Jump to content

கூட்­ட­மைப்­பின் தலை­மைக்குப் பொருத்­த­மா­ன­வர் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பாக இப்­போதே கேள்­வி­கள் எழ ஆரம்­பித்து விட்­டன. சம்­பந்­தன் மூப்­பின் இறு­திக் கட்­டத்தை எட்­டி­விட்­ட­தால் இந்­தக் கேள்­வி­கள் எழு­வது இயல்­பா­னது.

இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் மு.கரு­ணா­நி­தி­யும் மூப்­பின் எல்­லை­யில் நின்­ற­போது தி.மு.கவுக்கு அடுத்த தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. ஆனால் வாரிசு அர­சி­ய­லில் ஊறிப்­போன இந்­தி­யா­வில் வழக்­கம்­போல கரு­ணா­நி­தி­யின் மகன்­க­ளில் ஒரு­வ­ரான மு.க. ஸ்டாலி­னின் பெயர் நீண்ட கால­மா­கவே அந்­தப் பத­விக்கு அடி­பட்டு வந்­தது. இதற்கு ஏற்­றாற்­போன்று தி.மு.கவின் செயல் தலை­வ­ராக அவர் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான அவ­ரது தந்­தை­யா­ரான கரு­ணா­நி­தி­யால் நிய­மிக்­கப்­பட்­டார்.

கரு­ணா­நி­தி­யின் மறை­வுக்­குப் பின்­னர் கட்­சி­யின் பொதுக்­குழு அவ­ரையே தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தது. இந்­தி­யா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் இவ்­வாறு பல உதா­ர­ணங்­க­ளைக் கூற முடி­யும். ஆனால் கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் அந்த நிலை காணப்­ப­ட­வில்லை. சம்­பந்­த­னின் வாரி­சாக எவ­ருமே அடை­யா­ளம் காட்­டப்­ப­ட­வு­மில்லை.

தமிழ்­மக்­கள் வரா­லற்­றில் மிக மோச­மா­ன­தொரு கால­கட்­டத்­தி­லுள்­ள­னர். போர் ஏற்­ப­டுத்­திய வடுக்­கள் இன்­ன­மும் மறை­ய­வில்லை.
பல பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இனப் பி­ரச்­சி­னைக்­கு­ரிய அர­சி­யல் தீர்வு அவர்­க­ளது கண்­ணுக்­கெட்­டிய தொலை­ வில் கூடத் தென்­ப­ட­வில்லை.

அவர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­க­மும் கன­வாய்ப் போய்­வி­டுமோ? என்­றொரு நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. இதை­விட ஒற்­று­மை­யி­ழந்த தமி­ழர்­கள் வெவ்வேறு திசை­க­ளில் தமது எண்­ணம்­போன்று பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் அந்த அமைப்பை அழித்து விடு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர். கூட்­ட­மைப்பை வசை­பா­டு­வதே இவர்­க­ளின் வேலை­யா­கப் போய்­விட்­டது. இதற்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய தேவை­யும் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது.

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம்
தொட­ரு­தல் வேண்­டும்
சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தற்­போ­து­வரை கூட்­ட­மைப்­பைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவ­ருக்­குப் பிறகு இது நீடிக்­குமா? என்­ப­து­தான் இன்று எழுந்­துள்ள கேள்­வி­யா­கும். இந்­தக் கேள்­விக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ ப­வன் ஆஸ்­ரே­லி­யா­வில் வைத்­துக் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார். சம்­பந்­தன் தமக்­குள்ள அனு­ப­வத்­தைக் கொண்டு கூட்­ட­மைப்­பைச் சரி­யான திசை­யில் நகர்த்­திக் கொண்­டி­ருக்­கி­றார். ஆனால் அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள் அவர்­போன்று செயற்­பட முடி­யாது.

கூட்­ட­மைப்­பின் அடுத்த தலைமை தொடர்­பா­கப் பல­ரும் பல்­வேறு வித­மா­கப் பேசு­வார்­கள். ஆனால் பொதுக்­கு­ழு­தான் இதை முடி­வு­செய்ய வேண்­டும். பொதுக்­கு­ழு­வில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் பொருத்­த­மான தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­ யி­ருக்­கி­றார். ஆகவே கூட்­ட­மைப்­பின் பொதுக்­குழு சரி­யான முடிவை எடுக்க வேண்­டும்.

போர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஈழத் தமி­ழர்­க­ளின் தலை­வ­ராக மட்­டு­மன்றி உல­கம் முழு­வ­தும் பரந்து வாழ்­கின்ற தமி­ழர்­க­ளின் தலை­வ­ரா­க­வும் ஒரு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருந்­தார். அவ­ரது ஆணையை ஏற்­ப­தற்­கும் அனைத்­துத் தமி­ழர்­க­ளும் தயா­ராக இருந்­தார்­கள்.

இன்று அந்­தப் பொறுப்­பைப் கூட்­ட­ மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. சம்­பந்­தன் அதன் தலை­வ­ராக உள்­ளார். தமி­ழர்­கள் சம்­பந்­த­னின் ஆணையை ஏற்று மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­த­தன் கார­ண­மா­கவே அவ­ரால் அரச தலை­வர் பத­வி­யில் அமர முடிந்­தது. இதன் மூல­மா­கத் தமி­ழர்­க­ளின் தலை­வர் சம்­பந்­தனே என்­பது நிரூ­ப­ண­மா­கி­ யது. இதே­நிலை தொட­ர­வேண்­டு­மா­னால் சம்­பந்­த­னுக்கு ஈடா­ன­தொரு தலை­வரே தெரி­வாக வேண்­டும்.

பொதுக்­கு­ழு­வுக்கு
பொறுப்­புண்டு
எந்­தக் கட்­சி­யி­லும் அதன் பொதுக்­கு­ழு­வுக்கே அதிக அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த வகை­யில் கூட்­ட­மைப்­பின் அடுத்த தலை­மை­யை­யும் அதன் பொதுக்­கு­ழுவே தீர்­மா­னிக்க வேண்­டும்.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்­த­தில் பொதுக்­கு­ழு­வின் அங்­கீ­கா­ரம் பெறப்­பட்­டதா? எனச் சிலர் கேள்வி எழுப்­பக்­கூ­டும். கூட்­ட­ மைப்­பின் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­தனே அந்த முடிவை எடுத்­தார். இதற்­குப் பலர் எதிர்ப்­புத் தெரி­வித்­த­போ­தி­லும் சம்­பந்­த­னின் முடி­வில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

அவ­ரது அர­சி­யல் சாணக்­கி­யம் விக்­னேஸ்­வ­ர­னின் விட­யத்­தில் தோல்­வி­யையே தழு­வி­யது.
தமி­ழர்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­க­ளான கூட்­ட­மைப்­பி­னர் தமது எதிர்­கா­லத் தலைமை தொடர்­பா­கத் தீர்க்­க­மான முடி­வொன்றை மேற்­காள்ள வேண்­டும். அந்­தப் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வ­ரையே தெரி­வு­செய்ய வேண்­டும். ஏனெ­னில் இது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம்.

https://newuthayan.com/story/16/கூட்­ட­மைப்­பின்-தலை­மைக்குப்-பொருத்­த­மா­ன­வர்-யார்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் ஐயா கடும் ஆர்வமா இருக்கிறார்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

சரவணபவன் ஐயா கடும் ஆர்வமா இருக்கிறார்?!

சுமந்திரனும் ஆர்வமாய்த்தான் இருக்கிறாராம்.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனும் ஆர்வமாய்த்தான் இருக்கிறாராம்.....:cool:

சுமந்திரன் காரியத்தில் கண்ணாக   இருக்கிறார்☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜனநாயகம் பேசிக்கொண்டு பாசிசக் கட்சிகள் நடத்தாமல்.. கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமையோ.. அல்லது சொறீலங்காவில் அரசியல் கட்சிகளாகப் பதியப்பட்டுள்ளவற்றின் தலைமைகள் கால அட்டவணைப்படி.. வெளிப்படை தன்மை வாய்ந்த நடுநிலை மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழத்தக்க.. தலைமைக்கான.. கட்சி பதவி நிலைகளுக்கான.. உட்கட்சி தேர்தல்கள் மூலம்.. தேர்வுகள்.. நடத்தப்படுவது மிக அடிப்படை சனநாயக அவசியமாக உள்ளது. 

ஒரு கட்சிக்கு அதிகூடியது 5 ஆண்டுகளுக்கு மேல்.. ஒரு தலைவரோ.. செயலாளர் நாயகமோ.. மத்திய குழு தலைமையோ இருக்கக் கூடாது. அது சனநாயக முறைப்படி தேர்தல் மூலம் நிரப்பப்படுவது கட்டாயம் ஆக்கப்படுவதன் மூலமே..

சொறீலங்காவில் நிலவும் சனநாய் அக பாசிச கட்சி முறைமையை இல்லாமல் செய்ய முடியும்.

குறிப்பாக முன்னாள் ஆயுத இன்னாள் ஒட்டுக்குழுக் கட்சிகளான தமிழ் கட்சிகள் என்போரும் சரி..

வலதுசாரி.. இடதுசாரி... இரத்தக்கறை படியாத கட்சிகளாக இருப்பினும்... சரி

புதிசு புதிசா முளைக்கும் கட்சிகளும் சரி..

யாரும் தலைமை மாற்றத்தை விரும்புவர்களாகவோ.. கட்சிக்குள் மாற்றுத் தலைமையை எதிர்காலத்தில் உருவாக்குபவர்களாகவோ இல்லை.

இதுவும் தமிழர்கள் இன்று தலைவர் அற்ற நிற்கதி அரசியலுக்கு வர முக்கிய காரணம்.

இதே தவறை விடுதலைப்புலிகள் ஒரு போராளி அமைப்பாகச் செய்திருந்ததும்.. சர்வதேசம்.. சொறீலங்கா.. மற்றும் ஹிந்தியாவோடு இணைந்து அதன் தலைமையை குறிவைத்து நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

விடுதலைப்புலிகளிடம்.. தேசிய தலைவருக்கு நிகர்த்த பல மாற்றுத் தலைமைகள் இருந்திருந்தால்.. சர்வதேசமோ சரி யாருமோ சரி.. இன்று அவர்களை அழித்திருக்க முடியாது. அழிக்க முதல் யோசித்திருப்பார்கள்.

இதே நிலைதான் இன்று தமிழர் கட்சி எங்கனும்.. அது ஈழமாகட்டும்.. தமிழகமாகட்டும். 

ஆண்டு பின்..அடிமைப்பட்டு... இன்று.. விடுதலை வேண்டி நிற்கும் ஒரு போராட்ட குணமுள்ள இனம்... நிச்சயம் பல் தலைமைத்துவத்தைக் கொண்டியங்குவது இன்றைய உலக ஒழுங்கில்.. மிக முக்கியமாகும். குறிப்பாக.. இராணுவ பலத்தால்... பலவீனமான.. இனங்களை அடக்கி நிலங்களை வளங்களை பறிக்க நினைக்கும் சர்வதேச அரச கொடுங்கோன்மை.. நிலையெடுத்துள்ள நிலையில்.. இது சிந்திக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான்,

ஆனால் அவரது அரசியல் கொள்கைகள், நடவடிக்கைகள் திருத்தப்பட அல்லது மாற்றப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

சுமந்திரன் தான்,

ஆனால் அவரது அரசியல் கொள்கைகள், நடவடிக்கைகள் திருத்தப்பட அல்லது மாற்றப்பட வேண்டும்.

 

புலிசார்பு அரசியல் ஒருபோதும், இலங்கை அரசிடம் எடுபடாது.

சுமந்திரன் போல, வித்தியாசமான அணுகுமுறைதான் தற்காலத்து தமிழரின் அரசியல் பயணிக்கப் போகுது - விரும்பியோ விரும்பாமலோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, thulasie said:

புலிசார்பு அரசியல் ஒருபோதும், இலங்கை அரசிடம் எடுபடாது.

சுமந்திரன் போல, வித்தியாசமான அணுகுமுறைதான் தற்காலத்து தமிழரின் அரசியல் பயணிக்கப் போகுது - விரும்பியோ விரும்பாமலோ 

புலி சார்போ.. எதிர்ப்போ.. சொறீலங்கா அரசிடம் இருந்து எதுவும் தமிழர்களுக்கு உரிமை.. தீர்வுன்னு எனிக் கிடைக்காது.

சுமந்திரன் சுத்தி மாத்திப் பேசி.. சொந்தப் பொக்கட்டை நிரப்பலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அவரால் ஒரு நன்மையும் விளையாது.

சொறீலங்காவை கட்டுப்படுத்தும் சக்தியாக.. ஒன்று மேற்குலகம் இருக்குது.. இன்னொன்று சீனா இருக்குது.

தமிழர்களின் எதிர்கால அரசியல் என்பது இதில் யாரை அதிகம் திருப்திப்படுத்துவது என்பதில் தான் எனி அமையுமே தவிர.. சுமந்திரன் வகையறாக்களின் சுத்துமாத்துச் பேச்சு நேர விரையமும்.. அநாவசியமும் ஆகும்.

அதேபோல் சொறீலங்கா அரசு தமிழர் உரிமைகளை.. தீர்வை தரும் என்று எதிர்பார்ப்பது அரசியல் படுமுட்டாள் தனங்களில் ஒன்று. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்குகேனும் தமிழருக்கு ஏதாவது செய்ய தற்போது உள்ள சூழ்நிலையில் [கூட் டமைப்பை] பொறுத்த வரை சுமத்திரனால் மட்டுமே முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்க கொன்னர் கும்மானை தலைவராக்கினால்.. நிறையப் பெற்றுத் தருவாருன்னு சொல்லேல்ல.

அவர் ஜோதிடம்.. பலிக்கவில்லை என்ற கவலையில் இருக்க விட்டுவிட்டீர்கள் போலும்.

சுமந்திரன் ஒரு அரைவேக்காடு. சம்பந்தனின் இயலாமை நிரப்பி. அவ்வளவே. இவர்களால்.. தமிழ் மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. 

Link to comment
Share on other sites

வருடங்களுக்கு முன், இங்கிருந்து கூட்டமைப்பின் ஓர் எம்பியுடன், சிலர் தொடர்பு கொண்டு சில விடயங்களை கதைத்த போது ... பல விடயங்களை தொட்டுச் சென்றாராம் ...

...." ... என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், நானும், என்னுடன் இருக்கும் இரு சிலரும் ஒன்றும் அங்கு செய்ய முடியவில்லை! கஜேந்திரகுமார் உள்ளிருந்து போராடுவதற்கு பதில், கூட்டாக வெளியேறி விட்டார்! இப்போ நாம் தனிமரங்களாக! சம்பந்தருக்கு இப்போ நடைபெறுபவைகள் தெரிவதில்லை, மறதி அதற்கு மேல்! அவரின் இடத்துக்கு மாவையை (வேறொருவர் இல்லாததால்) தானும் முன்னுக்கு தள்ளுவோம் என்றால், மாவையார், தனக்கு சட்டம் தெரியாது, ஆங்கில அறிவு குறைவு, ஆகையால் கட்சி தலைமை தான் ஏற்கத்தயாரில்லை என்றும், தனக்கு வடமாகாண முதலமைச்சர் பதவி போதும் என்று நிற்கிறார். நாம் விரும்பியோ, விரும்பாமலோ சுமந்திரன் தான் அடுத்த தலைவர் என்றாராம் ... இந்தியாவின் விருப்பமும் அதுவே ..." ... என்றாராம்.

அவர் இறுதியாக கூறியதே உண்மை! ... 10 வருடங்களுக்கு முன், இனந்தெரியாத மனிதனாக இருந்த சுமந்திரனை, பின் கதவால் நுளைவித்து, குறுகிய காலத்தில் தலைமை பதவிக்கு கொணர்ந்த பெருமை, பிராந்திய அரசுக்கோ, அவர்களின் புலனாய்வுத்துறைக்குத்தான் சாரும்!  இன்று இந்திய அரசியலுக்காக, இந்திய வல்லாதிக்கத்தின் பக்கம் சாய்ந்திருக்கும் யானை கோஷ்டிக்கும், ஒரு பாகனாக செயற்படும் சுமந்திரனே முதல் தெரிவு!

இதில் எங்கள் விருப்பம், உங்கள் விருப்பம், தமிழ் மக்களின் விருப்பம் என்றெல்லாம் தீர்கமாக சிந்தித்து, முடிவெடுத்து, தலைமை பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற கனவை கலைப்போம்! நிஜ உலகிற்கு வருவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஏன் உங்க கொன்னர் கும்மானை தலைவராக்கினால்.. நிறையப் பெற்றுத் தருவாருன்னு சொல்லேல்ல.

அவர் ஜோதிடம்.. பலிக்கவில்லை என்ற கவலையில் இருக்க விட்டுவிட்டீர்கள் போலும்.

சுமந்திரன் ஒரு அரைவேக்காடு. சம்பந்தனின் இயலாமை நிரப்பி. அவ்வளவே. இவர்களால்.. தமிழ் மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. 

நெடுக்கர்,"கூ ட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமத்திரன்" என்று தெளிவாக எழுதியுள்ளேன்...என்ட தலைவர் என்று எழுதவுமில்லை,தேசிய தலைவர் என்று எழுதவுமில்லை ...என்ர  அண்ணரின் அரசியலை பொறுத்திருந்து பாருங்கோ 😠 
 

Link to comment
Share on other sites

Quote

சம்­பந்­த­னின் சாணக்­கி­யம் தற்­போ­து­வரை கூட்­ட­மைப்­பைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. 

Quote

தமி­ழர்­கள் சம்­பந்­த­னின் ஆணையை ஏற்று மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­த­தன் கார­ண­மா­கவே அவ­ரால் அரச தலை­வர் பத­வி­யில் அமர முடிந்­தது. இதன் மூல­மா­கத் தமி­ழர்­க­ளின் தலை­வர் சம்­பந்­தனே என்­பது நிரூ­ப­ண­மா­கி­ யது.

ஆண்டவா.....😈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அல்லது சஜித் பிரேமதாஸ ஏனென்றால் சுமந்திரனின் யானையின் குட்டி வாலுக்குள்ளதானே பதுங்கி இருக்கின்றார்🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.