Jump to content

ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு.

kattankudy

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஹிகாத் ஆயுதக்குழுவினரால் இராணுவ மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என ஹிஸ்புல்லா சில வருடங்களுக்கு முதல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

காத்தான்குடியில் பெருந்தொகையானவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட வரவேற்றில் துப்பாக்கிகளுடன் இராணுவ மரியாதையை காத்தான்குடி ஹிகாத் ஆயுதக்குழு வழங்கியுள்ளது 

kattankudy 1

kattankudy

மூலத்தை காண இங்கே அழுத்தவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு பாடசாலை விழாவிற்கு வருகை தரும் அதிதிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட முடியுமா?

ராணுவ அணிவகுப்பு மரியாதை என்பது ராணுவ மற்றும் பொலிஸாரினால் மட்டுமே வழங்கப்பட முடியுமேயன்றி, ஒரு பாடசாலயினால், அந்தப் பாடசாலை மாணவர்களைக் கொண்டு வழங்கப்பட முடியாது. 

பாடசாலை மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்படுதல் என்பது நினைத்துப் பார்க்கமுடியாதவொன்று. 

இவர்கள் முஸ்லீம் ஊர்காவல்ப் படைவீரர்கள் என்றால்க் கூட, பாடசாலையினுள் ராணுவ மரியாதை செய்யவேண்டிய தேவை என்ன?

இப்படியான ஒரு சம்பவத்தைத் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் நினைத்துப் பார்க்க முடியுமா? அல்லது சிங்களவர்கள்தான் அப்படியான ஒரு நிகழ்வை இதுவரை காலமும் ஒரு பாடசாலையில், அந்த மாணவர்களைக் கொண்டு நடத்தியிருப்பார்களா?

இவை விளையாட்டுத் துப்பாக்கிகள் என்று ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டால்க் கூட, தவறாகுமே? 

ஏதோ குழப்பம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்று தேடிப் பார்த்தேன். ஆனால், பின்னணியில் உள்ள கடைத்தெரு, கூகிள் மப்பில் அதே பெயர்களுடன், மைதான வாயிலுக்கு முன்பாக இருக்கிறது. ஆக, அணிவகுப்பு நடைபெற்ற இடம் சரியானதுதான். 

இது எப்படிச் சாத்தியம்? 

Link to comment
Share on other sites

 

7 hours ago, ragunathan said:

படம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்று தேடிப் பார்த்தேன். ஆனால், பின்னணியில் உள்ள கடைத்தெரு, கூகிள் மப்பில் அதே பெயர்களுடன், மைதான வாயிலுக்கு முன்பாக இருக்கிறது. ஆக, அணிவகுப்பு நடைபெற்ற இடம் சரியானதுதான். 

இது எப்படிச் சாத்தியம்? 

இது National Cadet corps எனப்படும் அணியில் உள்ளவர்கள். NCC coprs ஆனது இலங்கை பாதுகாப்பு படையால் பாடசாலை மாணவர்களுக்காக இயக்கப்படும் கடேட் குழு. பல நாடுகளில் இவ்வாறான கடேட் அணியினர் உள்ளனர்.

மட்டக்களப்பில் கல்லடி பாலத்துக்கு அருகில் மட்டக்களப்பு அலுவலகம் அமைந்து இருக்கு என அறிய முடிகின்றது. மட்டக்களப்பில் உள்ளானவர்கள் உறுதிப்படுத்தலாம்.

மூத்த பத்திரியையாளராக இருந்து கொண்டு துரைரட்ணம் அவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற செய்திகளை வெளிவிடுவது எதிர்காலத்தில் ஹிஸ்புல்லா போன்ற பச்சை இனவாதிகளுக்கு அனுகூலமாக அமைந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே க்கு முன் திரைமறைவில் நடந்த காட்சிகள்.. இப்பே கண்முன்னே நிகழ்த்தப்படுகின்றன.

இந்த கேவலத்தனத்தால் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வை இவர்கள் சந்திக்க நேரிட்டது. இன்றேல்.. இப்போது யாழ்ப்பாணம்.. இன்னொரு காத்தான்குடியாக மாறி இருக்கும் எப்பவோ. இப்பவும் எப்பவும்.. அந்த ஆபத்து இருந்தே வருகிறது. 

15 hours ago, நிழலி said:

இது National Cadet corps எனப்படும் அணியில் உள்ளவர்கள். NCC coprs ஆனது இலங்கை பாதுகாப்பு படையால் பாடசாலை மாணவர்களுக்காக இயக்கப்படும் கடேட் குழு. பல நாடுகளில் இவ்வாறான கடேட் அணியினர் உள்ளனர்.

அவர்கள் ஆயுத அணிவகுப்பை நடத்த பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனரா...?????!

பிரித்தானியாவில் நானறிந்த வரை கண்டதில்லை. கனடாவில் இருக்குமோ..??! ஏன் நாங்கள் கல்வி கற்ற காலத்தில் சாரணிய அணிவகுப்பே இருக்கும்..  மாணவர்களிடம் ஆயுதத் திணிப்பு.. சிறுவர் போராளிகள்.. சிறுவர் இராணுவத்தில் இருந்து எப்படி வேறாகிறது...???!

இது முஸ்லீம் ஜிகாத்.. ஊர்காவல் படையின் எச்சம் என்பதில்.. என்ன சந்தேகம்.!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் வந்து விளக்கம் தந்தால்தான் உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, thulasie said:

நிழலி தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

நன்றாக வாசித்து கருத்தெழுத பழகவும்! நிழலியே  மட்டக்களப்பில் இருந்து யாரையாவது உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறார்?

Link to comment
Share on other sites

28 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றாக வாசித்து கருத்தெழுத பழகவும்! நிழலியே  மட்டக்களப்பில் இருந்து யாரையாவது உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறார்?


எனக்கு ஒன்றை வாசித்து கிரகிக்கும் அறிவு, உங்களை விட குறைவு அண்ணே!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.