Jump to content

திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ?

இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை.

 கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப்  பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம்.  திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு, குடும்பத்தை தொடர்ந்தும் ஒரு கூரையின்கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் சுமத்திவிடுகிறது.

சரி, இதன் மறுபக்கம் என்ன? பெண்களைப்போன்றே, ஆண்களுக்கும் தமது திருமண உறவு நிலைத்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? அவ்வாறு விருப்பப்படாத வாழ்க்கையொன்றில் ஆண்களை தொடர்ந்தும் வைத்திருக்க அழுத்தம் கொடுக்கும் காரணிகள் என்ன? உண்மையாகவே இக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு ஆணின் வாழ்க்கை விட்டுக்கொடுக்கப்பட வேண்டுமா? 

உள்நாட்டு யுத்தம் எமது சமூகத்தை சர்வதேசங்கம் எங்கும் விசிறி எறிந்து பலவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்று எம்மில் பலர் மேற்கத்தைய நாடுகளில் எமது வாழ்க்கைகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். எம் கண்முன்னேயே, மேற்கத்தையர்கள் தமது குடும்பங்களை பிரித்து, சேர்த்து, கலப்புக் குடும்பங்களாக்கி ஏதோ ஒருவிதத்தில் தமது வாழ்க்கையை நடத்திவருவது எமக்குத் தெரிகிறது. விவாகரத்தென்பது, மீள்திருமணம் என்பதும் மேற்கத்தையவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சனையாகவோ அல்லது எடுக்கப்பட முடியாத, கடிணமான முடிவாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. சிலவருடங்கள் மட்டுமே கூடி வாழ்ந்துவிட்டு, எம்மால் சேர்ந்துவாழ இனிமேல் முடியாது என்று பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு விலகிச் செல்லும் சோடிகளும், பிரிந்த சில நாட்களிலேயே தனக்கான புதியதொரு உறவைத் தேடும் தனிமனிதர்களும் எம்முனே கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். 

எமது விழாக்கள், நண்பர்களுடான கலந்துரையாடல்களில் ஒரு பேசுபொருளாக மட்டுமே இருக்கும் இந்த திருமண பிரிவு அல்லது சேர்க்கை என்பது, எம்மைப்பொறுத்தவரையில் பெரும்பாலும் சாத்தியப்பாடற்ற ஒன்றாகவே இருந்துவருகிறது.

மேற்கத்தையவரின் இதுதொடர்பான சிந்தனைக்கும் எமது சிந்தனைக்குமிடையிலான வேறுபாடே, இக்கருதுகோள் பற்றி மிகவும் வேறான எண்ணங்களைக் கொள்ளச் செய்திருக்கிறது.

எமது சமூகத்தில், திருமண தம்பதிகளுக்கிடையிலான அன்னியொன்னியம் என்பது சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கும்பொழுது, உறவு அறுபடாமல் குடும்பத்தைத் தொடர்ந்தும் கொண்டு செலுத்துவது எது என்கிற கேள்வியின்பொழுது, என்னைப்பொறுத்தவரைக்கும் சில பிரதான விடயங்களைக் குறிப்பிட முடியும். அதில் முதலாவது பிள்ளைகள். சிதறுண்டு போகும் குடும்பங்களின் குழந்தைகள் அவல நிலை என்பது மிகவும் முக்கியமானதொன்று. பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் எதிர்கால வளர்ப்பு தாய் அல்லது தந்தை தொடர்பான இயல்பாகவே எழும் சந்தேகங்கள், அவர்களின் கல்வியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள், அவர்களின் மனநிலையில் பெற்றோரின் பிரிவு ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புக்கள், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இதனால் ஏற்படுத்தப்படும் அவமானங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இடமுடியும். ஆனால், நிதமும் தகராற்றுடன், குடும்பம் ஒன்றாக இருந்தால்ப் போதும் என்கிற கண்மூடித்தனமான அழுத்தத்தில் வளர்ந்துவரும் குழந்தையின் மனநிலையில் அவர்களது பெற்றோரின் தகராறுஅக்ல் ஏற்படுத்தப்போகும் நிரந்த உளரீதியான காயங்கள் பற்றி எம்மில் எவருமே பேசுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நாம் மேற்கத்தையவருடம் இருந்து வேறுபடுகிறோம்.

பல மனோவியல் நிபுணர்களின் பார்வையில், நாள்தோறும் சண்டை சச்சரவுகளுடன் வாழும் தம்பதிகளின் குழந்தைகளுக்கும், சச்சரவுகள் வருவது தெரிந்து பிரிந்து வாழ்வதே நலம் என்று வாழும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளின் மனோநிலையைனை நோக்கினால், பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளும் புதிய குடும்ப வாழ்வென்பது ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தமது பெற்றோர் பிரிவதை விரும்பாவிட்டாலும் கூட, காலவோட்டத்தில் பிரிவை ஏற்றுக்கொள்ளப்பழகுவதோடு, புதிய குடும்ப அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு சிறந்த மனநிலையில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகளின் நிலை இப்படியிருந்தாலும் கூட, மாற்றாந்தாய் அல்லது சிற்றப்பன் கைகளில் அகப்பட்டுத் தமது வாழ்வைத் தொலைத்த குழந்தைகளின் கதைகளும் இல்லாமல் இல்லை.

ஆக, குழந்தைகளின் எதிர்காலம் என்பது பாதிக்கப்படலாம் என்கிற தமிழ்ச் சமூக சிந்தனை என்பது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலவேளை அடிபட்டுப் போய்விடுகிறது.

அடுத்ததாக, சமூகம் இப்பிரிவுபற்றி எவ்வாறாகப் பேசப்போகிறதென்பது தொடர்பான கவலை. பலரைப் பொறுத்தவரை, தாம் வாழும் நாடுகளில், தமது சமூகம் சார்ந்த வட்டங்களில் பிரபலமாகவோ அல்லது பலரால் அறிஅயப்பட்டவராகவோ இருப்பதற்கான சந்தர்ப்பம் நிறையவே இருக்கிறது. இவ்வாறான பிரிவொன்றின்பொழுது, தான் சார்ந்த சமூகத்தின் பழிச்சொல்லிற்கு உள்ளாக நேரிடலாம், அல்லது அந்தச் சமூகம் தன்னஒ ஒதுக்கிவிடும் என்கிற பயமே, பலரைத் தொடர்ந்தும் விரும்பாத உறவொன்றில் இருக்க அழுத்துகிறது. மேற்கத்தையவர்களுக்கு இந்தப் பிரச்சனையில்லை. சமூகம் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தமது சுகமான நிம்மதியான வாழ்க்கைக்கு முன்னால் சமூக அந்தஸ்த்தென்பதோ அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் என்பதோ ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண உறவென்பது எவ்விலை கொடுத்தாயினும் தொடர்ந்து பேணப்படவேண்டுமென்கிற நிலைக்கு தமிழ்ச் சமூகத்தைக் கொண்டுசெல்கின்ற இன்னொரு காரணி அவர்களின் பொருளாதார நிலமை. ஊரில், விவாகரத்தென்பது மிகவும் அரிதானது. அப்படி அரிதாக நடைபெறும் சந்தர்ப்பங்களில் கூட, சொத்துக்கள் பற்றிப் பெரிதாக எவருமே பேசுவதில்லை. எவரெவர் பெயரில் அவை இருக்கின்றனவோ, அவரவர் பேரிலேயே அவை தங்கிவிடுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக, பெண்ணானவள் மீண்டும் தனது பெற்றோரின் வீட்டிற்கே திரும்புவதோடு, மறுமணம் என்பதுபற்றி எவரும் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை.

ஆனால், மேற்குலகில் சட்டரீதியான திருமணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறவுமுறையில் வாழ்ந்து பிரியும் சோடிகளுக்கு இருக்கும் பொதுவான விதிமுறை என்பது, இருக்கும் சொத்து சரி பாதியாகப் பகிரப்படுவது. அதுமட்டுமல்லாமல், பிள்ளைகள் எவரிடம் அடைக்கலம் ஆகிறார்களோ, வரிடம் மற்றைய தரப்பிடமிருந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் செலவினை அரசாங்கம் கராராகப் பறித்துக் கொடுத்துவிடும். இதுவும் ஒரு காரணம் தமிழர்கள் எவ்விலை கொடுத்தாவது விருப்பமில்லாவீட்டலும்கூட சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பதற்கு. 
அதாவது நாம் கஷ்ட்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் பிரிவுபடுவதையோ அல்லது இன்னொருவரிடம் போய்ச் சேர்வதையோ நாம் விரும்புவதில்லை. 

தமது இளமைக் காலம், நிம்மதி, பாலியல் ரீதியான முழுமை, சந்தோசம், வாழ்க்கையின் நிறைவு, தேடல்களின் முழுமை ஆகியவற்றை விலையாகக் கொடுத்து ஒருவர் தொடர்ந்தும் தனக்கு ஒத்துவராத, விரும்பாத, புரிந்துகொள்ள முடியாத, நிதமும் ஒரு புதிய பிணக்கைக் கொண்டுவரும் ஒரு திருமண உறவில் தொடர்ந்தும் இருக்கவேண்டிய தேவை என்ன? 

இவ்வாறான ஒரு உறவில் இருப்பதற்குக் காரணங்களாகக் காட்டப்படும் விடயங்கள் உண்மையாகவே விலை மதிப்பற்றவைதானா? எவ்விலை கொடுத்தாவது கப்பாற்றப்படவேண்டியவையா? 

இதுபற்றிபு புரிந்தவர்கள் இருப்பின், கருத்துக்களை அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

7 hours ago, ragunathan said:

இவ்வாறான ஒரு உறவில் இருப்பதற்குக் காரணங்களாகக் காட்டப்படும் விடயங்கள் உண்மையாகவே விலை மதிப்பற்றவைதானா? எவ்விலை கொடுத்தாவது கப்பாற்றப்படவேண்டியவையா? 

அருமையான ஓர் விவாதத் தலைப்பு, ரகுநாதன் அண்ணா. 😊

இதைப்பற்றி நீண்ட ஓர் விளக்கம் கொடுக்கலாம். எனினும் சுருக்கம் கருதி ஓரிரு வசனங்களில் எனது கருத்தைப் பதிய நினைக்கிறேன்:

புலம் பெயர்ந்து பல்வேறு சமுதாய அமைப்புக்களுக்கு இசைபாக்கமடைந்த / அடைய முயற்சிக்கும் ஓர் நிலைமையில் நமது சமூகம் உள்ளது.

என்ன தான் நம்மில் பலர் நம் கலாசார விழுமியங்களைப் பேண வேண்டும் என்று விரும்பினாலும் வெளிச் சூழலின் அழுத்தம் நமது குணவியவல்புகளை, விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளுகின்றது. உதாரணத்துக்கு நாம் உண்ணும் உணவு, செய்யும் வேலை, வாழ்க்கை முறை, கொண்டாட்டங்கள் எனச் சில அம்சங்களைக் கூறலாம்.

எனவே சமூகம் சார்ந்த புறக்காரணிகள் பல இருந்தாலும் இறுதியில் ஓர் திருமண பந்தத்தை பெறுமதியாக்குவதும், இல்லாமல் செய்வதும் அதில் இணைந்துள்ள ஆண், பெண் இருவரின் பார்வையில், செயல்களில் தான் உள்ளது. அவர்கள் விலைமதிப்பற்றதாகக் கருதுவது திருமண பந்தமா, மன நிம்மதியா அல்லது சொத்து, சுகம் மற்றும் பிற வசதிகளா, சமூக அந்தஸ்தா என்பதைப் பொறுத்து அவர்கள் பார்வை மாறுபடும். 

எனினும் என்னைப் பொறுத்தவரை, ஒருவரது மன நிம்மதியை / மகிழ்ச்சியை வாழ்க்கை முழுவதும் தீவிரமாகப் பாதிக்கும் என்று நன்கு தெரிந்தால் அந்தத் திருமண பந்தத்தை உதறிவிடுதல் தவறில்லை. நல்ல படியாகப் பிரிந்து இன்னோர் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனாலும், எனது பார்வையில் திருமண வாழ்வு என்பது மேன்மையான பண்பு. சரியான சோடிகள் அமையும்போது திருமணம் என்பது மணமக்கள் இருவருக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இருவர் குடும்பத்தினருக்கமே குதூகலம் தானே! தாய்மண்ணில் இருக்கும் போது அந்த மகிழ்ச்சியை உணர்ந்திருப்போம். இதுபோல் நல்ல குடும்ப அங்கத்தவர்களின் அன்பும், ஆதரவும்,  முதியோரின் வழிகாட்டலும் பல இளம்சோடிகளுக்கு உறுதுணையாக இருந்து அனாவசியமான விவாகரத்துக்களைத் தவிர்த்தது. (ஆதரவாக இருக்க வேண்டியோரே சில சமயங்களில் குழப்பத்தை உண்டுபண்ணிய கதைகளையும் கேட்டிருப்போம்.)

எனவே, திருமண பந்தத்தில் இருப்போர் அவர்களது விருப்பு வெறுப்புக்களை மனம்விட்டுப் பேசி, அவர்ளுக்கு எது பெறுமதியென அறிந்து, தேவையான உதவிகள், ஆலோசனைகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் (marriage counselling) மூலம் பெற்று நல்லதோர் முடிவை எடுக்கலாம்! 

மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புவது: நல்ல நண்பர்கள், உறவினர்களது, மூத்தோரது ஆதரவு தொடர்ச்சியாக இருக்குமிடத்தே அனாவசியமான விவாகரத்துக்கள் தவிர்க்கப்படலாம். எல்லோருக்கும் தனித்து வாழ உரிமை உண்டு. ஆனால், நல்லதோர் சமூகவலை அமைப்பு (social network) நலமுற வாழ அவசியமானது. ஏன் திருமணம் கூட இவ்வாறான ஓர் ஒழுங்கு தானே! 😊

உங்கள் கேள்விக்குப் பல விதமான கருத்துக்களை முன் வைக்கலாம், ரகுநாதன் அண்ணா. இது எனது கருத்து / என் பார்வை மட்டுமே. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2019 at 1:48 AM, மல்லிகை வாசம் said:

 

மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புவது: நல்ல நண்பர்கள், உறவினர்களது, மூத்தோரது ஆதரவு தொடர்ச்சியாக இருக்குமிடத்தே அனாவசியமான விவாகரத்துக்கள் தவிர்க்கப்படலாம். எல்லோருக்கும் தனித்து வாழ உரிமை உண்டு. ஆனால், நல்லதோர் சமூகவலை அமைப்பு (social network) நலமுற வாழ அவசியமானது. ஏன் திருமணம் கூட இவ்வாறான ஓர் ஒழுங்கு தானே! 😊

 

எனக்கும் இதே கருத்து உண்டு...... சில சமயம் மூன்றாம் நபராலேயே பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.அவற்றை இனங்கண்டு தவிர்க்க வேண்டும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  அதிகமாக பிரிந்து வாழ்வதில்லை தம்பதிகள் ஆனாலும் கால ஓட்டத்தின் வேகத்தில் இலங்கையிலும் தற்போது இந்த பிரிவுகள் , விவாகரத்து, மறுமணம் என்பது கொஞ்சம் தலைதூக்கியுள்ளது 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்ட தட்ட 5000 பேர் வரைக்கும் விவாகரத்து கோரி முன்வைத்துள்ளார்கள் ஆணை பெண்ணும் ,பெண்ணை ஆணும் பரஸ்பரம் குற்றம் சொல்கிறார்கள் சின்ன காரணம் சொல்ல போனால் இந்த தொழிநுட்பமும் இந்த பிரிவுக்கு அதிக காரணமாக இருக்கிறது 

உதாரணமாக இந்த போணை சொல்லலாம் ( இதனால் ஏற்படும் சந்தேகமான பேச்சுகளே பல பிரிவுக்கு காரணமாக இருக்கிறது ) கள்ள தொடர்பு என்கிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.