Jump to content

மகிழ்வற்று இருக்கிறீர்களா? - 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
மகிழ்ச்சிக்கான வழிபடத்தின் காப்புரிமை Getty Images

நாம் மனநல மருத்துவரை சந்திக்க செல்லாமல் இருக்கலாம். எந்த மனநில பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போல இருக்கலாம். ஆனால், தினசரி வாழ்வு மற்றும் பணி சுமை தரும் மன அழுத்தம், நம்மை நிறைவாக வாழவிடுவதில்லை; குறைந்தபட்சம் திருப்தியுடன் கூட வாழவிடுவதில்லை.

ஆனால், இப்போது நவீன அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. நேர்மறையான மனநிலையை எப்படி வளர்த்தெடுத்து கொள்வது என்பது தொடர்பான எண்ணற்ற ஆலோசனைகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக எண்ணற்ற ஆய்வுகளும் நடந்துள்ளன.

இதுவெல்லாம் சரிதான். இதனை எப்படி நம் தினசரி வாழ்வில் பொருத்தி பார்ப்பது?

இங்கிலாந்தில் உள்ள மத்திய லான்காஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாண்டி இது குறித்து விளக்குகிறார்.

ஒரு மருத்துவ உளவியலாளராக அவரது அனுபவம், நமக்கு மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உதவலாம்.

இது குறித்து அவர் 'டென் மினிட்ஸ் டு ஹாப்பினெஸ்' என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.

'டென் மினிட்ஸ் டு ஹாப்பினெஸ்'

என்ன சொல்கிறார்?

பொதுவாக நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மகிழ்ச்சிபடத்தின் காப்புரிமை LittleBrownBookGroup

நமது டைரியை எடுத்து ஆறு பகுதிகளாக பிரித்து நம்மை ஆறு விஷயங்களை எழுத சொல்கிறார்.

என்ன 6 விஷயங்கள் அவை?

1.என்ன அனுபவம், உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்?அது சாதாரணமானதாக கூட இருக்கலாம்,.

2.என்னமாதிரியான பின்னூட்டங்களையும், பாரட்டையும் பெற்றீர்கள்?

3.உங்களுடைய அதிர்ஷ்டமான தருணம் என்ன?

4. இன்று நீங்கள் சாதித்ததாக நினைப்பது என்ன? அது மிகவும் சிறியதாககூட இருக்கலாம்

5.நன்றியுடன் நீங்கள் யோசிக்கும் விஷயம் என்ன?

6.உங்கள் அன்பை நீங்கள் எப்படி வெளிப்படுத்தினீர்கள்?

இதனை பட்டியலிடுங்கள்.

இது சாதாரண விஷயம். ஆனால், நம் தின நடவடிக்கைகளை இவ்வாறான 6 பகுதிகளை பிரித்து எழுதி, தினமும் ஆய்வு செய்வது வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்.

எழுதிய உடனே உங்களிடம் மாற்றம் வராது. முந்தைய தினம் எழுதியதை மீண்டும் படித்து பாருங்கள். என்னென்ன செய்து இருக்கிறீர்கள் என ஆய்வு செய்து பாருங்கள். நீங்கள் செய்த சிறு விஷயம் உங்களை நெகிழ வைக்கும், உங்களை அசைத்து பார்க்கும். உங்களது ஆளுமையை மேம்படுத்தும்.

'பத்து நிமிடம் ஒதுக்குவது'

'பத்து நிமிடம் ஒதுக்குவது'

மகிழ்ச்சிக்கான வழிபடத்தின் காப்புரிமை Getty Images

பத்து நிமிடம் உங்களால் ஒதுக்க முடியாது என்று சொல்கிறீர்களா?. ராபின் ஷர்மா, தனது பொக்கிஷத்தை விற்ற துறவி புத்தகத்தில் கூறிய வரிகளை இங்கே பகிர்கிறேன்.

"எனது நண்பா…! உனது எண்ணங்களையும், வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கு தேவையான நேரம் கூட உனக்கு கிடையாது என்று சொல்வது, நீ கார் ஒட்டிச் சென்றுக்கொண்டிருப்பதால். பெட்ரோல் போடுவதற்கு உனக்கு நேரமில்லை என்று சொல்வது போல் உள்ளது." என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-47199486

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.