Jump to content

‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு

khushboosundar1-kF0G-621x414@LiveMint-720x450.jpg

‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,குஷ்பு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளனர்.

‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது. 5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்கிறார்கள்.

அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள். தமிழக அரசின் கடன் தொகை 4 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நடிகர் கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ எங்கள் கூட்டணிக்கு வரவேண்டுமென்று நாங்கள் அழைக்கவில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் எல்லோரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். எமது கூட்டணிக்கு வருவது அவரவர் விருப்பம்” எனக் கூறினார்.

http://athavannews.com/பிரதமருக்கு-கோபேக்-மோடி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.