..?!

சொறீலங்காவில் எவ்வளவு.. சட்டம் மதிக்கப்படுகிறது.. அமுல்படுத்தப்படுகிறது...?!

Link to comment
Share on other sites

50 minutes ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

முற்காலம் என்பது மக்கள் civilization ஆக முற்பட்டதான காலம். குழுக்களாக ஆளை ஆள் கட்டி வைத்து துன்புறுத்தும் காலம்.

போராட்ட தொடங்கிய ஆரம்பத்தில் சிவில் நிர்வாகம் அற்றுப் போனதால் போராளிகள்  இவ்வாறான தண்டனைகளை கொடுத்ததை மக்கள் தற்காலிகமாக வரவேற்றார்கள். புலிகள் நீதிமன்றங்களை உருவாக்கிய பின்னர அந்த நடைமுறை அற்றுப் போனது. இப்போது அதைச் செய்வது சரியல்ல.  உண்மையில. காட்டுமிராண்டித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை வழங்குவது என்பது பழிதீர்ப்பது அல்ல குற்றவாளியை திருந்தி நடக்க செய்வதாக அமையவேண்டும். சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது உண்மை. இதுபோன்ற தான்தோன்றித்தனமான தண்டனைகள் வழங்குவதன்மூலம் திருடன் திருந்துவானாக இருந்தால் மிக்க சந்தோசம். ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழினத்தின்அடுத்த தலைமுறைக்கு நல்ல அடித்தளத்தை இட்டுச் செல்லாது. இந்த கள்வன் இந்த தண்டனைக்கு பின் இன்னும் உற்சாகமாகவும் தந்திரமாகவும் எப்படி செயற்படலாம் என்று எண்ணுவதற்கும் அல்லது தனது இனத்தை நிரந்தரமாக வெறுப்பதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இராணுவம் பொலிஸ் சிங்கள அரசும் இவனைப்போல சூடுபட்ட பூனைகளை உதவிக்கு வைத்துக்கொண்டு இவர்களின் சேவைகளை நாசகார வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தக்காட்டு மிராண்டிதனமான ஒரு காரியத்தை செய்துவிட்டு அதை சரியென்றும் நியாயப்படுத்துகின்றார்கள்.

இவர்களுக்கும் தென்னிந்திய பஞ்சாயத்து கூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

ஏற்கனவே ஏழாலைக்காரருக்கு கிணறு காவியள் எண்டொரு பட்டமும் இருக்கு. 🤣

யாழ்களத்திலை ஏழாலைக்காரர் ஆரும் இருந்தால் மன்னிக்கவும்.நான் சும்மா பகிடிக்கு சொன்னனான்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

அண்மையில் இளவாலையில் நடந்த ஒரு பாலியல்வன்புணர்வு தொடர்பான குற்றத்தில் ஏழாலை வடக்கைச் செர்ந்த ஒருத்தனும் அடக்கம் அவனுக்கு ஏழாலை வடக்கைச் சேர்ந்த அனைவரதும் ஆதரவு இப்போதும் இருக்கு. யாராவது உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் ஏழாலை வடக்குப்பகுதியில் சம்பந்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

அய்யயோ... ஏழாலைகுள தான் நம்ம குறிப்பு உலாவுது... 😨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

அய்யயோ... ஏழாலைகுள தான் நம்ம குறிப்பு உலாவுது... 😨

 

tw_anguished: tw_anguished: tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

மக்கள் ஒருபோதும் சட்டத்தை தாங்கள் கையில் எடுக்க கூடாது. இது பிழையான செயல். இதென்ன முற்காலம்? எது அது?

சட்டம் தன் கடமையைச் செய்தால் மக்கள் ஏன் சட்டத்தில் கை வைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முற்காலம் என்பது மக்கள் civilization ஆக முற்பட்டதான காலம். குழுக்களாக ஆளை ஆள் கட்டி வைத்து துன்புறுத்தும் காலம்.

போராட்ட தொடங்கிய ஆரம்பத்தில் சிவில் நிர்வாகம் அற்றுப் போனதால் போராளிகள்  இவ்வாறான தண்டனைகளை கொடுத்ததை மக்கள் தற்காலிகமாக வரவேற்றார்கள். புலிகள் நீதிமன்றங்களை உருவாக்கிய பின்னர அந்த நடைமுறை அற்றுப் போனது. இப்போது அதைச் செய்வது சரியல்ல.  உண்மையில. காட்டுமிராண்டித்தனம். 

அரசும் காவல்துறையும் தங்கள் கடமைகளை சரிவர செய்தால் பொதுமக்கள் ஏன் சட்டத்தை தம்வசம் ஆக்கப்போகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vanangaamudi said:

. இந்த கள்வன் இந்த தண்டனைக்கு பின் இன்னும் உற்சாகமாகவும் தந்திரமாகவும் எப்படி செயற்படலாம் என்று எண்ணுவதற்கும் அல்லது தனது இனத்தை நிரந்தரமாக வெறுப்பதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒளி நாடாவில் தடவி கொடுப்பது போல்  அடி போட்டால் நீங்கள் சொல்வது போல் திரும்பவும் களவுக்கு வரலாம்.  

 

Link to comment
Share on other sites

காட்டுமிராண்டித்தனமே ஒழிய இது வேறில்லை

லண்டனில் கடை ஒன்றில் காசை திருடியவரை திட்டி வீடியோ எடுத்த செயலையே தவறென்றவர்கள், அவரை பிடித்து பொலிசில் கொடுத்து இருக்கலாம் என்றவர்கள் இங்கு இதை நியாயப்படுத்த முனைவது அல்லது அமைதியாக இருப்பது ஏன்?

 சமூகமே தவறு செய்யும் போது அதால் பாதிக்கப்பட்டவர் வணங்காமுடிஎழுதியிருப்பதை போல, பிடிபட்டவர் மேலும் மேலும் சமூக விரோத செயலை செய்யத்தான் இது தூண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இப்படியான கள்வர்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது களவெடுக்க போன இடத்தில்  சிறுமி வன்புணர்வு களவெடுக்க சென்ற இடத்தில் கொலை எல்லாம் அங்குதான் அங்கு போலிஸ் பெயருக்கு த்தான் இந்த நாடுகளில் அப்படியா கள்வன் என்று பிடித்துகொடுத்தால் ஆதாரம் கிடைக்கும்வரை கொக்கு போல் நின்று அமத்துவார்கள். அங்கு காசு குடுத்தால் எல்லாம் சரி அல்லது களவில் பங்கு குடுத்தால் சரி மறுபடியும் களவுக்கு அடுத்த ஏரியாவுக்கு செல்லலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

காட்டுமிராண்டித்தனமே ஒழிய இது வேறில்லை

லண்டனில் கடை ஒன்றில் காசை திருடியவரை திட்டி வீடியோ எடுத்த செயலையே தவறென்றவர்கள், அவரை பிடித்து பொலிசில் கொடுத்து இருக்கலாம் என்றவர்கள் இங்கு இதை நியாயப்படுத்த முனைவது அல்லது அமைதியாக இருப்பது ஏன்?

 சமூகமே தவறு செய்யும் போது அதால் பாதிக்கப்பட்டவர் வணங்காமுடிஎழுதியிருப்பதை போல, பிடிபட்டவர் மேலும் மேலும் சமூக விரோத செயலை செய்யத்தான் இது தூண்டும்.

இலண்டணில சரியான பொலீஸ் சிஸ்டம் இருக்குது.

அங்கே நேர் எதிர்.... 

இங்க பொலீஸ்காரர்கள் கையை நீட்டினால் துளைந்தார்கள். அங்கே காசுக்கும், சாத்துக்கும் கையை நீட்டுவார்கள்.

காசுக்கு நீட்டினால், ஆள் மீண்டும் பிஸ்னஸில் இருப்பார் என்பதால், நாலு சாத்துபோட்டு, ஊருக்கு முகத்தையும் காட்டியாச்சு.

ஆகவே இரண்டையும் ஒப்பிடமுடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

அங்கு இப்படியான கள்வர்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது களவெடுக்க போன இடத்தில்  சிறுமி வன்புணர்வு களவெடுக்க சென்ற இடத்தில் கொலை எல்லாம் அங்குதான் அங்கு போலிஸ் பெயருக்கு த்தான் இந்த நாடுகளில் அப்படியா கள்வன் என்று பிடித்துகொடுத்தால் ஆதாரம் கிடைக்கும்வரை கொக்கு போல் நின்று அமத்துவார்கள். அங்கு காசு குடுத்தால் எல்லாம் சரி அல்லது களவில் பங்கு குடுத்தால் சரி மறுபடியும் களவுக்கு அடுத்த ஏரியாவுக்கு செல்லலாம் .

 

29 minutes ago, Nathamuni said:

இலண்டணில சரியான பொலீஸ் சிஸ்டம் இருக்குது.

அங்கே நேர் எதிர்.... 

இங்க பொலீஸ்காரர்கள் கையை நீட்டினால் துளைந்தார்கள். அங்கே காசுக்கும், சாத்துக்கும் கையை நீட்டுவார்கள்.

காசுக்கு நீட்டினால், ஆள் மீண்டும் பிஸ்னஸில் இருப்பார் என்பதால், நாலு சாத்துபோட்டு, ஊருக்கு முகத்தையும் காட்டியாச்சு.

ஆகவே இரண்டையும் ஒப்பிடமுடியாது.

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

இது தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.

பொலிஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்.. மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சுயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.. என்பதை குற்றவாளிகளுக்கும்... அவர்களை ஊக்குவிக்கும் சிங்களப் பொலிஸாருக்கும் ஏவல்படைகளுக்குமான செய்தியாகவே இது இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளியை துன்புறுத்துவதும் உடலைக் காயப்படுத்தி வேதனைக்குள்ளாக்குவதும் ஒரு மனிதாபிமானமுள்ள நாகரிக வளர்ச்சியடைந்த ஒரு இனத்தின் தண்டனை மார்க்கமாக இருக்கமுடியாது. ஒரு மனிதன் குற்றவாளியாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குற்றவாளியின்  மனோநிலையும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கு உகந்தால் போல் தண்டனை வழங்கப்பட்டால் குற்றவாளி திருந்தி இயல்புவாழ்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

எத்தனையோ மனிதர்கள் வேறொருவரால் தெரிந்தோ தெரியாமலோ அநியாயமாக ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டு விட்டோம் என்று அங்கலாய்ப்பதை நாம் கண்டிருப்போம் கேட்டிருப்போம். நாட்டில் சட்டம் செவ்வனே செயற்படவில்லை என்ற கவலை ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்றாலும் அதை தனிமனிதர் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் மிஞ்சப்போவது  எதிர்காலத்தில் எவராலும் சரிசெய்ய முடியாத இனக்குழப்பம் களேபரம் காழ்ப்புணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாங்கள் என்னதான் குத்தி முறிந்து நியாயம் பேசினாலும் அங்குள்ள மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் களவு எடுத்தால் இனி அடிதான் என்பதில் மாற்றம் இருக்காது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலிபான்கள் என்று சொல்லிக்கொண்டு செய்தால் நல்லது!

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது!

Link to comment
Share on other sites

6 minutes ago, கிருபன் said:

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது! 

அது தான் உண்மை!

சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் இராணுவ கும்பல்கள் ஒருபக்கம் சட்டவிரோத புத்தர் சிலைகளை நிறுவிக்கொண்டு மறுபுறத்தில் சகல சமூக விரோத செயல்களிலும் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும்  இருந்து கொண்டு புத்தர் சிலை என்பது காட்டுமிராண்டிகளின் சின்னம் என்பதை நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டுப்படுத்த தமிழர் பகுதியில் உரிய கட்டமைப்புகள் தற்போது இல்லை.

இந்தப் பின்னணியில் வேறுவழியின்றி தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சமூகவிரோத கும்பல்களை கட்டுப்படுத்தும், காமுகர் பிடியிலிருந்து தப்பும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தமது பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் மக்கள் தாங்களே ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.