Jump to content

உன் தோள் சாய ஆசைதான்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன் தோள் சாய ஆசைதான்....

 

osoby_starsze.jpg


காலை எழுந்ததிலிருந்து சுந்தரத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வீடு அமைதியாக இருந்தது.

முன்பெல்லாம் தாத்தா தாத்தா என்று தோள்மீதும் மார்மீதும் புரண்டு மடிமீது தவழ்ந்த செல்லப் பேரன்கள் இருவரும் இ;ப்பொழுது தம் தேவைகளைத் தாமே கவனிக்கும் அளவு வளர்ந்து விட்ட பின்பு அவரை திரும்பியும் பார்ப்பதில்லை.

காரணம் அவர்கள் கைகளில் பல தொழில் நுட்பச் சாதனங்கள். காலை எழுந்ததும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு வேகவேகமாக தத்தமது கருமங்களை கவனித்தபடி 'போய் வருகிறேன்' என்று சொல்லக் கூட நேரமில்லாமல்  'அப்பா யாராவது கதவைத் தட்டினால் பார்த்து திறவுங்கள் கவனம்' என்று சொல்வதைத் தவிர நின்று நிதானித்து

 'அப்பா சாப்பிட்டீங்களா? இரவு தூங்கினீங்களா? உங்கள் தேவை என்ன? என்று கேட்டுச் செல்லக்கூட நேரமில்லாத அவசரம்.

இப்பொழுது அவர் பகுதி நேரமாக சில நாட்களில்தான் வேலைக்கு போய் வருவார்.

சாரதா இருக்கும் வரை சுந்தரத்திற்கு உலகமே அவள்தான். தான் உண்டு தன் கடமை உண்டு என்று வேலைக்குப் போய் சம்பாதிப்பதை அவளின் கையில் கொடுத்து விட்டு நிம்மதியாக தன் வாழ்க்கையை கழித்து விட்டார்.

அவரது தேவை அறிந்து சேவை செய்ய அவளை மிஞ்ச யாருமில்லை.

சாரதாவும் அரசாங்க திணைக்களத்தில் தொழில் புரிந்தவள்தான். வேலைக்குச் செல்லுமுன் சுந்தரத்தையும் தன் ஒரே மகள் சுஜாவையும் கவனித்து அவர்களது தேவைகளையெல்லாம் கவனித்து விட்டுத்தான் செல்வாள்.

'அப்பா அம்மா என்று அன்புடன் கொஞ்சி மகிழ்ந்த ஒரே மகள் சுஜாவிற்கு கல்வியுடன் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்த்த சுந்தரமும் சாரதாவும் அவள் வளர வளர அவளது வளர்ச்சி கண்டு பூரித்தனர்.

தமது ஒரே மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதிலேயே அவர்களது மன எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் விரும்பியபடி சுஜாவுக்கு கனடாவிலிருந்து நல்லதொரு வரனும் வந்தமைந்தது. மகளுக்கு தமக்கு தெரிந்த இடத்திலேயே திருமணம் அமைந்ததில் திருப்திப்பட்ட பெற்றோர் தம் ஒரே மகளை கனடாவிற்கு அனுப்ப தயங்கவில்லை.

சுஜா கஜனின் திருமணம் மிக விமரிசையாக நடந்ததை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு சுந்தரமும் சாரதாவும் தம் கடமைகளை தொடர்ந்தனர்.

சுஜா தாயாகப் போகிறாள் என்ற செய்தி வந்ததும் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம் பேரப் பிள்ளையை எப்ப பார்க்கப்போகிறோம் என்ற எதிப்பார்ப்பு ஒருபுறம் அவர்கள் மனம் அலைபாயத் தொடங்கியது.

தினமும் தொலைபேசியில் கதைக்கும் பொழுது சுஜா தனியாக இருப்பதையும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் கஜனும் பக்கத்தில் இருக்க முடியாத சூழ்நிலையையும் அறிந்ததும் சுந்தரமும் சாரதாவும் மனச்சஞ்சலம் அடைந்தனர்.

சுஜாவும் பெற்றவர்கள் பக்கத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை தெரிவிக்கவும் பெற்ற மனம் பித்தாகியது.

இறுதியில் சுந்தரமும் சாரதாவும் வேலையிலிருந்து கட்டாய ஓய்வெடுத்து கனடா வந்து சேர்ந்தனர்.

வந்ததும் சுந்தரம் சுறுசுறுப்பாக இயங்கினார்.

நேரத்தை வீணாக்காமல் வாகனம் ஓடப் பழகினார்.

தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்தார்.

சாரதாவும் சுஜாவுக்கு உதவியாக இருந்ததில் கஜனுக்கும் மிக மகிழ்ச்சி.

பெற்றவர்கள் அருகாமையால் சுஜாவும் கஜனும் தத்தமது கடமைகளைச் செய்ய எதுவித தடைகளும் இருக்கவில்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலம் உருண்டோட இப்பொழுது இரு பேரக்குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியாகி பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோசமாகக் கழிந்தது.

பேரக் குழந்தைகளும் தவழ்ந்து நடந்து ஓடி விளையாடி பாடசாலை செல்ல ஆரம்பித்தனர்.

 

விதி  என்பது புயலைப் போன்றது.

அது எப்படி யாரை எப்போது தாக்கும் என்று சொல்ல முடியாது.

அதுதான் சுந்தரத்தின் வாழ்க்கையிலும் நடந்தது.

திடீரென்று ஒருநாள் மாரடைப்பினால் அவதிப்பட்ட சாரதா சில மணி நேரங்களுக்குள் எல்லோரையும் தவிக்க விட்டு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

சுந்தரத்துக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ..என்ற வாசகங்களை அடிக்கடி நினைத்து தான் வாழ்ந்த காலங்களின் நினைவுகளுடன் நாட்களை கடத்தத் தொடங்கினார்.

பேரப்பிள்ளைகளின் அருகாமை துயரை மறக்க வைத்தாலும் காலப் போக்கில் அவர்களும் அவரை விட்டு விலகத் தொடங்கவும் தனிமை அவரை கொடுமையாகத் தாக்கியது.

சாரதா இருக்கும் பொழுது காரை எடுத்துக் கொண்டு அவளுடன் கோவில் கடைத்தெரு என்று எங்காவது போய் வருவார். இடைக்கிடை உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தவறுவதில்லை.

சாரதாவின் இழப்பின் பின் சுந்தரத்தை தனிமை வாட்டத் தொடங்கியது.

தனிமையில் துவளும் சுந்தரத்திற்கு நான்கு சுவர்களே அரணாயின.

மனைவியின் பிரிவு சுந்தரத்தை ஆட்டிப் போட்டு விட்டது.

இப்பொழுதெல்லாம் கோவிலுக்குச் செல்வதையும் கடைத்தெருவுக்குச் செல்வதையும் கூட தவிர்த்தார்.

வீட்டில் கேட்கவே வேண்டாம்.

எத்தனை நேரம்தான் தொலைக்காட்சியையும் வானொலியையும் மாறி மாறி பார்ப்பதுவும் கேட்பதுவும்.

மனம் வெறுமையாகி விட்டது.

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன

வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என்ற பாடல் வரிகளை அடிக்கடி முணுமுணுப்பார்.

காலநிலை நன்றாக இருந்தால் பக்கத்திலுள்ள பூங்கா வாங்கில் சென்று அமர்வார். தனிமை அங்கும் அவரைத் துரத்திச் செல்வதை விடவில்லை.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று எங்கெங்கு அலைந்தாலும் தன் கூட, தன் சுக துக்கங்களில் பங்குபெற, தன் தேவைகளை நிறைவேற்ற, தன்னுடன் பாசமுடன் பேசி மகிழ, தன் மனப் பாரங்களை மனம் திறந்து உரையாட, நட்புடன் உறவாட, தன் அருகாமையைப் புரிந்து நடக்க, தன்னுடன் சேர்ந்து பயணிக்க தனக்கு ஓர் துணை வேண்டுமென்ற உண்மை உறைக்கத் தொடங்கியது.

கொஞ்சக் காலமாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்த இந்த நினைவு இதை செயல்படுத்தினால் என்ன? என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

மகள் ஏதாவது நினைப்பாளோ? மருமகன் ஏதாவது சொல்வானோ? பேரக்குழந்தைகள் அங்கீகரிப்பார்களோ? உறவுகள் பரிகசிப்பார்களோ? ஏன்ற சிந்தனைகளையெல்லாம் மிஞ்சி எனக்கென்று ஓர் வாழ்க்கை உண்டு என் வாழ்க்கையை நான் ஏன் அர்த்தமாக்கிக் கொள்ள முடியாது? என்று சிந்தித்தார்.

முடியாதென்று எதுவுமில்லை. என் மனம் புரிந்து என்னுடன் இணைந்து வாழ என்னுடன் சேர்ந்து பயணிக்க ஏன் நான் ஒரு துணையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது?

சிந்தனைகளை அசை போட்டு போட்டு சில நாட்கள் கடந்தன.

வாழ்க்கையின் பொருள்தான் என்ன? வாழ்ந்துதான் பார்த்தாலென்ன? என்ற எண்ணம் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அவரை தட்டி எழுப்பியது.

பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாய்ந்து கொள்ளவும் ஓர் தோள் வேண்டும்

இதுவரை மற்றவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை இனி இருக்கும் கொஞ்சக் காலத்திலாவது தனக்காக தன் மன நிம்மதிக்காக வாழ்ந்தால் என்ன?

சாரதாவிடமும் மனதுக்குள் பேசிப் பார்த்தார். அவரும் புன்னகையுடன் கையசைத்து வாழ்த்தியதான பிரேமை.

மனச்சஞ்சலம் நீங்கியவராக புத்துணர்ச்சியுடன் செயற்பட ஆரம்பித்தார். முதற்கட்டமாக பத்திரிகையில் மணமக்கள் தேவை பகுதியைப் பிரித்து அதில் கண்களை ஓட விட்டார்.

 'நாற்பத்தைந்து வயதான கனடாவில் வசிக்கும் தன் சகோதரிக்கு பண்பான அன்பான ஒரு துணையை அவரது சகோதரன் தேடுகிறார்.'

இந்த வாசகம் கண்ணில் பட்டதும் ஏன் நான் இந்த விளம்பரத்தை அழைத்து பேசக்கூடாது என்ற எண்ணம் மின்னலென மனதில் தோன்றியது.

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.

 

                                                                                                      ----------------------x-----------------x-----------------x---------------------x----------------------

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதான போதும் தனிமை கொல்லும் போதும் சாய ஒரு தோள்  வேண்டும்..... உண்மைதான்.......நல்ல முற்போக்கு சிந்தனை சொல்லும் கதை....தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி .....!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே அந்த ஜயா இறந்து அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி துணை தேடி இருப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட சுவிக்கும் விருப்பிட்ட ரதி குமாரசாமி சுவி புங்கையூரான் அனைவருக்கும் நன்றிகள். ஜயா இல்லாவிட்டால் அம்மாவை துணை தேட வேண்டாம் என்று ஒருவரும் தடை போடமாட்டார்கள். ஆயினும் இன்று எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. எதுவும் அவரவர் குடும்ப சூழலையும் மன விருப்பத்தையும் பொறுத்து தாமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று. நன்றிகள் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள

இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்..............

 

 வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க   இத்தகைய மாற்றம் தேவை  . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும்  பதில் சொல்லியாக வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavallur Kanmani said:

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.

 

என்ன இடையிலேயே நிற்பாட்டி விட்டீர்கள்.ஐயாவின் திஐமணம் முடிந்ததா இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் சிட்னியிலும் நடந்தது.....இப்ப ஐயா மேலோகம் போய்விட்டார் .....அந்த அம்மா தனியாக‌ வாழ்கின்றார்....மிகவும் அருமையான வித்தியாசமான கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இதே அந்த ஜயா இறந்து அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி துணை தேடி இருப்பாரா?

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள

இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்..............

 

 வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க   இத்தகைய மாற்றம் தேவை  . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும்  பதில் சொல்லியாக வேண்டும்.  

சமுதாயத்துக்கு பயந்த காலம் ஒன்று இருந்தது. சமூகம் என்பது நாங்கள்தானே. நிறைய மாறி விட்டோம்.சமுதாயத்துக்கு பயந்த காலம் ஒன்று இருந்தது. சமூகம் என்பது நாங்கள்தானே. நிறைய மாறி விட்டோம். கருத்துக்கு நன்றி நிலாமதி

9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இடையிலேயே நிற்பாட்டி விட்டீர்கள்.ஐயாவின் திஐமணம் முடிந்ததா இல்லையா?

பொறுத்திருந்து பார்ப்போம். நன்றிகள் ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இப்படி ஒரு சம்பவம் சிட்னியிலும் நடந்தது.....இப்ப ஐயா மேலோகம் போய்விட்டார் .....அந்த அம்மா தனியாக‌ வாழ்கின்றார்....மிகவும் அருமையான வித்தியாசமான கதை

இப்படியான சம்பவங்கள் அங்கங்கே நடக்கத்தான் செய்கிறது. எல்லோரும் ஒருநாள் போகத்தான் வேணும். துணிவே துணை  நன்றிகள் புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

நீங்கள் சொல்வது உண்மைதான் சுவி. பெண்கள் தம்மைச்சுற்றி ஒரு வேலி போட்டு அதற்குள் இருக்க பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இன்று எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. மறுமணம் என்பது நிறைய நடக்கிறது. நாடகம் வாழ்க்கை ஆகாது. அங்க சோகம் மட்டுமா காட்டப்படுகிறது. எப்படி பழிவாங்குவது எப்படி கொலை செய்வது. அது நடிப்பாக மட்டும்தான் பார்க்கலாம். தனிமையில் இருக்கும் பெண்களைவிட ஆண்கள் நிறைய மனதளவில் பாதிக்கப்படுவதை காண்கிறோம். நன்றிகள் சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையைப் படித்து விருப்பிட்ட மல்லிகை வாசம் மோகன் ஏராளன் யாழ்கவி இணையவன் ஜெகதாதுரை அனைவருக்கும் கருத்திட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

சிலர் அதை தவிர்த்து விடுவார்கள். சிலர் திருமணம் செய்து கொள்வார்கள். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் மறுமணம் செய்வது சந்தேகமே.... அடிப்படையில் பெண்கள் உள்ளூர சோகத்தை விரும்புவர்களாகவும் மனதுக்குள்  அதை ரசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.அதை புரிந்து கொண்டவர்கள் சீரியல் டைரக்ட்டர்கள். பிழிய பிழிய சோகத்தை கொடுத்து நாடகத்தை வெற்றி பெற வைத்து விடுவதே அதற்கு சான்று.....!  😁

இப்படி சொல்லி,சொல்லியே பெண்களை அடக்கி வைத்திருக்கிறது இந்த சமுதாயம்...பொம்பிளை பிள்ளையள் இருந்தா கட்டக் கூ டாது,அவ கட்ட மாட் டா  போன்ற காரணங்களை சொல்லி பெண்களை தனியே வைத்திருக்கும் இச் சமுதாயம் ஆண்களுக்கு மட்டும் மனைவி இறந்து ஒரு வருடம் முடிவதற்கு இடையில் திருமணம் முடித்து வைத்து விடுவார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavallur Kanmani said:

இப்படியான சம்பவங்கள் அங்கங்கே நடக்கத்தான் செய்கிறது. எல்லோரும் ஒருநாள் போகத்தான் வேணும். துணிவே துணை  நன்றிகள் புங்கையூரான்.

நான் புத்தன் ஆக்கும் .....புங்கையூரான் அல்ல‌:14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் புத்தன். வேலைப்பளு காரணமாக அவசரமாகப் பதிவிட்டதால் தவறு நேர்ந்துவிட்டது. நன்றிகள்

Link to comment
Share on other sites

நமக்கு எது தேவையென நம்மை விட வேறு யார் தெளிவாக அறிவார்? இறுதியில் சுந்தரத்துக்குக் கிடைத்தது மனதில் சுதந்திரம். 

மன உணர்வுகளை அழகாகச் சித்தரித்துள்ளீர்கள், அக்கா 😊 மென்மேலும் தொடருங்கள் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

நமக்கு எது தேவையென நம்மை விட வேறு யார் தெளிவாக அறிவார்? இறுதியில் சுந்தரத்துக்குக் கிடைத்தது மனதில் சுதந்திரம். 

மன உணர்வுகளை அழகாகச் சித்தரித்துள்ளீர்கள், அக்கா 😊 மென்மேலும் தொடருங்கள் 😊

சுந்தரம் தெளிவான முடிடிவடுத்து விட்டார். முன்போலில்லாது இப்பொழுதெல்லாம் அதிகமானோர் சுயமாகச் சிந்தித்து  சுதந்திமாக முடிவெடுக்கத் தொடங்கி விட்டனர். நல்ல மாற்றம். கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தோர் ஓர் துணை தேட வயதோ, ஆண் பெண் என்ற பேதமோ தடையல்ல. எல்லோராலும் தனிமையில் இருந்துவிடமுடியாது. ஏதாவது இலட்சியத்தோடு அயராது உழைக்கும்போது,  நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும்போது தனிமை ஒரு பிரச்சினையில்லை. ஆனால் ஒவ்வொரு வினாடியும் ஓர் யுகமாக மாறும்போதும், தமக்குள்ளே பேசிப்பேசி அலுக்கும்போது தனிமையைப் போக்க ஒரு துணை தேவை. ஆனால் புரிந்துணர்வில்லாத துணைகள் எந்த வயதிலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கும். சுந்தரம் Tinder மாதிரி ஒரு dating app ஐ பாவித்தால் luck  வேலை செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்துணர்வில்லாத துணையை விட தனிமையே மேல். உங்கள் கருத்துக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வயது வந்தோர் ஓர் துணை தேட வயதோ, ஆண் பெண் என்ற பேதமோ தடையல்ல. எல்லோராலும் தனிமையில் இருந்துவிடமுடியாது. ஏதாவது இலட்சியத்தோடு அயராது உழைக்கும்போது,  நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும்போது தனிமை ஒரு பிரச்சினையில்லை. ஆனால் ஒவ்வொரு வினாடியும் ஓர் யுகமாக மாறும்போதும், தமக்குள்ளே பேசிப்பேசி அலுக்கும்போது தனிமையைப் போக்க ஒரு துணை தேவை. ஆனால் புரிந்துணர்வில்லாத துணைகள் எந்த வயதிலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கும். சுந்தரம் Tinder மாதிரி ஒரு dating app ஐ பாவித்தால் luck  வேலை செய்யலாம்!

வெள்ளைக்காரச்சனம் தனிமைக்கு பயந்து நாய்/பூனை வளர்க்கினம். நல்ல துணையும் கூட.....நன்றியுள்ளவை.

இப்ப எங்கடை ஆக்களும் தங்கடை பிள்ளையள் படிப்பு வேலை கலியாணம் எண்டு பிரிஞ்சு போக வெளிக்கிட நாய் பூலையெல்லாம் வளர்க்க வெளிக்கிடீனம்.

தனிமை என்பது அதுவும் புலம்பெயர் நாடுகளில் பொல்லாதது. கொடுமையானது.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த தனிமை என்னும் கொடுமையினால்தான் நிறையப்போ் மனஉழைச்சலுக்கும் மனப் பிறழ்வுக்கும் ஆளாகி அவதிப்படுவதைப் பாா்க்கிறோம். நிறையப்போ் இப்பொழுதெல்லாம் செல்லப்பிராணிகள் வளர்க்கிறாா்கள்தான். அதுகும் தம்மால் இயங்கமுடிந்தவரைதானே கவனிக்கலாம். துணை அமைவதெல்லாம்கூட இறைவன் கொடுத்த வரம்தான். கருத்திட்ட விருப்பிட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2019 at 1:09 PM, Kavallur Kanmani said:

தனிமையில் இருக்கும் பெண்களைவிட ஆண்கள் நிறைய மனதளவில் பாதிக்கப்படுவதை காண்கிறோம்

வீட்டு வேலைகள்/தீர்மானங்கள் திட்டமிடல் சமையல் உட்பட  ஒவ்வொன்றிலும் கணவனும் மனைவியும் சரி சமமாக பங்கெடுத்து வாழ்ந்து பழக்கப்பட்டால்......ஓரளவு மனப்பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்ளலாம். தேனீர் தொடக்கம்   சேட்டுக்கு கை மடிக்கும் வரைக்கும் மனைவிதான் என்றிருப்பவர்களுக்கு ....மனைவி இல்லையென்றால் நடுக்காட்டில் விட்டது போலவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளுக்கு வந்தபின்தானே சரிசமம் என்ற பேச்சே வந்தது. அங்கென்றால் ஜயா சாய்மானக் கதிரையில் இருக்க அம்மாமார்தானே விழுந்து விழுந்த வேலை செய்து பயந்து பயந்து உபசரிப்பதை பார்த்திருக்கிறோம். இங்கு வாழ்க்கையை ஆரம்பித்தவர்களுக்கு வேறுமாதிரி வாழ்க்கை.  பாதியில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் துணையை இழக்கும்பொழுது பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் ஓரளவு தங்களைச் சுதாகரித்து வாழ பழகிவிடுகிறார்கள். அநேகம் ஆண்கள் தவித்துப் போய் விடுவதை மறுக்க முடியாது. கருத்துக்கு நன்றி குமாரசாமி

Link to comment
Share on other sites

சிறிய கதையாக இருந்தால் நல்லதொரு கதை. பத்தாம் பசலித்தனமான முடிவு இல்லாமல், சரியான முடிவில் கதை முடிந்திருக்கு.

மனுசர் ஒரு சமூக பிராணி. மனுச வாழ்க்கை என்பது தனித்து வாழ்வதற்கு அல்ல. முக்கியமாக வயது போகும் போது கண்டிப்பாக துணை தேவை.

என் அப்பா செத்து 14 வருடங்களாகின்றது. அம்மா தனியாகத்தான் இருக்கின்றார். இங்கு வந்து இருக்கும் போது, 'அம்மா ஏன் நீங்கள் இன்னொரு கலியாணம் கட்டி வயதான காலத்தில் கதைத்துக் கொண்டு இருப்பதற்காகவாவது ஒரு துணையை தேட நினைக்கவில்லை' எனக் கேட்டனான். அதற்கு அம்மா சொன்ன பதில் 'சனம் என்ன நினைக்கும்' என்பது தான். இங்கு மற்றவர்கள் என்ன நினைப்பினம் என்பதற்காகவே தனிமையை தேர்ந்தெடுப்பவர்களாக எம்மவர்களில் அனேகம் பேர் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

சிறிய கதையாக இருந்தால் நல்லதொரு கதை. பத்தாம் பசலித்தனமான முடிவு இல்லாமல், சரியான முடிவில் கதை முடிந்திருக்கு.

மனுசர் ஒரு சமூக பிராணி. மனுச வாழ்க்கை என்பது தனித்து வாழ்வதற்கு அல்ல. முக்கியமாக வயது போகும் போது கண்டிப்பாக துணை தேவை.

என் அப்பா செத்து 14 வருடங்களாகின்றது. அம்மா தனியாகத்தான் இருக்கின்றார். இங்கு வந்து இருக்கும் போது, 'அம்மா ஏன் நீங்கள் இன்னொரு கலியாணம் கட்டி வயதான காலத்தில் கதைத்துக் கொண்டு இருப்பதற்காகவாவது ஒரு துணையை தேட நினைக்கவில்லை' எனக் கேட்டனான். அதற்கு அம்மா சொன்ன பதில் 'சனம் என்ன நினைக்கும்' என்பது தான். இங்கு மற்றவர்கள் என்ன நினைப்பினம் என்பதற்காகவே தனிமையை தேர்ந்தெடுப்பவர்களாக எம்மவர்களில் அனேகம் பேர் இருக்கின்றனர்.

இங்குதான் எனது பிறப்பும் ஆரம்பமாகியது. இளவயதில் வாழ்விழந்த என் தாய் வாழ்க்கைதுணை தேடி தஞ்சம் அடைந்ததால் ஊரால் ஓரங்கட்டப்பட்டார். இது பற்றி நிறைய எழுதலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.