Jump to content

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு

Editorial / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:48 Comments - 0

-இலட்சுமணன்

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.   

யுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் உறவுகள், இப்போது அந்தத் தேவையற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை, தமிழர் பிரதேசங்களின் மேம்பாட்டுக்காக, ஏன் செலவு செய்ய முடியாது என்ற கேள்வி, இப்போது பலமாக சகல மட்டங்களிலும் எழுந்திருக்கிறது.    

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு, எது என்ற கணிப்பொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, போராளிகள் கட்டமைப்பு, பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவை என ஒரு பட்டியல் நீண்டு செல்கிறது.   

இலங்கையில் போருக்கு பின்னரான, சமூகப் பொருளாதார அபிவிருத்தியில், புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வாறிருக்கிறது என்பதற்கான கேள்வியை, நாம் கேட்டுக் கொண்டால், பதில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலேயே கிடைக்கும்.   

இலங்கைத் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகள் என்று சொல்லுகிற பொழுது, ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய, அமெரிக்க நாடுகளில் இருப்பவர்களையே பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். இவர்களில், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தொழில் தேடிச் சென்றவர்கள், நாட்டில் யுத்தம் தொடங்கிய 70களுக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள், சகோதர இயக்கங்களின் அச்சுறுத்தல், பல்வேறு தரப்புகளின் பிரச்சினைகள் காரணமாக வௌியேறியவர்கள், அரச பாதுகாப்புப் பிரிவினரின் நெருக்கடிகளால் நாடு கடந்தவர்கள், சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் எனப் பலரையும் உள்ளடக்கும் பொதுப் பெயர்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள்.   
இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர், பலவாறான ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகம் பேர், நாட்டுக்கு மீளத் திரும்புவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள்.   

ஆனால், புலம்பெயர் நாடுகளிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நம் நாடு பற்றிய சிந்தனைகள் இருக்குமா, இவர்கள் உதவிகளை மேற்கொள்வார்களா என்பது முதல் கேள்வியாகும்.   

இந்த இடத்தில்தான், போருக்கு பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்கின்ற விடயப்பரப்பு உருவாகின்றது. இது பெரியதொரு விடயம் என்றாலும், அதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது முக்கியமானது. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக் குறித்து, அதிகம் அறிக்கையிட முடியாதென்றாலும் இந்த விடயப்பரப்பு குறித்துப் பேசப்படுவதே பெரியது என்று கொள்ளத்தான் வேண்டும்.  

இலங்கை என்று பொதுப்படையில் சொன்னாலும், வடக்கு, கிழக்கை முன்னிலைப்படுத்துவதே புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூகச் சிந்தனையாகும். புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது, நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் வடக்கு, கிழக்கின் வறுமை நீங்கப்பெற்றிருக்கும் என்ற சிந்தனை இப்போது கருக்கொண்டுள்ளது.   

போர் முடிந்து 10 வருடங்களாகின்ற போதும், வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்கள், மிகவும் மோசமான வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தாராளமாகத் தேவை என்பதுதான் பிரதானமான நோக்கமாகும்.   

image_1d32489c37.jpg

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய தலைவர் ஜெயதேவன், எஸ்.வியாழேந்திரன் (நா.உ), மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன்

மனிதநேயம் மிக்க, மனிதாபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளின் சமூக சிந்தனை சிறப்பானதாக அமையவேண்டும். நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அனர்த்தம் என்பனவற்றால் வடக்கு, கிழக்கின் கல்வி,பொருளாதாரம் என்பன பெருவீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதை அறிக்கையிட்டுத்தான் தெரியப்படுத்த வேண்டும் என்றில்லை. ஆனால் இவை மீண்டும் உச்ச நிலைக்குக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.   

 அரசாங்கத்தின் திட்டங்களை, மக்கள் சரியாக பயன்படுத்தினால் வடக்கு, கிழக்கின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை என்ற கருத்துகள் இருந்தாலும், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளானது சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது எதார்த்தம்.   

நிலையான அபிவிருத்தியை நோக்கியதான, இலங்கைத் தமிழர்களின் கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் எடுக்கப்படும் கரிசனைகளுக்கு புலம்பெயர் உறவுகளின் பக்கத்துணை அவசியமான தேவை. மக்களுக்கு ஏற்றதும் வளப்பயன்பாட்டுக்கு ஏற்றதுமான தொழிற்றுறை, தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு போன்ற கைங்கரியங்கள் ஊடாக, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நிலையான அபிவிருத்திக்கு வடக்கு, கிழக்கை இட்டுச் செல்ல முடியும்.   

நிதிகளையும் சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதும் என்கிற மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரம், கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டுமாக இருந்தால், நிதி உதவிகள் மாத்திரமல்ல, தொழில் சார், உளம் சார் திறன்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்ற ஒரு நிலை உருவாக்கப்படுவதானது சிறந்ததொரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.   

ஆலயங்களின் கட்டுமானங்களிலும், ஆடம்பரச் செலவுகளிலும் அதிக பணத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு இருந்தாலும், சாதாரணமான செயற்பாடுகளுக்கே நிதியின்றி நுண்கடன் கம்பனிகளிடம் கடனைப்பெற்று, வாழ்க்கை நடத்துகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் தொடர்கையில் வறுமை எவ்வாறு ஒழிக்கப்படும் என்று கேள்வியை கேட்டுக் கொள்ளலாம்.  

இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான புலம்பெயர் மக்களின் அக்கறைகள் வரவேற்கப்பட வேண்டியவைகளே. இதில், இலங்கையில் உள்ள அரசாங்க கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டால், அணுகுதல் இலகுவாக இருக்கும்.   

புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் இருக்கின்ற அதேவேளைகளில், அந்த உதவிகளால் பயன்பெறுவோரைத் தேர்வு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அது அவர்களின் உதவி வழங்கும் மனோநிலையிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன.   

இவ்வாறாக உதவிகளைப் பெறுபவர்கள், தொடர்ந்தும் தங்களுக்கு மாத்திரமே உதவிகள் தேவை என்கிற ‘சோம்பேறி மனோநிலைக்கு’ வந்துவிடுதல் உருவாகாதிருக்க, அரச நிறுவனங்களின் ஊடாக வழங்குவதன் மூலம், ஒருவருக்குப் பல உதவிகள் கிடைக்க, சிலர் ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.   

போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்த காலங்களிலும் போருக்குப் பின்னரும் புலம்பெயர் அமைப்புகளின் உதவிகள் தாராளமாகக் கிடைத்திருந்தாலும் அவற்றின் சரியான பயன்பாட்டுத்தன்மை இல்லாமை காரணமாக எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படாத நிலை வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது.   

அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளின்போது, நிர்வாகச் செலவாக அதிகம் செலவு செய்வது குறித்துப் பலரும் குறைபட்டுக்கொள்வர். ஆனால், புலம்பெயர் அமைப்புகளில் அப்படியான நிலைமை குறைவாகவே காணப்படுகின்றது என்பது சிறப்பாகும்.   

புலம்பெயர் மக்களின் உதவிகள் நேரடியாக வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செல்வதையும் பிழையான வழிகளில் செல்வதையும் அரசாங்கம் விரும்புவதில்லை என்பது யதார்த்தமே. நாட்டின் கொள்கைகளை மீறியதான செயற்பாடுகளை நடத்தி விடுவதால், குழப்பங்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாலேயே கட்டுப்பாடுகள் உருவாகின்றன.   

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் உதவ வரும் சில புலம்பெயர் அமைப்புகள், அதற்காக இலங்கை அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்ளத் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் செய்யும் பணிகள், நீடித்த பயனைத்தர வேண்டுமானால், அதற்கு அரச நிறுவனங்களின் தொடர்பு அவசியம் என்பது உணரப்பட வேண்டும்.   

புலம்பெயர் தமிழர்கள் உதவ வரும் போது, அரசாங்க நிறுவனங்களை அணுகி, முறைப்படி நகரத்துவதன் மூலம், வெற்றிகளை அடைந்து கொள்ள முடியும்.   

போருக்குப் பின்னரான இலங்கையில், எமது மக்களின் தேவைகளில் பொருளாதாரமும் கல்வியும் முக்கியமானவை என்ற அடிப்படையில், நகர்த்தப்படும் ஒருமித்த செயற்பாட்டின் வெற்றியை அடைவதற்கு முயலவும் வேண்டும்.   

கிராமங்களிலுள்ள மக்களை அணுகும் புலம்பெயர் அமைப்புகள், அவர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்து உதவவேண்டும். உரிய கட்டமைப்புகளின் ஊடாகப் புலம்பெயர் அமைப்புகளின் நிதி இங்கு முதலீடு செய்யப்பட வேண்டும். 

கல்வி, காணி போன்ற விடயங்களிலும் முதலீடு தேவை. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், தொழிற்திறன் பகிர்வு போன்ற விடயங்ளில் புலம்பெயர் தமிழர், இலங்கை வாழ் மக்களுக்கு உதவ வேண்டும் போன்ற சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும்.

இவை, போருக்குப் பின்னரான இலங்கைக்கு, பங்களிப்புச் செய்யும் மனோநிலைக்கு புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உரம் கொடுக்கும்.   

புலம்பெயர் உறவுகளின் பெரும் போக்கான உதவியும் வருகையும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்நிலையில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே எல்லோரும் கனவு காண்கிறோம். அது நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இருக்கக்கூடாது.     

புலம்பெயர் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்ட தமிழர் கிராமம்

கடந்த மூன்று வருடங்களாக, புலையவெளி கிராமத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள், தொழில் வாய்ப்புகளுக்கான வசதிகள் என அபிவிருத்தி செய்து, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உலகத்துக்குத் தெரியாமலேயே வைத்துக்கொண்டிருப்பது வல்லமையான காரியம்தான்.   

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள புலையவெளி கிராமத்தில், 2019 ஜனவரி நடுப்பகுதியில், பிரித்தானியாவின் இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில், ‘போருக்குப் பின்னரான இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

‘புலம்பெயர் அமைப்புகள், அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பில்  இருக்கக் கூடிய விடயங்கள்’, ‘இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் தமிழரிடம் எதிர்பார்ப்பது என்ன’ ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.  

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் மூன்று கிராமங்களில் புலையவெளி கிராமமும் ஒன்று. மற்றையது தம்பானம்வெளி, ஏறாவூர்- 5 ஆகிய கிராமங்களாகும்.   

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் புலம்பெயர் தமிழர் எதிர்நோக்கும் சிரமங்கள், இந்து மத நிறுவனங்களின் பலவீனம் போன்ற விடயங்களும் கவனிக்கப்பட வேண்டும்.  

இந்த இடத்தில்தான், வடபகுதி மக்களால் நிர்வகிக்கப்படும் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம், கிழக்கு மண்ணில் உள்ள கிராமங்களுக்கு உதவ முன்வந்தமை, கிழக்கு சார்ந்த பிரதேச வாத நோய்க்கும் சிறந்த மருந்தாக அமையும்.  

image_83cf5dbd7e.jpg

 

போராசிரியர் தில்லைநாதன் இங்கு தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள். “மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புலம்பெயர் தமிழர், சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும். உலகில் இலங்கையைப்போல் ஒரு நாடு கிடைக்காது. அதுவும் மட்டக்களப்பு போல் ஓரிடம் கிடைக்காது. எல்லா விதமான வளங்களும் இருக்கின்றன.  புலம்பெயர் அமைப்புகள், இங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளையும் எடுக்கின்ற போது, அதில் எந்தப் பிரச்சினை, சமூகத்தைத் தீவிரமாகத் தாக்குகிறது என்பதை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வைக் காணும் போது, எங்களுடைய பிரதேசததில், நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியைக் காணமுடியும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், கணவனை இழந்த 48,864 பெண்களின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை ஆகிய இரண்டும் முக்கியமானவை. அதன் பின்னர், பலவேறு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, விதவைகள் என்ற கணவனை இழந்த குடும்பங்களில், எந்த மாற்றமும் இல்லை. அந்தக் குடும்பங்களின் பிள்ளைகளிடம், ஆக்கத்திறனான சிந்தனையில்லாமல் இருக்கிறது; மகிழ்ச்சியில்லை. வருடக்கணக்கில், உதவிகள் வழங்கப்பட்ட பின்னரும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எங்களுக்குரிய வளங்கள் நிறையவே இருந்தாலும் அவற்றினைப் பேணி, முழுமையாகப் பயன்படுத்தும் நிலை இல்லை.

புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வருகிறது. சரியாகப் பகிரப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. மனப்பாங்கு மாற்றம் இருந்தால் எம்முடைய வளங்களைச் சரியாகப்பயன்படுத்தும் தன்மை உருவாகும். அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளை புலம்பெயர் தமிழர் சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும்”  

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.