Jump to content

அமெரிக்க எல்லைச்சுவர் திட்டம்: அரசுப்பணிகள் முடக்கத்தை தவிர்க்க புதிய ஒப்பந்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
அமெரிக்க எல்லைச்சுவர் திட்டம்படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்கவும் ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

திங்கள்கிழமை இரவில் கேபிடல் ஹில்லில் நடந்த ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்த வேளையில் தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில் இந்த உடன்படிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது டெக்சாஸில் ஒர் அரசியல் பேரணியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி முன்பு கூறி இருந்தார்.

பேச்சுவார்த்தைகள் முன்னர் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வைத்திருப்பது மற்றும் அதிபர் டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது ஆகியவை தொடர்பாக முன்னதாக பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டது.

அரசுப்பணிகள் முடக்கத்தை தவிர்க்க புதிய ஒப்பந்தம்படத்தின் காப்புரிமை Getty Images

மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்தது.

கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், அண்மையில் அது பல நாட்களுக்கு நீடித்தது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலமாக கடந்தமுறை நடந்த வேலைநிறுத்தம் 35 நாட்களுக்கு நீடித்தது.

இந்த தற்காலிக வேலை நிறுத்தம் மற்றும் அரசுப்பணிகள் முடக்கத்தால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு 11 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அரசுப்பணிகள் முடக்கத்தை தவிர்க்க புதிய ஒப்பந்தம்படத்தின் காப்புரிமை WIN MCNAMEE VIA GETTY IMAGES

நீண்ட காலமாக நடந்த பணிகள் முடக்கத்தால்நாட்டில் பல லட்சக்கணக்கானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மருத்துவமனை பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கத்துறை போன்ற முக்கிய சேவைகளிலுள்ளவர்கள் மட்டும் ஊதியமின்றி வேலை செய்தனர்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்தது. பின்னர் திங்கள்கிழமை இரவில் இது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

புதிய ஒப்பந்தம் எப்படி உருவானது?

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்தது. பின்னர் திங்கள்கிழமை இரவில் இது தொடர்ப்பிக்க ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டரான ரிச்சர்ட் ஷெல்பி, எல்லைச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் அரசுப்பணியில் முடக்கமாவதை தடுப்பது ஆகியவை தொடர்பாக இருந்த பல பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.

''இது தொடர்பாக ஓர் உடன்படிக்கையை எட்டியுள்ளோம்'' என்று கூறிய அவர், நடப்பு வாரத்தில் இது குறித்த மற்ற அம்சங்களை ஆராய்ந்தது தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-47207235

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.