Jump to content

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்களுடன் இணைந்து, ஐ.நா.வில் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-தலைமையில்-வ/

 

Link to comment
Share on other sites

13 hours ago, கிருபன் said:

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்களுடன் இணைந்து, ஐ.நா.வில் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறந்ததொரு கோரிக்கை!

Link to comment
Share on other sites

55 minutes ago, போல் said:

சிறந்ததொரு கோரிக்கை!

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

சிறீலங்காவில் அரச உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டு செல்வதானால் அனுமதி பெற்றே செல்லலாம், அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படும்.

விக்கியர் ஆளுநரின் அனுமதி பெற்றே முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

Link to comment
Share on other sites

49 minutes ago, நிழலி said:

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா?

நிழலி!
இது உண்மை! அவர் தனது சொந்த உழைப்பில் வாழ நினைப்பதால் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பை, சந்தர்ப்பத்தை, தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார் எனக் கருதுகிறேன்! இது கவுரவமான மனிதர்களின் குணங்களில் ஒன்று எனக் கருதுகிறேன்! பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

49 minutes ago, நிழலி said:

இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

இது தவறு!
தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தி பேசுபவர்கள் தமக்குள் பேசப்போகும் விடயதானங்களை தம்முள் பகிர்ந்து பிரித்துக்கொள்ளவது வழமை! அந்த அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் பொது உடன்பாடு அடிப்படையில் பிரிக்கப்படும்! கிடைக்கும் நேரத்தை முழுமையாக/பயனுள்ளதாக பயன்படுத்த முன்னமே தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு பொது இணக்கத்துடன் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை. தனது கடமையை அனந்தி சரிவர செய்திருந்தார்!

இவ்வாறு பிரிக்கப்படும் போது தனிப்பட்ட நபர்கள் வாழும் சூழ்நிலை, இடங்கள், அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் போன்றவையும் கருதப்பட்டு, பரவலாக ஆராய்ந்து பேசவேண்டிய விடயதானங்கள் முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு இராஜதந்திர நகர்வு என்று கருதலாம்.

Link to comment
Share on other sites

17 minutes ago, போல் said:

நிழலி!
இது உண்மை! அவர் தனது சொந்த உழைப்பில் வாழ நினைப்பதால் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பை, சந்தர்ப்பத்தை, தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார்! இது கவுரவமான மனிதர்களின் குணங்களில் ஒன்று எனக் கருதுகிறேன்! பாராட்டப்படப் வேண்டிய ஒன்று!

.

விளக்கத்துக்கு நன்றி போல்.

அனந்தி சொந்த உழைப்பில் வாழ நினைப்பதற்கு உரிமையுடைவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்த அரசை / அரச இயந்திரத்தை இவ்வளவு காலமும் கடுமையாக விமர்சித்தாரோ, எந்த அரச இயந்திரத்தை பேரினவாத அரசு என்று ஏற்றுக் கொண்டு அதற்கு எதிராக போராடினாரோ அந்த அரச இயந்திரத்தில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு ஜெனிவாவுக்கு செல்வதற்கு அந்த அரசிடம் அனுமதி பெற வேண்டி வந்தமையை சந்தர்ப்பவாதமாகத்தான் பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

Just now, நிழலி said:

விளக்கத்துக்கு நன்றி போல்.

அனந்தி சொந்த உழைப்பில் வாழ நினைப்பதற்கு உரிமையுடைவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்த அரசை / அரச இயந்திரத்தை இவ்வளவு காலமும் கடுமையாக விமர்சித்தாரோ, எந்த அரச இயந்திரத்தை பேரினவாத அரசு என்று ஏற்றுக் கொண்டு அதற்கு எதிராக போராடினாரோ அந்த அரச இயந்திரத்தில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு ஜெனிவாவுக்கு செல்வதற்கு அந்த அரசிடம் அனுமதி பெற வேண்டி வந்தமையை சந்தர்ப்பவாதமாகத்தான் பார்க்கின்றேன்.

இல்லை நிழலி!

எம்மிடம் வரிகளை சுரண்டி, எமது சொத்துக்களை கொள்ளையடித்து, எமது சொத்துக்களை ஆக்கிரமித்து  இயங்கும் அரசு ஒரு ஆக்கிரமிப்பு அரசாக இருந்தாலும் அதில் எமக்குரிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது சந்தர்ப்பவாதம் ஆகவே முடியாது! அது வேறுவழிகளின்றி வரிகளை செலுத்தும் ஒருவரது அடிப்படை உரிமை!  அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்பது இங்கு நடைமுறை. தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளில் இது போன்ற சூழ்நிலைகளும் ஒன்று என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! நிச்சயமாக சந்தர்ப்பவாதம் ஆகாது!

ஒரு வீரப் பெண்மணி தவறான முடிவுகளை எடுத்திருப்பார் எனக் கருத இடமில்லை.

அவருக்கு உதவாவிட்டாலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளின் முரண்பாடுகளை வைத்து அவரை கொச்சைப்படுத்துவது அழகல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

இல்லை நிழலி!

எம்மிடம் வரிகளை சுரண்டி, எமது சொத்துக்களை கொள்ளையடித்து, எமது சொத்துக்களை ஆக்கிரமித்து  இயங்கும் அரசு ஒரு ஆக்கிரமிப்பு அரசாக இருந்தாலும் அதில் எமக்குரிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது சந்தர்ப்பவாதம் ஆகவே முடியாது! அது வேறுவழிகளின்றி வரிகளை செலுத்தும் ஒருவரது அடிப்படை உரிமை!  அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்பது இங்கு நடைமுறை. தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளில் இது போன்ற சூழ்நிலைகளும் ஒன்று என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! நிச்சயமாக சந்தர்ப்பவாதம் ஆகாது!

ஒரு வீரப் பெண்மணி தவறான முடிவுகளை எடுத்திருப்பார் எனக் கருத இடமில்லை.

அவருக்கு உதவாவிட்டாலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளின் முரண்பாடுகளை வைத்து அவரை கொச்சைப்படுத்துவது அழகல்ல!

வீரப் பெண்மணியா உங்களுக்கே இது ஓவராய் இல்லை😠 ..மு.வாய்க்காலில் மரணித்த பெண் போராளிகள்,அங்கவீனமான போராளிகள் இதை கேட்டால்😞 ...கணவர் பலவந்தமாய் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் போதும் அம்மணி தன்ட குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தா...இப்பவும் அதைத் தான் செய்கிறா😫 ...என்னத்தை செய்து கிழித்தார் என்று வீரப் பெண்மணி என்று பட் டம்?
 

22 hours ago, MEERA said:

சிறீலங்காவில் அரச உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டு செல்வதானால் அனுமதி பெற்றே செல்லலாம், அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படும்.

விக்கியர் ஆளுநரின் அனுமதி பெற்றே முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

 

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல 

Link to comment
Share on other sites

தாயகத்தில் இருந்து ஓர் கனமான தலைமை கண்டிப்பாக ஜெனீவா வர வேண்டும்.

* கஜேந்திரகுமார்  - பாராளுமன்ற உறுப்பினர் பதவி அற்ற பிரதிநிதி/கட்சி - கனதி கேள்விக்குறியது.

* கூட்டமைப்பு - சிங்கள யாணைப்பாகர்களாக கண்டிப்பாக வருவார்கள்

நிச்சயம், விக்கியரின் வரவு காலத்தின் தேவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல 

ஆளுநர் அனுமதிக்க வேண்டுமே.....

இது தொடர்பாக பல தடவைகள் இங்கு எழுதியாச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ஆளுநர் அனுமதிக்க வேண்டுமே.....

இது தொடர்பாக பல தடவைகள் இங்கு எழுதியாச்சு...

நான் உங்களுக்கு மட்டும் எழுத வேண்டும் என்று எழுதவில்லை...விக்கியின் சொந்த நலனுக்காய் எதை கேட்டாலும் குடுத்த ஆளுநர் மக்கள் நலனுக்காய் கேட்டால் மட்டும் கொடுக்கவில்லையாக்கும்...இன்னொரு திரியில்  டக்ளசின் பகுதியில் உள்ள வீதிகள் அந்த மாதிரி இருக்குது என்று நெடுக்கர் எழுதி இருந்தார்...அவரால் செய்ய முடியுது என்றால் ஏன் சம்மந்தர்,சுமத்திரன்,சீ வி யால் முடியவில்லை😧

.
கடைசியில் தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை...இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 
 

Link to comment
Share on other sites

On 2/15/2019 at 1:40 AM, ரதி said:

வீரப் பெண்மணியா உங்களுக்கே இது ஓவராய் இல்லை😠 ..மு.வாய்க்காலில் மரணித்த பெண் போராளிகள்,அங்கவீனமான போராளிகள் இதை கேட்டால்😞 ...கணவர் பலவந்தமாய் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் போதும் அம்மணி தன்ட குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தா...இப்பவும் அதைத் தான் செய்கிறா😫 ...என்னத்தை செய்து கிழித்தார் என்று வீரப் பெண்மணி என்று பட் டம்?

ஊர் மக்கள் அவரை வீரப் பெண்மணி என்று நினைத்தபடியால் தான் அவருக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

அனந்தி நேர்மையாக செயற்பட்டதால் தான் ஒட்டுண்ணிகளாக வாழும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுத்து, கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

எனவே உங்களைப் போலவே நாட்டை விட்டு தப்பி ஓடியதுடன் வம்பளந்து கொண்டிருந்தால்  தான் வீரப்பெண்மணி என்று நீங்கள் நினைத்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது!

On 2/15/2019 at 1:40 AM, ரதி said:

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல  

முற்று முழுதாக விதண்டாவாதம் என்பது இதைத் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

ஊர் மக்கள் அவரை வீரப் பெண்மணி என்று நினைத்தபடியால் தான் அவருக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

அனந்தி நேர்மையாக செயற்பட்டதால் தான் ஒட்டுண்ணிகளாக வாழும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுத்து, கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

எனவே உங்களைப் போலவே நாட்டை விட்டு தப்பி ஓடியதுடன் வம்பளந்து கொண்டிருந்தால்  தான் வீரப்பெண்மணி என்று நீங்கள் நினைத்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது!

முற்று முழுதாக விதண்டாவாதம் என்பது இதைத் தான்!

சரி வேற என்ன?...இன்னொரு தேர்தல் வராமலா போகப் போது வீரப் பெண்மணியைம்,ஜயாவும் தேர்தலில் நின்று வெல்லட்டும் பிறகு பார்ப்போம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.