Jump to content

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!


Nathamuni

Recommended Posts

6 minutes ago, Nathamuni said:

இவ்வளவு முயன்றும், நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியவில்லை என்றே தோன்றுகிறது.

திரும்பவும் சொல்கிறேன். 

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பெண்ணுக்கு, ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அவர் விலைமாதுவாக இருந்தாலும் கூட.... பாதுகாப்பானதா என்று தான் முதலில் கணக்கு எடுப்பார், பணத்துக்கு முதல்.

ஒரு இடம் பாதுகாப்பானதா நாம் இங்கே நீண்ட நேரம் இருக்கலாமா, தண்ணி அடிப்பதனால் எனது limit எது என்று தெரியாவிட்டால்..... அங்கே ஏன் அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். காரணம் என்ன?

அந்த எச்சரிக்கை உணர்வு அற்ற அப்பாவி பெண்ணாகவோ அது பற்றிய புரிதல் அற்ற பெண்ணாகவோ அவர் இருந்தால் அவருக்கு இந்திய கலாச்சாரத்தில் சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை என்று கூற வருகின்றார்கள்?

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

நாங்கள் பேசிக்கொண்டிருந்த கலாச்சாரம் பற்றி அல்ல. ஒரு கிரிமினல் குற்றம் பற்றி. அதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியென்றால் உவமை இந்திய பழக்கவழக்கங்கள், இந்திய மக்களின் மனோநிலை என்ன என்பதிற்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும்...

ஜார்ஜ் புஷ், ஒபாமா, ட்ரம்ப் என்று இருக்க கூடாது...

Link to comment
Share on other sites

7 minutes ago, மியாவ் said:

அப்படியென்றால் உவமை இந்திய பழக்கவழக்கங்கள், இந்திய மக்களின் மனோநிலை என்ன என்பதிற்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும்...

ஜார்ஜ் புஷ், ஒபாமா, ட்ரம்ப் என்று இருக்க கூடாது...

கிரிமினல் குற்றம் உலகம் முழுவதுக்கும் பொதுவானது. குற்றவியல் சட்டங்களும் உலகம் முழுவதுக்கும் பொதுவானவை. மோடி பாலியல் வல்லுறவு செய்தாலும் ட்ரம்ப் செய்தாலும் ஒரே குற்றமே.

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

கிரிமினல் குற்றம் உலகம் முழுவதுக்கும் பொதுவானது.

பொதுவானது தான், மேற்கத்திய நாட்டில் பெண்கள் தனது பாய் ஃப்ரெண்டை அவர்கள் தாய் தந்தை இருக்கும்பொழுதே வீட்டிற்கு அழைத்து வருவர்...

இந்தியாவில் அப்படி அல்ல...

இதில் அவர்களுக்கும் இவர்களுக்கும் மனோ நிலை மாறுபடுகிறது...

இப்படியான மனநிலையை கொண்டு எந்த துணையுமின்றி எதனடிப்படையில் இரண்டு மாதமே முக நூலில் நட்பு கொண்ட ஆண் வீட்டிற்கு சென்று மது அருந்துவார்... இப்படி செய்கிறோமே இந்த ஆண் மன நிலை எப்படி மாறும் என்று சிறிதளவும் யூகிக்க கூடவா மூளை வேலை செய்திருக்காது... அப்படி என்றால் அந்த பெண்ணின் நோக்கம் என்ன என்ற கேள்வியிலேயே தான் இந்த சம்பவம் முற்று பெறுகிறது...

Link to comment
Share on other sites

26 minutes ago, மியாவ் said:

பொதுவானது தான், மேற்கத்திய நாட்டில் பெண்கள் தனது பாய் ஃப்ரெண்டை அவர்கள் தாய் தந்தை இருக்கும்பொழுதே வீட்டிற்கு அழைத்து வருவர்...

இந்தியாவில் அப்படி அல்ல...

இதில் அவர்களுக்கும் இவர்களுக்கும் மனோ நிலை மாறுபடுகிறது...

இப்படியான மனநிலையை கொண்டு எந்த துணையுமின்றி எதனடிப்படையில் இரண்டு மாதமே முக நூலில் நட்பு கொண்ட ஆண் வீட்டிற்கு சென்று மது அருந்துவார்... இப்படி செய்கிறோமே இந்த ஆண் மன நிலை எப்படி மாறும் என்று சிறிதளவும் யூகிக்க கூடவா மூளை வேலை செய்திருக்காது... அப்படி என்றால் அந்த பெண்ணின் நோக்கம் என்ன என்ற கேள்வியிலேயே தான் இந்த சம்பவம் முற்று பெறுகிறது...

ஒரு பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு புரிவது ஒரு குற்றம் அதை மனிதத்தன்மையுடைய எல்லா கலாச்சாரங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதுவே சட்டமாக உலக நாடுகளில் உள்ளது. நாம் இப்போது அது பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். சுற்றி வளைத்துப் பேசி திசை திருப்ப வேண்டாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கொண்டீர்கள் என்றால் விவாதம் தேவையில்லை. வல்லுறவு செய்த ஆணைக் காப்பாற்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி போடுவதில் சாக்கடை இந்திய கலாச்சாரம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

ஒரு பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு புரிவது ஒரு குற்றம் அதை மனிதத்தன்மையுடைய எல்லா கலாச்சாரங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதுவே சட்டமாக உலக நாடுகளில் உள்ளது. நாம் இப்போது அது பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். சுற்றி வளைத்துப் பேசி திசை திருப்ப வேண்டாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கொண்டீர்கள் என்றால் விவாதம் தேவையில்லை. 

சட்டம் என்ன சொல்லும்,

தர்க்க ரீதியில் அந்த ஆண் செய்தது குற்றம் என்று சொல்லி தண்டனை தரும்...

குற்றம் செய்ய தூண்டுபவருக்கும் தண்டனை இருக்கிறது சட்டத்தில்... சட்ட புத்தகத்தில் இருக்கும் அந்த பக்கத்தை யார் விசாரிப்பர்...

Link to comment
Share on other sites

5 minutes ago, மியாவ் said:

சட்டம் என்ன சொல்லும்,

தர்க்க ரீதியில் அந்த ஆண் செய்தது குற்றம் என்று சொல்லி தண்டனை தரும்...

குற்றம் செய்ய தூண்டுபவருக்கும் தண்டனை இருக்கிறது சட்டத்தில்... சட்ட புத்தகத்தில் இருக்கும் அந்த பக்கத்தை யார் விசாரிப்பர்...

பொதுவாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் உலகம் முழுவதும் உள்ள எல்லாம் கலாச்சார மக்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பேசுவதே வழக்கம். ஆனால் ஏனோ தெரியவில்லை  இங்கு குற்றம் செய்த ஆணுக்கு வக்காலத்து வாங்க கலாசாரத்தை துணைக்கு அழைக்கிறீர்கள் கலாச்சாரத்தை சாட்டி குற்றவாளியை காப்பற்றலாம்  என்று நினைக்கும் அளவுக்கு கேவலமான கலாசாரமா அங்கு உள்ளது?

Link to comment
Share on other sites

13 minutes ago, tulpen said:

பொதுவாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் உலகம் முழுவதும் உள்ள எல்லாம் கலாச்சார மக்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பேசுவதே வழக்கம். ஆனால் ஏனோ தெரியவில்லை  இங்கு குற்றம் செய்த ஆணுக்கு வக்காலத்து வாங்க கலாசாரத்தை துணைக்கு அழைக்கிறீர்கள் கலாச்சாரத்தை சாட்டி குற்றவாளியை காப்பற்றலாம்  என்று நினைக்கும் அளவுக்கு கேவலமான கலாசாரமா அங்கு உள்ளது?

தற்பொழுது திசை திருப்புவது நீங்கள் தான்...

செய்த தவறுக்கு அந்த பெண்ணிற்கும் பங்குண்டு என்கிறேன்...

Link to comment
Share on other sites

13 minutes ago, மியாவ் said:

தற்பொழுது திசை திருப்புவது நீங்கள் தான்...

செய்த தவறுக்கு அந்த பெண்ணிற்கும் பங்குண்டு என்கிறேன்...

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

Link to comment
Share on other sites

28 minutes ago, tulpen said:

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

அந்த அறையில் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது...

இரண்டு தரப்பு வாதமுமே யூகத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது...

அது பாலியல் வன்முறை என்றால் அந்த ஆண் மீது குற்றமே...

அந்த பெண்ணின் நோக்கம் உடலுறவு என்றால் அந்த பெண்ணுக்கும் குற்றத்தில் பங்கு இருக்கிறது...

குற்றம் வேறு தவறு வேறு, அந்த பெண்ணின் நோக்கம் உடலுறவு என்றால், இரண்டு மாத முக நூல் தொடர்பில் நேரில் சென்று அவனுடன் மது அருந்தியது அந்த பெண்ணின் தவறு...

பெண்கள் வீக்கர் செக்ஸ், எல்லா ஆண்களும் பணிந்து போக வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்... எல்லாருக்கும் செக்ஸ் வக்கிரம் இருக்கிறது... ஆண்கள் அனைவரும் அதை தாண்டி சிந்திக்கின்றனர் என்று பெண்கள் முடிவெடுக்க கூடாது...

வெறும் முகநூலில் இரண்டு மாதம் என்பது ஏற்று கொள்ள முடியாதது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

நான் இல்லை என்கிறேன். அங்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் அது அவளின் சம்மதம் இன்றி நடைபெற்றது என்று தான் அர்ததம். அப்படியானால் குற்றவாளி நூறு வீதம் அந்த ஆணே. 

நடந்தது பாலியல் வன்முறை என்று சொன்னது யார்? அந்த பெண் தான்  அன்றி போலீசாரோ , நீதிமன்றமோ அல்ல.

நீதிமன்றம் சொன்னால் மட்டுமே ஏற்றுக்  கொள்ள முடியும் ஏனெனினில், இந்த நிகழ்வில், பாலியல் வன்முறை நடந்துக்கான புற சூழ்நிலை இல்லை.

மது போதையில் இருந்த பெண், அதே போல் மது போதையில் இருந்த ஆணுடன் விரும்பி உறவில் ஈடுபட்டு, போதை தெரிந்ததும், கலாச்சார  உணர்வு வந்து... அய்ய்யோ.. என்னை கெடுத்து விட்டான்  (ஆகவே அவனையே எனக்கு கட்டி வைத்து விடுங்கள்) என்று கூப்பாடு போடவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? 

ஒரு பெண் போதையில் இருந்தார் என்றவுடனேயே, அவர் மீதான அனுதாபம் இல்லாமல் போகிறது. அதுவும் இன்னொருவர் வீட்டில். சரி அப்போதாவது கிளம்பி போகவில்லை. அங்கேயே உள்ள கட்டிலில் படுத்து விட்டார் என்றால்.... அவர் குறித்து என்ன சொல்ல முடியும்...

'பாலியல் பலாத்காரம்' என்பது மிகவும் கடுமையான சொல். சமூகத்தையே அதிர வைப்பது. முறைப்பாட்டு கிடைத்ததும், போலீசார் உடனடியாக வேகமாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆயினும், விசாரணை செய்யும் போது  தான் யார் மேல் தவறு என்று தெரிய வரும்.  

Link to comment
Share on other sites

32 minutes ago, Nathamuni said:

நடந்தது பாலியல் வன்முறை என்று சொன்னது யார்? அந்த பெண் தான்  அன்றி போலீசாரோ , நீதிமன்றமோ அல்ல.

நீதிமன்றம் சொன்னால் மட்டுமே ஏற்றுக்  கொள்ள முடியும் ஏனெனினில், இந்த நிகழ்வில், பாலியல் வன்முறை நடந்துக்கான புற சூழ்நிலை இல்லை.

மது போதையில் இருந்த பெண், அதே போல் மது போதையில் இருந்த ஆணுடன் விரும்பி உறவில் ஈடுபட்டு, போதை தெரிந்ததும், கலாச்சார  உணர்வு வந்து... அய்ய்யோ.. என்னை கெடுத்து விட்டான்  என்று கூப்பாடு போடவில்லை (ஆகவே அவனையே எனக்கு கட்டி வைத்து விடுங்கள்) என்று சொல்ல வருகிறீர்களா? 

ஒரு பெண் மீது பாலியல் வன்முறை புரிவது குற்றம் என்பது கலாச்சாரத்தில் இருந்து வந்தது அல்ல. அது ஒரு மனித கெளரவம். இது ஆணிற்கும்  பொருந்தும். நீதி மன்றம் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விசாரித்து சட்டத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அதற்காகவே  அதன் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வழக்கை குறிப்பிட்டேன். குற்றவியல் வழக்கு என்ற ரீதியில் இரண்டும் ஒரே வகையானது.உலகம் முழுவதும் குற்றவியல் வழக்குகள் ஒரே மாதிரியானது. பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆண் தப்ப வழி உள்ளளது. அதுவும் உலகம் முழுவதும் பொருந்தும்.

மற்றப்படி  பொதுவாக கலாச்சாரத்திற்கும் இதைப் போன்ற குற்றவியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னைக்  கெடுத்துவிட்டான் அவனையே கட்டி வையுங்கள் என்று கூறுவதே ஒரு கேவலமான சாக்கடைக் கலாச்சாரம் ஆகும். பாலியல் வன்முறை புரிந்தவனை அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரம் கேவலமானது. வன்முறை செய்தவனை எதிர்த்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே சிறந்த  கலாச்சாரப்பெண்ணிற்கு அழகு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

ஒரு பெண் மீது பாலியல் வன்முறை புரிவது குற்றம் என்பது கலாச்சாரத்தில் இருந்து வந்தது அல்ல. அது ஒரு மனித கெளரவம். இது ஆணிற்கும்  பொருந்தும். நீதி மன்றம் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விசாரித்து சட்டத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அதற்காகவே  அதன் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வழக்கை குறிப்பிட்டேன். குற்றவியல் வழக்கு என்ற ரீதியில் இரண்டும் ஒரே வகையானது.உலகம் முழுவதும் குற்றவியல் வழக்குகள் ஒரே மாதிரியானது. பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆண் தப்ப வழி உள்ளளது. அதுவும் உலகம் முழுவதும் பொருந்தும்.

மற்றப்படி  பொதுவாக கலாச்சாரத்திற்கும் இதைப் போன்ற குற்றவியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னைக்  கெடுத்துவிட்டான் அவனையே கட்டி வையுங்கள் என்று கூறுவதே ஒரு கேவலமான சாக்கடைக் கலாச்சாரம் ஆகும். பாலியல் வன்முறை புரிந்தவனை அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரம் கேவலமானது. வன்முறை செய்தவனை எதிர்த்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதே சிறந்த  கலாச்சாரப்பெண்ணிற்கு அழகு. 

 

நீங்கள் ஆரம்பத்தில் வைத்த உங்கள் சொந்த கருத்துகளுடனேயே மோதிக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளதே நண்பரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2019 at 3:52 PM, Nathamuni said:

பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

போதையில் பலாத்காரம்: நண்பர்களுக்காக உணவு வாங்கி வர ஆரிப் வெளியே சென்ற நேரத்தில், ஆதித்யா போதையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆதித்யாவும் போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமறியா,பழக்கமில்லா வீட்டுக்கு சென்றதே பெரிய தவறு.
அதிலும் இவர்களின் பிறந்தநாள் கொண்ட்டாட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவசரம் ஏன்?
அடுத்தது முன் பின் பழக்கமில்லாதவர்களுடன்(அதுவும் இரு ஆண்கள் மட்டும்) மது அருந்த  ஆண்களே பின்னிற்பார்கள். மேலைத்தேய பெண்கள் என்றாலும் பின்னிற்பார்கள். விலைமாதுக்களை தவிர....👈


 இன்னும் கொடுமையான விடயம் என்னவெனில்  பழக்கமில்லாத ஒருவரின் படுக்கையில் படுப்பது ஏதோ ஒன்றுக்கு அழைப்பது போலவே இருக்கும்/இருக்கலாம்.:rolleyes:

 ஒரு பெண் பலர் சேர்ந்து கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கு அல்லது சந்திப்புகளுக்கு செல்வது வேறு....தனிப்பட நடக்கும் தனிநபர் கொண்டாட்டங்களுக்கு தனிமையாக செல்வதன் அர்த்தம் வேறு.இந்தப் பெண் சர்வசாதாரணமாக மது அருந்தியுள்ளார்.

எனது எண்ணத்தின் படி ஏதோ பணபரிவர்த்தனையில் ஏற்பட்ட தகராறு  என்றே நினைக்கின்றேன்.

இப்படியான சம்பவங்கள்  மேலைத்தேய நாடுகளில் சர்வசாதாரணம். என்னவொன்று பேசிய பேச்சு தவறினால் நீதிமன்றம் வரைக்கும் செல்வார்கள்.

அது போல் தால் இதுவும்.:cool:

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

நீங்கள் ஆரம்பத்தில் வைத்த உங்கள் சொந்த கருத்துகளுடனேயே மோதிக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளதே நண்பரே...

நான் ஆரம்பத்தில் இருந்து ஒரே கருத்துடனேயே உள்ளேன். உங்கள் புரிதலில் தவறு இருக்கலாம். 

Link to comment
Share on other sites

தென்னாசிய கலாச்சாரக் கண்ணாடியூடாக பார்ப்பின் இக் குற்றத்திற்கு பெண்ணும் காரணம் என்பதனையே நாம் காண முடியும்.

மாறக மேற்கத்தைய தேசத்தில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளைக் கேட்டால் அவர்கள் எமக்கு இது தொடர்பாக நன்றாகவே விளக்கமளிப்பார்கள். 

Link to comment
Share on other sites

48 minutes ago, manimaran said:

தென்னாசிய கலாச்சாரக் கண்ணாடியூடாக பார்ப்பின் இக் குற்றத்திற்கு பெண்ணும் காரணம் என்பதனையே நாம் காண முடியும்.

மாறக மேற்கத்தைய தேசத்தில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளைக் கேட்டால் அவர்கள் எமக்கு இது தொடர்பாக நன்றாகவே விளக்கமளிப்பார்கள். 

தென்னாசிய கலாச்சாரம் என்பதே யதார்தத்தை புறம் தள்ளிய போலியானது. ஆண்பிள்ளைகளை நீ என்ன செய்தலும்  சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர்கண்ட இடத்தில் கழுவிட்டு வரலாம் என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனதில் நான் ஆண்பிள்ளை எனது ஆசைப்படி எதுவும் செய்யலாம் என்று நினைக்கும் வகையில்  வளர்ககும் அதேவேளை  அவர்களை கண்டபடி ஊர் சுற்ற அனுமதிக்கும்  கலாச்சாரம் பெண்பிள்ளைகளைக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு போடுகிறது.

அதாவது வேறு வகையில் சொன்னால் எம்மால்  வளரக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் எமது ஆண்பிள்ளைகளால்   உங்களிள் கற்புக்கு  ஆபத்து வந்து விடும் அதனால் உங்களை வெளியே எம்மால்  அனுப்ப முடியாது என்று பெண்பிளைகளுக்கு தடை போட்டு அவரகளின் கலவியைக் கூட மறுத்த கலாச்சாரமாகவே அங்கு கலாச்சாரம் உள்ளது. இந்த கலாச்சாரத்தில் என்ன மேன்மை உள்ளது.  அதை விட இரு பாலாருக்கும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கலாமே. பெண்பிள்ளைகளுக்கு பாலியல் விழிப்புணர்சியை ஏற்படுத்தி தற்காப்புப் பயிற்சியை வழங்கலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

தன்னை  முழுமையாக நம்பி சக  தோழனாக மதித்து பழகிய தோழி மீது பாலியல்வன்முறை புரிந்தத அந்த ஆணின் மீது தவறு இல்லையா? 

நானாயிருந்தால் எவ்வளவு உயிர் தோழனாக இருந்தாலும்,பள்ளிக் கூடத்தில் இருந்து படித்து வந்த நீண்ட கால நண்பனாக இருந்தாலும் இரவில தனிய  அவன்ட வீட் டை[அவன் மட்டும் இருக்கும் வீட்டை] வா என்று கூப்பிடடால் போக மாட்டேன்....(அப்படி அவசரமாய் போக வேண்டிய தேவை இருந்தால் யாராவது நண்பிகளை கூட்டிக் கொண்டு தான் போவன்) ...அப்படிக் கூப்பிடுபவனை நண்பனாய் வைய்ச்சிருக்க மாட்டேன் .
இவ இரண்டு மாசம் மு.பு பழகின ஒருவர் கூப்பிட்டார் என்று இரவில தனியாய் முன்,பின் தெரியாத ஆளின்ட வீட்டை ,அதுவும் இரு ஆண்கள் மட்டுமே இருக்கும் வீட்டை போயிருக்கா...உங்கட மகளை இப்படி தனியே விடுவீர்களா?
பார்ட்டி என்டால் பல பேர் சேர்ந்து கொண்டாடுவது...நண்பரோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றால் எங்கேயாலும் பொது இடத்தில கொண்டாடி இருக்கலாம் 
போனவ இரு ஆண்கள் மட்டும் தனிய இருக்கிறார்கள் என்றிட்டு உடனே திரும்பி வந்திருக்கோணும்..அவ அங்கேயிருந்து நல்லாய் குடி,குடி என்று குடித்திருக்கிறார் 
பார்ட்டிக்கென்று கூப்பிட் டவர் நன்றாய் குடித்து ,முடித்த பிறகு தான் சாப்பாடு வாங்க என்று சாட்டு சொல்லி வெளியில போயிருக்கார்.
16 வயசிற்கு குறைந்த பெண்ணிற்கு இப்படி எதாவது நடந்திருந்தால் மன்னிக்கலாம்...சிறுமி ,உணர்ச்சி வசப்படும் வயசு..இவ 24 வயசு..நன்றாய் படித்து சுய அறிவுள்ள பெண் யோசிக்க வேண்டாமா?
அநேகமாய் பலாத்காரம் தான் நடந்திருக்கும்...அவருக்கு கட் டாயம் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் முதற் குற்றவாளி இந்த விடயத்தில் அந்தப் பெண் தான்..."சேலையில் முள்ளு பட் டாலும், முள்ளில சேலை பட்டாலும் சேலைக்கு தான் சேதம்" என்று எம் முன்னோர் சும்மாவா சொன்னார்கள். 

பி;கு; முகப் புத்தகத்தில் அவரோடு பழகியவர் அவரை பாலியல் வன்புணர்வு செய்யவில்லை.அவரது நண்பர் தான் செய்தவர்😫 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நேகமாய் பலாத்காரம் தான் நடந்திருக்கும்..

இரண்டு ஆண்களும் சம்பந்தப்பட்டிருந்தால் அது சரியாக இருக்கலாம்.

இங்கே இருவரும் தாமாகவே குடிபோதையில் இணைந்துள்ளனர்.  அந்தப் பெண்ணை இவராக இழுத்துக் கொண்டு கட்டிலுக்கு போகவில்லை.

ஏன் அந்த ஆண் தான் தனது அறையில், தனது கட்டிலில் ஒரு பெண்ணால் பலாத்காரத்துக்கு உள்ளானதாக சொல்லமுடியாது? அதிலும் ஓர் நியாயம் இருக்கிறது தானே. 

பெண் பாதிக்கப்பட்டரா இல்லையா என்ற கேள்வி, பெண் நடந்து கொண்ட முறையற்ற தன்மையால் வலுவிழந்து போகிறது. 

சட்டம் ஒரு இருட்டறை, இதில் திறமையான வக்கீல் வாதமே வெல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பெனி குடுப்பதையும் நடப்பையையும் போட்டு குழப்புகிறோம் என்று தோன்றுகின்றது. நட்பென்றால் அளவுடன் பழகி கண்ணியமாய் பிரிந்திருப்பினம். சேர்ந்து அளவின்றி குடித்து கம்பெனி குடுத்து விட்டு என்ன காரணத்தாலோ இப்ப குளறுகினம்.....!  😐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.