Jump to content

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, tree, plant, outdoor and nature

இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. 

Image may contain: plant, tree, outdoor and nature

 

அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.

Image may contain: sky, ocean, bridge, outdoor, water and nature

தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.

Image may contain: sky, tree, plant, house, cloud, outdoor and nature

ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து  எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. 

Image may contain: sky, ocean, outdoor, nature and water

செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி..  ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. 

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

Image may contain: sky, tree, outdoor and nature

தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை. 

Image may contain: sky, plant, tree, nature and outdoor

செம்பருத்தியின் அழகு. செவ்வரத்தை. 

Image may contain: sky, tree, outdoor and nature

தலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.

Image may contain: one or more people, sky and outdoor

நல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு.  பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.

Image may contain: one or more people and outdoor

அன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.

Image may contain: cloud, sky, outdoor and nature

பறவைகளின் உல்லாச புரி. பண்ணை.

Image may contain: sky, plant, tree, outdoor, nature and water

இன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.

Image may contain: ocean, sky, outdoor, water and nature

பண்ணையில் மீன்பிடி. மரபுவழியோ...?! 

Image may contain: tree, plant, outdoor, nature and water

வடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.

Image may contain: sky, outdoor, nature and water

அமைதியாக ஓடும் மாஒயா. 

Image may contain: plant, tree, sky, outdoor and nature

வெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

மூங்கில் உரசல்.

Image may contain: plant, tree, sky, outdoor and nature

மத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை. 

Image may contain: plant, tree, outdoor and nature

பலாக் காடு.

Image may contain: plant, nature and outdoor

தானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை. 

Image may contain: sky, grass, outdoor and nature

அழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

நயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி. 

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

Image may contain: plant, tree, sky, outdoor and nature

எங்கள் வீட்டு முற்றத்தில் பிள்ளைகளை பிரதிநிதித்துவம் செய்து வளரும் தென்னம்பிள்ளை. பின்னே உடைக்கப்பட்ட வீட்டின் கற்குவியல். அதற்குள் கதை அமைத்தால்..  ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம். 

Image may contain: sky, tree, outdoor, nature and water

அழகிய பனங்கூடல். இதன் அருகே மிக ஆடம்பர சிங்கள இராணுவ வளாகம். பயிற்சிக் கூடங்கள்.. இயற்கையான தடாகங்கள் புடைசூழ.  ஆக்கிரமிப்பும் அழகு பார்க்கும். 

Image may contain: plant, outdoor and nature

கமுகம்பிள்ளை. தாரவங்களையும் பிள்ளைகளாகக் கருதிய உயிர்நேய சமூகம் தமிழ் சமூகம். இன்று.. வாள்வெட்டு.. போதையென்று.. சீரழியுது.

Image may contain: outdoor

No photo description available.

சேவலும் மயிலும்.. கதிரேசன் கோவில் செல்லப் பிராணிகள். (கொழும்பு 04)

Image may contain: sky, outdoor, nature and water

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

Image may contain: ocean, sky, water, beach, cloud, outdoor and nature

பேரலையாக எழும் இந்து சமுத்திரம் - களுத்துறை - இங்கு விகாரையை விட மசூதி மின்னுகிறது மிகப் பெரிதாக. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

Image may contain: sky, tree, plant, outdoor and nature

மாவும் தென்னையும்.

 

மிகுதி..பார்த்துத் தொடர்வம்.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்கள் அதனூடே சிலவற்றில் உங்கள் ஆதங்கங்களையும் காண முடிகின்றது....தொடருங்கள் நெடுக்ஸ்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: sky, cloud, tree, outdoor, nature and water

களுகங்கை - தெளிவான ஓட்டம்

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி இப்பவும் சிங்கள விமானப்படையின் தளமாக இயங்குகிறது. உலகில் ஒரு சிவில் விமானப் போக்குவரத்துக்குள் இராணுவ மற்றும் போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இந்த விமான நிலையம் மட்டுமே போரற்ற காலத்திலும் விளங்கக் கூடும். ஆனால் சர்வதேச சிவில் விமான பயண விதிசமைப்போரும் சரி.. சிவில் விமான நிலையங்களின் விதிசமைப்போரும் சரி.. இதுவிடயத்தில் மிகுந்த மெத்தனத்தையே கடைப்பிடிக்கின்றனர்.  அதுதான் புரியாத புதிராக உள்ளது. 

Image may contain: night

குருணா(கல்) புத்தர் முகப்பு.

Image may contain: one or more people, tree, sky, outdoor and nature

நயினாதீவு அம்மன்வேப்ப மரம். காதலர்களுக்கு நிழல் கொடுக்கிறது. கால்நடைகளுக்கும் கூட. 

Image may contain: cloud, sky, tree, outdoor, nature and water

சதுப்பு நிலம்... பறவைகளின் யாழ்ப்பாண வேடந்தாங்கல். (அராலி)

Image may contain: plant

பாம்புச் செட்டை. 

Image may contain: ocean, sky, outdoor, nature and water

வேலணை சாட்டி கடற்கரையில் காத்துக்கிடக்கும்.. நீரூந்துருளி.

Image may contain: ocean, sky, outdoor, nature and water

தெளிவான கடல். கரை வரை மீன்கள் வாழ்ந்து நிற்கும் மாசற்ற கடற்கரை. எனி என்னாகுமோ..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்கள் ...தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

மக்கள் கூடும் இடங்களை எடுக்க தோனேல்ல. பெரிய மாற்றங்கள் அவற்றில் இல்லை. ஆரிய குளம் பகுதி மட்டும்.. விகாரை.. புத்த பிக்குகளுக்கு ஆடம்பர விடுதிகள் என்று மாறி இருக்குது. மற்றும்படி.. இன்னும் பல இடிபாடுகள் யாழ் நகரில்.  குறிப்பாக வெலிங்கடன் தியேட்டர் பகுதி அப்படியே கிடக்குது. 

அபிவிருத்தி அபிவிருத்தி என்றாங்கள்.. கோட்டையை சுற்றி சில மாற்றங்கள். மற்றும்படி.. அபிவிருத்தி என்றால்.. ரோட்டுப் போட்டிருக்குது. அதுவும் இராணுவம்.. கடற்படை.. விமானப்படை.. ஓடித்திரிய வசதியாப் போட்டிருக்குது. 

மக்களுக்கான அபிவிருத்தி... என்பது மக்களால்.. செய்யப்பட வேண்டிய நிலை.

அதிலும் ரோட்டுக் கூட.. அரசாங்கக் கட்சிக்கு அல்லது அதன் ஒட்டுக் கட்சிக்கு.. ஆதரவுன்னா தான் அபிவிருத்தி அடையும். இப்படி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஏனெனில்.. யாழ் பிறவுன் வீதி அபிவிருத்தியடையக் காணம். ஏனென்று விசாரித்த இடத்தில் அங்கு மக்கள் வீணைக்கோ... வெற்றிலைக்கோ ஆதரவில்லையாம். வீட்டுக்கு ஆதரவாம். அதனால் அபிவிருத்தி கட். இது ஓர் உதாரணம்.. மட்டுமே. இப்படிப் பல. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: aeroplane, sky, cloud, nature and outdoor

வான் கடலில் ஓர் மிதப்பு.

Image may contain: food

Image may contain: food and text

Image may contain: food

ஊரில் பொங்கல்.. படையல்.

Image may contain: plant, flower and outdoor

இது சிறப்புப் பொங்கல் - உடைந்த வீட்டுக் கல்லெடுத்து.. ஏதோ கட்டின வீட்டின் முன் பொங்கல். ஈழத் தமிழர்களிடம் மட்டும் தான் இந்த அனுபவம் இருக்க முடியும். 

Image may contain: tree, plant, sky and outdoor

குலை குலையா செவ்விளநீர்.. ஆனா வீதியில் வாங்கினால் தான் குடிக்கலாம். அதுவும் ஒன்று நூறு ரூபா. 

Image may contain: sky, tree, cloud, plant, outdoor, nature and water

கழிமுகம் Estuary - இந்து சமுத்திரமும் களுகங்கையும் கலக்குமிடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

அமைதியான நயினைக்கடல். இதுக்க தான் பல அம்மாமார்.. காதலிகள்.. குதிச்சு சாகப் போறம் என்று ஊரில வெருட்டிறது.

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

Image may contain: tree, sky, plant, outdoor and nature

சாட்டி வேலணை - ரில்கோவின் முதலீடு.. உல்லாச விடுதி.. பூங்கா.

Image may contain: sky, plant, outdoor, nature and water

சாட்டிக் கடல் கடற்தாவரம். நிறைய சிறிய வகை மீன்களின் வாழிடம்.

Image may contain: plant, flower, nature and outdoor

ஊரில் புல் பூண்டுக்கு மட்டுமல்ல.. பூக்களுக்கும் பஞ்சமில்லை.

Image may contain: tree, sky, plant, ocean, outdoor and nature

தென்னையும் பனையும் சேர்ந்து இருக்கும்  காட்சி.. அது யாழ்ப்பாணத்தில் தான் அதிகம். 

Image may contain: sky, ocean and nature

முகில்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட காலம் போய் முகில்கள் மேல் மிதந்த நேரத்தில்... 

காட்சிகள் முற்றும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

யமுனா ஏரி என்போரும் உண்டு.. யமுனா ஆறு என்போரும் உண்டு. ஏனெனில்.. இது ஒரு மழைகாலத்தில் ஒரு ஓடையாக ஆறு போல் ஓடுமாம். ஆனால்.. இது ஏரி போல் நிலையாக நிற்கவே தான் காணமுடிகிறது. யமுனா ஏரி கூடின திருத்தமாக இருக்கக் கூடும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2019 at 2:09 AM, ரதி said:

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 

அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

21 hours ago, nedukkalapoovan said:

 

 

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2019 at 10:16 AM, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

இப்ப முடியாது என நான் நினக்கிறன் சில வேளைகளில் மீண்டும் காதல் வயப்பட்டால் ஆள் 16 அடி மதிலும் பாயும் இதுக்குள்ள வேம்படி மதில் எம்மாத்திரம் சாமி அண்ண

 

5 hours ago, suvy said:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

மிக்க நன்றி அண்ண

Link to comment
Share on other sites

On 2/13/2019 at 8:52 PM, nedukkalapoovan said:

 

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

அதுதான் கேள்விக்குறியுடன் விழிப்புக்குறியுடன்.. முடிக்கப்பட்டுள்ளது. மக்களை அறியாமையில் வைத்திருப்பதல்ல எங்கள் நோக்கம். அது உல்லாச விடுதியா அல்லது தேவாலயத்துடன் கூடிய உல்லாச விடுதியா அல்லது சும்மா தேவாலயமா.. என்பதை போய் தான் பார்த்தறிய வேண்டும். புத்த விகாரை இல்லாமல் இருப்பது திருப்தி.  😂

Link to comment
Share on other sites

On 2/13/2019 at 10:22 AM, nedukkalapoovan said:

 

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

 

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

உங்கள் நினைவுகளை மீட்டிக்கொண்டமைக்கு நன்றி.

இப்போது அங்கு ஒரு விநாயகர் முன்னுக்கு இருக்கிறார்.  உண்மையில்..  அது முருகன் ஆலயமாக இருக்கக் கூடும். ஆனால் அழகிய வர்ணம் தீட்டப்பட்ட பிள்ளையார் முன்னுக்கு இருக்கக் கண்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.