Jump to content

EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…

February 11, 2019

brexit.png?resize=775%2C453

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில்  மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.

அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வரும் நிலையில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரு தீர்மானம் வர உள்ள நிலையில், பிரெக்சிற் தொடர்பில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 53 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் அல்லது பிரசெல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 49 சதவீதமானோர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  பிரக்ஸிற் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, கடந்தாண்டு வரை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை பிரித்தானிாவில் இருந்து நெதர்லாந்துக்கு மாற்றியுள்ளன அல்லது மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளன என, நெதர்லாந்து தெரிவிக்கிறது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட நெதர்லாந்தின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான முகவராண்மை, 42 நிறுவனங்கள் இவ்வாறு தமது நாட்டுக்கு வருகின்றமை காரணமாகச் சுமார் 2,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுமென்றும் பாரிய தொகையிலான அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தது.

இவ்வாறு இடமாறுவதாக அறிவித்துள்ள நிறுவனங்களில் அநேகமானவை ஐ.இராச்சியத்தைச் சேர்ந்தவையெனவும், இன்னும் சில, ஆசியாவையோ, ஐ.அமெரிக்காவையோ சேர்ந்தவையெனவும் நெதர்லாந்து தெரிவிக்கிறது.

நெதர்லாந்து தவிர, ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கும் பல நிறுவனங்கள் முயல்கின்றன எனவும், நெதர்லாந்துத் தரப்புத் தெரிவிக்கிறது.

 

http://globaltamilnews.net/2019/112847/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பிரித்தானியா படுற கஷ்டம் சொல்லி வேலையில்லை.தெரேசா மே பதவியை விட்டு போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக முடியுமென இங்கு பரவலாக கதைக்கின்றார்கள். 🚶‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி மீண்டும்... பொருளாதாரச் சரிவை நோக்கிப் போகுது. கிறீஸ் இன்னும் திடமான பொருளாதார நிலையை அடையவில்லை. பிரான்சில் பொருண்மிய வளர்ச்சி குன்றி இருக்கிறது. இப்படி... ஐரோப்பிய ஒன்றியம் முழுக்க.. ஒரு பொருண்மிய ஸ்திரத்தன்மை அற்ற நிலை நிலவும் நிலையில்.. பிரித்தானியா.. வெளியேறுவது சரியான பிரிவுக்குப் பின்னான கொள்கை வகுக்கப்படின்..  பிரித்தானியாவுக்கு பெரிய பாதிப்பை பொருண்மிய ரீதியாக நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தாது.

ஆனால்.. பிரித்தானிய அரசியல் - வியாபாரிகளை பொறுத்த வரை.. ஐரோப்பிய வர்த்தகம் தான் பாதிக்கப்படும். அதுதான் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த பல பிரித்தானியர்கள் 

பிரெஞ்சுக்குடியுரிமையை  பெற விண்ணப்பித்து  பெற்றும் வருகிறார்கள்

நீண்ட தூர நோக்கில்  தமக்கு இதுவே  சாதகமானது  என்கிறார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பெரிய பிரித்தானியா படுற கஷ்டம் சொல்லி வேலையில்லை.தெரேசா மே பதவியை விட்டு போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக முடியுமென இங்கு பரவலாக கதைக்கின்றார்கள். 🚶‍♂️

உண்மைதான் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.இப்போதைய நிலையில் எவரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Ahasthiyan said:

உண்மைதான் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.இப்போதைய நிலையில் எவரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதை.

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைத்தால் சிங்கன் வருவார் தானே..:grin:

Corbyn à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைத்தால் சிங்கன் வருவார் தானே..:grin:

Corbyn à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு தொங்கு பாராளு மன்றம் வரலாம். இப்ப தேர்தல் வருவதை ஒருவரும் விரும்பவில்லை. எதிர் கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை. ஓரளவு ஆளும் கட்சியுடன் சமரசம் பேசி, ஐரோப்பாவில் இருந்து வெளியேறலாம். சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுத்தால், 5-10 வருடங்களில் பவுண் மீட்சி பெறலாம். இப்பவுள்ள அரசியலில் பெரும் பிரச்னை அரசியல் சார்ந்த தனிப்பட்ட வர்த்தகம். நாடா ? வீடா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.