Jump to content

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு

Editorial / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:48 Comments - 0

-இலட்சுமணன்

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.   

யுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் உறவுகள், இப்போது அந்தத் தேவையற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை, தமிழர் பிரதேசங்களின் மேம்பாட்டுக்காக, ஏன் செலவு செய்ய முடியாது என்ற கேள்வி, இப்போது பலமாக சகல மட்டங்களிலும் எழுந்திருக்கிறது.    

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு, எது என்ற கணிப்பொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, போராளிகள் கட்டமைப்பு, பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவை என ஒரு பட்டியல் நீண்டு செல்கிறது.   

இலங்கையில் போருக்கு பின்னரான, சமூகப் பொருளாதார அபிவிருத்தியில், புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வாறிருக்கிறது என்பதற்கான கேள்வியை, நாம் கேட்டுக் கொண்டால், பதில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலேயே கிடைக்கும்.   

இலங்கைத் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகள் என்று சொல்லுகிற பொழுது, ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய, அமெரிக்க நாடுகளில் இருப்பவர்களையே பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். இவர்களில், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தொழில் தேடிச் சென்றவர்கள், நாட்டில் யுத்தம் தொடங்கிய 70களுக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள், சகோதர இயக்கங்களின் அச்சுறுத்தல், பல்வேறு தரப்புகளின் பிரச்சினைகள் காரணமாக வௌியேறியவர்கள், அரச பாதுகாப்புப் பிரிவினரின் நெருக்கடிகளால் நாடு கடந்தவர்கள், சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் எனப் பலரையும் உள்ளடக்கும் பொதுப் பெயர்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள்.   
இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர், பலவாறான ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகம் பேர், நாட்டுக்கு மீளத் திரும்புவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள்.   

ஆனால், புலம்பெயர் நாடுகளிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நம் நாடு பற்றிய சிந்தனைகள் இருக்குமா, இவர்கள் உதவிகளை மேற்கொள்வார்களா என்பது முதல் கேள்வியாகும்.   

இந்த இடத்தில்தான், போருக்கு பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்கின்ற விடயப்பரப்பு உருவாகின்றது. இது பெரியதொரு விடயம் என்றாலும், அதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது முக்கியமானது. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக் குறித்து, அதிகம் அறிக்கையிட முடியாதென்றாலும் இந்த விடயப்பரப்பு குறித்துப் பேசப்படுவதே பெரியது என்று கொள்ளத்தான் வேண்டும்.  

இலங்கை என்று பொதுப்படையில் சொன்னாலும், வடக்கு, கிழக்கை முன்னிலைப்படுத்துவதே புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூகச் சிந்தனையாகும். புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது, நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் வடக்கு, கிழக்கின் வறுமை நீங்கப்பெற்றிருக்கும் என்ற சிந்தனை இப்போது கருக்கொண்டுள்ளது.   

போர் முடிந்து 10 வருடங்களாகின்ற போதும், வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்கள், மிகவும் மோசமான வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தாராளமாகத் தேவை என்பதுதான் பிரதானமான நோக்கமாகும்.   

image_1d32489c37.jpg

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய தலைவர் ஜெயதேவன், எஸ்.வியாழேந்திரன் (நா.உ), மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன்

மனிதநேயம் மிக்க, மனிதாபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளின் சமூக சிந்தனை சிறப்பானதாக அமையவேண்டும். நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அனர்த்தம் என்பனவற்றால் வடக்கு, கிழக்கின் கல்வி,பொருளாதாரம் என்பன பெருவீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதை அறிக்கையிட்டுத்தான் தெரியப்படுத்த வேண்டும் என்றில்லை. ஆனால் இவை மீண்டும் உச்ச நிலைக்குக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.   

 அரசாங்கத்தின் திட்டங்களை, மக்கள் சரியாக பயன்படுத்தினால் வடக்கு, கிழக்கின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை என்ற கருத்துகள் இருந்தாலும், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளானது சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது எதார்த்தம்.   

நிலையான அபிவிருத்தியை நோக்கியதான, இலங்கைத் தமிழர்களின் கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் எடுக்கப்படும் கரிசனைகளுக்கு புலம்பெயர் உறவுகளின் பக்கத்துணை அவசியமான தேவை. மக்களுக்கு ஏற்றதும் வளப்பயன்பாட்டுக்கு ஏற்றதுமான தொழிற்றுறை, தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு போன்ற கைங்கரியங்கள் ஊடாக, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நிலையான அபிவிருத்திக்கு வடக்கு, கிழக்கை இட்டுச் செல்ல முடியும்.   

நிதிகளையும் சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதும் என்கிற மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரம், கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டுமாக இருந்தால், நிதி உதவிகள் மாத்திரமல்ல, தொழில் சார், உளம் சார் திறன்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்ற ஒரு நிலை உருவாக்கப்படுவதானது சிறந்ததொரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.   

ஆலயங்களின் கட்டுமானங்களிலும், ஆடம்பரச் செலவுகளிலும் அதிக பணத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு இருந்தாலும், சாதாரணமான செயற்பாடுகளுக்கே நிதியின்றி நுண்கடன் கம்பனிகளிடம் கடனைப்பெற்று, வாழ்க்கை நடத்துகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் தொடர்கையில் வறுமை எவ்வாறு ஒழிக்கப்படும் என்று கேள்வியை கேட்டுக் கொள்ளலாம்.  

இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான புலம்பெயர் மக்களின் அக்கறைகள் வரவேற்கப்பட வேண்டியவைகளே. இதில், இலங்கையில் உள்ள அரசாங்க கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டால், அணுகுதல் இலகுவாக இருக்கும்.   

புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் இருக்கின்ற அதேவேளைகளில், அந்த உதவிகளால் பயன்பெறுவோரைத் தேர்வு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அது அவர்களின் உதவி வழங்கும் மனோநிலையிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன.   

இவ்வாறாக உதவிகளைப் பெறுபவர்கள், தொடர்ந்தும் தங்களுக்கு மாத்திரமே உதவிகள் தேவை என்கிற ‘சோம்பேறி மனோநிலைக்கு’ வந்துவிடுதல் உருவாகாதிருக்க, அரச நிறுவனங்களின் ஊடாக வழங்குவதன் மூலம், ஒருவருக்குப் பல உதவிகள் கிடைக்க, சிலர் ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.   

போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்த காலங்களிலும் போருக்குப் பின்னரும் புலம்பெயர் அமைப்புகளின் உதவிகள் தாராளமாகக் கிடைத்திருந்தாலும் அவற்றின் சரியான பயன்பாட்டுத்தன்மை இல்லாமை காரணமாக எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படாத நிலை வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது.   

அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளின்போது, நிர்வாகச் செலவாக அதிகம் செலவு செய்வது குறித்துப் பலரும் குறைபட்டுக்கொள்வர். ஆனால், புலம்பெயர் அமைப்புகளில் அப்படியான நிலைமை குறைவாகவே காணப்படுகின்றது என்பது சிறப்பாகும்.   

புலம்பெயர் மக்களின் உதவிகள் நேரடியாக வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செல்வதையும் பிழையான வழிகளில் செல்வதையும் அரசாங்கம் விரும்புவதில்லை என்பது யதார்த்தமே. நாட்டின் கொள்கைகளை மீறியதான செயற்பாடுகளை நடத்தி விடுவதால், குழப்பங்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாலேயே கட்டுப்பாடுகள் உருவாகின்றன.   

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் உதவ வரும் சில புலம்பெயர் அமைப்புகள், அதற்காக இலங்கை அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்ளத் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் செய்யும் பணிகள், நீடித்த பயனைத்தர வேண்டுமானால், அதற்கு அரச நிறுவனங்களின் தொடர்பு அவசியம் என்பது உணரப்பட வேண்டும்.   

புலம்பெயர் தமிழர்கள் உதவ வரும் போது, அரசாங்க நிறுவனங்களை அணுகி, முறைப்படி நகரத்துவதன் மூலம், வெற்றிகளை அடைந்து கொள்ள முடியும்.   

போருக்குப் பின்னரான இலங்கையில், எமது மக்களின் தேவைகளில் பொருளாதாரமும் கல்வியும் முக்கியமானவை என்ற அடிப்படையில், நகர்த்தப்படும் ஒருமித்த செயற்பாட்டின் வெற்றியை அடைவதற்கு முயலவும் வேண்டும்.   

கிராமங்களிலுள்ள மக்களை அணுகும் புலம்பெயர் அமைப்புகள், அவர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்து உதவவேண்டும். உரிய கட்டமைப்புகளின் ஊடாகப் புலம்பெயர் அமைப்புகளின் நிதி இங்கு முதலீடு செய்யப்பட வேண்டும். 

கல்வி, காணி போன்ற விடயங்களிலும் முதலீடு தேவை. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், தொழிற்திறன் பகிர்வு போன்ற விடயங்ளில் புலம்பெயர் தமிழர், இலங்கை வாழ் மக்களுக்கு உதவ வேண்டும் போன்ற சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும்.

இவை, போருக்குப் பின்னரான இலங்கைக்கு, பங்களிப்புச் செய்யும் மனோநிலைக்கு புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உரம் கொடுக்கும்.   

புலம்பெயர் உறவுகளின் பெரும் போக்கான உதவியும் வருகையும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்நிலையில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே எல்லோரும் கனவு காண்கிறோம். அது நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இருக்கக்கூடாது.     

புலம்பெயர் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்ட தமிழர் கிராமம்

கடந்த மூன்று வருடங்களாக, புலையவெளி கிராமத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள், தொழில் வாய்ப்புகளுக்கான வசதிகள் என அபிவிருத்தி செய்து, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உலகத்துக்குத் தெரியாமலேயே வைத்துக்கொண்டிருப்பது வல்லமையான காரியம்தான்.   

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள புலையவெளி கிராமத்தில், 2019 ஜனவரி நடுப்பகுதியில், பிரித்தானியாவின் இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில், ‘போருக்குப் பின்னரான இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

‘புலம்பெயர் அமைப்புகள், அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பில்  இருக்கக் கூடிய விடயங்கள்’, ‘இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் தமிழரிடம் எதிர்பார்ப்பது என்ன’ ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.  

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் மூன்று கிராமங்களில் புலையவெளி கிராமமும் ஒன்று. மற்றையது தம்பானம்வெளி, ஏறாவூர்- 5 ஆகிய கிராமங்களாகும்.   

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் புலம்பெயர் தமிழர் எதிர்நோக்கும் சிரமங்கள், இந்து மத நிறுவனங்களின் பலவீனம் போன்ற விடயங்களும் கவனிக்கப்பட வேண்டும்.  

இந்த இடத்தில்தான், வடபகுதி மக்களால் நிர்வகிக்கப்படும் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம், கிழக்கு மண்ணில் உள்ள கிராமங்களுக்கு உதவ முன்வந்தமை, கிழக்கு சார்ந்த பிரதேச வாத நோய்க்கும் சிறந்த மருந்தாக அமையும்.  

image_83cf5dbd7e.jpg

 

போராசிரியர் தில்லைநாதன் இங்கு தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள். “மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புலம்பெயர் தமிழர், சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும். உலகில் இலங்கையைப்போல் ஒரு நாடு கிடைக்காது. அதுவும் மட்டக்களப்பு போல் ஓரிடம் கிடைக்காது. எல்லா விதமான வளங்களும் இருக்கின்றன.  புலம்பெயர் அமைப்புகள், இங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளையும் எடுக்கின்ற போது, அதில் எந்தப் பிரச்சினை, சமூகத்தைத் தீவிரமாகத் தாக்குகிறது என்பதை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வைக் காணும் போது, எங்களுடைய பிரதேசததில், நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியைக் காணமுடியும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், கணவனை இழந்த 48,864 பெண்களின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை ஆகிய இரண்டும் முக்கியமானவை. அதன் பின்னர், பலவேறு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, விதவைகள் என்ற கணவனை இழந்த குடும்பங்களில், எந்த மாற்றமும் இல்லை. அந்தக் குடும்பங்களின் பிள்ளைகளிடம், ஆக்கத்திறனான சிந்தனையில்லாமல் இருக்கிறது; மகிழ்ச்சியில்லை. வருடக்கணக்கில், உதவிகள் வழங்கப்பட்ட பின்னரும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எங்களுக்குரிய வளங்கள் நிறையவே இருந்தாலும் அவற்றினைப் பேணி, முழுமையாகப் பயன்படுத்தும் நிலை இல்லை.

புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வருகிறது. சரியாகப் பகிரப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. மனப்பாங்கு மாற்றம் இருந்தால் எம்முடைய வளங்களைச் சரியாகப்பயன்படுத்தும் தன்மை உருவாகும். அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளை புலம்பெயர் தமிழர் சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும்”  

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.