Jump to content

திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ?

இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை.

 கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப்  பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம்.  திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு, குடும்பத்தை தொடர்ந்தும் ஒரு கூரையின்கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் சுமத்திவிடுகிறது.

சரி, இதன் மறுபக்கம் என்ன? பெண்களைப்போன்றே, ஆண்களுக்கும் தமது திருமண உறவு நிலைத்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? அவ்வாறு விருப்பப்படாத வாழ்க்கையொன்றில் ஆண்களை தொடர்ந்தும் வைத்திருக்க அழுத்தம் கொடுக்கும் காரணிகள் என்ன? உண்மையாகவே இக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு ஆணின் வாழ்க்கை விட்டுக்கொடுக்கப்பட வேண்டுமா? 

உள்நாட்டு யுத்தம் எமது சமூகத்தை சர்வதேசங்கம் எங்கும் விசிறி எறிந்து பலவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்று எம்மில் பலர் மேற்கத்தைய நாடுகளில் எமது வாழ்க்கைகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். எம் கண்முன்னேயே, மேற்கத்தையர்கள் தமது குடும்பங்களை பிரித்து, சேர்த்து, கலப்புக் குடும்பங்களாக்கி ஏதோ ஒருவிதத்தில் தமது வாழ்க்கையை நடத்திவருவது எமக்குத் தெரிகிறது. விவாகரத்தென்பது, மீள்திருமணம் என்பதும் மேற்கத்தையவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சனையாகவோ அல்லது எடுக்கப்பட முடியாத, கடிணமான முடிவாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. சிலவருடங்கள் மட்டுமே கூடி வாழ்ந்துவிட்டு, எம்மால் சேர்ந்துவாழ இனிமேல் முடியாது என்று பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு விலகிச் செல்லும் சோடிகளும், பிரிந்த சில நாட்களிலேயே தனக்கான புதியதொரு உறவைத் தேடும் தனிமனிதர்களும் எம்முனே கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். 

எமது விழாக்கள், நண்பர்களுடான கலந்துரையாடல்களில் ஒரு பேசுபொருளாக மட்டுமே இருக்கும் இந்த திருமண பிரிவு அல்லது சேர்க்கை என்பது, எம்மைப்பொறுத்தவரையில் பெரும்பாலும் சாத்தியப்பாடற்ற ஒன்றாகவே இருந்துவருகிறது.

மேற்கத்தையவரின் இதுதொடர்பான சிந்தனைக்கும் எமது சிந்தனைக்குமிடையிலான வேறுபாடே, இக்கருதுகோள் பற்றி மிகவும் வேறான எண்ணங்களைக் கொள்ளச் செய்திருக்கிறது.

எமது சமூகத்தில், திருமண தம்பதிகளுக்கிடையிலான அன்னியொன்னியம் என்பது சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கும்பொழுது, உறவு அறுபடாமல் குடும்பத்தைத் தொடர்ந்தும் கொண்டு செலுத்துவது எது என்கிற கேள்வியின்பொழுது, என்னைப்பொறுத்தவரைக்கும் சில பிரதான விடயங்களைக் குறிப்பிட முடியும். அதில் முதலாவது பிள்ளைகள். சிதறுண்டு போகும் குடும்பங்களின் குழந்தைகள் அவல நிலை என்பது மிகவும் முக்கியமானதொன்று. பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் எதிர்கால வளர்ப்பு தாய் அல்லது தந்தை தொடர்பான இயல்பாகவே எழும் சந்தேகங்கள், அவர்களின் கல்வியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள், அவர்களின் மனநிலையில் பெற்றோரின் பிரிவு ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புக்கள், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இதனால் ஏற்படுத்தப்படும் அவமானங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இடமுடியும். ஆனால், நிதமும் தகராற்றுடன், குடும்பம் ஒன்றாக இருந்தால்ப் போதும் என்கிற கண்மூடித்தனமான அழுத்தத்தில் வளர்ந்துவரும் குழந்தையின் மனநிலையில் அவர்களது பெற்றோரின் தகராறுஅக்ல் ஏற்படுத்தப்போகும் நிரந்த உளரீதியான காயங்கள் பற்றி எம்மில் எவருமே பேசுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நாம் மேற்கத்தையவருடம் இருந்து வேறுபடுகிறோம்.

பல மனோவியல் நிபுணர்களின் பார்வையில், நாள்தோறும் சண்டை சச்சரவுகளுடன் வாழும் தம்பதிகளின் குழந்தைகளுக்கும், சச்சரவுகள் வருவது தெரிந்து பிரிந்து வாழ்வதே நலம் என்று வாழும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளின் மனோநிலையைனை நோக்கினால், பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளும் புதிய குடும்ப வாழ்வென்பது ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தமது பெற்றோர் பிரிவதை விரும்பாவிட்டாலும் கூட, காலவோட்டத்தில் பிரிவை ஏற்றுக்கொள்ளப்பழகுவதோடு, புதிய குடும்ப அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு சிறந்த மனநிலையில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகளின் நிலை இப்படியிருந்தாலும் கூட, மாற்றாந்தாய் அல்லது சிற்றப்பன் கைகளில் அகப்பட்டுத் தமது வாழ்வைத் தொலைத்த குழந்தைகளின் கதைகளும் இல்லாமல் இல்லை.

ஆக, குழந்தைகளின் எதிர்காலம் என்பது பாதிக்கப்படலாம் என்கிற தமிழ்ச் சமூக சிந்தனை என்பது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலவேளை அடிபட்டுப் போய்விடுகிறது.

அடுத்ததாக, சமூகம் இப்பிரிவுபற்றி எவ்வாறாகப் பேசப்போகிறதென்பது தொடர்பான கவலை. பலரைப் பொறுத்தவரை, தாம் வாழும் நாடுகளில், தமது சமூகம் சார்ந்த வட்டங்களில் பிரபலமாகவோ அல்லது பலரால் அறிஅயப்பட்டவராகவோ இருப்பதற்கான சந்தர்ப்பம் நிறையவே இருக்கிறது. இவ்வாறான பிரிவொன்றின்பொழுது, தான் சார்ந்த சமூகத்தின் பழிச்சொல்லிற்கு உள்ளாக நேரிடலாம், அல்லது அந்தச் சமூகம் தன்னஒ ஒதுக்கிவிடும் என்கிற பயமே, பலரைத் தொடர்ந்தும் விரும்பாத உறவொன்றில் இருக்க அழுத்துகிறது. மேற்கத்தையவர்களுக்கு இந்தப் பிரச்சனையில்லை. சமூகம் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தமது சுகமான நிம்மதியான வாழ்க்கைக்கு முன்னால் சமூக அந்தஸ்த்தென்பதோ அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் என்பதோ ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண உறவென்பது எவ்விலை கொடுத்தாயினும் தொடர்ந்து பேணப்படவேண்டுமென்கிற நிலைக்கு தமிழ்ச் சமூகத்தைக் கொண்டுசெல்கின்ற இன்னொரு காரணி அவர்களின் பொருளாதார நிலமை. ஊரில், விவாகரத்தென்பது மிகவும் அரிதானது. அப்படி அரிதாக நடைபெறும் சந்தர்ப்பங்களில் கூட, சொத்துக்கள் பற்றிப் பெரிதாக எவருமே பேசுவதில்லை. எவரெவர் பெயரில் அவை இருக்கின்றனவோ, அவரவர் பேரிலேயே அவை தங்கிவிடுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக, பெண்ணானவள் மீண்டும் தனது பெற்றோரின் வீட்டிற்கே திரும்புவதோடு, மறுமணம் என்பதுபற்றி எவரும் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை.

ஆனால், மேற்குலகில் சட்டரீதியான திருமணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறவுமுறையில் வாழ்ந்து பிரியும் சோடிகளுக்கு இருக்கும் பொதுவான விதிமுறை என்பது, இருக்கும் சொத்து சரி பாதியாகப் பகிரப்படுவது. அதுமட்டுமல்லாமல், பிள்ளைகள் எவரிடம் அடைக்கலம் ஆகிறார்களோ, வரிடம் மற்றைய தரப்பிடமிருந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் செலவினை அரசாங்கம் கராராகப் பறித்துக் கொடுத்துவிடும். இதுவும் ஒரு காரணம் தமிழர்கள் எவ்விலை கொடுத்தாவது விருப்பமில்லாவீட்டலும்கூட சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பதற்கு. 
அதாவது நாம் கஷ்ட்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் பிரிவுபடுவதையோ அல்லது இன்னொருவரிடம் போய்ச் சேர்வதையோ நாம் விரும்புவதில்லை. 

தமது இளமைக் காலம், நிம்மதி, பாலியல் ரீதியான முழுமை, சந்தோசம், வாழ்க்கையின் நிறைவு, தேடல்களின் முழுமை ஆகியவற்றை விலையாகக் கொடுத்து ஒருவர் தொடர்ந்தும் தனக்கு ஒத்துவராத, விரும்பாத, புரிந்துகொள்ள முடியாத, நிதமும் ஒரு புதிய பிணக்கைக் கொண்டுவரும் ஒரு திருமண உறவில் தொடர்ந்தும் இருக்கவேண்டிய தேவை என்ன? 

இவ்வாறான ஒரு உறவில் இருப்பதற்குக் காரணங்களாகக் காட்டப்படும் விடயங்கள் உண்மையாகவே விலை மதிப்பற்றவைதானா? எவ்விலை கொடுத்தாவது கப்பாற்றப்படவேண்டியவையா? 

இதுபற்றிபு புரிந்தவர்கள் இருப்பின், கருத்துக்களை அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

7 hours ago, ragunathan said:

இவ்வாறான ஒரு உறவில் இருப்பதற்குக் காரணங்களாகக் காட்டப்படும் விடயங்கள் உண்மையாகவே விலை மதிப்பற்றவைதானா? எவ்விலை கொடுத்தாவது கப்பாற்றப்படவேண்டியவையா? 

அருமையான ஓர் விவாதத் தலைப்பு, ரகுநாதன் அண்ணா. 😊

இதைப்பற்றி நீண்ட ஓர் விளக்கம் கொடுக்கலாம். எனினும் சுருக்கம் கருதி ஓரிரு வசனங்களில் எனது கருத்தைப் பதிய நினைக்கிறேன்:

புலம் பெயர்ந்து பல்வேறு சமுதாய அமைப்புக்களுக்கு இசைபாக்கமடைந்த / அடைய முயற்சிக்கும் ஓர் நிலைமையில் நமது சமூகம் உள்ளது.

என்ன தான் நம்மில் பலர் நம் கலாசார விழுமியங்களைப் பேண வேண்டும் என்று விரும்பினாலும் வெளிச் சூழலின் அழுத்தம் நமது குணவியவல்புகளை, விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளுகின்றது. உதாரணத்துக்கு நாம் உண்ணும் உணவு, செய்யும் வேலை, வாழ்க்கை முறை, கொண்டாட்டங்கள் எனச் சில அம்சங்களைக் கூறலாம்.

எனவே சமூகம் சார்ந்த புறக்காரணிகள் பல இருந்தாலும் இறுதியில் ஓர் திருமண பந்தத்தை பெறுமதியாக்குவதும், இல்லாமல் செய்வதும் அதில் இணைந்துள்ள ஆண், பெண் இருவரின் பார்வையில், செயல்களில் தான் உள்ளது. அவர்கள் விலைமதிப்பற்றதாகக் கருதுவது திருமண பந்தமா, மன நிம்மதியா அல்லது சொத்து, சுகம் மற்றும் பிற வசதிகளா, சமூக அந்தஸ்தா என்பதைப் பொறுத்து அவர்கள் பார்வை மாறுபடும். 

எனினும் என்னைப் பொறுத்தவரை, ஒருவரது மன நிம்மதியை / மகிழ்ச்சியை வாழ்க்கை முழுவதும் தீவிரமாகப் பாதிக்கும் என்று நன்கு தெரிந்தால் அந்தத் திருமண பந்தத்தை உதறிவிடுதல் தவறில்லை. நல்ல படியாகப் பிரிந்து இன்னோர் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனாலும், எனது பார்வையில் திருமண வாழ்வு என்பது மேன்மையான பண்பு. சரியான சோடிகள் அமையும்போது திருமணம் என்பது மணமக்கள் இருவருக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இருவர் குடும்பத்தினருக்கமே குதூகலம் தானே! தாய்மண்ணில் இருக்கும் போது அந்த மகிழ்ச்சியை உணர்ந்திருப்போம். இதுபோல் நல்ல குடும்ப அங்கத்தவர்களின் அன்பும், ஆதரவும்,  முதியோரின் வழிகாட்டலும் பல இளம்சோடிகளுக்கு உறுதுணையாக இருந்து அனாவசியமான விவாகரத்துக்களைத் தவிர்த்தது. (ஆதரவாக இருக்க வேண்டியோரே சில சமயங்களில் குழப்பத்தை உண்டுபண்ணிய கதைகளையும் கேட்டிருப்போம்.)

எனவே, திருமண பந்தத்தில் இருப்போர் அவர்களது விருப்பு வெறுப்புக்களை மனம்விட்டுப் பேசி, அவர்ளுக்கு எது பெறுமதியென அறிந்து, தேவையான உதவிகள், ஆலோசனைகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் (marriage counselling) மூலம் பெற்று நல்லதோர் முடிவை எடுக்கலாம்! 

மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புவது: நல்ல நண்பர்கள், உறவினர்களது, மூத்தோரது ஆதரவு தொடர்ச்சியாக இருக்குமிடத்தே அனாவசியமான விவாகரத்துக்கள் தவிர்க்கப்படலாம். எல்லோருக்கும் தனித்து வாழ உரிமை உண்டு. ஆனால், நல்லதோர் சமூகவலை அமைப்பு (social network) நலமுற வாழ அவசியமானது. ஏன் திருமணம் கூட இவ்வாறான ஓர் ஒழுங்கு தானே! 😊

உங்கள் கேள்விக்குப் பல விதமான கருத்துக்களை முன் வைக்கலாம், ரகுநாதன் அண்ணா. இது எனது கருத்து / என் பார்வை மட்டுமே. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2019 at 1:48 AM, மல்லிகை வாசம் said:

 

மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புவது: நல்ல நண்பர்கள், உறவினர்களது, மூத்தோரது ஆதரவு தொடர்ச்சியாக இருக்குமிடத்தே அனாவசியமான விவாகரத்துக்கள் தவிர்க்கப்படலாம். எல்லோருக்கும் தனித்து வாழ உரிமை உண்டு. ஆனால், நல்லதோர் சமூகவலை அமைப்பு (social network) நலமுற வாழ அவசியமானது. ஏன் திருமணம் கூட இவ்வாறான ஓர் ஒழுங்கு தானே! 😊

 

எனக்கும் இதே கருத்து உண்டு...... சில சமயம் மூன்றாம் நபராலேயே பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.அவற்றை இனங்கண்டு தவிர்க்க வேண்டும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  அதிகமாக பிரிந்து வாழ்வதில்லை தம்பதிகள் ஆனாலும் கால ஓட்டத்தின் வேகத்தில் இலங்கையிலும் தற்போது இந்த பிரிவுகள் , விவாகரத்து, மறுமணம் என்பது கொஞ்சம் தலைதூக்கியுள்ளது 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்ட தட்ட 5000 பேர் வரைக்கும் விவாகரத்து கோரி முன்வைத்துள்ளார்கள் ஆணை பெண்ணும் ,பெண்ணை ஆணும் பரஸ்பரம் குற்றம் சொல்கிறார்கள் சின்ன காரணம் சொல்ல போனால் இந்த தொழிநுட்பமும் இந்த பிரிவுக்கு அதிக காரணமாக இருக்கிறது 

உதாரணமாக இந்த போணை சொல்லலாம் ( இதனால் ஏற்படும் சந்தேகமான பேச்சுகளே பல பிரிவுக்கு காரணமாக இருக்கிறது ) கள்ள தொடர்பு என்கிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.