Jump to content

புத்திக பத்திரன கிளிநொச்சியில் – பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை எழுச்சி பெறுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
February 12, 2019

PUTHIGA1.jpg?zoom=1.440000057220459&resi
பரந்தனில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், இரசாயன தொழிற்சாலையை மீளவும் ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு சென்று, அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பற்றிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தையும் பார்வையிட்டுள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ஐந்து மாடிகளை கொண்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கர் காணி வனாந்தரமாகக் காட்சியளிக்கிறது.

எனவே, இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான இரசாயன தொழிற்துறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முதலீட்டாளர்களை இணைத்து இந்நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கிலுள்ள தொழிற்துறையாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தடைகள் மற்றும் அவர்களுக்கான ஊக்குவிப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த பயணத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PUTHIGA3.jpg?zoom=1.440000057220459&resiPUTHIGA2.jpg?zoom=1.440000057220459&resi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

என்ன வயதில் இறந்து போனார் தோழரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

புலி  வளர்ந்த  இடமல்லவா  அது.

எனது  மைத்துணர்  ஒருவரும் 70  கடைசிகளிலிருந்து 80  தொடக்கம் வரை  அங்கு வேலை  செய்தார்

தற்பொழுது  பலவகை  நோய்களால்  அவதிப்படகிறார்

அது தான் காரணமா  என்று  தெரியவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மியாவ் said:

என்ன வயதில் இறந்து போனார் தோழரே...

72 வயதில் இறந்தார்.

10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

25 minutes ago, ஏராளன் said:

72 வயதில் இறந்தார்.

10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

அப்படி என்றால் தங்கள் மாமனாரின் நுரையீரல் சாமானிய மனிதனைவிட சற்று குறைவான ஆற்றலே பெற்றிருந்தது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்...

நகர புறத்தில் வாழும் மனிதன் எந்தவித தீய பழக்கங்கள் இல்லாமலேயே தினசரி இரண்டு சிகரெட் புகைப்பதற்க்கு ஈடாக சுவாசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.