Jump to content

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

13 வயதிலேயே மச்சாளின்ட கையை பிடிச்சு சுத்தி இருக்கிறீங்கள் 🤔
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

Image may contain: mountain, sky, twilight, nature and outdoor

புத்தர் இருக்கும் குன்றில் இருந்து குருணாகல் நகரில் இருக்கும் நீர் நிலை.

Image may contain: night, sky, water and outdoor

நீர் நிலையின் ஒரு கரையில் இருந்து புத்தர் இருக்கும் குன்று நோக்கி தோற்றம். (இரவுக்காட்சி)

இவை நிழலிக்காக.. மேலதிகமாக இணைக்கப்படுகிறது. 😃

 

Link to comment
Share on other sites

11 hours ago, nedukkalapoovan said:

அதுதான் கேள்விக்குறியுடன் விழிப்புக்குறியுடன்.. முடிக்கப்பட்டுள்ளது. மக்களை அறியாமையில் வைத்திருப்பதல்ல எங்கள் நோக்கம். அது உல்லாச விடுதியா அல்லது தேவாலயத்துடன் கூடிய உல்லாச விடுதியா அல்லது சும்மா தேவாலயமா.. என்பதை போய் தான் பார்த்தறிய வேண்டும். புத்த விகாரை இல்லாமல் இருப்பது திருப்தி.  😂

புச்சையடி தீவு

இந்த தீவின் பெயர் புச்சையடி தீவு. ஆனாலும் மக்கள் இதனை புச்சைதீவு என்றே அழைக்கிறார்கள். இந்த தீவிற்கு மீனவர்கள் நடந்தே போகிறார்கள். அதற்கு அவர்களிற்கு ஆழம் குறைந்த பகுதியின் அமைப்பு தெரிந்திருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறிலும் தேவாலயத்தில் பூசை நடைபெறும். அதற்காக நாவாந்துறை சந்தையடியில் இருந்து வள்ளங்கள் போகுமாம். பங்குனி மாதத்தில் திருவிழா விமர்சையாக நடைபெறுமாம். என்னையும் இந்த ஞாயிறு கூட்டிப் போவதற்கு வாக்களித்திருந்தார் ஒரு 65 வயது மதிக்கத்தக்க நண்பர். நானும் சரி வருகின்றேன் என்றுவிட்டு வந்து விட்டேன். இப்போதுதான் சிலர் வந்து ஒரு முக்கியமானவரின் அந்தியேட்டிக்கு அழைப்பு கொடுத்து விட்டு போகிறார்கள்.

இன்னொரு ஞாயிறு வராமலா போகும்?

On 2/13/2019 at 8:52 PM, nedukkalapoovan said:

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

கேள்விக்குறியும் விழிப்புக்குறியும் அமைத்தது யாராக இருக்கும் என்பதற்கானது.

இந்த கட்டிடம் உல்லாச விடுதி என்று உங்கள் பாணியில் பொய்யை உரத்து கூறியிருக்கிறீர்கள்.

இப்ப சாக்கு போக்கு வேண்டாம், தெரியாவிட்டால் பேசாம இருக்கணும். பொய்களை பரப்பக்கூடாது.

இப்பவும் மீசையில மண் ஒட்டித்தான் இருக்கு.

Bildet kan inneholde: himmel, utendørs og vann

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

புச்சையடி தீவு

இந்த தீவின் பெயர் புச்சையடி தீவு. ஆனாலும் மக்கள் இதனை புச்சைதீவு என்றே அழைக்கிறார்கள். இந்த தீவிற்கு மீனவர்கள் நடந்தே போகிறார்கள். அதற்கு அவர்களிற்கு ஆழம் குறைந்த பகுதியின் அமைப்பு தெரிந்திருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறிலும் தேவாலயத்தில் பூசை நடைபெறும். அதற்காக நாவாந்துறை சந்தையடியில் இருந்து வள்ளங்கள் போகுமாம். பங்குனி மாதத்தில் திருவிழா விமர்சையாக நடைபெறுமாம். என்னையும் இந்த ஞாயிறு கூட்டிப் போவதற்கு வாக்களித்திருந்தார் ஒரு 65 வயது மதிக்கத்தக்க நண்பர். நானும் சரி வருகின்றேன் என்றுவிட்டு வந்து விட்டேன். இப்போதுதான் சிலர் வந்து ஒரு முக்கியமானவரின் அந்தியேட்டிக்கு அழைப்பு கொடுத்து விட்டு போகிறார்கள்.

இன்னொரு ஞாயிறு வராமலா போகும்?

கேள்விக்குறியும் விழிப்புக்குறியும் அமைத்தது யாராக இருக்கும் என்பதற்கானது.

இந்த கட்டிடம் உல்லாச விடுதி என்று உங்கள் பாணியில் பொய்யை உரத்து கூறியிருக்கிறீர்கள்.

இப்ப சாக்கு போக்கு வேண்டாம், தெரியாவிட்டால் பேசாம இருக்கணும். பொய்களை பரப்பக்கூடாது.

இப்பவும் மீசையில மண் ஒட்டித்தான் இருக்கு.

Bildet kan inneholde: himmel, utendørs og vann

 

நல்ல விடயம். எங்கள் ஒளிப்படமும் விளக்கமும்.. இவ்வளவு தூரத்துக்கு இந்த விடயத்தில் உங்களிடம் அக்கறை வரவைத்தமைக்கு நன்றி.  தெளிவான அண்மை படத்துக்கு நன்றி. 

மேலும் கேள்விக்குறி.. சேய்மை படத்தில் கடைக்கருத்துக்கள்.. முழுவதுக்குமே..! அதை எழுதியது நாம்.. அந்த வகையில் எமக்கு தான் அதுக்கு விளக்கம் அளிக்க முடியும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படங்களும், கருத்துக்களும் அருமை நெடுக்கு.  சில கருத்துக்கள் கவலையுடன்  சிந்திக்கவைக்கின்றன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில நெடுக்கும் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் போயாச்சு.

மூன்று மாதங்களுக்கு முன் போனதுபோல புகையிலைக்  கன்று  சிறிதாக இருக்கு. இப்ப வெட்டும் சீசன்

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எதையும் காணவில்லையே! நெடுக்ஸ் எல்லாவற்றையும் எங்கேயோ ஒளித்துவிட்டாரா?🤔🤔🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.