Jump to content

ஜெயமோகனின் பிதற்றல்கள் - மு.பொ.


Recommended Posts

ஜெயமோகனின் பிதற்றல்கள்

1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது.

2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு பிரபலமான figure ஆக மாற்றிக் கொள்ளத் தனக்குத் தெரியாத விடயங்களில் மூக்கை நுளைத்து மூக்குடைபடுவது வழக்கமாகிவிட்டது. முன்னர் நடிகர் சிவாஜி பற்றி கேலிசெய்யப் போய், கிளர்ந்தெழுந்த சிவாஜி விசிறிகளுக்கு அஞ்சி வீட்டை விட்டோடி ஒளிந்து கொண்டார். பின்னர் தமிழகப் பெண்கவிஞர்களிடம் குட்டுப்பட்டார்.

3. இப்போ ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்பவர்களோடு தனக்கு தெரியாதவற்றையெல்லாம் சொல்லப்போய் பெரும் பொல்லாப்புக்குள் வீழ்ந்துள்ளார். இவர் 2010 இல் காலஞ்சென்ற கவிஞர் சு.விலவரத்தினம் என்பவரைப் பற்றி எழுதுவதாக பாவனை பண்ணி, அவரைப்போடு தடியாக்கி இலங்கை கவிஞர்களை மட்டந்தட்டி, தமிழகக் கவிஞர்களை தூக்கி பிடிக்க ‘அகமெரியும் சந்தம்’ என்று எழுதினார். இவரின் பொய்மையை அறிந்த நான் அதற்கொரு எதிர்வினையை ‘அகமெரியும் சந்தத்தில் அடியோடும் நிராகரிப்பு’ என்று எழுதி இவரின் பொய்மையை கிழித்தெறிந்தேன்.

4. இப்போ பல வருடங்களுக்கு பிறகு, நான் மறந்திருப்பேன் என்ற நினைவில் மு.பொன்னம்பலம் ஈழத்தில் இருநூறு கவிஞர்கள் உள்ளனர் என்று பாய் விரிக்கிறார் என்று கூறி, ஈழத்து கவிஞர்களை கொச்சைப்படுத்துகின்றார். நான் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பன்முகத்தளங்களில் இயங்கும் பெருங்கவிஞர்களும் இளங்கவிஞர்களும் ஈழக்கவிப்பரப்பில் நிறையவே உண்டு” என்று தான் எழுதினேன். ஆனால் ஜெயமோகனோ நான் 200 க்கு மேற்பட்ட கவிஞர்கள் உள்ளனர் என்று எழுதியதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, அவர்களை பூச்சிமருந்து அடித்து கொல்லவேண்டும் என்று சொல்லுகிறார், காரணம் இவர்களால் பெண்களின் கற்புக்கு ஆபத்தாம்! இதுவே எழுத்தாளர் ஜெயமோகனின் புதிய கண்டுபிடிப்பு! முன்னர் (கி.மு 400) தத்துவஞானி பிளேட்டோ கிரேக்கத்தில் இருந்தார். அவர் பெரும் சிந்தனையாளர்களே நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தார். அவர் கவிஞர்கள் அனைவரையும் உதவாக்கரைகள் என்று சொல்லி கொல்லவேண்டும் என்று சொன்னார். அக்காலத்தில் எழுதியவர்கள் அனைவரையும் poet என்றே கூறினர். இந்தச் சூழலில் நம் ஜெயமோகன் வாழ்ந்திருந்தால், தன்பிதற்றலுகளுக்காக முதலில் கொல்லப்பட்டவர் இவராகவே இருந்திருப்பார்!

5. இயல்விருது பற்றியும் ஜெயமோகன் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் அலட்டியிருந்தார். பேராசிரியர் செல்வாகனகநாயகம் இருக்கும் வரை அந்த இயல்விருதுக் குழுவில் நானும் ஒரு தெரிவாளனாக இருந்துள்ளேன். ஜெயமோகன் அக்காலங்களில் தனக்கு இயல்விருது கிடைக்கவேண்டும் என்பதற்காக பட்டபாடு நான் அறிவேன். இப்போது இவரின் தெரிவுகளைத்தான் இயல்விருது தருகிறதென்றால் அது எஸ்.பொ போன்றவர்களுக்குத்தான் சரி.

6. ‘ஈழத்தில் விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை’ என்று கூறும் இவர், என்னால் எழுதப்பட்ட, 2012 இல் மலேசியாவில் இடம்பெற்ற அனைத்துலக நூல் போட்டியில் சிறந்த நூலிற்கான முதற்பரிசு (தான்ஸ்ரீ விருது) பெற்ற 'திறனாய்வின் புதிய திசைகள்' என்ற நூலினையும் ‘60 களிலிருந்து பீறிட்டெழுந்த ஈழத்து விமர்சனப்போக்கு, தமிழகத்தவர்களுக்கும் பின்னுதைப்பாக இருந்தது’ என்ற எனது கட்டுரையும் மு.த வின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யையும் படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

மு.பொ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.மோ வுக்கு மூளையின் நியுரோன்களுக்கும் வாய்க்கும் (அல்லது விரல்களுக்கும்) இடையே தடையில்லாத பாதை இருப்பது தான் அவரது பிரச்சினை என நினைக்கிறேன். 

ஐன்ஸ்ரைன் மிகவும் மெதுவாகத் தான் பேசுவார். அவருக்கு மொழி பேச்சு என்பவற்றில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவர் முதலில் யோசித்து வார்த்தைகளை மனதில் கோர்த்த பின்னர் பேசுவதால் மெதுவாகப் பேசினார் என்றும் ஒரு கருத்து உண்டு. இப்படி சில செக்கன்கள் யோசித்துப் பின் பேசுவது அல்லது எழுதுவது என்பது இன்று அறிவார்ந்தோரின், தலைவர்களின்  ஒரு அடையாளமாக இருக்கிறது. கூகிளின் பிச்சை, பில் கேட்ஸ், ஒபாமா போன்றோர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது ஒரு கணநேரத் தயக்கம் அவர்களின் உடல் மொழியில் தெரியும் - அவர்களின் மூளையில் வருவதை அவர்கள் உடனே சொல்லி விடுவதில்லை- அதனால் மிகவும் அரிதாகவே முட்டாள் தனமான கருத்துகளை அவர்கள் வெளியிடுகிறார்கள்! 

அண்மைய ஒரு நரம்பியல்-உயிரியல் ஆய்வில், "மனிதனின் மூளை வேகமாகச் செயற்படுவதற்காக சில தவறுகளை அனுமதிக்கிறது" என்று ஒரு  கருத்தை வெளியிட்டிருந்தார்கள். ஜெ.மோ எழுதும் வேகத்தைக் குறைத்தால் இப்படி விவகாரமான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.